tag:blogger.com,1999:blog-80585861459974741882024-03-26T02:03:05.118-07:00சக்திவேல் பாலசுப்ரமணியன் - புதிய உலகம் செய்வோம்என் கனவுகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில் … பார்த்ததை, கேட்டதை, மனதில் தோன்றியதை பகிர்ந்து கொள்ள... தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே ... தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.comBlogger3035125tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-41858266846976380022019-05-27T10:15:00.004-07:002019-05-27T10:20:42.855-07:00இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்கள் !</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மிகச்சிறந்த வாய்ப்புக்கள் அனைத்தும், பிரச்சனைகளால் போர்த்தப்பட்டவைதான். முள் நிறைந்த கடினமான தோலை உரித்துப் பார்க்கிறவர்களால் மட்டும்தான் வாய்ப்புக்கள் என்ற பலாச்சுளைகளை ருசி பார்க்க முடியும். பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானவர்கள் பிரச்சனை என்ற தோலைப் பார்த்தவுடன் மலைப்புடன் நின்று விடுகிறார்கள் என்பதுதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாதனையாளர்கள் பிரச்சனையை தாண்டிச் செல்கிறார்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவற்றை ஆய்வு செய்து, அனுபவப்படிக்கட்டாக மாற்றிக் கொண்டு வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார்கள்.மின்சார விளக்கை கண்டு பிடிப்பதற்கு முன்பதாக தோமஸ் அல்வா எடிசன் 10.000 தோல்விகளை சந்தித்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரப்பரை கண்டு பிடிக்கும் முன்பாக அவர் 17.000 தோல்விகளை சந்திக்க நேர்ந்தது.இந்தத் தோல்விகளை எல்லாம் எடிசன் தோல்விகளாகவே ஒப்புக் கொள்ளவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு பொருளை எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கு தோல்விகளே சிறந்த பாடம் என்று அவர் வர்ணித்தார். பத்து நாட்களுக்கு ஒரு தடவை ஒரு சிறிய கண்டு பிடிப்பு, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மகத்தான கண்டு பிடிப்பு என்று இலக்கு வகுத்துக் கொண்டு உழைத்த உலகின் மாபெரும் கண்டு பிடிப்பாளரின் வெற்றியின் இரகசியம் இதுதான். தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுக்கட்டுக்கள் என்ற கண்ணோட்டத்துடன் இலக்கை நோக்கி வெறியுடன் உழைப்பதே இவர்களின் நோக்கம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பூலோகசுவர்க்கம் என்ற டிஸ்னி வேல்ட்டை உருவாக்கிய வால்ட் டிஸ்னி தனது திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக முயற்சி எடுத்து 302 தடவைகள் தோல்வியடைந்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
302 படிக்கட்டில் தோல்வியடைந்த வால்ட் டிஸ்னி 303 வது தடவை வெற்றி பெற்றார்.ஐ.பி.எம் நிறுவனர் தாமஸ் ஜே. வாட்சனிடம் விரைவாக வெற்றி பெறுவது எப்படி என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். தாமஸ் ஜே. வாட்சனின் பதிலில் அவரது அனுபவச் செல்வம் பளிச்சிட்டது. நீங்கள் வேகமாக வெற்றிபெற விரும்பினால் உங்களது தோல்விகளின் அளவை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும், வெற்றி என்பது தோல்வியின் மறுபக்கத்தில்தான் இருக்கிறது என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
04. 1835 ல் அவரது காதலி மரணம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
06. 1838 ல் தேர்தலில் தோல்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம். தோல்விகளை வெற்றிகளாக்கிய மனிதர்களின் வரிசையில் அடுத்த வாரம் வருகிறார் ஜப்பானியரான கோண்டா</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-87695132001369816232019-05-27T10:14:00.000-07:002019-05-27T10:20:42.938-07:00தோல்வி உங்களைத் துரத்துகிறதா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தோல்வி என்னும சொல்லே தேவையில்லை. தோல்வி என்பது வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு நண்பனே! ஆனால் அதை விரோதி என்று தவறாக அடையாளம் காண்கிறீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் தோல்வி என்பது என்ன என்று சிந்தியுங்கள். இலக்கை நோக்கி நீங்கள் செய்யும் முயற்சியில் தடையோ, தாமதமோ ஏற்பட்டால் அதைத் தோல்வி என்கிறீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தோல்வி வந்தவுடன் இனி முடியாது என்று எதிர்மறையாகச் சிந்திப்பவர்களே முயற்சியை நிறுத்திவிடுகிறார்கள். அது தோல்வியாக மாறிவிடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தடையோ, தாமதமோ ஏற்படும்போது, மேலும் முயல்வேன் என்று முடிவு செய்து உழைப்பவர்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தோல்வி என்பது வெற்றிக்கான பயிற்சியே என்று நீங்கள் உணர வேண்டும். பெரிய இலக்குகளுக்கு மட்டுமல்ல. சாதாரண செயல்களுக்கும் கூட பயிற்சிதான் முழுமையை அல்லது வெற்றியைத் தந்திருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் பிறந்த பிறகு ஒரே நாளில் ஓடிப் பழகிவிடவில்லை. எழ முயன்றபோது விழுந்தீர்கள். எழுந்து நின்ற பிறகும் பல முறை விழுந்தீர்கள். பலமுற விழுந்தும், எழுந்தும் பயிற்சி செய்தமையால்தான் இன்று செம்மையாக நடக்கிறீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் உணவு உண்ணத் தொடங்கியதை மீண்டும் நினைவுகூர்ந்து பாருங்கள். உணவை விரல்களால் அள்ளியபோது சிதறியது. வாயில் போடுவதற்குள் சிந்தியது. மீண்டும மீண்டும் போடுவதற்குள் சிந்தியது. மீண்டும் மீண்டும் சிந்திச் சிதறி முயன்றதனால் இன்று உணவு உண்பதில் தேர்ந்தவராகி விட்டீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதல் வகுப்பில் சேர்ந்த பிறகு பள்ளியில் எழுத்த்துங்கியநிகழ்ச்சியை நினைத்துப்பாருங்கள். விரலகளுக்கிடையே பென்சிலைப் பிடிக்க இயலவில்லை. பிடித்தாலம் எழுத இயலவில்லை. எழுதினாலும சரியாக வரவில்லை. ஆனால் இன்று உங்கள் எழுத்து முத்து முத்தாக கண்ணைக் கவர்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே, நடத்தல், உண்ணல், எழுதுதல் போன்ற செயல்களுக்கும் தடையும், தாமதமும் வரவே செய்தன. ஆனால் தடையைக் கண்டு அஞ்சாமல் மீண்டும் மீண்டும் முயன்றதனால்தான் இன்று உங்களால் நடக்கவும், உண்ணவும், எழுதவும் முடிந்திருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தடையைத் தாண்டி உங்களால் எப்படி வெற்றிபெற முடிந்தது. மீண்டும் மீண்டும் செய்கிற செயல் பயிற்சியாகிறது. பயிற்சிதான் வெற்றியைத் தருகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தோல்வி என்பது வெற்றியின் படிக்கட்டு என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். என்ன பொருளில் அப்படிச் சொல்லப்படுகிறது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இளம்பெண் ஒருத்தி நீளந்தாண்டல் போட்டியில் இரண்டு மீட்டர் தாண்டி தங்கப்பதகம் பெற்றதாகப் பத்திரிகையில் படிக்கறீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்று விரும்பியன்றே அவள் இரண்டு மீட்டர் தாண்டிவிடவில்லை. உயர்நிலைப் பள்ளியில் ஒரு மீட்டர் தாண்டினாள். மேல்நிலை வகுப்பில் மேலும் அதிகம் தாண்டினாள். தேசியப் போட்டியில் ஒன்றரை மீட்டர் தாண்டினாள். பல தடவை தோற்ற பின்னும், தடைகளைக் கண்டு சோர்ந்து போகாமல் மீண்டும் மீண்டும் முயன்றதனால் ஒலிம்பிக்கில் இரண்டுமீட்டர் தாண்டவும், தங்கப்பதக்கம் பெறவும் முடிந்தது. பதக்கம் பெறும் வரை முயற்சியை நிறுத்தவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இராபர்ட் புரூஸ் கதையில் வரும் சிலந்திப்பூச்சி பன்னிரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றதாக படித்திருப்பீர்கள். பத்தாவது அல்லது பதினோராவது முயற்சியோடு அது பின் வாங்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்காது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தியாவின் மீது படையெடுக்க கஜினி முகமது பதினெட்டாவது தடவை வெற்றி பெற்றதாகப் படித்திருப்பீர்கள். பதினாறாவது அல்லது பதினேழாவது தடவைக்குப் பின் தன் முயற்சியை நிறுத்தியிருந்தால் அவனுக்கு வெற்றி கிடைத்திருக்காது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மின்சார பல்பை உருவாக்கும் முயற்சியில் லேடக்ஸ் என்னும்பொருளைக் கண்டுபிடிக்க எடிசன் பதினாறாயிரம் தாவரங்களைப் பரிசீலித்து வெறி கண்ட செய்தி உங்களுக்குத் தெரியுமா? பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பதாவது முயற்சிக்குப்பிறகு சோர்ந்திருப்பாரானால் அவரால் மகத்தான வெற்றி பெற்றிருக்க முடியுமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே, தோல்விக்கும், வெற்றிக்கும் உள்ள இடைத்தூரம் மேலும் ஒரு முயற்சி மட்டுமே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் உயர்ந்த நிலைக்கு ஆசைப்படுகிறீர்கள். கனவு காண்கிறீர்கள். உற்சாகத்துடன் உழைக்கத் தொடங்குகிறீர்கள். தடையையும்,தோல்வியையும் கண்டு சோர்ந்து போகிறீர்கள் . முயற்சியை நிறுத்தி விடுகிறீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு முயற்சி நிறுத்தப்படும் போது தோல்வியாகிறது. தொடரப்படும்போது வெற்றியாகிறது. முடிந்தவரை முயற்சிபது வெற்றி தராது. முடிவு வரை முயற்சிப்பதே வெற்றியைத் தரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் ஒரு தொழிலை அல்லது வணிகத்தை செய்கிறீர்கள். சில முயற்சிகளி வெற்றி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். எதிர்ப்பார்க்கிறீர்கள். தடை வரம்போது கைவிட்டுவிடலாமா என்று யோசிக்கிறீர்கள். இங்குதான் தோவி ஆரம்பம் ஆகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தடை தோல்வியின் அறிகுறி அல்ல. மேலும முயல வேண்டும் என்பதன் அறிகுறியே. தடை வரும்போதெல்லாம் மேலும் முயல்பவரிடம் தோல்வி மண்டியிடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே, இத்தனை முறை முயன்று பார்த்துவிட்டு கைவிடலாம் என்று நினைத்தால் தோல்வியே கிடைக்கும். வெற்றி பெறும்வரை முயன்று கொண்டே இருந்தால் மகத்தான வெற்றி கிடைக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வயதுவரை நீங்கள் பல தொழில்களில், வணிகத்தில் மாறி மாறி உழைத்திருப்பீர்கள். எல்லாவற்றிலும் தடைகள் வந்திருந்தால் நமக்கு எதுவுமே ராசியில்லை என்னும் தோல்வி மனப்பான்மை உங்களிடம் நிலை கொண்டுவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதிதாக வரும் வாய்ப்புகள் ஒருபுறம் உங்கள் ஆர்வத்தை மனப்பான்மை மறுபுறம் நின்று வேண்டாம். மாட்டிக்கொள்ளாதே என்று பயமுறுத்தும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் அடுத்த முயற்சி. அடுத்த முயற்சி என்று துடிக்க வேண்டும். எத்தனை தடவை தான் முயற்சிப்பது! என்று எண்ணினால் வாழ்க்கையே தோல்வியில் முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்களுக்குத் தெரிந்த வெற்றியாளர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுடைய விடாமுயற்சிதான் அவர்களுக்கு வெற்றி தந்தது என்பதை நீங்கள் அறிய முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விடாமுயற்சியும் தொடர் முயற்சியாக இருப்பன் உங்கள் வெற்றி உறுதிப்பட்டு விடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் விடா முயற்சியையும் தொடர் முயற்சியையும் கைக்கொள்ள வேண்டும் என்றால் இயற்கைச் சட்டம் (Law of Natue) பற்றி அறிந்திருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனிதனாகப் பிறந்த எவருமே உயர வேண்டும். முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்பது இயற்கைச் சட்டம். இயற்கைச் சட்டத்தின்படி ஊக்கத்துடன் உழைக்கும் மனிதனின் கரம், இயற்கையின் கரத்துடன் இணைந்து விடுகிறது. இனையும் போது இயற்கையின் தரத்தில் இருக்கும். வெற்றி உங்கள் கைக்கு வந்துவிடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இயற்கையாகவே உங்கள் வெற்றித்தேர் முன்னோக்கி நகர்து கொண்டுள்ளது. இயலாது,முடியாது, கிடைக்காது. நடக்காது போன்ற எதிர் மறைத் தடைக்கட்டைகளை இட்டு நீங்கள்தான் அதன் ஓட்டத்தைத் தடை செய்துவிட்டீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முடியும், இயலும், நடக்கும், கிடைக்கும் என்று எப்போதும் எண்ணத்தொடங்கிவிட்டால் அடுத்த முயற்சி, அடுத்த தொழில் என்று தொடங்குவீர்கள், விடாமுயற்யும், தொடர் முயற்சியும் உங்கள் இயல்பாக மாறிவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தோல்வி நிரந்தரமானதல்ல, அதைத்துரத்தி விட முடியும் என்னும் ஞானம் உங்களுக்கு வந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தோல்வி உங்களைத் துரத்தும் நிலை மாறி, நீங்கள் தோல்வியைத் துரத்தி அடித்து விடுவீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதன்பின், உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி வந்து சேரும்</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-28077198156268181162019-05-27T10:11:00.006-07:002019-05-27T10:20:42.688-07:0024 நிமிட நேர நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வாழ்க்கை நிர்வாகம்: நேர நிர்வாகமே, வாழ்க்கை நிர்வாகம்</div>
<div style="text-align: justify;">
Time management is Life management</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனி ஒரு மனிதனின் நேர நிர்வாகமே, அவனுடைய வாழ்க்கை நிர்வாகத்திற்கு அடிப்படையாக அமைகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு நாளை நான்கு நிலைகளில், ஒரு இளைஞன் முறையான நேர நிர்வாகத்தைக் கொண்டு செலவு செய்யலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு நாளை மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ அல்லது அமைதியாகவோ அல்லது பேரானந்தமாகவோ ஒரு இளைஞன் செலவு செய்யலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நேர நிர்வாகம் என்பது ஒரு நாளை இன்ப, துன்ப்ங்களுக்கு செலவு செய்யாமல், அந்த நிலையை தாண்டி வாழ்க்கையை இனிமையாக, அமைத்துக் கொள்ள திட்டமிட்டு, செயல்படுத்துவது... பிறகு பேரின்ப நிலைக்கு திட்டமிடுவது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எவ்வளவு நேரம் மகிழ்ச்சிக்கு ?</div>
<div style="text-align: justify;">
எவ்வளவு நேரம் சோகத்திற்கு ?</div>
<div style="text-align: justify;">
எவ்வளவு நேரம் அமைதிக்கு ?</div>
<div style="text-align: justify;">
எவ்வளவு நேரம் பேரான்ந்தத்திற்கு ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்ற அளவு விகிதம், தனிமனிதனின் நேர நிர்வாகத்தை கொண்டு அமைகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு இளைஞன், மகிழ்ச்சியான நிலை, சோகமான நிலை, அமைதியான நிலை, பேரான்ந்தமான நிலை என்ற நான்கு நிலைகளில் ஒரு நாளை செலவு செய்யலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைய நவ நாகரீகமனிதர்களில் நூற்றுக்கு 99 பேர், மகிழ்ச்சியாக அல்லது சோகமாக தான் ஒரு நாளை செலவு செய்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பணம் என்ற மாய வலையில் சிக்கிய இன்றைய இளைஞனுக்கு அமைதி மற்றும் பேரான்ந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவ்வாறு தெரிந்து கொணட அல்லது விழிப்பு உணர்வு கொணட ஒரு சதவீத இளைஞனும், விளக்கத்தின் வழி பழக்கத்தை கொண்டு செல்ல முடியாமல் தடுமாறுகிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகப் புகழ் பெற்ற மூளை நிபுணர் பி. இராம மூர்த்தி சொன்னார் "இந்தியர்கள் முட்டாள்கள், யோகக் கலை என்ற தங்க சுரங்கத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு சிறிது தங்கத்திற்காக வாழ்நாள் முழுவதும் அலையும் முட்டாள்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இக்கணத தேவை இந்திய இளைஞர்கள் தன்னை உணர உள் நோக்கு பயணம் (தவம்) செய்து, தற்சோதனை செய்து இந்திய பாரம்பரிய சொத்தான அமைதி மற்றும் பேரின்பத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த நிலையில் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"Indians are fools, sitting on the gold mine of yoga" - B. Ramamurthi, famous neuro surgeon</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனந்த வாழ்க்கை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி மனித மன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி உணவு நிர்வாகமே, தினசரி மனித மன நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி நாக்கு நிர்வாகமே, தினசரி மனித உணவு நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி குடல் நிர்வாகமே, தினசரி மனித நாக்கு நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி நிதானமாக முடிவு எடுக்கும் நிர்வாகமே,</div>
<div style="text-align: justify;">
தினசரி மனித குடல் நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி சக்தி நிர்வாகமே, தினசரி மனிதனின் நிதானமாக முடிவு எடுக்கும் மனோபாவ நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சக்தி நிர்வாகம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி மனித உடல் சக்தி நிர்வாகமே, தினசரி திறம்பட செயல்கள் வேலை செய்யத் தேவையான சக்தி நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி மன சக்தி நிர்வாகமே, தினசரி மனித உடல் சக்தி நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி உணர்ச்சி நிர்வாகமே, தினசரி மனித மன சக்தி நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி ஜீவகாந்த சக்தி நிர்வாகமே, தினசரி மனித உணர்ச்சி நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி உயிர் சக்தி நிர்வாகமே, தினசரி மனித ஜீவகாந்த சக்தி நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினசரி ஆன்மீக சக்தி நிர்வாகமே, தினசரி மனித உயிர் சக்தி நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமச்சீர் வாழ்ககை நிர்வாகமே, தினசரி மனித ஆன்மீக சக்தி நிர்வாகம்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆரோக்கிய வாழ்க்கை நிர்வாக்மே, மனித சமச்சீர் வாழ்க்கை நிர்வாகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெற்றி.... வெற்றி..... </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இளைஞனே ... வெற்றி வேண்டுமா?</div>
<div style="text-align: justify;">
வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா?</div>
<div style="text-align: justify;">
வெற்றி என்பது மாங்கு .... மாங்கு</div>
<div style="text-align: justify;">
என்று வேலை செய்வதில் மட்டும் இல்லை.....</div>
<div style="text-align: justify;">
வெற்றி என்பது சிந்தனை செய்து,</div>
<div style="text-align: justify;">
24 நிமிட நேரத்தை சரியாக திட்டமிட்டு,</div>
<div style="text-align: justify;">
சிந்தனை வழியில் மாங்கு .... மாங்கு</div>
<div style="text-align: justify;">
என்று வேலையைத் திறம்பட செய்து,</div>
<div style="text-align: justify;">
சாதனை படைப்பதில்தான் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
வெற்றி வேண்டுமா? </div>
<div style="text-align: justify;">
போட்டுப் பாரடா எதி நீச்சல்...</div>
<div style="text-align: justify;">
24 நிமிட நேர நிர்வாகத்தோடு !</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெற்றி வேண்டுமா? </div>
<div style="text-align: justify;">
போட்டுப் பாரடா எதி நீச்சல்...</div>
<div style="text-align: justify;">
24 நிமிட நேர நிர்வாகத்தோடு !!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மிகப் பெரிய வெற்றி ....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இளைஞனே ... மிகப பெரிய வெற்றி வேண்டுமா?</div>
<div style="text-align: justify;">
வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டுமா?</div>
<div style="text-align: justify;">
மிகப் பெரிய வெற்றி என்பது, 24 நிமிட நேரத்தில்</div>
<div style="text-align: justify;">
தெளிவாக மற்றும் துல்லியமாக திட்டமிட்டு,</div>
<div style="text-align: justify;">
சிந்தனை வழி, சரியான துல்லியமாக</div>
<div style="text-align: justify;">
திட்டத்தை செயல்படுத்தி உலக அளவில்</div>
<div style="text-align: justify;">
