Tuesday, December 18, 2018

சாதனை படைப்பது எப்படி? இயற்கையை வெற்றி கொள்!

* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். 
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.
* ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான். 
* தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம்.
* குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.
* பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவனே பேறு பெற்றவன்.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
* தன்னை மறந்து பணியாற்றும்போது தான் கடமையில் சாதனை படைக்க முடியும்.
* கோபப்படும் மனிதனால் சிறப்பாக பணியில் ஈடுபட முடியாது. மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனே, தனது பணியில் தீவிரமாக செயல்பட முடியும்.
* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.
* கருணை நிறைந்தவர்களாக மாறுங்கள். ஏனெனில், கருணையே இனிய சொர்க்கம்.
* எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.
* வாழ்வில் ஒரு நன்மையாவது செய்யுங்கள். அதனால், பாவம் அனைத்தும் தீர்ந்து விடும். 
* பிறவிப்பிணி நீங்க வேண்டுமானால், ஆசையின் சாயலே அற்றுப் போய் விட வேண்டும். வேறெந்த முயற்சியும் வீணானவை தான்.
* யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டுஇருக்கட்டும். எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதை கடவுளின் வழியில் செய்து கொண்டிருங்கள்.
* பெண்ணுக்கு நாணமே ஆபரணம். அது இல்லாத பெண்ணைப் பெண் என்றே சொல்ல முடியாது. 
* ஆசையை யாராலும் விலக்க முடியாது. உடம்பு என்ற ஒன்று இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். ஆனால், அதை கட்டுக்குள் வைக்க வேண்டும். 
* "கடவுள் என்னுடையவர்' என்ற சிந்தனையை விதைப்பதற்கு ஏற்றது குழந்தைப் பருவமே. பக்தியை குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொடுங்கள். 
* தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார்.
* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். 
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். 
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்.
* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. 
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. 
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.
* திண்ணையில் உட்கார்ந்திருப்பவன் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.
* உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், "தான் ஒருவனே மகா கெட்டிக்காரன், மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே, துன்பப்படுபவனும் "தான் ஒருவன் மட்டுமே உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்' என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை.
* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து வழிபடுங்கள்.
* "இன்றைய நாள் முழுவதும் நல்ல பொழுதாக அமைய வேண்டும்' என்று தினமும் வேண்டிக் கொள்ளுங்கள்.
* புண்ணிய நதிகள், பசு, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர்களை குறைந்தது ஒரு நிமிடமாவது சிந்தியுங்கள்.
* வாரம் ஒருமுறையாவது கோயில் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
* அண்டைவீட்டாரையும், மற்ற மனிதர்களையும் அன்புடன் நேசித்து வாழுங்கள்.
* சாப்பிடும் முன் மிருகம், பறவைகளுக்கு உணவு அளித்த பின்னரே சாப்பிடுங்கள்.
* அன்றாடம் அவரவர் சக்திக்கேற்ப தர்மம் செய்து வருவது நன்மை அளிக்கும்.
* நீராடிய பின் நெற்றியில் தவறாமல் திருநீறு, குங்குமம் வைத்துக் கொள்வது அவசியம்.
* உறங்கும் முன் அன்றைய நாளில் நடந்த நல்லது, கெட்டதை எண்ணிப் பார்ப்பது நம்மைத் திருத்திக் கொள்ள வழிவகுக்கும்.
* பாவிகளை நாம் வெறுப்பதாலும், அவர்களை கோபிப்பதாலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்பவேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.
* நம் நாட்டில் முற்காலத்தில் கல்வியின் முதல் நோக்கம் அமைதியை அடைவதே ஆகும். ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் 'பரவித்யை' எனவும், மற்றவற்றை 'அபரவித்யை' எனவும் கூறுவர்.
* பாவத்திற்கு மூலம் கெட்ட காரியம். கெட்ட செயலுக்கு மூலம் ஆசை. ஆகையால், நம் கஷ்டம் அனைத்திற்கும் மூலகாரணமாகிய ஆசையை நிவர்த்தி பண்ணினால், நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.
* கடவுள் ஒன்று என்று சொல்வதோடு மற்ற மதங்கள் இருந்துவிடுகின்றன. ஆனால், இந்துமதமோ ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு வழிபட பலப்பல தெய்வ வடிவங்களை நமக்குக் காட்டுகிறது.
* தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட அவனை ஆதரிக்கும். அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான்.
* அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தா போகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. இப்படியே ஓர் ஆசை பூர்த்தியானவுடன் இன்னொரு ஆசை மூள்கிறது.
* கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.
* தமிழ்நாடு ஒரு குளிர்சாதன பெட்டி போல எல்லா பாஷைகளையும், எல்லா நாகரீகங்களையும் கெடாமல் குளிர்ச்சியுடன் காத்துத்தந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நிறைந்திருப்பது எது? வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாடியது உண்மையாகும்.

