Saturday, February 1, 2014

காரணத்தை ஆராய்ந்து ஆராய்ந்து கொள்கைகள் தான் நிரம்பி வழிகின்றன, தீர்வுகளைக் காணோமே?

காரணத்தை ஆராய்ந்து ஆராய்ந்து கொள்கைகள் தான் நிரம்பி வழிகின்றன, தீர்வுகளைக் காணோமே?

அர்த்தமுள்ள இனியமனம்

மனிதன் மாற வேண்டும் அவன் மயக்கம் தீர வேண்டும்

வர்க்கப் பிரிவினை தான் காரணம்
என சிவப்புக் கொடி பிடித்தார்கள்

இல்லை இல்லை சாதிப்பிரிவினை அதை விட ஆழம்
என கருப்புக் கொடி பிடித்தார்கள்.

ஆசை தான் காரணம் என்றான் புத்தன்
இம்சைதான் காரணம் என்றார் காந்தி
இச்சைதான் காரணம் என்றார் யேசு

காரணத்தை ஆராய்ந்து ஆராய்ந்து
கொள்கைகள் தான் நிரம்பி வழிகின்றன,
தீர்வுகளைக் காணோமே?

எத்தனை எத்தனை
நூற்றாண்டுகள்
ஆயிரமாண்டுகள்
கொண்டாடி முடித்தாலும்
மனிதத்தின் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டுதானே இருக்கிரது

மனம் மாற வேண்டும்
மன மாற்றம் வர வேண்டும்
மனிதன் மாற வேண்டும்
மயக்கம் மாற வேண்டும்

இந்த மாமனிதர்களுக்கு சிலை வைத்து மாலை போட்டு
மரியாதை செய்து விட்டு மறந்து விடும் மக்கள் குணம் மாறவேண்டும்

No comments:

Post a Comment