சாதனை படைப்பதில் தான் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புத்துணர்ச்சி</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் - ஐ பார்த்து ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்டார், எப்படி உங்கள் ஒய்வு நேரத்தை செலவிடுவீர்கள்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்கு, ரூஸ்வெல்ட் புத்தகங்களோடு தான் எனக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்தை செலவு செய்வேன் என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பத்திரிக்கை நிரூபர் மேலும் கேட்டார், "உங்களுக்கு கிடைக்கும் மிக அரிதான காலத்தை ஏன் புத்தகங்களோடு செலவு செய்கிறீர்கள்? என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும், ரூஸ்வெல்ட் சொன்னார், புத்தகங்களைப் படிக்கும் போது எனக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பத்திரிக்கை நிருபர், மீண்டும் ரூஸ்வெல்ட் - ஐ பார்த்து கேட்டார். அதாவது, "நீங்கள் எப்படி, படிப்பதற்கான புத்தகங்களைத் தேர்வு செய்வீர்கள்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புத்தகங்களைப் படிக்கும் போது எனக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. - ரூஸ்வெல்ட்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலத்தால் அழியாத புத்தகங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரூஸ்வெல்ட் தெளிவாக சொன்னார், "நூற்றாண்டின் சிறந்த புத்தகத்தை முதலில் தேர்ந்து எடுத்து படிப்பேன். வார, சஞ்சிகையையோ, மலிவான நாவல்களையோ படிக்க மாட்டேன். சில சமயம், நான்கு நூற்றாண்டு பாரம்பரிய, புத்தகங்களான 'பழமொழிகள்' (Proverb) அடங்கிய புத்தகத்தைத் தேர்ந்து எடுத்து முதலில் படிப்பேன்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரூஸ்வெல்ட் மேலும் சொன்னார்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"காலமும் மற்றும் மனமும் இயற்கையின் மிகப் பெரிய பொக்கிஷ்ம், அதை மிக மிகக் கவனமாக ஒருவன் கையாள வேண்டும். ஆகையால், என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் வாழ்க்கையின் மிக மிக சிறந்தவைகளுக்காக செலவு செய்வேன்" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"காலமும் மற்றும் மனமும் இயற்கையின் மிகப் பெரிய பொக்கிஷ்ம்" - ரூஸ்வெல்ட்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலத்தின் அருமை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரூஸ்வெல்ட்டின் "என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் வாழ்க்கையின் மிக மிக சிறந்தவைகளுக்காக செலவு செய்வேன்" என்ற இந்த தெளிவான கூற்றைவிட காலத்தின் அருமையை ஒருவர் உணர வைக்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்திய இளைஞனே காலத்தின் அருமையை முதலில் உணர். பிறகு உனது நேரத்திற்கு நீயே மதிப்பு கொடு !!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிறகு உனது மனதின் அருமையை மற்றும் உள்ளத்தின் அருமையை உணர முயல். உனது திறமையை உணர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செயற்கரிய செயல்களை திட்டமிட்டு செய். உலகம் உன் காலடியில். கிடைத்தற்கு அரிய இந்த வாழ்க்கையை வாழ்வங்கு வாழ முற்படுவோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"Time and mind are too precious to waste to spend on anything but the best" - Theodore Roosevelt, Former US president.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீர்க்குமிழியாம் வாழ்க்கை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 ஆண்டுகள் கண்மூடி கண் திறப்பதற்குள் முடிகின்ற மிக குறுகிய கால வாழ்க்கை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"LIFE IS SHORT, MAKE IT SWEET AND PURPOSEFUL"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகையால் தான் சொல்கிறேன், நேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"TIME MANAGEMENT IS LIFE MANAGEMENT"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நேரத்தைத் தொலைத்தவன் வாழ்க்கையைத தொலைக்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
6 வயது முதல் 60 வயது வரை நேர நிர்வாகம் கட்டாயம் தேவை, அதுவே வாழ்க்கை நிர்வாகம் !</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-40842915605503362012019-05-27T10:11:00.000-07:002019-05-27T10:20:42.772-07:00தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.</div>
<div style="text-align: justify;">
மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது</div>
<div style="text-align: justify;">
வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.</div>
<div style="text-align: justify;">
இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.</div>
<div style="text-align: justify;">
பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம். துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது. அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது </div>
<div style="text-align: justify;">
நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும். பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது. சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும். ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும். ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும். ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள். இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள். அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன்</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-19425817577552452152019-05-27T10:00:00.004-07:002019-05-27T10:20:42.558-07:00வாழ்வில் வெற்றி பெற முத்தான வழிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என பல புத்தகங்களும், ‘தோல்வியை கண்டு துவளாதீர்கள்’ என ஆறுதல், தரும் புத்தகங்களும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வழிமுறைகளைப் பற்றி சொன்னாலும், ‘இதுதான் வெற்றி, இதுதான் தோல்வி’ என தீர்மானிக்கும் விதம் வேறுபடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதுவும் இந்த வேறுபாடு நாட்டுக்கு நாடு, மதத்திற்கு மதம், ஏன் ஆண்களுக்கு ஒரு மாதிரி பெண்களுக்கு ஒரு மாதிரியாகவும் கூட வேறுபடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பணம் நிறைய சம்பாதிப்பதை வெற்றி என்று எடுத்துக் கொண்டால், கோடீஸ்வரர்கள், மனநோயாளிகளாகவோ, தற்கொலை செய்து கொள்பவர்களாகவோ இருந்திருக்க கூடாதல்லவா? காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதை வெற்றி என்று எடுத்துக்கொண்டால், காதல் தம்பதிகள் விவாகரத்து செய்யக் கூடாதல்லவா? தோல்வி பற்றிய கண்ணோட்டம் என்பது சமூக சூழ்நிலைகளினாலும் பெருவாரியான மக்கள் ஆதரிக்கும் கருத்துக்களாலும் நிலை பெறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த கருத்துக்கள் தான் குடும்பம், அரசியல், ஆன்மிகம், கலைத்துறை, கல்வித்துறை என்று பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்து, வெற்றி பெறுகிறவர்களுக்கு சந்தோஷத்தையும் தோல்வி பெறுகிறவர்களுக்கு துக்கத்தையும் தருகிறது. ஒரு தலைமுறையினர், இன்னொரு தலைமுறையினருக்கு சொல்லும் கருத்துக்களில், முக்கால்வாசி இந்த வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
ஒரு தலைமுறையினர் மிகப்பெரிய வெற்றி என்று நினைத்தது, அடுத்த தலைமுறையினருக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அந்த காலகட்டத்தில் சொல்லப்படும் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்களுக்கு இடையே அல்லல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெற்றி, தோல்வி பற்றிய தெளிவு இல்லாவிட்டால் அது தேவையில்லாத மன அழுத்தத்தையும், சோர்வையும், சக்தியற்ற நிலைமையையும் உருவாக்கி விடும். ஒரு வகையினர் வெற்றியை ஆர்ப்பாட்டமாக கொண்டாடுகிறார்கள், இன்னொரு வகையினர், அமைதியாக இருப்பதே பெரிய வெற்றி என்று கூறுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் இரு வகையினருமே, வெற்றி என்ற வார்த்தைக்குள் தான் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வெற்றி என்பது ஒரு அடையாளமா? அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா? என்று கேட்டால், அதை ஒரு அடையாளம் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த அடையாளம் தான் சிறந்த மாணவன், சிறந்த வியபாரி , சிறந்த அரசியல்வாதி , சிறந்த மருத்து வர் என்று பல் வேறு முத்திரைகளைப் பெறுகிறது. சில நேரங்களில் இந்த முத்திரை மாறிக் கொண்டு இருக்கும். டிவி நிகழ்ச்சிகளில் தோல்வி அடைந்தவர்கள் கண் கலங்குவதும், அதைப்பார்த்து பெற்றோர்கள் தாரை தாரையாக கண்ணீர் விடுவதும், வெற்றி பெற்று விட்டால், அலப்பறை பண்ணுவதும் இரண்டுமே தவறான அணுகுமுறைகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காரணம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக்கூடிய திறமை, அறிவு என்பது வேறு வேறு. கொஞ்ச விகிதத்தில் மாறி மாறி இருக்கும். அதை உன்னிப்பாக கவனிக்காமல், சிறந்த ஓவியம் வரையக்கூடிய மாணவன் சரியாக பாடவில்லையே என்று நினைப்பதும், நன்றாக பாடக்கூடிய மாணவி நன்றாக ஆடவில்லையே என்று நினைப்பதும் பல்வேறு மன உளைச்சல்களைத்தான் உருவாக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு மயில், சிங்கத்தை போல கர்ஜனை செய்ய முடியவில்லையே என்று நினைக்கவே நினைக்காது. அதே போல், ஒரு சிங்கம் மயிலைப் போல் ஆட முடியவில்லையே என்று நினைக்காது. அவைகள், தங்களின் இயல்புக்கேற்ப முழுமையாக இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால், சிங்கத்தையும், மயிலையும் கூண்டில் அடைக்கத் தெரிந்த மனிதர்களாகிய நாம்- புலம்பல் என்ற ஒரு பெரிய கூண்டை உருவாக்கி அதில் நாமே மாட்டிக் கொண்டிருக்கிறோம். சரி இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியேறுவது? கூண்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் முதலில் நாம் கூண்டிற்குள் தான் அடைபட்டுக் கிடக்கிறோம் என்ற விழிப்புணர்வு முக்கியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடைபட்டுக் கிடப்பது என்பது ஒருவிதமான மனநோய், அதன் அறிகுறியை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவரை பார்த்து இப்படி ஆகிவிட வேண்டும், அப்படி வாழ வேண்டும் என்ற நினைப்பு தான் அது. ஆனால் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து அதே போல் ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு ஆரோக்கியமான சிந்தனை தானே, அது எப்படி மனநோயாக இருக்க முடியும் என கேட்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்த ஒரு விஷயமும் சுயமாக ஆராய்ந்து, முடிவு எடுக்காமல், பிறரைப் பார்த்து எடுப்பது என்பது நிச்சயம் ஒரு சமயத்தில் குழப்பத்தை தந்து காலை வாரிவிட்டு விடும். இன்னொரு பக்கம், உங்களுக்கே உரித்தான, நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியத்தையும், நீங்கள் மட்டுமே அடையக் கூடிய அந்த அனுபவத்தையும் நிச்சயமாகத் தவற விடுவீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வெற்றி, தோல்வி கண்ணோட்டம் பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாகி, ஓய்வு பெறும் வயது வரை உங்களை பாடாய்ப்படுத்துகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எது எது சந்தோஷம் தருகின்றதோ, அவைகளுக்கு வெற்றி என்று பெயர் சூட்டியும், எது எது துக்கம் தருகின்றதோ, அவைகளுக்கு தோல்வி என்று பெயர் சூட்டியும் பழகி விட்டோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கு ஆரம்ப வித்து பள்ளியில் இருந்தே முளைவிடத் தொடங்கியது. ‘கிளாஸ் பர்ஸ்ட், ஸ்கூல் பர்ஸ்ட், ஸ்டேட் பர்ஸ்ட் வரணும்” ”ஒரு என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆயிரணும்” ஓ.கே. இந்த விதிமுறைகள் ஒன்றும் தப்பில்லை ‘பாசிட்டிவ்’ சிந்தனைகள் தான். ஆனால், பொதுவான ஒரு விதிமுறையை நாம் கவனிப்பது இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அனைவரும் நன்றாக படித்து சென்டம் வாங்கினால் யார் கிளாஸ் பர்ஸ்ட்? அப்படி ஒரு சம்பவம் எப்பொழுதும் நடப்பதில்லை. மாணவர்களைச் சுற்றி ‘மெஷின் கன்’னை வைத்து கொண்டு மிரட்டி படிக்க சொன்னால் கூட, உயிருக்கு பயந்து கூட அனைவரும் ‘முதல் ரேங்க்’ எடுக்க மாட்டார்கள். எடுக்கவும் முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆக, பொது விதிமுறை அனைவராலும் ‘முதல் ரேங்க்’ எடுக்க முடியாது என்பது தான்… இன்னொரு பொதுவிதிமுறை, படிப்பில் 25-வது ரேங்க் எடுப்பவன், விளையாட்டில் முதலிடம் வரலாம். வகுப்பில் கடைசி ரேங்க் எடுப்பவன் பாட்டு போட்டிகளில், நன்றாக பாடி லட்சங்களில் பரிசை அள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆக எவருமே சாதாரண நபர்களில்லை, ஒரே மாதிரி நபர்களுமில்லை… ஒரு மனிதனோட கட்டைவிரல் ரேகை மாதிரி, இன்னொரு மனிதனுக்கு இருக்காது. 700 கோடி கட்டை விரல் ரேகைகளும் வேறு தான்… இயற்கையே இவ்வளவு ‘சிம்பிள்’ஆக சொல்லி விட்ட பிறகும் கூட நாம் தான் முதல் இடம், இரண்டாம் இடம் என்று அடித்துக் கொண்டிருக்கிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிந்தனையை ஒருமுகமாக்கி எடுத்துக் கொண்ட செயல்களில் முழுமையாக நம்மை ஒப்படைக்கும்போது நாம் முயற்சிக்கும் எந்தவொரு செயலுக்கும் எப்படியும் வெற்றி வந்தே தீரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதனால் முதல் இடமே லட்சியம் என்ற சிந்தனையை தோளில் தூக்கி சுமந்து திரியாமல் காரியமாற்றினால் அப்போது அதுவாகவே தேடிவரும். அந்தநே ரத்தில் அந்த வெற்றி உங்களுக்கு சாதாரணமாகவே படும் என்பது தான் ஆச்சரியம். பக்குவப்பட்ட வெற்றி எப்போதுமே அகந்தை தராது என்பது இதில் உணரவேண்டிய உண்மை</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-32496126701900413482019-05-27T09:58:00.002-07:002019-05-27T09:58:52.805-07:00பொன்மொழிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். —பிராங்க்ளின்.</div>
<div style="text-align: justify;">
தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. —போவீ. </div>
<div style="text-align: justify;">
வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது. —அரிஸ்டாட்டில். </div>
<div style="text-align: justify;">
நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!- நெப்பொலியன் ஹில் </div>
<div style="text-align: justify;">
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.- கன்ஃப்யூஷியன்</div>
<div style="text-align: justify;">
மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.- டாக்டர்ஜான்சன் </div>
<div style="text-align: justify;">
உடைமையில் உரிமை கோருவது அல்ல அன்பு. உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்- ஸ்ரீ அன்னை. </div>
<div style="text-align: justify;">
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!- சுபாஷ் சந்திரபோஸ்.</div>
<div style="text-align: justify;">
நீ என்ன நினைக்கிறாயோ அது உன்னால் இயலாமல் போகும்போது உன் ரத்தத்தில் ஜனித்த ஜீவன் அதைச் சாதித்துக் காட்டிவிடும்- கிரந்தம்.</div>
<div style="text-align: justify;">
பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும் -அவ்பரி. </div>
<div style="text-align: justify;">
கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது -பீட்டர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும். </div>
<div style="text-align: justify;">
உன் விதியை நீயே நிர்ணயம் செய் இல்லையென்றால் மற்றவர்கள் நிர்ணயித்து விடுவார்கள்.</div>
<div style="text-align: justify;">
மரியாதை பெறும் ஒரே வழி அதனை முதலில் கொடுப்பதாகும். </div>
<div style="text-align: justify;">
திருப்தியும் பேரின்பமும் எம்முள் இருப்பின் நாம் மற்றவர்களால் விரும்பப்படுவோம். </div>
<div style="text-align: justify;">
எல்லா சந்தர்ப்பத்திலும் சமநிலையுடன் இருப்பதுதான் மகிழ்ச்சி.</div>
<div style="text-align: justify;">
நிரந்தரமற்றதின் மீது அன்பு செலுத்துவது உன் தோல்வியின் முதல்படியாக அமையும். </div>
<div style="text-align: justify;">
பிடிவாதமும் கோபமும் உன் இயலாமையின் வெளிப்பாடாகும். </div>
<div style="text-align: justify;">
நிஸப்தத்தை நாடுபவன் வாழ்வின் உண்மை நிலையை உணர்ந்துள்ளான். </div>
<div style="text-align: justify;">
வாழ்வின் அறநெறியை தேடுபவன் தன் வாழ்வின் அன்பு நெறியை உணர்ந்திருத்தல் அவசியம். </div>
<div style="text-align: justify;">
பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
அன்பை விலைக்கு வாங்குவது சுயநலமொன்றே, ஆகவே எச்சரிக்கையாய் இரு உன் அன்பர்களிடம்.</div>
<div style="text-align: justify;">
நீ உன் உரிமையை இழப்பின் உன் உணர்வையும் இழப்பாய். </div>
<div style="text-align: justify;">
தொடங்கிய இடத்தை தெரிந்துகொள் அப்போதுதான் முடிக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம். </div>
<div style="text-align: justify;">
அன்பு என்றும் உன் உள்ளத்திலிருந்தால் அறிவு என்றும் உன்னை விட்டகலாது. </div>
<div style="text-align: justify;">
உன் சோம்பேறித்தனம் உன் வாழ்வின் தடைக்கல்லாய் அமையலாம்.</div>
<div style="text-align: justify;">
உன் அவசரப் பேச்சு உன்னை அனாதரவாக்காமல் பார்த்துக்கொள். </div>
<div style="text-align: justify;">
ஒரு தவறை திரும்பத் திரும்பச் செய்வது மடமை, மடமையை திரும்பத் திரும்பச் செய்பவன் எப்படி முழு மனிதனாக முடியும்? .</div>
<div style="text-align: justify;">
பிறர் முன் பேசும் வார்த்தையிலும் செய்யும் செயலிலும் எச்சரிக்கையாய் இரு,உன்னை பிறர் எடை போட்டுக் கூறுபவை அவையே !</div>
<div style="text-align: justify;">
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம். </div>
<div style="text-align: justify;">
சிந்திப்பதும் அதை வெளிப்படுத்துவதும் நாமெல்லாம் மனிதர்கள் என்பதன் அடையாளம். சிந்திப்பதை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டால் சிறிது காலத்தில் சிந்திப்பதே மறந்து விடும். </div>
<div style="text-align: justify;">
அநியாத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை ஆனால், நியாயத்திற்கு கடவுளின் கருணை மட்டும் போதும். </div>
<div style="text-align: justify;">
கடவுளை அடைய ஒரேயொரு வழிதான் உண்டு. அது அவர் செய்வதை நாமும் செய்வது படைப்பது.</div>
<div style="text-align: justify;">
வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி அழகான பசி ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-88483755112873200282019-05-27T09:57:00.000-07:002019-05-27T09:58:52.976-07:00நட்பு பற்றிய பொன்மொழிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
*நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் இறைத் தூதுவன்தான் நண்பன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து வைப்பது நட்புதான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன். எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம்... நீ என்னை அறிந்துள்ளாய். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பாட்டுப் பாடும். </div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-81735476541433760922018-12-18T13:00:00.003-08:002019-05-27T09:58:52.891-07:00சாதனை படைப்பது எப்படி? இயற்கையை வெற்றி கொள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். </div>
<div style="text-align: justify;">
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.</div>
<div style="text-align: justify;">
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.</div>
<div style="text-align: justify;">
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.</div>
<div style="text-align: justify;">
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.</div>
<div style="text-align: justify;">
* ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான். </div>
<div style="text-align: justify;">
* தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம்.</div>
<div style="text-align: justify;">
* குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.</div>
<div style="text-align: justify;">
* பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவனே பேறு பெற்றவன்.</div>
<div style="text-align: justify;">
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
* தன்னை மறந்து பணியாற்றும்போது தான் கடமையில் சாதனை படைக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
* கோபப்படும் மனிதனால் சிறப்பாக பணியில் ஈடுபட முடியாது. மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனே, தனது பணியில் தீவிரமாக செயல்பட முடியும்.</div>
<div style="text-align: justify;">
* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.</div>
<div style="text-align: justify;">
* கருணை நிறைந்தவர்களாக மாறுங்கள். ஏனெனில், கருணையே இனிய சொர்க்கம்.</div>
<div style="text-align: justify;">
* எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.</div>
<div style="text-align: justify;">
* வாழ்வில் ஒரு நன்மையாவது செய்யுங்கள். அதனால், பாவம் அனைத்தும் தீர்ந்து விடும். </div>
<div style="text-align: justify;">
* பிறவிப்பிணி நீங்க வேண்டுமானால், ஆசையின் சாயலே அற்றுப் போய் விட வேண்டும். வேறெந்த முயற்சியும் வீணானவை தான்.</div>
<div style="text-align: justify;">
* யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டுஇருக்கட்டும். எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதை கடவுளின் வழியில் செய்து கொண்டிருங்கள்.</div>
<div style="text-align: justify;">
* பெண்ணுக்கு நாணமே ஆபரணம். அது இல்லாத பெண்ணைப் பெண் என்றே சொல்ல முடியாது. </div>
<div style="text-align: justify;">
* ஆசையை யாராலும் விலக்க முடியாது. உடம்பு என்ற ஒன்று இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். ஆனால், அதை கட்டுக்குள் வைக்க வேண்டும். </div>
<div style="text-align: justify;">
* "கடவுள் என்னுடையவர்' என்ற சிந்தனையை விதைப்பதற்கு ஏற்றது குழந்தைப் பருவமே. பக்தியை குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொடுங்கள். </div>
<div style="text-align: justify;">
* தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார்.</div>
<div style="text-align: justify;">
* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.</div>
<div style="text-align: justify;">
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.</div>
<div style="text-align: justify;">
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். </div>
<div style="text-align: justify;">