வெற்றி வாழ்வின் ரகசியம் - தைரியமாக இருங்கள்

* மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது.
* திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். அது போதும்.
* கோழை தான் வாழ்வில் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.
* மக்களிடம் உண்மையான சமத்துவம் எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.
* சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
* மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.
* சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.
* பிரதிபலன் பாராமல் நன்மை செய்யுங்கள்.

வெற்றி வாழ்வின் ரகசியம்

* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
* உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும். 
* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.
* இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.
* மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான். 
* கற்புநெறியில் இருந்து பிறழும் போது, மனித சமூகம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.
* நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம்.

உண்மையைப் பின்பற்றுங்கள்!

* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. 
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. 
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.

நம்மால் சாதிக்க முடியும்!

* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். 
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். 
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்

உலகத்துக்காக தியாகம் செய்!

* நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.
* ஒருவருக்கொருவர் நன்மை செய்வதன் மூலமாகத் தான், நற்பலன்களை அடைய முடியும்.
* மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கே செல்லவும் தயாராக இருக்கவேண்டும். மரணம் ஒருநாள் உறுதி என்னும்போது நல்ல செயலுக்காக உயிரை விடுவது மேலானது.
* பெரியவர்கள் பலர் செய்த தியாகத்தின் பயனையே இன்று மனிதகுலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை உலகம் முழுவதிலும் காணமுடியும்.
* உன் சொந்த முக்திக்காக நீ உலகத்தைத் துறந்து விட விரும்பினால் அது ஒன்றும் பாராட்டத்தக்கது அல்ல. ஆனால், உலக நன்மைக்காக உன்னை நீயே தியாகம் செய்ய முடியுமானால் கடவுளாகி விடுவாய்.
* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்காதே. வெற்றி, தோல்வி என்று கவனித்துக் கொண்டிருக்காதே. உடனடியாக, தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு.

உழைத்து வாழ வேண்டும்ஜனவரி 10,2013,14:01  IST
* தைரியமாயிருங்கள். பலமுடையவர் ஆகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்பு களையும் சுமத்திக் கொண்டு செயல்படுங்கள். 
* உங்கள் விதியை நிர்ணயிப்பவர் நீங்களே. உங்களுக்கு வேண்டிய பலமும், துணையும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
* கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும், ஒழுக்கமும் கொண்ட நல்லவர்களையே இந்த மண்ணுலகம் வேண்டி நிற்கிறது.
* உழைத்து வாழுங்கள். இவ்வுலக வாழ்வு எத்தனை நாள் என்பது நமக்குத் தெரியாது. உலகில் தோன்றியதன் அறிகுறியாக ஏதேனும் நல்லதைச் செய்ய முயலுங்கள்.
* உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துங்கள். அதன் பின் உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் சீராகி ஒழுங்காகி விடும். 
* வாழ்வில் நன்மை பெற வேண்டுமானால், மனிதர்களுக்கு முதலில் தொண்டு செய்யுங்கள்.
விவேகானந்தர்
(இன்று விவேகானந்தர் பிறந்ததினம்) 


இயற்கையை வெற்றி கொள்!

* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். 
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.

உள்ளத்தை ஒழுங்குபடுத்து!

* உங்களுக்கு வருகிற துன்பம் எதுவென்றாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
* உலகத்தில் உள்ள தீமைகளைப் பற்றி வருந்த வேண்டாம். உங்கள் உள்ளத்தில் இருக்கும் தீமையைப் போக்க வழிகாணுங்கள்.
* உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால், எல்லா இடத்திலும் கடவுளைக் காண்பீர்கள்.
* பாவ எண்ணமும், பாவச் செயலும் ஒன்று தான். அதனால், தீய எண்ணமும் கூட ஒருவனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறவாதீர்கள்.
* சுதந்திரம் இல்லாத வரையில் ஒரு மனிதனிடம் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.
* உயிர் போகும் வேளையில் கூட, ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம். 
* தன்னை அடக்கக் கற்றுக் கொண்டவன் தரணியையே அடக்கும் வலிமை பெறுகிறான்.
* நேர்மை, அக்கறை உணர்வுடன் ஈடுபடும் எந்த விஷயத்திலும் சாதனை நிகழ்த்த முடியும்.

தவறுகளைத் திருத்திக்கொள்!

* ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தியதோடு, அதை கடைபிடித்தவர்களில் புத்தருக்கு இணையான ஒருவரை உலகம் இதுவரை காணமுடியவில்லை.
* ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம் நல்ல ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றி நடக்க முடியும். 
* ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே தவிர, வெறும் பேச்சன்று.
* இரும்பைப் போன்ற மன உறுதியும், மலைகளைத் துளைத்துச் செல்லும் வலிமையும் வந்து விட்டால் கடலையும் கடக்க முடியும்.
* அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. அது தான் நம்முடைய மனதை ஒருமுகப்படுத்துவதாகும்.
* அன்பில்லாதவன் பெற்ற உலகியல் அறிவும், ஆன்மிக ஞானமும் பயனற்றது. அவனால் கடவுளை ஒருபோதும் அடைய முடியாது.
* "நான் கெட்ட செயலை செய்து விட்டேன்' என்று வருந்துவதைக் காட்டிலும் அதை திருத்திக் கொள்வதே மேலானசெயல்.

விருப்பத்துடன் வேலை செய்

* பகை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் தோன்றிய இடத்திற்கே திரும்பி வந்து விடும்.
* நன்மை செய்வதே சமயவாழ்வின் சாரம்.
* எல்லாவற்றையும் செவி சாய்த்துக் கேளுங்கள். ஆனால், உங்களுக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதை மட்டும் உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அஞ்ச வேண்டாம். அதையே துணிச்சலுடன் பின்பற்றுங்கள். ஒருபோதும் கோழையாக இருக்காதீர்கள்.
* தன்னை அடக்கிப் பழகியவன் வேறு எதற்கும் வசப்பட மாட்டான். அத்தகையவனே உலகில் நன்றாக வாழும் தகுதி பெற்றவன்.
* எந்த வேலையாக இருந்தாலும், அதை தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்பவனே அறிவாளி.
* அன்புடைய மனிதனே வாழ்கிறான். சுயநலம் கொண்டு மற்றவர்கள் மீது வெறுப்பு கொள்பவன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பது பொருள்.

ஒரே எண்ணம் வாழ்வில் வெற்றி தரும்

* ஒருவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், ""நான் பாவியாக இருக்கிறேனே! எப்படி கடைத்தேறப் போகிறேன்!'' என்று அழுது கொண்டிருப்பதனால் பயன் சிறிதும் இல்லை.
* வெறும் வருத்தத்தினாலும், புலம்பலினாலும் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஊக்கத்தோடு நம் கடமைகளைச் செய்தால் நிச்சயம் உருப்படலாம்.
* மனங்களில் நல்லமனம் என்றும், கெட்டமனம் என்றும் இருவேறு மனங்கள் இல்லை . மனம் என்பது ஒன்று தான் இருக்கிறது.
* நாம் அனுபவிக்கும் இன்பத்தை அறியாமையால் புறவுலகத்தில் இருந்து பெறுவதாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் இன்பம் நமக்குள்ளே தான் இருக்கிறது.
* கடவுளின் பேரால் எவ்வளவு பாரத்தைக் கொடுத்தாலும் அவ்வளவையும் அவரே ஏற்றுக்கொள்வார். ஆனால், நாம் நம் மனதில் சுமைகளை சுமப்பதால் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறோம். 
* உழைப்பும் சமூகசேவையும் உலகத்திற்கு நன்மை செய்வனவாகும். உழைப்பின் மீதும், நம்மால் முடிந்த சேவைகளையும், பிறருக்கு உதவி செய்வதையும் உங்கள் அடிப்படைக் கடமையாகக் கொள்ளுங்கள்.

சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும்.
அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.
மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.
மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.
அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.
நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும்.
உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.

* முற்பிறவியில் புண்ணியவினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.
* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.
* விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது.
* பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது

Friday, November 9, 2018

வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணங்கள்!

வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணங்கள்!