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். </div>
<div style="text-align: justify;">
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்.</div>
<div style="text-align: justify;">
* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.</div>
<div style="text-align: justify;">
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.</div>
<div style="text-align: justify;">
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.</div>
<div style="text-align: justify;">
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. </div>
<div style="text-align: justify;">
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. </div>
<div style="text-align: justify;">
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.</div>
<div style="text-align: justify;">
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.</div>
<div style="text-align: justify;">
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.</div>
<div style="text-align: justify;">
* திண்ணையில் உட்கார்ந்திருப்பவன் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.</div>
<div style="text-align: justify;">
* உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், "தான் ஒருவனே மகா கெட்டிக்காரன், மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே, துன்பப்படுபவனும் "தான் ஒருவன் மட்டுமே உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்' என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை.</div>
<div style="text-align: justify;">
* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து வழிபடுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* "இன்றைய நாள் முழுவதும் நல்ல பொழுதாக அமைய வேண்டும்' என்று தினமும் வேண்டிக் கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* புண்ணிய நதிகள், பசு, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர்களை குறைந்தது ஒரு நிமிடமாவது சிந்தியுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* வாரம் ஒருமுறையாவது கோயில் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.</div>
<div style="text-align: justify;">
* அண்டைவீட்டாரையும், மற்ற மனிதர்களையும் அன்புடன் நேசித்து வாழுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* சாப்பிடும் முன் மிருகம், பறவைகளுக்கு உணவு அளித்த பின்னரே சாப்பிடுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* அன்றாடம் அவரவர் சக்திக்கேற்ப தர்மம் செய்து வருவது நன்மை அளிக்கும்.</div>
<div style="text-align: justify;">
* நீராடிய பின் நெற்றியில் தவறாமல் திருநீறு, குங்குமம் வைத்துக் கொள்வது அவசியம்.</div>
<div style="text-align: justify;">
* உறங்கும் முன் அன்றைய நாளில் நடந்த நல்லது, கெட்டதை எண்ணிப் பார்ப்பது நம்மைத் திருத்திக் கொள்ள வழிவகுக்கும்.</div>
<div style="text-align: justify;">
* பாவிகளை நாம் வெறுப்பதாலும், அவர்களை கோபிப்பதாலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்பவேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.</div>
<div style="text-align: justify;">
* நம் நாட்டில் முற்காலத்தில் கல்வியின் முதல் நோக்கம் அமைதியை அடைவதே ஆகும். ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் 'பரவித்யை' எனவும், மற்றவற்றை 'அபரவித்யை' எனவும் கூறுவர்.</div>
<div style="text-align: justify;">
* பாவத்திற்கு மூலம் கெட்ட காரியம். கெட்ட செயலுக்கு மூலம் ஆசை. ஆகையால், நம் கஷ்டம் அனைத்திற்கும் மூலகாரணமாகிய ஆசையை நிவர்த்தி பண்ணினால், நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.</div>
<div style="text-align: justify;">
* கடவுள் ஒன்று என்று சொல்வதோடு மற்ற மதங்கள் இருந்துவிடுகின்றன. ஆனால், இந்துமதமோ ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு வழிபட பலப்பல தெய்வ வடிவங்களை நமக்குக் காட்டுகிறது.</div>
<div style="text-align: justify;">
* தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட அவனை ஆதரிக்கும். அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான்.</div>
<div style="text-align: justify;">
* அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தா போகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. இப்படியே ஓர் ஆசை பூர்த்தியானவுடன் இன்னொரு ஆசை மூள்கிறது.</div>
<div style="text-align: justify;">
* கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.</div>
<div style="text-align: justify;">
* தமிழ்நாடு ஒரு குளிர்சாதன பெட்டி போல எல்லா பாஷைகளையும், எல்லா நாகரீகங்களையும் கெடாமல் குளிர்ச்சியுடன் காத்துத்தந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நிறைந்திருப்பது எது? வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாடியது உண்மையாகும்.</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-31129103899529891502018-12-18T11:32:00.002-08:002019-05-27T09:58:52.720-07:00வெற்றி வாழ்வின் ரகசியம் - தைரியமாக இருங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
* மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது.</div>
<div style="text-align: justify;">
* திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். அது போதும்.</div>
<div style="text-align: justify;">
* கோழை தான் வாழ்வில் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.</div>
<div style="text-align: justify;">
* மக்களிடம் உண்மையான சமத்துவம் எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.</div>
<div style="text-align: justify;">
* சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
* மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.</div>
<div style="text-align: justify;">
* சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.</div>
<div style="text-align: justify;">
* பிரதிபலன் பாராமல் நன்மை செய்யுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெற்றி வாழ்வின் ரகசியம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும். </div>
<div style="text-align: justify;">
* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.</div>
<div style="text-align: justify;">
* இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
* மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான். </div>
<div style="text-align: justify;">
* கற்புநெறியில் இருந்து பிறழும் போது, மனித சமூகம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.</div>
<div style="text-align: justify;">
* நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையைப் பின்பற்றுங்கள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.</div>
<div style="text-align: justify;">
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.</div>
<div style="text-align: justify;">
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.</div>
<div style="text-align: justify;">
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. </div>
<div style="text-align: justify;">
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. </div>
<div style="text-align: justify;">
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.</div>
<div style="text-align: justify;">
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.</div>
<div style="text-align: justify;">
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்மால் சாதிக்க முடியும்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.</div>
<div style="text-align: justify;">
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.</div>
<div style="text-align: justify;">
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். </div>
<div style="text-align: justify;">
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். </div>
<div style="text-align: justify;">
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகத்துக்காக தியாகம் செய்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
* ஒருவருக்கொருவர் நன்மை செய்வதன் மூலமாகத் தான், நற்பலன்களை அடைய முடியும்.</div>
<div style="text-align: justify;">
* மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கே செல்லவும் தயாராக இருக்கவேண்டும். மரணம் ஒருநாள் உறுதி என்னும்போது நல்ல செயலுக்காக உயிரை விடுவது மேலானது.</div>
<div style="text-align: justify;">
* பெரியவர்கள் பலர் செய்த தியாகத்தின் பயனையே இன்று மனிதகுலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை உலகம் முழுவதிலும் காணமுடியும்.</div>
<div style="text-align: justify;">
* உன் சொந்த முக்திக்காக நீ உலகத்தைத் துறந்து விட விரும்பினால் அது ஒன்றும் பாராட்டத்தக்கது அல்ல. ஆனால், உலக நன்மைக்காக உன்னை நீயே தியாகம் செய்ய முடியுமானால் கடவுளாகி விடுவாய்.</div>
<div style="text-align: justify;">
* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்காதே. வெற்றி, தோல்வி என்று கவனித்துக் கொண்டிருக்காதே. உடனடியாக, தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உழைத்து வாழ வேண்டும்ஜனவரி 10,2013,14:01 IST</div>
<div style="text-align: justify;">
* தைரியமாயிருங்கள். பலமுடையவர் ஆகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்பு களையும் சுமத்திக் கொண்டு செயல்படுங்கள். </div>
<div style="text-align: justify;">
* உங்கள் விதியை நிர்ணயிப்பவர் நீங்களே. உங்களுக்கு வேண்டிய பலமும், துணையும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
* கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும், ஒழுக்கமும் கொண்ட நல்லவர்களையே இந்த மண்ணுலகம் வேண்டி நிற்கிறது.</div>
<div style="text-align: justify;">
* உழைத்து வாழுங்கள். இவ்வுலக வாழ்வு எத்தனை நாள் என்பது நமக்குத் தெரியாது. உலகில் தோன்றியதன் அறிகுறியாக ஏதேனும் நல்லதைச் செய்ய முயலுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துங்கள். அதன் பின் உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் சீராகி ஒழுங்காகி விடும். </div>
<div style="text-align: justify;">
* வாழ்வில் நன்மை பெற வேண்டுமானால், மனிதர்களுக்கு முதலில் தொண்டு செய்யுங்கள்.</div>
<div style="text-align: justify;">
விவேகானந்தர்</div>
<div style="text-align: justify;">
(இன்று விவேகானந்தர் பிறந்ததினம்) </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இயற்கையை வெற்றி கொள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். </div>
<div style="text-align: justify;">
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.</div>
<div style="text-align: justify;">
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.</div>
<div style="text-align: justify;">
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.</div>
<div style="text-align: justify;">
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உள்ளத்தை ஒழுங்குபடுத்து!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* உங்களுக்கு வருகிற துன்பம் எதுவென்றாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* உலகத்தில் உள்ள தீமைகளைப் பற்றி வருந்த வேண்டாம். உங்கள் உள்ளத்தில் இருக்கும் தீமையைப் போக்க வழிகாணுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால், எல்லா இடத்திலும் கடவுளைக் காண்பீர்கள்.</div>
<div style="text-align: justify;">
* பாவ எண்ணமும், பாவச் செயலும் ஒன்று தான். அதனால், தீய எண்ணமும் கூட ஒருவனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறவாதீர்கள்.</div>
<div style="text-align: justify;">
* சுதந்திரம் இல்லாத வரையில் ஒரு மனிதனிடம் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.</div>
<div style="text-align: justify;">
* உயிர் போகும் வேளையில் கூட, ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம். </div>
<div style="text-align: justify;">
* தன்னை அடக்கக் கற்றுக் கொண்டவன் தரணியையே அடக்கும் வலிமை பெறுகிறான்.</div>
<div style="text-align: justify;">
* நேர்மை, அக்கறை உணர்வுடன் ஈடுபடும் எந்த விஷயத்திலும் சாதனை நிகழ்த்த முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தவறுகளைத் திருத்திக்கொள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தியதோடு, அதை கடைபிடித்தவர்களில் புத்தருக்கு இணையான ஒருவரை உலகம் இதுவரை காணமுடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
* ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம் நல்ல ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றி நடக்க முடியும். </div>
<div style="text-align: justify;">
* ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே தவிர, வெறும் பேச்சன்று.</div>
<div style="text-align: justify;">
* இரும்பைப் போன்ற மன உறுதியும், மலைகளைத் துளைத்துச் செல்லும் வலிமையும் வந்து விட்டால் கடலையும் கடக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
* அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. அது தான் நம்முடைய மனதை ஒருமுகப்படுத்துவதாகும்.</div>
<div style="text-align: justify;">
* அன்பில்லாதவன் பெற்ற உலகியல் அறிவும், ஆன்மிக ஞானமும் பயனற்றது. அவனால் கடவுளை ஒருபோதும் அடைய முடியாது.</div>
<div style="text-align: justify;">
* "நான் கெட்ட செயலை செய்து விட்டேன்' என்று வருந்துவதைக் காட்டிலும் அதை திருத்திக் கொள்வதே மேலானசெயல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விருப்பத்துடன் வேலை செய்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* பகை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் தோன்றிய இடத்திற்கே திரும்பி வந்து விடும்.</div>
<div style="text-align: justify;">
* நன்மை செய்வதே சமயவாழ்வின் சாரம்.</div>
<div style="text-align: justify;">
* எல்லாவற்றையும் செவி சாய்த்துக் கேளுங்கள். ஆனால், உங்களுக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதை மட்டும் உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அஞ்ச வேண்டாம். அதையே துணிச்சலுடன் பின்பற்றுங்கள். ஒருபோதும் கோழையாக இருக்காதீர்கள்.</div>
<div style="text-align: justify;">
* தன்னை அடக்கிப் பழகியவன் வேறு எதற்கும் வசப்பட மாட்டான். அத்தகையவனே உலகில் நன்றாக வாழும் தகுதி பெற்றவன்.</div>
<div style="text-align: justify;">
* எந்த வேலையாக இருந்தாலும், அதை தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்பவனே அறிவாளி.</div>
<div style="text-align: justify;">
* அன்புடைய மனிதனே வாழ்கிறான். சுயநலம் கொண்டு மற்றவர்கள் மீது வெறுப்பு கொள்பவன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பது பொருள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-21642675547250678192018-12-18T11:31:00.000-08:002019-05-27T09:58:52.588-07:00ஒரே எண்ணம் வாழ்வில் வெற்றி தரும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
* ஒருவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், ""நான் பாவியாக இருக்கிறேனே! எப்படி கடைத்தேறப் போகிறேன்!'' என்று அழுது கொண்டிருப்பதனால் பயன் சிறிதும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
* வெறும் வருத்தத்தினாலும், புலம்பலினாலும் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஊக்கத்தோடு நம் கடமைகளைச் செய்தால் நிச்சயம் உருப்படலாம்.</div>
<div style="text-align: justify;">
* மனங்களில் நல்லமனம் என்றும், கெட்டமனம் என்றும் இருவேறு மனங்கள் இல்லை . மனம் என்பது ஒன்று தான் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
* நாம் அனுபவிக்கும் இன்பத்தை அறியாமையால் புறவுலகத்தில் இருந்து பெறுவதாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் இன்பம் நமக்குள்ளே தான் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
* கடவுளின் பேரால் எவ்வளவு பாரத்தைக் கொடுத்தாலும் அவ்வளவையும் அவரே ஏற்றுக்கொள்வார். ஆனால், நாம் நம் மனதில் சுமைகளை சுமப்பதால் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறோம். </div>
<div style="text-align: justify;">
* உழைப்பும் சமூகசேவையும் உலகத்திற்கு நன்மை செய்வனவாகும். உழைப்பின் மீதும், நம்மால் முடிந்த சேவைகளையும், பிறருக்கு உதவி செய்வதையும் உங்கள் அடிப்படைக் கடமையாகக் கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும்.</div>
<div style="text-align: justify;">
அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.</div>
<div style="text-align: justify;">
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.</div>
<div style="text-align: justify;">
மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.</div>
<div style="text-align: justify;">
மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.</div>
<div style="text-align: justify;">
அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.</div>
<div style="text-align: justify;">
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.</div>
<div style="text-align: justify;">
நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* முற்பிறவியில் புண்ணியவினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.</div>
<div style="text-align: justify;">
* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.</div>
<div style="text-align: justify;">
* விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது.</div>
<div style="text-align: justify;">
* பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-3799643095316291222018-11-09T14:00:00.000-08:002018-11-09T10:59:24.216-08:00வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணங்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணங்கள்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாணயம் புக் செல்ஃப்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புத்தகத்தின் பெயர்: தி பவர் ஆஃப் மொமென்ட்ஸ் (The Power of Moments: Why Certain Experiences Have Extraordinary Impact)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆசிரியர்கள்: Chip Heath and Dan Heath</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பதிப்பகம்: Simon &amp; Schuster</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்மில் பெரும்பாலானோர் வாழ்வில், ஒரு சில தருணங்களே நமக்குள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறோம். வாழ்வில் நிறைய விஷயங்கள் நடக்கிறபோதிலும் இதுபோன்ற தருணங்கள் மறக்க முடியாததாக ஆகிவிடுகின்றன. இவற்றில் சில தருணங்கள் எதேச்சையாக நடந்தவையாகவும், சில தருணங்கள் அதிர்ஷ்டத்தால் நடந்தவையாகவும் இருக்கின்றன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள் எதேச்சையாகவும் அதிர்ஷ்டத்தின் காரணமாகவும் மட்டுமே உருவாகும் தன்மைகொண்டதா என்று கேட்டால், அதுதான் இல்லை. இதுபோன்ற தருணங்களை எதேச்சை மற்றும் அதிர்ஷ்டத்திற்கு ஒதுக்கிவிடாமல், திட்டமிட்டு நம்மால் அதனை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதையும், எப்படி அதைத் திட்டமிட்டுச் செயலாக்குவது என்பதையும் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிப் ஹீத் மற்றும் டேன் ஹீத் என்ற இருவர் இணைந்து எழுதிய ‘சில தருணங்கள் உருவாக்கும் சக்தி’ (The Power of Moments) என்னும் புத்தகத்தில், நம் வாழ்வில் ஏற்படும் ஒரு சில அனுபவங்கள் நமக்குள்ளே ஏன் பெரும் தாக்கங்களைக் கொண்டுவருகிறது என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உதாரணத்துக்கு, எங்கோ பயணிக்கும் போதோ அல்லது ஒரு மீட்டிங்கிலோ புதியதாக ஒருவரைச் சந்திக்கிறோம். ஒரு சில மணி நேரம் அவரிடம் பழகிய பின்னர் பிரிகிறோம். ஆனால், அவர் நாளடைவில் நெருங்கிய நண்பராக மாறி நமக்குப் பெரும் பக்கபலமாய் இருக்க ஆரம்பிக்கிறார். இது எப்படிச் சாத்தியம்? பயணத்தில் சந்திக்கும் அனைவரும் நண்பர்களாவதில்லை. நண்பர்களாகும் அனைவரும் பக்கபலமாய் இருப்பதில்லை அல்லவா? இதுபோன்ற விஷயங்களைப் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம் வாழ்வில் வரையறுக்கும் பல கணங்களை (Defining Moment) நாம் எதிர்கொள்கிறோம். ஆனால், அவையெல்லாம் வெறுமனே எதேச்சையாக நடந்தவை என்றே நாம் நினைத்துக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, காதலியை முதன்முதலாகச் சந்தித்த தருணம், புதிதாக வந்த ஆசிரியர் நமக்கே தெரியாத ஆனால், நம்மிடம் இருக்கும் திறமை ஒன்றைக் கண்டறிந்து சொல்லும் தருணம், வாழ்க்கை என்பது நிரந்தரம் என்று எல்லோரையும் போல் நாம் நினைத்திருக்க, திடீரென்று முளைத்த ஒரு பிரச்னையால் வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்று நாம் புரிந்துகொண்ட தருணம், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேலையில் இனிமேல் ஒருநாள்கூட இருக்கக்கூடாது என்று நாம் முடிவெடுக்கும் தருணம்போன்ற எல்லாவற்றை யுமே நாம் அதிர்ஷ்டத்தால் நடந்தது அல்லது எதேச்சையாய் நடந்தது என்றே அர்த்தம் செய்துகொள்கிறோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘‘இது உண்மையா என்றால் இல்லை. இவை எதுவும் எதேச்சை யாக நடப்பது இல்லை. நம்மால் ஒரு சினிமா/டிராமாவைப்போல் ஸ்கிரிப்ட் எழுதி அவற்றை நிகழ வைக்க முடியும்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள். இதுபோன்ற வரையறுக்கும் தருணங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றில் இருக்கும் ஒற்றுமைகள் என்ன என்பதையும், அந்த வரையறுக்கும் தருணங்களை உருவாக்குவது எப்படி என்பதையும் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வரையறுக்கும் தருணங்கள் பலவற்றையும், புத்தகத்தின் ஆசிரியர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அவை அனைத்திலுமே சில ஒற்றுமையான விஷயங்கள் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. இதனாலேயே இதுபோன்ற தருணங்களை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதற்காக இதுபோன்ற தருணங்கள் நமக்குத் தேவை அல்லது உருவாக்கப்பட வேண்டும் என்கிறீர்களா? வாழ்க்கையை வளப்படுத்த, மற்றவர்களிடம் தொடர்பு ஏற்படுத்த, நினைவிலிருந்து நீங்காத அனுபவங்களை ஏற்படுத்த, வாடிக்கையாளர், நோயாளி, பணியாளர் என நம்முடைய துறைக்கு ஏற்றாற் போல் அனைவருக்கும் சுகமான அனுபவத்தைத் தரவும்தான் என்கின்றனர் ஆசிரியர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தவித வரையறுக்கும் தருணங்களில் இருக்கும் ஒற்றுமைகள் என்னென்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உயர்ந்த நிலையைத் தருபவை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்முடைய சாதாரண நாள்களில், சாதாரணத் தருணங் களைவிட இந்தத் தருணங்களில் கிடைக்கும் அனுபவங்கள் அதிக அளவு உயரம் கொண்டவையாக இருக்கின்றன. இந்தத் தருணங்கள் சிறப்பானவையாக அமைய, நம்முடைய உணர்வுகளைத் தொடுபவையாக அவை இருக்கவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நுண்ணறிவைத் தருபவை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தத் தருணங்கள் உலகம் குறித்த நம் புரிந்துகொள்ளுதல்களை மாற்றியமைப்பதாக இருக்கிறது. இந்த நிமிடம் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கப்போகிறது என்பதை நாம் உணர்கிறோம். நம் வாழ்நாள் முழுவதும் இது பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை உணர்கிறோம். இந்த நேரத்தில்தான், ‘நான் வேலையை விட்டுவிட்டுத் தொழில் ஆரம்பிக்கப்போகிறேன்...இவளைத்தான் கைப்பிடிக்கப் போகிறேன்...’ என்பது போன்ற உள்ளுணர்வுடன் கூடிய புரிந்து கொள்ளுதல்களை ஏற்படுத்து வதாக இந்தத் தருணங்கள் இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெருமை அளிப்பவை </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும், இந்தத் தருணங்கள் நமக்குப் பெருமையளிப்பதாக இருக்கின்றன. அதாவது, சாதனைத் தருணம், துணிச்சலான தருணம் என்பது போன்ற தருணங் களை இதற்கு உதாரணமாகச் சொல்கின்றனர் ஆசிரியர்கள். இந்தப் பெருமைமிகு தருணங்களை உருவாக்க, பெருமை குறித்து நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் சாதனைகளை மைல்கல்களால் அளவிடுவதைப் போன்று எப்படி அமைத்துக்கொள்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் காலையில் அதிக தூரம் ஜாக்கிங் போய்ப் பழகுங்கள் என்று சொன்னால் கேட்காதவர்கள், ‘Couch to 5k’ (படுக்கையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர்) என்ற மைல்களை வைத்து ஜோடிக்கப்படும் திட்டங்களில் சேர்ந்து தினமும் ஜாக்கிங் போவது இதனால்தான் என்கின்றனர் ஆசிரியர்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடர்புகளால் வருபவை </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருமண விழா, பட்டமளிப்பு விழா, சுற்றுலா, பார், சொற்பொழிவு, விளையாட்டுப் போட்டிகள் எனக் கூட்டம் சேர்கிற இடங்களிலெல்லாம் இந்த வரையறுக்கும் தருணங்கள் துளிரத் தயாராய் இருக்கின்றன. ஏனென்றால், இந்தத் தருணங்களை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். அது எப்படி மற்றவர்களுடன் இணையும்போது இது உருவாகிறது? பரிசோதனை முயற்சியாக தனி அறைக்குள் இருவரை அனுப்பி, 45 நிமிடங்கள் அங்கே அமரச் செய்தால், பெரும்பாலானோர் வெளியே வரும்போது நல்ல நண்பர்களாகி விடுகின்றனர். இவ்வித தனிமையான ஒருங்கிணைப்புகளே நட்பை வளர்க்கிறது. மருத்துவர் - நோயாளி, சில்லறை விற்பனைக் கடை பணியாளர் - வாடிக்கையாளர் போன்றவர்கள் நடுவேகூட நட்பு மலர்வதற்குக் காரணம் கூட்டமில்லாத சூழலில், அவர்கள் இருவரும் தனியே சந்திக்கும் வாய்ப்புகள் உருவாவதுதான் என்கிறார்கள் ஆசிரியர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வரையறுக்கும் தருணங்கள் என்பவை பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் தருணங்களாகவும் இருக்கக்கூடும். ‘‘நெகட்டிவ் தருணங்களே, ‘நான் யாருன்னு காட்டுகிறேன்’ என்று திசைமாற்றும் தருணமாக இருக்கிறது இல்லையா?” என்று கேட்கின்றனர் ஆசிரியர்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நான்கு விஷயங்களே நம்முடைய வாழ்வில் தோன்றும் வரையறுக்கும் தருணங்களில் பெரும்பாலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லியிருக்கும் ஆசிரியர்கள், இவற்றை எப்படி உருவாக்கி வளர்த்தெடுப்பது என்பதையும் தெளிவாக உதாரணங்களுடன் சொல்லியிருக்கின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உயர்ந்த அனுபவங்களை எப்படி உருவாக்கிக்கொள்வது, உலகம் குறித்த புரிதலை எப்படி வளர்த்துக்கொள்வது, பெருமையளிக்கும்படி எப்படி நம் வாழ்க்கைமுறையைக் கட்டமைத்துக்கொள்வது, உறவுகளை உருவாக்கி எப்படி அவற்றை உரம்பெறச் செய்வது என்பதையெல்லாம் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருசில தருணங்களே நம் வாழ்க்கையை வரையறுக்கிறது. அந்த வரையறுக்கும் தருணங்களை நாமே கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டி, அதற்கான வழிமுறைகளையும் விளக்கமாகச் சொல்லியுள்ள இந்தப் புத்தகத்தை, வெற்றி பெற விரும்பும் அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-82679398779453301742018-11-09T13:27:00.000-08:002018-11-09T10:58:57.043-08:00குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனித்திறனை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு குழந்தைக்கும் வயது வேறுபாடு இருக்கும். உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்</div>
<div style="text-align: justify;">
குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting</div>
<div style="text-align: justify;">
குழந்தைகளைப் படிப்புடன் எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ்களில் சேர்த்து ஜீனியஸ் ஆக்கும் கனவு எல்லாப் பெற்றோருக்குமே இருக்கும். ஸ்விம்மிங், ஸ்கேட்டிங், கராத்தே எனக் குழந்தைகளுக்கான பன்முக வாய்ப்புகள் திரும்பும் திசையெல்லாம் கொட்டிக்கிடக்கின்றன. பெற்றோர் குழந்தைகளுக்கான எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிடிஸ்களை வளர்க்கும் விதம் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர், சியாமளா ரமேஷ் பாபு.பெற்றோர்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய 2 வயதில், சின்னச் சின்ன செயல்பாடுகளின் மூலம் குறிப்பிட்ட விஷயத்தில் தனித்தன்மையைத் வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். அது தாளத்துக்கு ஏற்ப ஆடுவதோ, பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிப்பதோ, எதைப் பார்த்தாலும் வரைவதோ என இருக்கலாம். இப்படிக் குழந்தை ஆர்வம் காட்டும் செயல்களைத் தொடர்ந்து கண்காணித்து அறிந்துகொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்கள் குழந்தை இப்படி ஏதேனும் ஒரு செயல்பாட்டைத் தொடரும்பட்சத்தில், ``செல்லம், உங்களுக்குப் பாட்டு, நடனம் கத்துக்க ஆசையா? சேர்த்துவிட்டா கத்துப்பியா?' எனக் கேளுங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
.குழந்தை வெளிப்படுத்தும் திறனை வளர்க்கும் இடங்களுக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திப் பாருங்கள். குழந்தை அதில் ஆர்வம் காட்டுகிறதா, அச்சம் அடைகிறதா என உற்றுநோக்குங்கள். குழந்தை திரும்பத் திரும்ப அங்கே போக ஆர்வம் காட்டினால், க்ரீன் சிக்னல் என அர்த்தம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதிதாக ஒரு கலையைக் கற்பிக்க சேர்க்கிறோமே தவிர, அதில் ஜெயிப்பது மட்டுமே நோக்கமில்லை, பரிசுக்காகச் சேர்க்கவில்லை என்பதைக் குழந்தைகளுக்குப் புரியும்விதத்தில் சொல்லுங்கள். அதற்கு முன்பு, பெற்றோர்களுக்கும் இதில் தெளிவு அவசியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனித்திறனை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு குழந்தைக்கும் வயது வேறுபாடு இருக்கும். உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். குழந்தைக்கான தனித்திறன் 10 வயதிலும் வெளிப்படலாம். எனவே, பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என் குழந்தை எந்தக் கூடுதல் வகுப்புக்குச் சென்றாலும் ஆர்வமே காட்டுவதில்லை என அங்கலாய்க்கும் பெற்றோர் உண்டு. அதை, அப்போதைக்கு அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். வளர வளர நண்பர்களின் ஊக்கத்தாலோ, சக மாணவர்களின் செயல்களைப் பார்ப்பதாலோ, ஆசிரியர்கள் மூலமோ அவர்களுடைய ஆர்வம் விரிவடையும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெற்றோர்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதிதாக ஒன்றைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க முடிவெடுக்கும் முன்பு, குழந்தையின் உடல் ஆரோக்கியம், பள்ளிக்கூட நேரம், பாடத்திட்டத்தின் வரையறை, குழந்தையின் ஆர்வம், குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் அனைத்தையும் மனதில்கொண்டு தொடங்குங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுவதற்குத்தான் இந்த வகுப்புகளே தவிர, வதைக்க அல்ல. `இது எக்ஸ்ட்ரா கிளாஸ். ஃபீஸ் கட்டியாச்சு. நீ போய்த்தான் ஆகணும்' என வற்புறுத்தாமல், அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். ஆர்வம் இருந்தால், அவர்களே எனர்ஜிட்டிக்காகச் செயல்படத் தொடங்குவார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமீப காலமாக, வாய்ப்பாட்டு, நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், தற்காப்புக் கலைகள், வரைதல் போன்றவை ஊடகங்களால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்படுகிறது. எனினும், இவற்றில் ஆர்வம் காட்டாத குழந்தைகள் சாதிக்க முடியாது என்ற எதிர்மறை எண்ணத்தைக் கைவிட்டு, உங்கள் குழந்தையின் திறனை ஊக்குவிப்பது அவசியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைவிட ரசிக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த ரசனை பின்னாள்களில் பெரிய அளவிலான தனித்திறனாக மாற வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளின் ரசனையை மதியுங்கள். அவர்களுடன் சேர்ந்து ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாவற்றிலும் நம் குழந்தையே பரிசை அள்ளி வர வேண்டும் என நினைக்காமல், அவர்களின் குழந்தைப் பருவத்துக்கு மதிப்பு அளித்து, அவர்கள் விரும்புவதைச் செய்ய வழிகாட்டுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனி உங்கள் குழந்தையும் ஆல்-ரவுண்டரே!</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-34817788612150448452018-11-09T13:18:00.004-08:002018-11-09T13:18:43.209-08:00வெற்றி இலக்கை அடைய சுலபமான 5 வழிகள்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
ஒரு ஈசியான வழி இருக்கிறது. எப்போதும் எடுக்கும் முயற்சியைவிட, கூடுதலாக நீங்கள் கடுமையாக உழைத்தால் வெற்றிக்கு அருகில் நீங்கள் சென்று விடுவீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற தீவிரமாக உழைக்கவேண்டும். உழைப்பின்றி வெற்றிக்கனி கிடைப்பதென்பது நிஜத்தில் சாத்தியமற்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் 5 சுலபமான வழிகள் இதோ!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த முக்கிய கேள்விகளை உங்களிடமே நீங்கள் கேளுங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்கள் கனவை நோக்கிய பயணம் ஏன் இத்தனை முக்கியமானது என்று கேட்டுக் கொள்ளுங்கள். லாபத்தை காட்டிலும் உயரிய குறிக்கோளை கொள்ளவேண்டும். சமூகத்தில் உங்கள் ஐடியா ஏற்ப்படுத்தப் போகும் மாற்றம் என்ன என்று சிந்தியுங்கள். சமூகத்தில் நீங்கள் ஒரு நேர்மறை தாக்கத்தை விட்டுச்செல்லப் போகிறீர்கள் என்ற நினைப்பே உங்களுக்கு ஊக்கத்தை கொடுத்து உந்துதலை அளிக்கும். உங்களின் கடின உழைப்பின் பலனை உணர்ந்தால் நீங்கள் செய்யும் வேலை சுலபமாக தெரியும், அதனோடு உங்களுக்கு நெருக்கமும் கிட்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்கள் முன்னேற்றத்தை அளவிடும் செயற்திட்டத்தை உருவாக்குங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எத்தனை கடுமையாக உழைத்தாலும், உங்களின் முன்னேற்றத்தை பற்றி அறியாமல் இருந்தால் அது அர்த்தமற்றதாக ஆகிவிடும். உங்களின் இலக்கு, அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் பணியை முடிக்கும் கெடுநாள் ஆகியவற்றை தெளிவாக வரையறுங்கள். இந்த திட்டம் ரெடி ஆனவுடன், பணியை தொடங்குங்கள். ஒரு ஐடியா முழுதும் நிறைவு பெறாமல் அடுத்தவற்றுக்கு தாவாதீர்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொழில் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொழிலில் ஏற்கனவே வெற்றி அடைந்தவர்களுடன் தொடர்பில் இருங்கள். போராடி வென்றவர்கள் பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து உங்களுக்கு உதவி செய்து முன்னேற்றத்திற்கான வழியை சொல்வார்கள். அதே போல் உதவி தேவைப்படும் பிறருக்கும் நீங்கள் உதவிடுங்கள். மற்றவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு உதவிட முடியும் என்று பார்த்து நடந்துகொண்டு, ஒரு நல்ல உறவுமுறையை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சுயநலமாக இருந்து உங்களைப் பற்றி மட்டும் யோசித்தால், மற்றவர்களும் அதேபோல் உங்களிடம் இருப்பார்கள் என்பதை மறவாதீர்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிடுங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்கள் வேலை பலு அதிகமாக இருக்கும். ஆனால் அதற்காக உங்களின் நேரத்தையும் தொழில், பணிக்கு மட்டுமே செலவிடுவது நல்லதல்ல. குடும்பம், நண்பர்கள் என்று அவருகளுடனான உங்கள் நேரத்தை திட்டமிட்டு ஒதுக்குங்கள். அதே போல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படிப்பது, சினிமா என்று நீங்கள் விரும்பிய ஒன்றை செய்ய தவறாதீர்கள். அதுவே உங்களை புத்துணர்வாக்கி செய்யும் வேலையை சிறப்பாக செய்ய உதவிடும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்களின் முக்கிய இலக்கை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் தொடங்கிய முக்கிய இலக்கை எப்போதும் மறவாமல் அதை அடையவே உழைத்திடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே மிகமுக்கியம். உயரிய இலக்கை அடைய மூன்று வழிகளை எழுதிவைத்து அதை ஒவொன்றாக நிறைவேற்றிடுங்கள். அதே போல் ஒவ்வொரு நாளும் அதே ஊக்கத்துடன், குறிக்கோளுடன் செயல்பட்டால் மட்டுமே அந்த இலக்கை நீங்கள் நெருங்கமுடியும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு தெளிவாக வகுத்துக்கொண்டு வாழ்ந்தால் மட்டுமே உங்கள் கனவு நிறைவேற வழி கிடைக்கும். உற்சாகமாக மேற்கூறிய வழிகளை பின்பற்றிப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-15402964039621851722018-11-09T13:09:00.000-08:002018-11-09T13:18:42.878-08:00மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் :) : மஹாத்மா காந்தி வரலாற்று குறிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் :) : மஹாத்மா காந்தி வரலாற்று குறிப்பு</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1893-ம் வருடம். தென்னாப்பிரிக்காவின் ஆளரவமற்ற ஒரு ரயில் நிலையத்தில் கடும் குளிரில் இரவைக் கழித்துக் கொண்டிருந்தான் 24 வயது இளைஞன். ரயில் பயணத்துக்கான முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தும், நிறவெறி காரணமாக கீழே இறக்கப்பட்ட அராஜகத்தை நினைத்துத் துடித்தான். வழக்கறிஞர் தொழில் செய்யும் தனக்கே இந்த கொடுமை நிகழ்கிறது என்றால், படிக்காத இந்தியர்களுக்கு என்னெவல்லாம் அநியாயம் நிகழும் என எண்ணிப் பார்த்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த அநியாயத்தை எதிர்த்து நிற்பதா அல்லது இந்தியாவுக்கு திரும்பிவிடுவதா என்ற இரண்டே கேள்விகள்தான் அவனிடம் அப்போது இருந்தது. இரெவல்லாம் சிந்தித்தவன், காலையில் சூரியன் கண் விழிப்பதற்குள் மிகத் தெளிவான போராளியாக மாறினான். அடிமைத்தனத்தையும் அராஜகத்தையும் எதிர்க்கத் துணிந்தான். போராட வேண்டுமாயின் பணபலம் மற்றும் ஆள்பலம் வேண்டும், உன்னிடம் இரண்டும் இல்லை என்பதால் தோற்றுவிடுவாய் என்று அவநம்பிக்கை விதைத்த நண்பர்களைப் பார்த்து, ‘மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்’ என்று போராட்டத்தை தொடங்கினான். அதில் வெற்றிபெறவும் தொடங்கினான். ஆம்… பாரதத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் அந்த இளைஞன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தின்</div>
<div style="text-align: justify;">
வெற்றியைக் கண்டுதான், இந்தியா அவரை கைநீட்டி அழைத்தது. 1869-ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. பன்னிரெண்டாவது வயதில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் ‘மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்’ என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மை மட்டுமே பேசும் புதிய மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்தியேபாதோ எப்போதும் கைவிட்டதேயில்லை. ஒரு வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றவர், கோர்ட்டுக்குக் கொண்டு சென்ற வழக்குகளைவிட, கோர்ட்டுக்கு வேளியே பேசித் தீர்த்துவைத்த வழக்குகள்தான் அதிகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது. போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதன்முறையாக ‘அகிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். ‘‘ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் உறுதியுடன் நின்று சாத்வீகமாக போராடுவதுதான் உண்மையான வீரம், எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல’’ என்ற காந்திஜியின் அகிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான், சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழுந்தபோது, ‘‘மன உறுதியுடன் போராடினால், வெற்றி நிச்சயம்’’ என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1930-ம் வருடம். 61 வயதான காந்தி, உப்புக்கு வரி போட்ட ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து ‘தண்டி யாத்திரை’யை தொடங்கினார். 241 மைல் தூரத்தை 24 நாட்களில் கடந்த காந்தி, ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார். நாடெங்கும் பல்வேறு தலைவர்கள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காந்தியின் மன உறுதியையும் அகிம்சையின் பலத்தையும் கண்டு மக்கள் மலைத்து நிற்க ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள்.</div>
<div style="text-align: justify;">
1947-ம் வருடம். காந்தியின் இந்தவிடாத போராட்டத்தால், இந்தியாவுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தேடி வந்தும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் தீண்டாமை, ஏழ்மை, மதக் கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘120 வயதுவரை வாழ்ந்தால் மட்டுமே நான் நினைத்திருக்கும் எல்லா</div>
<div style="text-align: justify;">
காரியங்கைளயும் செய்து முடிக்க முடியும்’ என்ற காந்திஜியை 78வது வயதில்</div>
<div style="text-align: justify;">
மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் முடித்துவைத்தான் நாதுராம் வினாயக</div>
<div style="text-align: justify;">
கோட்ஸே. காந்தி மறைந்தாலும் மன உறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ,</div>
<div style="text-align: justify;">
அங்ெகல்லாம் ெவற்றி உருவத்தில் அவைர தரிசிக்க முடியும்.</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-5629878063803437622018-11-09T11:31:00.004-08:002018-11-09T13:18:43.376-08:00மனதில் உறுதி வேண்டும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