நாணயம் புக் செல்ஃப்


புத்தகத்தின் பெயர்: தி பவர் ஆஃப் மொமென்ட்ஸ் (The Power of Moments: Why Certain Experiences Have Extraordinary Impact)

ஆசிரியர்கள்: Chip Heath and Dan Heath

பதிப்பகம்: Simon & Schuster

நம்மில் பெரும்பாலானோர் வாழ்வில், ஒரு சில தருணங்களே நமக்குள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறோம். வாழ்வில் நிறைய விஷயங்கள் நடக்கிறபோதிலும் இதுபோன்ற தருணங்கள் மறக்க முடியாததாக ஆகிவிடுகின்றன. இவற்றில் சில தருணங்கள் எதேச்சையாக  நடந்தவையாகவும், சில தருணங்கள் அதிர்ஷ்டத்தால் நடந்தவையாகவும் இருக்கின்றன. 

இப்படி வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள் எதேச்சையாகவும் அதிர்ஷ்டத்தின் காரணமாகவும் மட்டுமே உருவாகும் தன்மைகொண்டதா என்று கேட்டால், அதுதான் இல்லை. இதுபோன்ற தருணங்களை எதேச்சை மற்றும் அதிர்ஷ்டத்திற்கு ஒதுக்கிவிடாமல், திட்டமிட்டு நம்மால் அதனை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதையும், எப்படி அதைத் திட்டமிட்டுச் செயலாக்குவது என்பதையும் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

சிப் ஹீத் மற்றும் டேன் ஹீத் என்ற இருவர் இணைந்து எழுதிய ‘சில தருணங்கள் உருவாக்கும் சக்தி’ (The Power of Moments) என்னும் புத்தகத்தில், நம் வாழ்வில் ஏற்படும் ஒரு சில அனுபவங்கள் நமக்குள்ளே ஏன் பெரும் தாக்கங்களைக் கொண்டுவருகிறது என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்கள்.  

உதாரணத்துக்கு, எங்கோ பயணிக்கும் போதோ அல்லது ஒரு மீட்டிங்கிலோ புதியதாக ஒருவரைச் சந்திக்கிறோம். ஒரு சில மணி நேரம் அவரிடம் பழகிய பின்னர் பிரிகிறோம். ஆனால், அவர் நாளடைவில் நெருங்கிய நண்பராக மாறி நமக்குப் பெரும் பக்கபலமாய் இருக்க ஆரம்பிக்கிறார். இது எப்படிச் சாத்தியம்? பயணத்தில் சந்திக்கும் அனைவரும் நண்பர்களாவதில்லை. நண்பர்களாகும் அனைவரும் பக்கபலமாய் இருப்பதில்லை அல்லவா? இதுபோன்ற விஷயங்களைப் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம். 

நம் வாழ்வில் வரையறுக்கும் பல கணங்களை (Defining Moment) நாம் எதிர்கொள்கிறோம். ஆனால், அவையெல்லாம் வெறுமனே எதேச்சையாக நடந்தவை என்றே நாம் நினைத்துக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, காதலியை முதன்முதலாகச் சந்தித்த தருணம்,  புதிதாக வந்த ஆசிரியர் நமக்கே தெரியாத ஆனால், நம்மிடம் இருக்கும் திறமை ஒன்றைக் கண்டறிந்து சொல்லும் தருணம், வாழ்க்கை என்பது நிரந்தரம் என்று எல்லோரையும் போல் நாம் நினைத்திருக்க, திடீரென்று முளைத்த ஒரு பிரச்னையால் வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்று நாம் புரிந்துகொண்ட தருணம், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேலையில் இனிமேல் ஒருநாள்கூட இருக்கக்கூடாது என்று நாம் முடிவெடுக்கும் தருணம்போன்ற எல்லாவற்றை யுமே நாம் அதிர்ஷ்டத்தால் நடந்தது அல்லது எதேச்சையாய் நடந்தது என்றே அர்த்தம் செய்துகொள்கிறோம். 

‘‘இது உண்மையா என்றால் இல்லை. இவை எதுவும் எதேச்சை யாக நடப்பது இல்லை. நம்மால் ஒரு சினிமா/டிராமாவைப்போல் ஸ்கிரிப்ட் எழுதி அவற்றை நிகழ வைக்க முடியும்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள். இதுபோன்ற வரையறுக்கும் தருணங்கள்  பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றில் இருக்கும் ஒற்றுமைகள் என்ன என்பதையும், அந்த வரையறுக்கும் தருணங்களை உருவாக்குவது எப்படி என்பதையும் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். 