நம் வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகளினால் மனம் மிகவும் கனமாகி மன அழுத்திற்கு ஆளாகிறார்கள். தாங்க முடியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கின்ற தயக்கம், எந்த செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போகச் செய்யும் மன உளைச்சல் இவை அனைத்தும் மன அழுத்தின் அறிகுறிகளாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் சரி தைரியத்தையும் விடாமுயற்சியையும் கைவிடாதீர்கள். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் மிக அற்புதமான திட்டத்தை வைத்திருக்கிறார். அதை முறையே நடத்துவதற்கான வழி முறையும் அவருக்கு தெரியும். தேவையில்லாமல் நாம் அவரை நிந்திக்க வேண்டாம். சந்தோசமாக இருக்கும் போது நம் கைப்பிடித்துக் கொண்டு மிகவும் நல்ல முறையில் நடத்தி வந்த கடவுளுக்கு துன்பப்படும் போது அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கான வழியும் தெரியும். எனவே நமக்கு வரும் கஷ்டங்களை நுண்ணோக்கி வைத்து பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டு விட்டு வேறு வழியைத் தேடவும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்பொழுது நாம் படும் கஷ்டத்திற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். இந்த கஷ்டங்கள் நம்மை மிகப்பெரிய கஷ்டத்திலிருந்து தடுத்து நம்மை காப்பாற்றி சிறு துன்பம் மட்டும் கொடுத்திருக்கலாம். ஆனால் நமக்கு இதுவே மிகப்பெரும் பாராமாக இருக்கலாம் அப்படியே பாராமாக இருந்தாலும் கடவுள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வெகுவிரைவில் தருவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கவலை நாளையத் துயரங்களை அழிப்பதில்லை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைய வலிமையை அழித்துவிடும் – என்பதை மறந்து விடாதீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எவ்வளவு சிரமங்கள் வந்தாலும், எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் நாம் நினைத்து எதிர்மாறாக நடந்தாலும், எடுத்த காரியம் நடக்கவில்லை என்றாலும் துவண்டு விடாதீர்கள். ஏன் அடுத்த விநாடியிலேயே மாறலாம். எனவே ஒரே அடியாக மனதிற்கு அதிக சந்தோஷத்தையும் அதிக துக்கத்தையும் மனதில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். மனதை ஆல்பா நிலையிலே வைத்திருக்கவும். சந்தோஷம் எவ்வளவு வந்தாலும் வரவேற்புடன் ஏற்றுக்கொள்கின்ற நம்மால் சிறு தோல்வி வந்தாலும் ஏற்க மறுக்கின்றன. எனவே நம் மனது பக்குவப்பட வேண்டும். முதலில் இவை கடினமாக இருக்கும். பிறகு நம் மனது எல்லாவற்றையும் சமமாக பார்க்கின்ற பக்குவ நிலைக்கு வந்து விடும். இதுவே ஆல்பா நிலையாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்த ஒரு வேலையும் தொடர்ந்து முயல்வோர்களின் விடாமுயற்சி வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்ப்படுத்துகிறது. இருந்தாலும் சில சமயங்களில் நமக்கு வெறுப்பும், அழுகையும் ஏற்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“முடியும் வரை முயற்சி செய்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உன்னால் முடியும் வரை அல்ல</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீ நினைத்த செயல்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முடியும் வரை”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முயற்சி செய்து தோற்கும் செயல்களை தோல்வியாக கருதக்கூடாது முதல் முயற்சியில் கிடைத்த வேலை, முதல் பயிற்சியில் தேர்ச்சி போன்றவை சில நேரங்களில் ஆபத்தானவை. ஏனென்றால் அவர்களால் அந்த தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் அவர்களுக்கு முயற்சி செய்யும் எண்ணமே இருக்காது. நம்மால் மட்டும் தாங்கிக் கொள்ள முடியுமா என கேட்கலாம். சாதனை படைப்பவர்களிடம் மட்டுமே கடவுள் பல பெரும் பொறுப்புகளை ஒப்படைத்து இருக்கிறார். ஏனென்றால் கடவுள் உங்களை கண்மூடித்தனமாக நம்புகிறார். அப்படி கடவுளை நம்புகிறவர்களில் நீங்களும் ஒருவர் என பெரு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பல பேர் கொடும் வார்த்தைகளால் நம் மனதை காயப்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் நாம் பொறுமையுடன் இருக்கவும். இதனால் நீங்கள் கெட்டுப் போவதும் இல்லை; உங்கள் நிலை தாழ்ந்து போவதும் இல்லை. மேலும் வாழ்வில் யாரையும் அதிக அளவு நம்பாதீர்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். நீதிக்கு புறம்பாக நடக்காதீர்கள். நீங்கள் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் சத்தியத்தை கடைபிடியுங்கள். நம் நாட்டு கலாச்சாரத்தோடு வாழப் பழகுங்கள். முடிந்தால் அதை பிறருக்கு கூறுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடவுளைத் தவிர யாரும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை உணருங்கள். எனவே எந்த ஒரு செயல் செய்வதற்கும் பிறரை நம்பி இருக்காதீர்கள். அவர்களால் வரமுடியாவிட்டால் தைரியமாக தாங்களே சென்று வெற்றிகரமாக செய்து முடியுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில சமயம் நாம் எவ்வளவு மன உறுதியுடன் இருந்தாலும் சில சம்பவங்களால் நம் மன உறுதியையும் சுக்கு நூறாக வெடிக்கின்ற நிலை ஏற்படலாம். மனம் வெறுத்தும் போகலாம். எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். எதற்கும் ஒரு நாள் உண்டு எல்லோருக்கும் வாழ்வு உண்டு என்பதில் உறுதியாக இருங்கள். உங்களின் வியத்தகு செயலினால் நாளை உலகமே உங்களை போற்றி புகழாரம் சூட்டலாம். முயற்சி செய்யுங்கள் அதை விரும்பி செய்யுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
லட்சியத்தில் ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டோம்னா, லட்சியத்தை தவிர மற்ற எல்லா சந்தோஷத்தையும் நாம் தியாகம் பண்ணியே தீரனும். அதுதான் அதனுடைய விலை. லட்சியவாதிகள் அனைவரும் அதிகப்படியான நேரங்கள் உழைத்தவர்களாக இருப்பார்கள். அதாவது மற்றவர்கள் உறங்கும் நேரத்தில் இவர்களை விழித்திருந்து உழைத்திருப்பார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யாரையும் தெரியாமல் கூட சபிக்காதீர்கள், மனசார வாழ்த்துங்கள். மற்றவர்களை மனசார வாழ்த்தும் போதெல்லாம், இறைவனும் உங்களை ஆசிர்வதிக்கின்றார். நமக்கு இடையூறு செய்பவர்கள் நம் வாழ்க்கை ஓட்டத்தை தடுத்து நிறுத்த நினைப்பவர்களிடம் மல்லுக்கு நிற்கக்கூடாது. வீண் வாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை விட நம் இலட்சியப் பாதையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் எதிரிகள் தான் உங்கள் எதிர்காலத்தை காட்டுகிறார்கள். அவர்கள் தான் உங்கள் சிகரத்தின் காவலாளிகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிற எவரும் செய்ய வேண்டிய முதல் காரியம் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து பிரமித்து நின்று விடக்கூடாது. தோல்வியில் துவண்டு விழவும் கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம் மனதை உறுதியோடு வைத்துக் கொள்வதற்கான சில வழிகள். இவைகள் நம் வாழ்வை வளமாக்கி வெற்றிப்படியில் நிற்க வைக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாளை நமக்காக</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காத்து இருக்கிறது</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோர்வை அகற்றி</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்பிக்கை வளர்ப்போம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1. செயல்களை முறையாக திட்டமிட வேண்டும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2. இப்பொழுதே செயலில் ஈடுபட வேண்டும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3. ஆழமாக சுவாசியுங்கள, இதனால் உடலும் மனமும் தளர்வு அடைவதை உணரலாம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4. நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லாம் நன்மைக்கே என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
5. முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
6. இசை கேளுங்கள் (அ) பாடுங்கள் எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
7. கடவுளை நம்புங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
8. வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம். பழகிப் பார்த்து முடிவு செய்யவும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
9. குறைவாக பேசுங்கள் அதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ளுங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
10. பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள். அதேபோல் உங்களுடைய நேரத்தை பிறர் வீணாக்க ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
11. உங்களுக்கு ஒன்றை பற்றி தெரியாவிட்டால், உண்மையை சொல்லிவிடுங்கள் தெரியும் என்று நடிக்காதீர்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
12. வெற்றி பெற்றால் எல்லோருடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“மண்ணில் பிறப்பது ஒரு முறை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்வது ஒரு முறை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாதிப்போம் பல முறை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்த்தட்டும் தலைமுறை”</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-8312087725626336172018-11-09T11:30:00.004-08:002018-11-09T13:18:43.543-08:00நீங்கள் சாதனையாளரே!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
“விரும்பியது கிடைக்காவிட்டால்,</div>
<div style="text-align: justify;">
கிடைத்ததை விரும்பு” – இது ஆக்கபூர்வமான சிந்தனையின் அடித்தளம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொழில்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தச் சிந்தனை தொழிலுக்கு மிகவும் பொருத்தமானது. படிப்புக்கும், பார்க்கும் பணிக்கும் சம்பந்தமில்லாத நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாதனையாளர்கள் எப்படி ஒரு செயலைச் செய்ய வேண்டுமென கீழக்கண்டவாறு வள்ளுவம் வழிகாட்டுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலாபம் – நட்டம் ஆராய்ந்து செய்தல்;</div>
<div style="text-align: justify;">
முதலுக்கு மோசமின்றி செயல்படுதல்;</div>
<div style="text-align: justify;">
தவறான செயல்களைச் செய்யாதிருத்தல்;</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவைகள் சுலபமாகச் செயல்படுத்தக் கூடியது தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நோக்கம்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொழில் செய்வதன் நோக்கம் பொருளீட்டுதல்; பொருளீட்டுவதன் நோக்கம் ‘வாழ்க்கையை வாழ்வதற்கே!’ ஆனால் பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கை என ஒரு சாரார் – அதிலும் குறிப்பாக ஆட்சி மற்றும் அதிகாரப் பொறுப்பிலுள்ளோர் செயல்படுவதால் பொதுமக்களும் அவர்களது செயல்களால் பாதிக்கப்படுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாதிப்பு சாதாரணமானதல்ல. இந்தப் பூவுலகில் வாழவும் வேண்டுமா? எனத் தவறான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளபடுமளவுக்கு பாதிப்பு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலால் நடந்தால் காத தூரம் செல்லலாம்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கையால் நடந்தால்…??</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தவறான வழியில் சேர்க்கும் பொருள், நிச்சயமாகத் துன்பத்தைத் தான் தரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருள்தீர எண்ணிச் செயல்” – குறள் 675</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பலமுறை யோசித்து, மயக்கமில்லாமல், அவசரப்படாமல் – என்ன தொழில் (பணி) செய்யப் போகிறோம்; அதனைத் தொடங்க வேண்டிய காலம்; அதைச் செயல்படுத்தும் (பணிபுரியும்) இடம்; அதற்கான கருவிகள் (இயந்திரங்கள்); இந்தத் தொழில் துவங்கத் தேவையான முதலீடும், அதனால் கிடைக்கும் வருமானமும் என்ற ஐந்தையும் ஒன்றுக்குப் பலமுறை ஆலோசித்து, முடிவு செய்து துவங்கினால், அதனால் எதிர்பார்க்குமளவு சம்பாதிப்பதுடன், அது இன்பத்தையும் தருவதாக அமையும். ஓர் உதாரணம் பார்ப்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பருக்கை:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது ஒரு புத்தகத்தின் பெயர். மனிதன் உயிர் வாழ இறைநிலை வழங்கிய அடிப்படைத் தேவைகள் பசியும், தூக்கமும். வாழ்க்கையை இனிமையாக வாழ வழங்கியது தான் மறதி. இதில் முக்கியமானது பசி. பசியே இல்லாத நிலையை நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் பிடிப்பே இருக்காது. இந்தப் பசியைப் போக்கவும், இதர தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவுமே இன்று எல்லோரும் பணி / தொழில் செய்கிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாணவப் பருவத்தில், பகுதி நேர வேலை (Part Time Job) பார்த்துக் கொண்டு படிக்கும் பழக்கம் இப்போது பரவலாகிவிட்டது. பொருள் வசதியில்லாதவர்கள் தான் இப்பணிகளை நாடிச்செல்கின்றனர். படித்துப் பட்டம் வாங்கி நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் எதிர்நீச்சல் போடும் இவர்களின் சாய்ஸ் – பெரும்பாலும் திருமண கேட்டரிங்; காரணம் சம்பளத்துடன் சாப்பாடும் கிடைப்பது தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் பகுதிநேரப் பணியை மேற்கொண்டு பி.எச்.டி. (Ph.D.) தமிழ் பாடத்தில், சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவரின் அனுபவம் தான் பருக்கை எனும் இந்த நூல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதோ அவர் பேசுகிறார்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“திருவண்ணாமலை அருகில் அத்தனூர் கிராமம் சொந்த ஊர்; அப்பா பட்டறைத் தொழிலாளி. நான்கு குழந்தைகளில் நான் கடைக்குட்டி. படிப்பின் மீது ஆர்வம். நன்றாகவும் படிப்பேன். பள்ளிக்குப் பேருந்தில் செல்ல வசதியில்லாமல் நடந்து சென்று படித்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்கொண்டு படிக்க விரும்பியபோது வீட்டில் தடுத்தார்கள் – என் மூலமாக வரும் வருமானம் நின்றுவிடும் என்பதால். என் கனவை விட்டுக்கொடுக்க தயாராயில்லாமல், சென்னைக்கு வந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் தங்க இடமும், உணவும் கிடைக்கவில்லை. கடற்கரை, பூங்கா எனப் பல இரவுகள் உறங்கினேன். எனது கஷ்டத்தைப் பார்த்த உடன் படிக்கும் மாணவன் தனது அறையில் எனக்கு இடம் கொடுத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விடுதி ஆய்வாளர் கண்களில் படாமல் அறையில் தங்கும் போதும், விடுதி உணவைச் சாப்பிடும் போதும் மனதில் ஏற்பட்ட வலியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எவ்வளவு காலம் தான் இப்படி மறைந்து வாழ்வது? தேவைகளைப் பூர்த்தி செய்ய பகுதிநேர வேலை பார்க்க முடிவு செய்தேன். சாப்பாடும் கிடைக்கும் என்பதால் கேட்டரிங் வேலையைத் தேர்வு செய்தேன். இது சந்தோஷம் தான். ஆனால் அனுபவிக்கும்போது தான் பல சிரமங்கள் புரிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை தான். கல்லூரி மாணவன் என்றாலும், ஏஜென்டுகளைப் பொறுத்தவரை நான் கூலியாள் தான். மாட்டைவிடக் கேவலமாக விரட்டுவார்கள். ஏதாவது பேசினால், அடுத்த முறை வேலை கொடுக்கமாட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிரிக்கெட்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கர். சிறுபிழை என்றாலும் அவுட் தான். அம்பயர்களது தவறான கணிப்பால், இவர் பலமுறை ஆட்டமிழந்துள்ளார். மிகமிக எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாதனை:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால், வாழ்க்கை எனும் விளையாட்டில் நாம் எப்படி விளையாடினாலும், இயற்கை எனும் அம்பயர் பலவிதமான வாய்ப்புகளைத் தந்து கொண்டே இருக்கும். வாய்ப்புகள் வரும்போது கட்டாயம் பயன்படுத்திச் செயல்பட்டால் சாதிக்க முடியும். மூச்சுக்காற்று நமக்குச் சொல்வது, எல்லா மனிதர்களும் சாதிக்கவே பிறந்துள்ளார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்த அளவு வெயில், குளிர், மழை என்றாலும், உடலுக்குள் செல்லும் மூச்சுக்காற்று நமக்குத் தேவையான பிராண சக்தியைத் தந்து கொண்டே இருப்பதன் மூலம், நாம் எந்தச் சூழ்நிலையிலும் நமது கடமையை வேண்டா வெறுப்பாகச் செய்யக் கூடாது என்ற பாடத்தைப் போதிக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“செய்வன திருந்தச் செய்” இது சாதனைக்கான தொடர்படி, என்ன செய்தாலும் சுயதிருப்தி (Self Satisfaction) முக்கியம். மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ? விமர்சனம் செய்வார்களோ? எனக் குழம்பவே கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எண்ணித் துணிந்து செய்யும் செயல்கள் என்றும் நமக்கு ஏற்றத்தை மட்டுமே – அதாவது முன்னேற்றத்தை மட்டுமே தரும். இப்போதைய நிலைக்கு வருத்தப்படுவதால் பயன் ஏதுமில்லை. கிடைத்ததை ஏற்பதும், அதனை விரும்புவதும் மட்டுமே சாதனைக்கு நம்மை இட்டுச் செல்லும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மற்றவர்கள் நம்மை சாதனையாளர் எனப் பாராட்ட வேண்டும் எனக் காத்திருக்கக் கூடாது. உங்கள் ஈடுபாடு உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்களிடமுள்ள அபரிமிதமான, அளப்பரிய, அற்புத மனசக்தியின் மூலம் எதையும் சாதிக்க முடியும். அந்த மனசக்தி தான் ஆழ்மனம் என்பது. இதை உபயோகியுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆழ்மனக் காட்சிகள் அற்புதங்களை நிகழ்த்தும். நீங்கள் நம்புங்கள்! நீங்கள் சாதனையாளர் தான். மீண்டும் ஒருமுறை படியுங்கள். உங்களாலும் சாதிக்க முடியும். சாதிப்பதற்காகவே பிறந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-32755495263960601162018-11-09T11:29:00.001-08:002018-11-09T13:18:43.126-08:00வெற்றி மனிதனின் அடையாளம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமான தனிப்பட்ட திறன்களும், செயல்பாடுகளும் கொண்ட ஆளுமைகளின் அடையாளம் ஆவர். அதனால் தனி மனிதத்திறன் என்பது மிகவும் வேறுபட்ட ஆற்றல்களும், அறிவுத் திறன்களும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும். தனி மனிதனை உருவாக்கும் பண்புகளைப் பற்றியோ, அவ்வாறு ஒவ்வொரு மனிதனை உருவாக்குவதில் குடும்பங்களின் பங்கு பற்றியோ அல்லது தனி மனிதனை அடையாளப்படுத்துவதாகக் கணக்கிடப்படும் தனி மனிதனுடைய உடல் அழகைப் பற்றியோ இல்லை இங்கு கூறப்போவது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சக்தியுடைய தனி மனிதர்களை வார்த்தெடுக்கும் சில பண்புகள் இருக்கின்றன. தன்னம்பிக்கை, குறிக்கோள், ஒருமுகத்தன்மை, சிதறாத கவனம், முடியும் என்கிற உள்ளுணர்வு (Will Power), தளராத உற்சாகம் போன்றவை எல்லாம் தனி மனிதனுடைய ஆற்றலை வெளிப்படுத்தும் வெற்றி மனிதனின் அடையாளங்கள் ஆகும். மிகச்சிறந்த தனி மனிதனை வெளிப்படுத்துவது அவனுக்குள் இருந்து ஒளிவிடும் தன்னம்பிக்கையால் அவன் மற்றவர்களோடு பழகும்விதமே. மேற்கொண்ட செயலை செய்து முடிக்க தன்னால் முடியும், அதற்கான காரியங்களைச் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்து முடிக்கக்கூடிய திறமை தனக்கு உண்டு, செயல்படும் போது இடையிடையே குறுக்கிடும் வெற்றி தோல்விகளை சமமாகக் கருதும் மனம் தனக்கு இருக்கின்றது என்கிற மனப்பான்மை உள்ளவனுக்கு இருப்பதுதான் இந்த அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் அடையாளம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் அதே நேரத்தில் அளவுக்கதிகமாக தன்னைத்தானே நம்பிக்கொள்வதும் சில சமயங்களில் ஆபத்தில் முடியும். பல தடவை தோற்று ஓடிய குரூஸ் அரசனுக்கு கடைசியாக வெற்றி பெற முடிந்ததும், வாய் பேச முடியாத, விழித்திறனை இழந்த, காது கேட்காத ஹெலன் கெல்லர் கல்வித்துறையிலும், புத்தகங்கள் எழுதுவதிலும் புகழ் பெற்றதும், செவித்திறன் இல்லாத பீட் ஓவன் சங்கீதத்தில் பிரசித்தி பெற்றதும் உறுதியான தன்னம்பிக்கையால் தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனிமனித ஆளுமையை அடையாளப்படுத்தும் இன்னொரு குணம்தான் லட்சியம். குறிக்கோள். தீர்க்கமான குறிக்கோள் ஒன்றை கொண்டிருப்பதும், அதை உறுதியாக பசு மரத்தில் பதிந்த ஆணிபோல பதித்துக் கொள்வதும், வெற்றி ஆளுமையின் பாகம் ஆகும். படிக்க வேண்டும், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகளை வளர்க்க வேண்டும், வீட்டையும் காரையும் வாங்க வேண்டும். இதற்கு மேல் லட்சியம் என்று எதுவும் இன்று பெரும்பாலோருக்கு கிடையாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வேலை கிடைப்பதைக் காட்டிலும் மாற்று லட்சியம் இல்லாதவர்கள் கிடைத்த வேலையை உந்தித்தள்ளியும், விரட்டியடித்தும் மாதங்களையும், வருடங்களையும் கடத்துகிறார்கள். லட்சியத்துக்கு உரிய படிக்கட்டாக வேலையை கருதும்போது வேலையில் நிறைவு பெற முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் அவரை போற்றுவார்கள். எங்கே போக வேண்டும் என்று உறுதியான திட்டம் இருக்கும்போது நம் திறமைகள் எல்லாவற்றையும் அதை நோக்கிமற்றவர்கள் நடந்து நடந்து போட்ட பாதையில் இல்லை நாம் பயணிக்க வேண்டியது. நமக்கு என்று சொந்தமாக ஒரு பாதையை நாமே போட்டுக் கொண்டு அதில் நடக்க வேண்டும். உறுதியான குறிக்கோள் என்ற ஒன்று இருந்தால்தான் மூளையும் செயல்திறன் கொண்டதாக மாறுகிறது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
லட்சியத்துக்குரிய பயணத்தில் நம் கால்கள் பல வழிகளிலும் சென்றால் நம் ஒருமுகமான கவனத்தை நாம் இழந்துவிடுவோம். துரோணாச்சாரியார் அம்பை எய்யச் சொன்னபோது, அர்ஜூனன் தன் இலக்கை மட்டுமே குறி பார்த்து அம்பை எய்தான். அவரவர்களுடைய திறமைக்கு ஏற்றவாறு நேரத்தை நிர்வாகம் செய்து லட்சியத்தை நோக்கிப் பயணப்படுவதே சிறந்தது ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்க்கையில் சந்திக்கும் தோல்விகளில் சிக்கி அகப்பட்டுப் போகாமல் மனதுடைய ஆற்றலை வலிமையாக்கி, ஒரு அடி பின்னால் செல்லும்போது இரண்டு அடி முன்னோக்கி நடக்க மனதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும. மனதின் ஆற்றல் ஆளுமையை வலிமையுடையதாக்கும். சோம்பேறிக்கு எந்தத் திறமையும் கைவராது என்பது நிதர்சனமான உண்மையாகும். சோம்பேறிக்கு கல்வி மட்டும் இல்லை எந்த ஒரு முன்னேற்றமும் வாழ்க்கையில் ஏற்படாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தளராத உற்சாகம் இருந்தால் எல்லாவற்றையும் கைப்பற்றலாம். உற்சாகம் உள்ளவர்கள் அதை தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் இனிமையான பூவின் நறுமணத்தைப்போல பரவச் செய்துவிடுகிறார்கள். அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியரை வீறுகொண்டு விடுதலையுணர்வு பெற்று எழச்செய்த காந்திஜி தளராத உற்சாகத்தின் சின்னமாக இருந்தார். எதிலும் திருப்தியடையாமை, துக்கம், கோபம், வெறுப்பு, கௌரவம், அலட்சிய மனப்பான்மை, பொறாமை இவைகள் எல்லாம் சர்வசதா காலமும் வெளிப்படுத்துபவர்களை எந்த மனிதரும் நெருங்குவது இல்லை. திறந்த மனதுடன் பேசும் பேச்சு அடுத்தவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள். எல்லையில்லாத அறிவு சிறந்த ஆளுமையின் சிறப்பு அம்சம் ஆகும். நல்ல ஒரு கேட்பவராவதும், விசாலமான மனதுடையவராக இருப்பதும், அற்புதமான மனிதருடைய அடையாளம் ஆகும். மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்றால் நாம் மற்றவர்களை விரும்ப வேண்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் கண்கள், அருவிபோல மனம் திறந்த பேச்சு, மாறாத புன்னகை போன்றவையும் மகாத்மாக்களின் அடையாளங்கள் ஆகும். ஆக தன்னம்பிக்கை, லட்சியம், தளராத உற்சாகம், முடியும் என்ற நம்பிக்கை ஆகியவை பிரகாசிக்கும் தனிமனித ஆளுமை வெற்றியின் சின்னமாக ஆகிறது.</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-13162160725984154922018-11-09T11:27:00.003-08:002018-11-09T13:18:42.748-08:00உன்னையறிந்தால்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
ஒருவன், கிணறு ஒன்றைத் தோண்ட துவங்கினான். மாதக்கணக்கில் தோண்டியும், தண்ணீரைக் காணவில்லை.இருபது அடிகள் தோண்டியும் நீர் இருப்பதன் அறிகுறியையே காணாத போதிலும், அவன் முயற்சியைக் கைவிடவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த வழியாக சென்ற ஒரு வழிப்போக்கன், தோண்டுபவனைப் பார்த்து, “ஐயா, நான் பல நாள், நீங்கள் தோண்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அங்கு தண்ணீர் வரவில்லையே, வேறு இடத்தில் தோண்டிப் பார்க்கக் கூடாதா?”என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்கு அவன், “இல்லையில்லை. நான் என் முயற்சியைக் கைவிடமாட்டேன். இங்கு தண்ணீர் இருக்கும்” என்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் அந்த வழிப்போக்கன், அம்மனிதனைப் பார்த்து, கோபமாக, “அட, நீ என்ன முட்டாளா? இந்த இடத்தில் நிச்சயம் தண்ணீர் உனக்குகிடைக்காது. ஏன் தோண்டிக் கொண்டே இருக்கிறாய்?” என்றுகேட்க, அதற்கு அவன், “நான் முதலில் தோண்ட ஆரம்பித்தபோது, என் மனைவி எதிர்த்தாள். அவளை நான் பொருட்படுத்தவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு, என் உறவினர்கள் தடுக்கும் வகையில் அறிவுரைகள் கூறினார்கள். அவர்களையும் அலட்சியம் செய்தேன். அதன்பிறகு, கிராம மக்கள் என்னைத் தடுத்தனர். அவர்களையும் நான் பொருட்படுத்தவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என் முயற்சிகள் எல்லாம் வீண் என்றும், எனக்கு தண்ணீர் கிடைக்காது என்றும், எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், நான் இதை நிறுத்தினால், மற்றவர்களின் விமர்சனத்தைக் கேட்க வேண்டியிருக்கும். நான் தோற்றவனாகிவிடுவேன். அதற்கு எனக்கு தைரியமில்லை. இப்போது நிறுத்தினால், என்னை அவர்கள் ‘முட்டாள்’ என்பார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்க்கையில் என் முயற்சிகள் அனைத்தும் தண்ணீரைக் கண்டுபிடிக்கவே சரியாக இருக்கும். இதை நிறுத்தினால், என் வாழ்க்கையில் ஓர் அர்த்தமும் இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னைப் பற்றியே நான் கீழ்த்தரமாக நினைத்து விடுவேனோ எனப் பயமாக உள்ளது” என்றானாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாமும் பல சமயங்களில், இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டிருப்போம் அல்லவா?நமக்கு விருப்பமே இல்லாத ஒரு தொழிலில் நாமாகவே சிக்கியிருப்போம்.நம்மால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஏனென்றால், முதலில் மனைவி அதற்கு தடை விதித்திருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது கைவிட்டால், மனைவி கூறியது சரியாகிவிடும். கோபமான மனைவியை எதிர்கொள்வதை விட, விருப்பமில்லாத தொழிலைச் செய்வது மேலானது எனத் தோன்றும். பிடிக்காத உறவு முறையில் சிக்கிக்கொண்டு, வெளிவரவும் முடியாமல் இருக்கிறோம் என்றால், எதிர்காலத்தில் தனிமையை எதிர்கொள்ள பயம். ஏதேனும் ஓர் அபிப்ராயத்தையோ, கொள்கையையோ பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உள்ளார்ந்த உண்மை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏனென்றால், அதை விட்டுவிட்டால், நாம் சின்னாபின்னமாகி விடுவோம் எனும் எண்ணம். கல்லூரியில் நமக்கு பிடிக்காவிட்டாலும், நம் மனம் வேறு ஏதோ துறையை நாடிய போதும் அதில் பிடிவாதமாக தொடர்கிறோம். காரணம் நம் தந்தையின் அறிவுரைக்கு மாறாக அதில் சேர்ந்திருப்பதுதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பயம் தான் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்படுத்துகின்றது. அது தொழில், செல்வம், ஆரோக்யம் அல்லது உறவுமுறைகள் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமக்கு தெரிந்த, பழக்கமான, சுகங்களை இழக்க விருப்பம் இல்லை. மாற்றத்தைக் கண்டு பயப்படுகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பற்றி நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள பலவீனமான உருவகம் அல்லது நம் முகமூடி உடைந்துவிடுமோ என்ற பயம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவாறு நாம் இல்லை என்ற உண்மையை, எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பயம். இந்த பயம் நம் வளர்ச்சியைத் தடுக்கின்றது. முயற்சிக்கும், பிடிவாதத்திற்கும், அகங்காரத்திற்கும் வேறுபாடு தெரியாமல் செய்ய வைத்து தன்னம்பிக்கையை மட்டுமல்ல மனிதனுக்கு இயல்பாக இருக்கின்ற, இருக்க வேண்டிய நம்பிக்கையைக் கூட அழித்துவிடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை ஆழமாக ஆராய்ந்தால் தான் உண்மையைக் காண முடியும். புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கவோ, கற்கவோ வேண்டும் என்றால், நம்மை ஆட்கொண்டுள்ள பயத்திலிருந்து வெளிவர வேண்டும். பயத்தை விட்டுவிட வேண்டும் என்று காலம் காலமாக கூறி வருகின்றனர். அதற்காக ‘பாஸிட்டிவாக’ (Positive) எண்ணுவதற்கு முயற்சி செய்கிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு முறை நாம் ‘பாஸிட்டிவாக’ எண்ணுவதற்கு முயற்சி செய்கின்றபோதும், நமக்குள்ளிலிருந்து ஓர் ஆழமான குரல், “அதைச் செய்யாதே, அப்படி நடக்காது” என்றுகூறுகின்றது. அந்தக் குரல் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.அப்படியென்றால், மனிதன் தான் சிக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளிலிருந்து எப்படிவெளிவர முடியும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாற்றங்களுக்கு ஏற்றவாறு அவன் எப்படி மாறமுடியும்? அதாவது,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘பாஸிடிவ்’ எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பது மேலும், நிலைமையை மோசமாக்கும். ஒவ்வொருமுறைஒரு எதிர்மறை(நெகடிவ்) எண்ணத்திற்கு மாறாக, எதிராக, ‘பாஸிடிவ்’ எண்ணத்தை வளர்த்துக் கொள்ளும் போதும் நம் மனதோடு நாம் போராடுகிறோம். மனதுடன் அதிகமாக போராட, போராட அது மேலும் சக்தி பெறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடல் அலையை எதிர்த்து செயல்படும்போது, பலமாக அடி விழுவதைப்போல ஆகிவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கு ஒரே தீர்வு, “நாம் சிக்கிக் கொண்டோம்” என்றும், “அந்த பயம் தான் நம்மை கட்டுப்படுத்துகிறது” என்றும் உணர்ந்து, அதே உண்மையில், அப்படியே நிற்க வேண்டும். நம்மால், நம்மையே நேரடியாக பார்க்க முடியவில்லை என்றஉண்மையை, நம் முகமூடிகிழித்துவிடும் என்ற உண்மையை எதிர்கொள்ளவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவே மாற்றத்தின் முதற்படியும், கடைசிப் படியுமாகும். இந்த உண்மையில் அப்படி உறைந்து போனால், மாற்றத்தில் கதவுகள் திறப்பதையும், வளர்ச்சி என்பது எளிதாக இருப்பதையும், தன்னம்பிக்கை வளர்வதையும் காண முடியும். இது பலமடங்காக நமக்கு சக்தியை அளிக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அதுவே நிரந்தர வளர்ச்சியைக் கொடுக்கும்.”</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-42952555531421357462018-11-09T11:26:00.003-08:002018-11-09T13:18:43.292-08:00உழைப்பை விதையாக்கு! உயர்வை உனதாக்கு!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
அனுபவங்களைப் பாடமாக கருதுபவர்கள் மட்டுமே வாழ்க்கைத் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பார்கள். அந்த அனுபவ பாடத்தின் மூலம் வெற்றியை எட்டி நிற்பவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* ஒவ்வொரு முறையும் முதல்முறையாக விற்பனை செய்கிறோம் என்கிற மனநிலையோடு நல்ல உற்பத்தி விளைபொருட்களையே விவசாயிகளுக்கு கொடுத்து அவர்கள் மனதில் ‘நம்பிக்கைக்குரியவர்’ என்கிற பெயரைப் பெற்றிருப்பவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* ஒரு முயற்சி எவ்வளவு கடினமானதாகவும் இருக்கலாம். ஆனால் கடினமானது என்றால் ‘இயலாதது’ எனப் பொருள் கொள்ளக்கூடாது. மேலும் முயற்சித்தோம் என்றால் ‘நிச்சயம்’ அம்முயற்சி நமக்கு வெற்றியை பெற்றுத்தரும் என பிறருக்கு உந்துசக்தியாக இருக்கக்கூடியவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
* புதிய புதிய தொழில்நுட்பங்களோடு பயணப்பட்டு விதையின் தரத்தை மேம்படுத்த உறுதியாக இருந்து செயல்பட்டு வருபவர் தான் ஈரோடு, தரணி அக்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனர் திரு. கே. தரணிதரன் அவர்கள். இனி அவரோடு நாம்…</div>
<div style="text-align: justify;">
விதை நிறுவனம் அமைக்கும் எண்ணம் தோன்றக் காரணம்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயத்தைச் சார்ந்த தொழிலையே மேற்கொள்ள வேண்டும் என விரும்பியதால் விவசாயம் சம்பந்தமான பாடப்பிரிவினை எடுத்து 1994ம் ஆண்டு முடித்தேன். முதலில் இத்தொழிலை மிகவும் குறுகிய இடத்தில் செய்ய ஆரம்பித்தேன்.எனது மனைவியும் விவசாய பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். மேலும் 10 ஆண்டுகள் விவசாய சம்பந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவமும் இருந்தது. இதுவே விதை நிறுவனம் தொடங்கக் காரணமாக அமைந்தது. மேலும் எனது உறவினர்கள் சிலர் சொந்தத் தொழில் செய்து உயர்ந்த நிலையில் இருந்தார்கள். நான் நடுத்தர வாழ்க்கையில் பேருந்து பயணம் என்றிருந்தபோது, வாழ்க்கையில் நாமும் அடுத்த படிக்கு செல்ல வேண்டும் என விரும்பி 2004ல் விதை நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். பிறகு 2010ல் நவீன யூனிட் தொடங்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விவசாயக் கல்வியைக் கற்றதால் இத்தொழில் எனக்கு ஏற்புடையதாகவே அமைந்தது. விதை சம்பந்தப்பட்ட விற்பனைத் துறையில் இருந்த 10 ஆண்டுகால அனுபவத்தால், தொழில் துறையிலும் நட்பு வட்டாரம் விரிந்திருந்தது. நான் தொழில் தொடங்க எண்ணியபோது, விதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மிகவும் குறைந்த அளவில் தான் இருந்தது. எனவே நிச்சயம் இதைத் தொடங்கலாம் என உறுதியுடன் முயற்சிகள் மேற்கொண்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படிக்கும் பொழுதே தனியாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று தான் விவசாயத் துறையைத் தேர்வு செய்தீர்களா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கு முதலில் கல்லூரியில் பேராசிரியராக வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது. அதற்காக சஉப தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்றேன். ஆனால் அக்காலகட்டத்தில் எனக்கு அந்தப் பணி கிடைக்கவில்லை. மாறாக, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வியாபார உத்திகள் அனுபவமாக கிடைத்ததால் சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் வலுப்பெற்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்ததற்கும், தற்பொழுது தங்களது நிறுவனத்தில் வேலை செய்வதற்கும் உள்ள வேறுபாடு எப்படி இருக்கிறது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்த போது மேலதிகாரிகளின் மேற்பார்வையிலே தான் வேலை செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இப்பொழுது, விற்பனை விரிவாக்கம் என்றாலும், நிறுவனத்தில் மேற்பார்வை என்றாலும் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. எடுக்கும் முடிவுகள் பணியாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எனவே முடிவெடுப்பதில் சுதந்திர உணர்வு இருந்தாலும், பொறுப்பும் கூடுதலாகவே இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்பொழுது விவசாயத்தில் இந்த விதைத் தொழிலின் பங்கு எவ்வாறு உள்ளது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்களுடன் ஒப்பிடும்போது, என்ன தான் பருவ மழை பொய்த்தாலும் விதை பயன்பாட்டில் பெரிய அளவு குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் முதல் மற்றும் முதன்மையான இடுபொருள் விதையே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விவசாயமக்களின்தேவைக்குஏற்பவிதைநிறுவனங்கள்செயல்படுவதுகுறித்து?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் விவசாயிகளின் மனநிலையைப் பொறுத்து தான் விதை நிறுவனங்களே செயல்படுகிறது. விவசாயிகள் எந்தக் காலத்தில் எதைப் பயிரிடுவார்கள் என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சில நேரத்தில் இருப்பு விதைகள் நல்ல விலைக்கும் போகலாம்; மிகவும் குறைவான விலைக்கும் போகலாம். இதை முன்கூட்டியே ஆய்வு செய்து திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினால் நல்ல இலாபம் பெறமுடியும். விற்பனை வியாபாரிகளை நாடி, தரமான, உற்பத்தி பொருட்களை அவர்களிடம் கொடுத்து முறையாக வியாபாரம் செய்தாலே நிறுவனத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிறுவனம்தொடங்கும்பொழுதுஏற்பட்டஇடர்பாடுகள்குறித்து?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது மகள் இரண்டாம் வகுப்பு படித்த பொழுது ஏழுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இடமாற்றம் பெற்றாள். அந்த அளவிற்கு என் பணியில் இடமாற்றம் அலைச்சல் அதிகம் இருந்தது. ஒரு கட்டத்தில் என் தாயிடமும், மனைவியிடமும் இந்த வேலை வேண்டாம் என்றும், புதிதாக தொழிலைத் தொடங்க போகிறேன் என்றும் கூறினேன். அவர்களும் எனது வேலைப்பளுவைப் பார்த்து ஆறுதலாகவே பேசி வந்தார்கள். இதைப்பற்றி எனது தந்தையிடம் தெரிவிக்கவில்லை. ஆறுமாதத்திற்குப் பிறகு அவர் தெரிந்துகொண்டு மிகவும் வருத்தமடைந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் வேலையை விட்டுவிட்டால் குடும்ப நிலை எப்படி இருக்கும் என்றும், ஆரம்பிக்கும் தொழில் நல்ல முறையில் அமையாவிட்டால் எப்படி இருக்கும் என்றும் மிகுந்த குழப்பம் அடைந்தேன். அச்சமயம் திரு. பாஸ்கரன் என்பவரைச் சந்தித்தேன். அவர் பாங்க் ஆஃப் பரோடாவில் வங்கி மேலாளராகப் பணியாற்றி வந்தார். அவர் தான் தொழில் தொடங்க ஒரு உந்துதலாக இருந்தார்.பிறகு தொழில் ஆரம்பித்து அதை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளில் நம்பிக்கையுடன் ஈடுபட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிறுவனம்தொடங்கியபிறகு, வெற்றிஅடைவோம்என்றஎண்ணம்எப்பொழுதுஏற்பட்டது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் தொழில் தொடங்கிய 2004ம் ஆண்டில் விதை நிறுவனங்கள் குறைவாகத்தான் இருந்தது. அப்பொழுது வியாபாரத் துறையில் இருந்த நுணுக்கங்களைப் பற்றியும் கற்றுக் கொண்டேன். எனது நண்பர் ஒருவருக்கு 100 டன் பொருளை உற்பத்தி செய்து வைத்து தொழிலில் ஒரு முன்னோட்டம் செய்யும் வாய்ப்பிற்காக காத்திருந்தேன். அப்போதைய வேளாண்மை துணை இயக்குனர் திரு. முத்துசாமி என்பவர் வியாபார உத்தியைச் சொல்லிக் கொடுத்ததோடல்லாமல், புதிய முகவர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். புதிய முகவர்களின் அறிமுகத்தால் உற்பத்தியில் நல்ல இலாபம் பெற்றேன். அப்பொழுதுதே வெற்றி வெகுதூரம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். பொதுவாக, சந்தையில் என்ன பொருள் நன்றாக போகும் என்பதைக் கருத்தில் கொண்டு முயற்சியை மேற்கொண்டு செயல்படத் தொடங்கினாலே வெற்றி அடையலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விவசாயமக்களிடம்நம்பகத்தன்மையைஎப்படிபெறமுடிந்தது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு வருடத்திற்கு மூன்று பருவம், ஐந்து வருடத்திற்கு 15 பருவம். ஐந்து வருடங்களாவது, நல்ல முறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தினால் தான் நல்ல தயாரிப்பாளர்கள் என்று விவசாயிகள் நம்புவார்கள். எந்த ஒரு தொழிலும் பொறுமையுடன் உண்மையும் இருந்தால்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை தானாக வந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழகம் தவிர பிறமாநிலங்களுக்கு முதலில் 100 கிலோ என்றஅளவில் மட்டுமே விதை விற்பனை செய்து வந்தேன். அங்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு பெற்ற பிறகு டன் கணக்கில் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய நிறுவனங்களின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்குத் தேவை தரம் வாய்ந்த விளைபொருள்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்களின்மேலாண்மைக்குபள்ளிக்கல்விஎந்தவகையில்துணைபுரிந்தது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னுடைய சொந்த ஊர் ராஜபாளையம். அப்பா ராணுவத்தில் ஓய்வு பெற்றவர். அம்மா பள்ளி ஆசிரியர் என்று குடும்பப் பின்னணி இருந்த போதிலும் எங்களது அடிப்படைத் தொழில் விவசாயம் சார்ந்தது தான். நான் பயின்றது நல்லமநாயக்கன் பட்டி என்ற கிராமத்திலுள்ள அரசுப்பள்ளி. அப்பள்ளியில் தமிழாசிரியர் மிகவும் நன்றாக பாடம் நடத்துவார்.கண்டிப்பும் கொண்டவர். அவரைப் பார்த்தபொழுது எனக்கும் தமிழாசிரியராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பிறகு, எங்கள் ஊரில் திரு. விவேகானந்தர் வங்கியில் விவசாய அதிகாரியாக இருந்தார். அவரைப் பார்த்து தான் என்னை விவசாயக் கல்லூரியில் படிக்க அனுப்பினார் எனது தந்தை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிராமப்புறவிவசாயத்திலிருந்துகிடைக்கும்நன்மைகள்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் வளர்ந்த பகுதி ‘வானம் பார்த்த பூமி’ என்பதால் விளைச்சலைப் பற்றிய அறிவு கிடைக்கப் பெற்றேன். சில நேரங்களில் விதைத்த அளவு கூட உற்பத்தியாய் வராத நிலையும் இருந்திருக்கிறது. ஆனால் விதைகளை எப்பொழுதும் இருப்புகளாக வைத்திருக்க வேண்டும். உற்பத்தி சரியாக இல்லை என்றாலும், மீண்டும் எப்படி விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்ற உத்திகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். விளைச்சலின் போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி என்பதைக் கண்கூடாக கண்டதினால் தான் ஏற்றத்தாழ்வுகளின் போதும், வேறு பிரச்சனைகளை அணுகும்போதும் சரியாக சமாளிக்கும் மனநிலையைப் பெற்றுள்ளேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொழிலில்என்றும்முன்னிலைபெறத்தேவையானதகுதிகள்பற்றி?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விதை உற்பத்தி என்பது மிகவும் உன்னதமான தொழில். இத்தொழிலில் படிப்படியாகத் தான் முன்னேறமுடியும். ஐந்து ஆண்டுகள் பொறுமையாக, வருகின்ற ஏற்றத்தாழ்வுகளை முறையாக சமாளித்து, நல்ல உற்பத்தி விளைபொருள்களை விவசாயிகளுக்கு கொடுத்தால் தான் தொழில் தொடர்ந்து நிற்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சொந்த மாநிலத்திலிருந்து பிறமாநிலங்களுக்கு விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டிய முறைகள் குறித்து?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு நிறுவனத்திற்கு முதன்முறையில் ஒரு பொருளை விற்பனை செய்யும் அதே மனநிலையில் அந்த நிறுவனத்திற்கு மீண்டும் தொடர்ந்து அனுப்பும் பொழுதும் இருக்கும். ஒவ்வொரு முறையும் அதுவே முதல் ஆர்டர் என்ற நோக்கிலே தான் உற்பத்திகளை பெருக்கிக் கொண்டிருக்கிறேன். பொதுவாகவே, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு மதிப்புகள் அதிகம். எனவே அதையும் கருத்தில் கொண்டு உற்பத்தியின் தரத்தில் எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் தான் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறேன். இப்படி தரம் வாய்ந்த பொருள்களை கொடுப்பதால் தான் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். தொடர்ந்து ஆதரவும் கிடைக்கப் பெறும். எந்தப் பொருளானாலும் தரமானதாக இருந்தால் அதற்கு எப்பொழுதும் வரவேற்பு இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்களின்அடுத்தஇலக்கு?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதிர்கால இலக்கு என்றால், தொடர்ந்து கிடைக்கப்பெறும் ஆதரவுகளை அடுத்த உற்பத்தியில் முதலீடு செய்வது தான். தரத்தில் என்றும் குறைவைக்கக்கூடாது என்பதில் கவனமுடன் செயல்பட்டு வருகிறேன். தரம் நிரந்தரமாக அமைய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த மிகவும் கவனம் செலுத்தி வருவேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்களதுவாழ்க்கைத்துணைபற்றி?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொழிலில் கவனம் செலுத்த வந்துவிட்டால் எப்படியும் குடும்பத்தோடு செலவிடும் நேரம் குறைவாகத் தான் இருக்கும். தொழில் தொடங்கிய காலத்தில் நேரம் முழுவதும் பயணிக்கத் தான் சரியாக இருந்தது. காரணம், தொழிலை கவனிப்பது, விற்பனையைப் பார்ப்பது, விளைநிலத்திற்குச் செல்வது என்று எல்லாவற்றையும் நேரடி பார்வையாக செய்ய வேண்டியிருந்தது. இப்படி நாள்தோறும் பயணம் மேற்கொண்டாலும் இன்று வரை விற்பனைப் பகுதியை நான் தான் கவனித்து வருகிறேன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பணிச்சுமையின் பொழுது குடும்பத்தை கவனிக்க முடியாத சூழ்நிலைகளில் அவர் தான் முழுவதுமாக எனது பொறுப்புகளையும் சேர்த்து குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார். எனக்கும் என்றும் ஆதரவாகவே இருந்துவந்தார். எப்பொழுதும் ஊக்கம் அளித்து என்னை சுறுசுறுப்புடன் பணிபுரியச் செய்தவர் அவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குடும்பப்பின்னணி…</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மா திருமதி.