வரையறுக்கும் தருணங்கள் பலவற்றையும், புத்தகத்தின் ஆசிரியர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அவை அனைத்திலுமே சில ஒற்றுமையான விஷயங்கள் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. இதனாலேயே இதுபோன்ற தருணங்களை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

எதற்காக இதுபோன்ற தருணங்கள் நமக்குத் தேவை அல்லது உருவாக்கப்பட வேண்டும் என்கிறீர்களா? வாழ்க்கையை வளப்படுத்த, மற்றவர்களிடம் தொடர்பு ஏற்படுத்த, நினைவிலிருந்து நீங்காத அனுபவங்களை ஏற்படுத்த, வாடிக்கையாளர், நோயாளி, பணியாளர் என நம்முடைய துறைக்கு ஏற்றாற் போல் அனைவருக்கும் சுகமான அனுபவத்தைத் தரவும்தான் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்தவித வரையறுக்கும் தருணங்களில் இருக்கும் ஒற்றுமைகள் என்னென்ன?

உயர்ந்த நிலையைத் தருபவை

நம்முடைய சாதாரண நாள்களில், சாதாரணத் தருணங் களைவிட இந்தத் தருணங்களில் கிடைக்கும் அனுபவங்கள் அதிக அளவு உயரம் கொண்டவையாக இருக்கின்றன. இந்தத் தருணங்கள் சிறப்பானவையாக அமைய, நம்முடைய உணர்வுகளைத் தொடுபவையாக அவை இருக்கவேண்டும்.

நுண்ணறிவைத் தருபவை

இந்தத் தருணங்கள் உலகம் குறித்த நம் புரிந்துகொள்ளுதல்களை மாற்றியமைப்பதாக இருக்கிறது. இந்த நிமிடம் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கப்போகிறது என்பதை நாம் உணர்கிறோம். நம் வாழ்நாள் முழுவதும் இது பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை உணர்கிறோம். இந்த நேரத்தில்தான், ‘நான் வேலையை விட்டுவிட்டுத் தொழில் ஆரம்பிக்கப்போகிறேன்...இவளைத்தான் கைப்பிடிக்கப் போகிறேன்...’ என்பது போன்ற உள்ளுணர்வுடன் கூடிய புரிந்து கொள்ளுதல்களை ஏற்படுத்து வதாக இந்தத் தருணங்கள் இருக்கின்றன.

பெருமை அளிப்பவை 

மேலும், இந்தத் தருணங்கள் நமக்குப் பெருமையளிப்பதாக இருக்கின்றன. அதாவது, சாதனைத் தருணம், துணிச்சலான தருணம் என்பது போன்ற தருணங் களை இதற்கு உதாரணமாகச் சொல்கின்றனர் ஆசிரியர்கள். இந்தப் பெருமைமிகு தருணங்களை உருவாக்க, பெருமை குறித்து நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் சாதனைகளை மைல்கல்களால் அளவிடுவதைப் போன்று எப்படி அமைத்துக்கொள்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் காலையில் அதிக தூரம் ஜாக்கிங் போய்ப் பழகுங்கள் என்று சொன்னால் கேட்காதவர்கள், ‘Couch to 5k’ (படுக்கையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர்) என்ற மைல்களை வைத்து ஜோடிக்கப்படும் திட்டங்களில் சேர்ந்து தினமும் ஜாக்கிங் போவது இதனால்தான் என்கின்றனர் ஆசிரியர்கள். 

தொடர்புகளால் வருபவை 

திருமண விழா, பட்டமளிப்பு விழா, சுற்றுலா, பார், சொற்பொழிவு, விளையாட்டுப் போட்டிகள் எனக் கூட்டம் சேர்கிற இடங்களிலெல்லாம் இந்த வரையறுக்கும் தருணங்கள் துளிரத் தயாராய் இருக்கின்றன. ஏனென்றால், இந்தத் தருணங்களை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். அது எப்படி மற்றவர்களுடன் இணையும்போது இது உருவாகிறது? பரிசோதனை முயற்சியாக தனி அறைக்குள் இருவரை அனுப்பி, 45 நிமிடங்கள் அங்கே அமரச் செய்தால், பெரும்பாலானோர் வெளியே வரும்போது நல்ல நண்பர்களாகி விடுகின்றனர். இவ்வித தனிமையான ஒருங்கிணைப்புகளே நட்பை வளர்க்கிறது. மருத்துவர் - நோயாளி,  சில்லறை விற்பனைக் கடை பணியாளர் -  வாடிக்கையாளர் போன்றவர்கள் நடுவேகூட நட்பு மலர்வதற்குக் காரணம் கூட்டமில்லாத சூழலில், அவர்கள் இருவரும் தனியே சந்திக்கும் வாய்ப்புகள் உருவாவதுதான் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