சீனியம்மாள், பள்ளி ஆசிரியை. மேலும் அவரின் நிதி மேலாண்மையே பின்னாளில் எனக்கும் பழக்கமானது. தந்தையார் திரு. கிருஷ்ணசாமி நாயக்கர். மிகவும் சுதந்திரத்துடன் கூடிய புரிதலைப் பழக்கினார். எனது தங்கையும், அவரின் கணவரும் சாத்தூரில் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். மனைவி திருமகள்ஜோதி, வேளாண்மை அலுவலர். எனக்கு அமிர்தவர்ஷினி, அவந்திகாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நண்பர்கள்உதவிகுறித்து…</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படித்த துறையிலே தொழில் செய்வதால், தொழில் துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இன்று வரையிலும் அவர்களுடனான நட்பு நல்ல நிலையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது; என்றும் தொடரும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொழில்தொடங்கத்தேவையானபண்புகள்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்த ஒரு தொழிலைச் செய்வதாக இருந்தாலும் எளிதாக இருக்க வேண்டும், விரைவில் முன்னேறவேண்டும் என்று தொடங்குதல் கூடாது.எவ்வளவு தோல்விகள் வந்தாலும் அவைகளை நன்றாக சமாளிக்கும் திறன்களையும், எதிர்கொள்ளும் மனநிலையையும் பெற்றிருத்தல் வேண்டும். பிரச்சனைகளை சமாளிக்கும் அனுபவங்கள் தான் சிறந்த தொழில் நிறுவனர்களை உருவாக்கும். நேர்மையான உழைப்பு, தரமான உற்பத்திப் பொருள், உழைக்கும் திறன் இருந்தாலே தொழிலில் வெற்றி அடைவது உறுதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படித்ததில்பிடித்தது…</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கு சிறுவயதிலிருந்தே தமிழ் மீது அதிக ஆர்வம் இருந்து வருகிறது. பொது அறிவு சார்ந்த புத்தகங்களை நான் படிப்பதோடு மட்டுமல்லாமல் எனது குழந்தைகளையும் படிக்க ஊக்குவிப்பேன். நமது வளரும் தலைமுறைகள் பாடப்புத்தகத்தோடு நில்லாமல், அன்றாட நாட்டு நடப்புகளையும் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்கள் திருக்குறளும், பாரதியார் எழுதிய புத்தகங்களும் தான். திருக்குறளில் என்றும் என் நினைவில் நிற்பது,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெள்ளத் தனைய மலர்நீட்டர் மாந்தர்தம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உள்ளத் தனைய துயர்வு</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்ற குறள். உழைப்பிற்கு ஏற்றவாறு உயர்வு கிடைக்கப்பெறும் என்பது உண்மை. வயதிற்கு ஏற்றாற்போல் மனநிலையை மாற்றிக் கொண்டாலே வாழ்வின் வெற்றியை பெறலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்கள்பயணம்என்பது…</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“கடக்க வேண்டிய தூரத்தை நோக்கி</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என் பயணம் சென்று கொண்டே இருக்கும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாடுபடாமலேயேவெற்றிக்குஆசைப்படுவதுஎன்பது…</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விதைக்காமலே விளைச்சலுக்கு ஆசைப்படுவதைப் போன்றது தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலக்குஎன்பதுஎப்படிப்பட்டதாகஇருக்கவேண்டும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறுகிய தூர இலக்குகளில் குறிவைத்து தோல்வி அடையும் விரக்தியைத் தவிர்ப்பதற்காக, தொலைதூர இலக்குகளில் குறிவைக்க வேண்டும் என்பார் நோபிள். அவர் கருத்தையே பதிலாக்குகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்கள்பார்வையில்துணிச்சல்…</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆழம் தெரியாமல் காலைவிடுவது துணிச்சல் அல்ல…அளந்தறிந்து அதைக் கடப்பது தான் துணிச்சல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெற்றி யாருக்கு எளிதாகும்…</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கொழுந்து விட்டெறியும் நம்பிக்கை</div>
<div style="text-align: justify;">
பேரன்பு</div>
<div style="text-align: justify;">
தூய்மை</div>
<div style="text-align: justify;">
இம்மூன்றுடன் விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருப்பவர்களுக்கு வெற்றி எளிதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தன்னம்பிக்கை…</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொருவரையும் ஆட்கொண்டு வழிநடத்திச் செல்வது.</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-78289691942077670802018-11-09T11:25:00.002-08:002018-11-09T13:18:43.460-08:00வெற்றி மனிதனின் அடையாளம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமான தனிப்பட்ட திறன்களும், செயல்பாடுகளும் கொண்ட ஆளுமைகளின் அடையாளம் ஆவர். அதனால் தனி மனிதத்திறன் என்பது மிகவும் வேறுபட்ட ஆற்றல்களும், அறிவுத் திறன்களும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும். தனி மனிதனை உருவாக்கும் பண்புகளைப் பற்றியோ, அவ்வாறு ஒவ்வொரு மனிதனை உருவாக்குவதில் குடும்பங்களின் பங்கு பற்றியோ அல்லது தனி மனிதனை அடையாளப்படுத்துவதாகக் கணக்கிடப்படும் தனி மனிதனுடைய உடல் அழகைப் பற்றியோ இல்லை இங்கு கூறப்போவது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சக்தியுடைய தனி மனிதர்களை வார்த்தெடுக்கும் சில பண்புகள் இருக்கின்றன. தன்னம்பிக்கை, குறிக்கோள், ஒருமுகத்தன்மை, சிதறாத கவனம், முடியும் என்கிற உள்ளுணர்வு (Will Power), தளராத உற்சாகம் போன்றவை எல்லாம் தனி மனிதனுடைய ஆற்றலை வெளிப்படுத்தும் வெற்றி மனிதனின் அடையாளங்கள் ஆகும். மிகச்சிறந்த தனி மனிதனை வெளிப்படுத்துவது அவனுக்குள் இருந்து ஒளிவிடும் தன்னம்பிக்கையால் அவன் மற்றவர்களோடு பழகும்விதமே. மேற்கொண்ட செயலை செய்து முடிக்க தன்னால் முடியும், அதற்கான காரியங்களைச் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்து முடிக்கக்கூடிய திறமை தனக்கு உண்டு, செயல்படும் போது இடையிடையே குறுக்கிடும் வெற்றி தோல்விகளை சமமாகக் கருதும் மனம் தனக்கு இருக்கின்றது என்கிற மனப்பான்மை உள்ளவனுக்கு இருப்பதுதான் இந்த அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் அடையாளம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் அதே நேரத்தில் அளவுக்கதிகமாக தன்னைத்தானே நம்பிக்கொள்வதும் சில சமயங்களில் ஆபத்தில் முடியும். பல தடவை தோற்று ஓடிய குரூஸ் அரசனுக்கு கடைசியாக வெற்றி பெற முடிந்ததும், வாய் பேச முடியாத, விழித்திறனை இழந்த, காது கேட்காத ஹெலன் கெல்லர் கல்வித்துறையிலும், புத்தகங்கள் எழுதுவதிலும் புகழ் பெற்றதும், செவித்திறன் இல்லாத பீட் ஓவன் சங்கீதத்தில் பிரசித்தி பெற்றதும் உறுதியான தன்னம்பிக்கையால் தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனிமனித ஆளுமையை அடையாளப்படுத்தும் இன்னொரு குணம்தான் லட்சியம். குறிக்கோள். தீர்க்கமான குறிக்கோள் ஒன்றை கொண்டிருப்பதும், அதை உறுதியாக பசு மரத்தில் பதிந்த ஆணிபோல பதித்துக் கொள்வதும், வெற்றி ஆளுமையின் பாகம் ஆகும். படிக்க வேண்டும், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகளை வளர்க்க வேண்டும், வீட்டையும் காரையும் வாங்க வேண்டும். இதற்கு மேல் லட்சியம் என்று எதுவும் இன்று பெரும்பாலோருக்கு கிடையாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வேலை கிடைப்பதைக் காட்டிலும் மாற்று லட்சியம் இல்லாதவர்கள் கிடைத்த வேலையை உந்தித்தள்ளியும், விரட்டியடித்தும் மாதங்களையும், வருடங்களையும் கடத்துகிறார்கள். லட்சியத்துக்கு உரிய படிக்கட்டாக வேலையை கருதும்போது வேலையில் நிறைவு பெற முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் அவரை போற்றுவார்கள். எங்கே போக வேண்டும் என்று உறுதியான திட்டம் இருக்கும்போது நம் திறமைகள் எல்லாவற்றையும் அதை நோக்கிமற்றவர்கள் நடந்து நடந்து போட்ட பாதையில் இல்லை நாம் பயணிக்க வேண்டியது. நமக்கு என்று சொந்தமாக ஒரு பாதையை நாமே போட்டுக் கொண்டு அதில் நடக்க வேண்டும். உறுதியான குறிக்கோள் என்ற ஒன்று இருந்தால்தான் மூளையும் செயல்திறன் கொண்டதாக மாறுகிறது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
லட்சியத்துக்குரிய பயணத்தில் நம் கால்கள் பல வழிகளிலும் சென்றால் நம் ஒருமுகமான கவனத்தை நாம் இழந்துவிடுவோம். துரோணாச்சாரியார் அம்பை எய்யச் சொன்னபோது, அர்ஜூனன் தன் இலக்கை மட்டுமே குறி பார்த்து அம்பை எய்தான். அவரவர்களுடைய திறமைக்கு ஏற்றவாறு நேரத்தை நிர்வாகம் செய்து லட்சியத்தை நோக்கிப் பயணப்படுவதே சிறந்தது ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்க்கையில் சந்திக்கும் தோல்விகளில் சிக்கி அகப்பட்டுப் போகாமல் மனதுடைய ஆற்றலை வலிமையாக்கி, ஒரு அடி பின்னால் செல்லும்போது இரண்டு அடி முன்னோக்கி நடக்க மனதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும. மனதின் ஆற்றல் ஆளுமையை வலிமையுடையதாக்கும். சோம்பேறிக்கு எந்தத் திறமையும் கைவராது என்பது நிதர்சனமான உண்மையாகும். சோம்பேறிக்கு கல்வி மட்டும் இல்லை எந்த ஒரு முன்னேற்றமும் வாழ்க்கையில் ஏற்படாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தளராத உற்சாகம் இருந்தால் எல்லாவற்றையும் கைப்பற்றலாம். உற்சாகம் உள்ளவர்கள் அதை தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் இனிமையான பூவின் நறுமணத்தைப்போல பரவச் செய்துவிடுகிறார்கள். அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியரை வீறுகொண்டு விடுதலையுணர்வு பெற்று எழச்செய்த காந்திஜி தளராத உற்சாகத்தின் சின்னமாக இருந்தார். எதிலும் திருப்தியடையாமை, துக்கம், கோபம், வெறுப்பு, கௌரவம், அலட்சிய மனப்பான்மை, பொறாமை இவைகள் எல்லாம் சர்வசதா காலமும் வெளிப்படுத்துபவர்களை எந்த மனிதரும் நெருங்குவது இல்லை. திறந்த மனதுடன் பேசும் பேச்சு அடுத்தவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள். எல்லையில்லாத அறிவு சிறந்த ஆளுமையின் சிறப்பு அம்சம் ஆகும். நல்ல ஒரு கேட்பவராவதும், விசாலமான மனதுடையவராக இருப்பதும், அற்புதமான மனிதருடைய அடையாளம் ஆகும். மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்றால் நாம் மற்றவர்களை விரும்ப வேண்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் கண்கள், அருவிபோல மனம் திறந்த பேச்சு, மாறாத புன்னகை போன்றவையும் மகாத்மாக்களின் அடையாளங்கள் ஆகும். ஆக தன்னம்பிக்கை, லட்சியம், தளராத உற்சாகம், முடியும் என்ற நம்பிக்கை ஆகியவை பிரகாசிக்கும் தனிமனித ஆளுமை வெற்றியின் சின்னமாக ஆகிறது.</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-16298403964778436782018-11-09T11:24:00.003-08:002018-11-09T13:18:42.961-08:00வெற்றி உங்கள் கையில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” என்னும் எண்ணம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு “இவரின் உதவி வேண்டும். அவரிடம் சிபாரிசு பெற வேண்டும்” என்று நினைத்து, பிறரை மட்டுமே சார்ந்து வாழ்ந்து, வெற்றிக்காக காத்திருப்பவர்களும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எனக்கு நல்ல பெற்றோர் அமைந்திருந்தால், நான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பேன்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எனக்கு சிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தியிருந்தால், என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்”.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“புகழ்பெற்ற பள்ளியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்திருந்தால், எனக்கு சிறந்த வேலை கிடைத்திருக்கும்”.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“தரமான புத்தகங்கள் வைத்து படித்திருந்தால், நான் பல்கலைக்கழகத்தில் முதல் “ரேங்க்” எடுத்திருப்பேன்”.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எங்கள் குடும்பத்தில் வறுமை இல்லாத நிலை அன்று இருந்திருந்தால், இன்று பெரும் கோடீஸ்வரனாக மாறியிருப்பேன்”.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என தங்களின் வாழ்க்கையை ‘மறு ஆய்வு’ செய்து, தாங்கள் தவறவிட்ட வாய்ப்புகளையும், இழந்த சூழல்களையும் எண்ணி பெருமூச்சு விடுபவர்களும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“வாழ்க்கையின் வெற்றி” என்பது வெளியில் இருந்து பிறர் தரும் ஆதரவினாலும் சாதகமான சூழலினாலும் மட்டுமே நிகழ்கிறது” என்னும் கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையான ‘வெற்றி’ என்பது என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“As a man thinketh” என்பது புகழ்பெற்ற எழுத்தாளரான “ஜேம்ஸ் ஆலன்” எழுதிய நூலாகும். இந்த அற்புதமான நூலை “மனம் போல் வாழ்வு” என்னும் தலைப்பில் கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அந்த நூலில் “மனிதனது நினைப்புக்குத் தக்கவாறு அவனுடைய வாழ்வு அமைகிறது. மனிதன் எவ்வாறு நினைக்கிறானோ அவ்வாறே அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும், நிலைமையும் அமைகின்றன. பூமியில் மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் வித்திலிருந்து மரம் உண்டாகிறது. அதுபோல மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் நினைப்பிலிருந்து அவனது ஒவ்வொரு செயலும் உண்டாகிறது” எனக் குறிப்பிடுகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனித மனத்திற்கும் வெற்றிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மனத்தில் உருவாகின்ற எண்ணங்கள் தான் மனிதனின் செயலை நெறிப்படுத்துவதால் அந்த எண்ணத்தை உருவாக்கும் காரணிகளைப்பற்றி தௌல்வாகத் தெரிந்து கொள்ள வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனதில் எண்ணங்களை உருவாக்கும் காரணிகளை 2 வகையாகப் பிரிக்கலாம். அவை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1. புறக் காரணிகள் (External Factors)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2. அகக்காரணிகள் (Internal Factors)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“புறக் காரணிகள்” (External Factors) என்பது மனிதனின் வெளி உலகில் தோன்றும் காரணிகள் ஆகும். சரியான நட்பு, தரமான தகவல் தொடர்பு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுதல், இணைந்து பழகும் தன்மை, பொறுமை, அன்பை வெளிப்படுத்தும் தன்மை – போன்ற பல புற காரணிகள் (External Factors) ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இதைப்போலவே, உறவினர்கள், சகோதர – சகோதரிகள், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்ற உறவுகளும் ஒருவரின் வெற்றிக்கு பெருமளவில் துணை நின்கின்றன. பள்ளி – கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடன்பயிலும் மாணவ-மாணவிகள், நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள் என பலவிதமான புறக் காரணிகளும் ஒருவரது வெற்றிக்கு துணை நிற்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அகக் காரணிகள்” (Internal Factors) என்பது ஒருவரின் மனதில் உள்ள காரணிகள் ஆகும். இந்தக் காரணிகள் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, குறிக்கோள்கள் (Goals)> தன்னம்பிக்கை (Self Confidence)> புத்தாக்க சிந்தனை (Creativity)> முடிவெடுக்கும் திறன் (Decision Making Skill)> தலைமைப்பண்புகள் (Leadership Qualities)> தன் மதிப்பு (Self Esteem) போன்ற பல காரணிகளும் ஒருவரின் வெற்றிக்கு பெருமளவில் உதவுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘வெற்றி’ என்பது ஒரே நாளில் கட்டி முடிக்கப்படும் கட்டிடம் அல்ல. அது நாள்தோறும் நல்ல செயல்களால் உருவாக்கப்படும் ‘மாளிகை’ ஆகும். ஒருவர் செய்யும் செயல்களின் அடிப்படையில்தான் ஒருவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனித வாழ்க்கையில் பிறப்புமுதல் இறப்புவரை உள்ள காலத்தை 6 நிலைகளாக பிரித்துக் கொள்வார்கள். கருவறைப் பருவம் (Prenatal Stage)> குழந்தைப் பருவம் (Infancy Stage)> சிறுபிள்ளைப் பருவம் (Childhood Stage)> ‘டீன் ஏஜ்’ எனப்படும் குமாரப்பருவம் (Adolescence Stage)> முதிர்நிலைப் பருவம் (Adult Stage) மற்றும் முதுமைப் பருவம் (Old Stage) என்னும் இந்த நிலைகள் ஒவ்வொன்றிலும் ஒருவரின் வெற்றி அமைந்துள்ளது. எனவே வாழ்வில் எல்லா நிலைகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எண்ணங்களையெல்லாம் நல்ல செயலாக்கும் ஆற்றல்தான் வெற்றியாக வளர்ச்சி பெறுகிறது” என்பது ‘வால்டேர்’ என்பவரின் கருத்து ஆகும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் எண்ணங்களை செம்மைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது வெற்றிக்கான வழியாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு ‘வெற்றி’யும் வித்தியாசமானவை ஆகும். இதனால் வெற்றியின் தன்மைக்கு ஏற்ப, அந்த வெற்றியை அடையும் காலமும் மாறுபடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெற்றியை குறுக்கு வழிகளில் பெறுவதற்கு சிலர் முயற்சி செய்வதுண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புகழ்பெற்ற ‘ஜென்’ கதை ஒன்று வெற்றியைப்பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சீனாவிலுள்ள ஒரு மன்னன் உலகத்தின் வரலாறு முழுவதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினான். “உலக வரலாறு அனைத்தையும் தெரிந்து கொண்டால் ஞானியாகிவிடலாம்” என்றும் நினைத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவனது அமைச்சரவையிலிருந்து அறிஞர்களையும், புலவர்களையும் அழைத்தான். உலக வரலாற்றை எழுதித் தரும்படி கட்டளையிட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில ஆண்டுகள் கழிந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆயிரக்கணக்கான பக்கங்களில் உலக வரலாற்றை எழுதிக்கொண்டு பல அறிஞர்களும், புலவர்களும் வந்தார்கள். நூற்றுக்கணக்கான குதிரை வண்டிகளில் விரிவாக எழுதப்பட்ட உலக வரலாற்றுச் சுவடிகள் கொண்டுவரப்பட்டன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரண்மனை மண்டபம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு வரலாற்றுச் சுவடிகள் குவிந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மன்னன் அதிர்ச்சியடைந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“உலக வரலாறு இவ்வளவு பெரியதா? இவற்றை என்னால் படித்து முடிக்க முடியாது. மிகவும் சுருக்கமாக எழுதித்தாருங்கள்” என்றான் மன்னன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளை சுருக்கமுடியாது. அதிகமாக சுருக்கினால் உண்மைகளைத் தெரியமுடியாது” என அறிஞர்கள் சொன்னார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எப்படியாவது நீங்கள் சுருக்கித் தாருங்கள்” என விடாப்பிடியாக விரட்டினான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பயந்துபோன அறிஞர்களும், புலவர்களும் ஒரு ஜென் குருவை சந்தித்து ஆலோசனை கேட்டார்கள். ஜென் குரு மன்னனை சந்திக்க நேரில் வந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“உலக வரலாற்றை மிகவும் சுருக்கமாக நான் எழுதித்தருகிறேன்” என்று ஜென் குரு கூறினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறுநாள், மன்னனை சந்தித்த ஜென் குரு ஒரு ஓலையை அவனிடம் நீட்டினார். அந்த ஓலையில்“உலகில்மனிதர்கள்பிறந்தார்கள். வாழ்ந்தார்கள். இறந்துபோனார்கள்” என எழுதப்பட்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மன்னன் ஆச்சரியமாகப் பார்த்தான். “உலக வரலாற்றை மிகவும் சுருக்கமாக இப்படித்தான் எழுத முடியும்” என்று சொன்னார் ஜென் குரு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மன்னனுக்கு உண்மை புரிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“எந்த வெற்றியைப் பெறுவதற்கும் முறையான வழிமுறையும், தேவையான கால அவகாசமும் தேவை” என்பதை மன்னன் புரிந்து கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறுக்கு வழியில் கிடைக்கும் ‘வெற்றி’ நிரந்தரமானதல்ல என்பதையும், தெளிவானது அல்ல என்பதையும் புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெறலாம்.</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-28996223481744141742018-11-09T11:22:00.005-08:002018-11-09T13:18:43.043-08:00தன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வெற்றி என்பது என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு சோதனைகளைக் கடந்து, சாதனை படைத்த சரித்த நாயகர்களின், தன்னம்பிக்கை வரிகள் இங்கே…</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மகாத்மா காந்தி</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வன்முறை மூலம் அடையும் வெற்றி தோல்விக்கு சமமே. அது தற்காலிகமான ஒன்றே அன்றி வேறு இல்லை. அகிம்சை மூலம் பெறும் வெற்றியே உண்மை வெற்றி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்டீபன் ஹாக்கிங்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவு கடினமாக வேண்டுமானாலும் தெரியலாம். ஆனால், செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுவாமி விவேகானந்தர்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரே ஓர் எண்ணத்தை கையில் எடுங்கள். அந்த எண்ணத்தையே உங்கள் வாழ்க்கை ஆக்குங்கள். அந்த எண்ணத்தையே சிந்தியுங்கள், கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு செல்லும் நரம்பும் அந்த எண்ணத்திலேயே ஊறட்டும். இதுவே, வெற்றியின் ரகசியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும். பிரச்னைகளை தோல்வியுறச்செய்து, வெற்றி காண வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒப்ரா வின்ஃபிரே</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நொடியில் உங்களது 100 சதவிகிதத்தையும் கொடுத்து உழைப்பது, அடுத்த நொடியின் வெற்றியையும் சந்தோஷத்தையும் உறுதி செய்துவிடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எடிசன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
துவண்டுபோவதே ஒரு மனிதனுடைய மிகப் பெரிய பலவீனம். வெற்றிக்கான நிச்சய வழி, தோல்வி அடைந்த பிறகும், இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெர்னாட்ஷா</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் ஆரம்பத்தில் 10 காரியங்களைச் செய்தால், 9 தோல்வியாகவே முடியும். தோல்வி என்னைக் கேலி செய்தது. 9 முறை வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன். 90 முறை முயன்றால் 9 வெற்றி கிடைக்கும் அல்லவா? அன்று முதல், முயற்சியின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். இதுதான் எனது வெற்றியின் ரகசியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வால்ட் டிஸ்னி</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விடாமுயற்சியுடனும் தைரியத்துடனும் கனவுகளைத் துரத்திக்கொண்டு ஓட முடிவெடுத்தவரின் ஒவ்வொரு கனவும் நனவாகும்.</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-28551472064351945172018-11-09T11:08:00.004-08:002018-11-09T11:09:16.786-08:00வாழ்க்கை என்பது என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
– உயிரோடு இருப்பதா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
– மகிழ்ச்சியாக இருப்பதா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
– பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
– தோல்விகளில் கற்றுக் கொள்வதா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
– வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
– தன்னலமற்ற அர்ப்பணிப்பா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
– தத்துவங்களின் அணிவகுப்பா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
…. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
– நம்மைவிட உடலில் பலசாலி யானை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
– நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
– நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-1867162209581587912018-11-09T11:04:00.004-08:002018-11-09T11:09:16.208-08:00நட்பு பற்றிய பொன்மொழிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
*நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் இறைத் தூதுவன்தான் நண்பன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து வைப்பது நட்புதான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன். எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம்... நீ என்னை அறிந்துள்ளாய். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பாட்டுப் பாடும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நட்பு பற்றிய பொன்மொழிகள் - 02</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால், அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- புளுவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- அறிஞர் அண்ணா</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே, நீ கொடுப்பது நின்றால் அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்று விடுவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
-புல்லர்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உன்னை விட உயர்வான ஒரு மனிதரைத் தவிர மற்றவருடன் ஒரு போதும் நட்பு கொள்ள வேண்டாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- கன்பூசியஸ்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும். ஆனால் நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும், நிலையாகவும் நிற்கவும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
-சாக்ரடீஸ்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு நண்பனைப் பெறுவதற்கு நீ ஒரு நல்ல நண்பானாய் இருப்பது ஒன்றே வழியாகும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
-எமர்சன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழந்துவிடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
-வோல்டன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகின் அதிபதியாக இருந்தாலும், ஒரு நண்பன் அவசியமே</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
-யங்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.</div>
<div style="text-align: justify;">
-யூரிபிடிஸ்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்மைப் பாராட்டி மதிப்பதை விட நம்மிடம் அதிகமாக அன்பு செலுத்தி நமது பெரிய வேலையில் பங்கு கொள்பவனே நண்பன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- சான்னிங்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.</div>
<div style="text-align: justify;">
மிகப் பெரிய மகிழ்ச்சி நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்தான். </div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8058586145997474188.post-18531555061362359302018-11-09T11:01:00.003-08:002018-11-09T11:09:16.125-08:00வாழ்க்கைத் தத்துவங்கள் - பொன்மொழிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
1. சிறந்தவனாக இரு, சிறந்ததை வைத்திரு, சிறந்ததை செய்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2. ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவு கொள்ளாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3. போகும்போதே என்னை ரசித்து கொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக. இப்படிக்கு - வாழ்க்கை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4. வாழ்க்கை தரும் பாடம்</div>
<div style="text-align: justify;">
எதுவும் சில காலம்தான்.</div>
<div style="text-align: justify;">
எதிர்ப்பார்ப்பை குறைத்து கொண்டால் ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக இருக்காது.</div>
<div style="text-align: justify;">
நம்பு, யாரையும் முழுமையாக நம்பாதே. உன்னை மட்டும் வாழ்வில் நம்பு.</div>
<div style="text-align: justify;">
சிந்தனை செய், கோபப்படாதே.</div>
<div style="text-align: justify;">
வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை. அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட்டு போ.</div>
<div style="text-align: justify;">
5. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, நீ மற்றவர்கள் மனதில் வாழும்வரை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
6. அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
7. உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
8. உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும், மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் அது உன் குற்றம் இல்லை. கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே. அது பார்க்கப்படுபவன் பிழையல்ல, பார்ப்பவன் பிழை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
9. யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள். ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பதுதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
10. இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும், உண்மையான் அன்பின் பெருமை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
11. மௌனத்தில் வார்த்தைகளையும், கோபத்தில் அன்பையும் உணர்ந்துகொள்வது தான் உறவு; புரிதல் இருந்தால் பிரிதல் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
12. உங்கள் புன்னகையில் உள்ள சோகத்தையும், கோபத்தில் உள்ள காதலையும், மௌனத்தில் உள்ள காரணத்தையும் யார் புரிந்துகொள்கிறார்களோ அவர்களே உங்கள் அன்புக்கு உரிமை உடையவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
13. உரிமை இல்லாத உறவும், உண்மை இல்லாத அன்பும், நேர்மை இல்லாத நட்பும், நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரமில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
14. இழக்கும் வரை ஒருவரின் அருமை நமக்குப் புரிவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
15. ஒருவரின் அருமையை அவர்களை பிரியும் தருணத்தில் மட்டுமே உணர முடியும், நினைவுகளின் துணையோடு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
16. ஒருவரை இழக்கும் போது வரும் கண்ணீரைவிட, அவர்களை இழக்கக்கூடாது என்று நினைக்கும்போது வரும் கண்ணீருக்கு இன்னும் வலி அதிகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
17. எதுவுமே உயர்ந்தது இரண்டு முறை, கிடைப்பதற்கு முன்பு தவறவிட்ட பின்பு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
18. தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமே அதை எடுத்துக்கொண்டால் அது இனிக்கும், மற்றவர்கள் நமக்கு அதை கொடுத்தால் கசக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
19. எல்லோருடைய இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம்தான் வித்தியாசம். சிலர் கண்ணீராக, சிலர் புன்னகையாக.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
20. ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு வலி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை முட்டாள்கள் கண்களிலும், அறிவாளிகள் புன்னகையிலும் மறைத்துக் கொள்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
21. உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படித்தான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
22. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது, அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது, அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
23. உங்கள் எண்ணம் பண்பட்டு இருந்தால் உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால் உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண்பட்டுவிடும். இதனால் உங்கள் எண்ணங்களின் மேல் அதிக கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாதது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
24. நமது சொல் அல்லது செயலுக்கு மூலகாரணியாக இருப்பது நம் எண்ணமே. நாம் எதையும் சொல்லும் முன்போ அல்லது எதையும் செய்யும் முன்போ அதற்கான உந்துதல் முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
25. உருவத்தில் எப்படி இருந்தாலும் உள்ளத்தில் குழந்தையாய் இரு, இந்த உலகமே உன்னை நேசிக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
26. எல்லாக் காயங்களுக்கும் ஒரு மருந்து, குழந்தைகளின் புன்னகை என்னும் அருமருந்து.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
27. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மௌனம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
28. நீ சிரித்து பார் உன் முகம் உனக்கு பிடிக்கும், மற்றவர்களை சிரிக்க வைத்து பார் உன்முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
29. நட்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க அருகிலிருப்பவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
30. தவறு செய்வது மனித இயல்பு.</div>
<div style="text-align: justify;">
நாம் ஒரு தவறை செய்யும்போது,</div>
<div style="text-align: justify;">
அதை நியாயப்படுத்தக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
அதை மறுக்கக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
பிறரைக் குற்றம் சாட்டக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
அதை மீண்டும் செய்யக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
பிறகு என்னதான் செய்யவேண்டும்,</div>
<div style="text-align: justify;">
ஒப்புக்கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
மன்னிப்புக் கோருங்கள்.</div>
<div style="text-align: justify;">
கற்றுக் கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
31. தவறே செய்யாத மனிதன் இல்லை, தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
32. வாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பை கேட்பதற்கும், கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
33. மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும், பிறர் செய்த தவறுகளுக்குச் சிறந்த நீதிபதியாகவும் இருக்க விரும்புகிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
34. அறிவாளிகளுக்கு அறிவு அதிகம், ஆனால் முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
35. தலைகுனிந்து என்னைப் பார், தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன். - புத்தகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
36. அழும்போது தனிமையில் அழு, சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி; கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
37. நல்லவனாய் இரு. ஆனால் அதை நிருபிக்க முயற்சி செய்யாதே. அதை விட முட்டாள்தனமான விஷயம் எதுவுமில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
38. வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே. உன் நிழல்கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
39. அனைவரையும் நேசி, சிலரை மட்டும் நம்பு, ஒருவரை பின்பற்று, ஆனால் ஒவ்வொருவரிடம் இருந்து கற்றுக்கொள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
40. இருளைத் தூற்றுவதற்குப் பதில் அகலை ஏற்றுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
41. வீரனைப் போரிலும், யோக்கியனை கடனிலும், மனைவியை வறுமையிலும், நண்பனை கஷ்டகாலத்திலும் அறிந்துகொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
42. பழைமைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
43. வாழப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
44. பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும்போதுதான் தெரியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
45. சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரமாக செல்வந்தனாவான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
46. கீழே விழாமல் இருப்பது பெருமையில்லை, விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருப்பதே பெருமை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
47. என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர், அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள் - எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
48. இதயத்தால் காதல் கொள், கண்களால் அல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
49. எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும், இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும், பயணம் முடிந்துவிடும், மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
50. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
51. துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியை இழக்காதே, காதலே நினைத்து வாழ்க்கையை இழக்காதே, சோதனையை நினைத்து சாதனையை இழக்காதே, தோல்வியை நினைத்து வெற்றியை இழக்காதே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
52. நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்,</div>
<div style="text-align: justify;">
ஏழ்மையிலும் நேர்மை.</div>
<div style="text-align: justify;">
கோபத்திலும் பொறுமை.</div>
<div style="text-align: justify;">
தோல்வியிலும் விடாமுயற்சி.</div>
<div style="text-align: justify;">
வறுமையிலும் உதவி செய்யும் மனம்.</div>
<div style="text-align: justify;">
துன்பத்திலும் துணிவு.</div>
<div style="text-align: justify;">
செல்வத்திலும் எளிமை.</div>
<div style="text-align: justify;">
பதவியிலும் பணிவு.</div>
<div style="text-align: justify;">
53. வாழ்க்கையில் பெறவேண்டிய பதினாறு பேறுகள்,</div>
<div style="text-align: justify;">
புகழ்.</div>
<div style="text-align: justify;">
கல்வி.</div>
<div style="text-align: justify;">
வலிமை.</div>
<div style="text-align: justify;">
வெற்றி.</div>
<div style="text-align: justify;">
நன்மக்கள்.</div>
<div style="text-align: justify;">
பொன்.</div>
<div style="text-align: justify;">
நெல்.</div>
<div style="text-align: justify;">
நல்விதி.</div>
<div style="text-align: justify;">
நுகர்ச்சி.</div>
<div style="text-align: justify;">
அறிவு.</div>
<div style="text-align: justify;">
அழகு.</div>
<div style="text-align: justify;">
பெருமை.</div>
<div style="text-align: justify;">
இனிமை.</div>
<div style="text-align: justify;">
துணிவு.</div>
<div style="text-align: justify;">
நோயின்மை.</div>
<div style="text-align: justify;">
நீண்ட ஆயுள்.</div>
<div style="text-align: justify;">
54. மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்,</div>
<div style="text-align: justify;">
நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும், கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்,</div>
<div style="text-align: justify;">
தனமும் இன்பமும் வேண்டும், தரணியேலே பெருமை வேண்டும்,</div>
<div style="text-align: justify;">
கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும்,</div>
<div style="text-align: justify;">
பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்,</div>
<div style="text-align: justify;">
மண் பயனுற வேண்டும், வானமிங்கு தென்பட வேண்டும்,</div>
<div style="text-align: justify;">
உண்மை நின்றிட வேண்டும். – பாரதியார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
55. எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள். – காந்திஜி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
56. துன்பங்ளுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
57. அன்புதான் உன் பலவீனம் என்றால், இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான். - அன்னை தெரசா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
58. விட்டுக்கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும், மன்னிப்பு கொடுங்கள் தவறுகள் குறையும், மனம் விட்டு பேசுங்கள் அன்பு அதிகமாகும். - அன்னை தெரசா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
59. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். - ஆபிரகாம் லிங்கன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
60. உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும், உன் செயல்ளுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். – சாக்ரடீஸ்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
61. மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம், ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை. – சாக்ரடீஸ்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
62. கண்ணாடி தான் என் சிறந்த நண்பர். ஏனெனில், நான் அழும்போது அது ஒருபோதும் சிரித்ததில்லை. - சார்லி சாப்ளின்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
63. உன் மனம் வலிக்கும்போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை. - சார்லி சாப்ளின்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
64. நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது, நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது, நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது. – கன்ஃபூஷியஸ்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
65. நமக்கு நெருக்கமானோர் நம்முடன் பேசாதபோது ஏற்படும் வலியைவிட, அவர்கள் மற்றவருடன் நெருக்கமாக பேசும்போது ஏற்புடும் வலி அதிகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
66. கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது, சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது, ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
67. சந்தோசத்த தான் நம்ம சுத்தி இருக்குற எல்லாருகிட்டயும் பகிர்ந்துக்கணும். கஷ்டம்னு வந்தா தனியா நின்னு ஜெயிக்கிறவன் தான் மனுஷன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
68. வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்கக் கூடாது. விரும்பி எது வந்தாலும் “TAKE CARE”, விலகி எது போனாலும் “DON’T CARE”.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
69. இன்பத்தை “INBOX” இல் வை, கவலையை “OUTBOX” இல் வை, புன்னகையை “SENT” பண்ணு, கோபத்தை “DELETE” பண்ணு, மனதை “VIBRATE” செய்து பார், வாழ்க்கை தானா “RINGTONE” ஆக மாறும்.</div>
</div>
Sakthihttp://www.blogger.com/profile/12895609317453777853noreply@blogger.com0