வரையறுக்கும் தருணங்கள் என்பவை பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் தருணங்களாகவும் இருக்கக்கூடும். ‘‘நெகட்டிவ் தருணங்களே, ‘நான் யாருன்னு காட்டுகிறேன்’ என்று திசைமாற்றும் தருணமாக இருக்கிறது இல்லையா?” என்று கேட்கின்றனர் ஆசிரியர்கள். 

இந்த நான்கு விஷயங்களே நம்முடைய வாழ்வில் தோன்றும் வரையறுக்கும் தருணங்களில் பெரும்பாலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லியிருக்கும் ஆசிரியர்கள், இவற்றை எப்படி உருவாக்கி வளர்த்தெடுப்பது என்பதையும் தெளிவாக உதாரணங்களுடன் சொல்லியிருக்கின்றனர். 

உயர்ந்த அனுபவங்களை எப்படி உருவாக்கிக்கொள்வது, உலகம் குறித்த புரிதலை எப்படி வளர்த்துக்கொள்வது, பெருமையளிக்கும்படி எப்படி நம் வாழ்க்கைமுறையைக் கட்டமைத்துக்கொள்வது, உறவுகளை உருவாக்கி எப்படி அவற்றை உரம்பெறச் செய்வது என்பதையெல்லாம் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

ஒருசில தருணங்களே நம் வாழ்க்கையை வரையறுக்கிறது. அந்த வரையறுக்கும் தருணங்களை நாமே கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டி, அதற்கான வழிமுறைகளையும் விளக்கமாகச் சொல்லியுள்ள இந்தப் புத்தகத்தை, வெற்றி பெற விரும்பும் அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.

குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting

குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting

தனித்திறனை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு குழந்தைக்கும் வயது வேறுபாடு இருக்கும். உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்
குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting
குழந்தைகளைப் படிப்புடன் எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ்களில் சேர்த்து ஜீனியஸ் ஆக்கும் கனவு எல்லாப் பெற்றோருக்குமே இருக்கும். ஸ்விம்மிங், ஸ்கேட்டிங், கராத்தே எனக் குழந்தைகளுக்கான பன்முக வாய்ப்புகள் திரும்பும் திசையெல்லாம் கொட்டிக்கிடக்கின்றன. பெற்றோர் குழந்தைகளுக்கான எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிடிஸ்களை வளர்க்கும் விதம் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர், சியாமளா ரமேஷ் பாபு.பெற்றோர்

பெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய 2 வயதில், சின்னச் சின்ன செயல்பாடுகளின் மூலம் குறிப்பிட்ட விஷயத்தில் தனித்தன்மையைத் வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். அது தாளத்துக்கு ஏற்ப ஆடுவதோ, பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிப்பதோ, எதைப் பார்த்தாலும் வரைவதோ என இருக்கலாம். இப்படிக் குழந்தை ஆர்வம் காட்டும் செயல்களைத் தொடர்ந்து கண்காணித்து அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தை இப்படி ஏதேனும் ஒரு செயல்பாட்டைத் தொடரும்பட்சத்தில், ``செல்லம், உங்களுக்குப் பாட்டு, நடனம் கத்துக்க ஆசையா? சேர்த்துவிட்டா கத்துப்பியா?' எனக் கேளுங்கள்

.குழந்தை வெளிப்படுத்தும் திறனை வளர்க்கும் இடங்களுக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திப் பாருங்கள். குழந்தை அதில் ஆர்வம் காட்டுகிறதா, அச்சம் அடைகிறதா என உற்றுநோக்குங்கள். குழந்தை திரும்பத் திரும்ப அங்கே போக ஆர்வம் காட்டினால், க்ரீன் சிக்னல் என அர்த்தம்.

புதிதாக ஒரு கலையைக் கற்பிக்க சேர்க்கிறோமே தவிர, அதில் ஜெயிப்பது மட்டுமே நோக்கமில்லை, பரிசுக்காகச் சேர்க்கவில்லை என்பதைக் குழந்தைகளுக்குப் புரியும்விதத்தில் சொல்லுங்கள். அதற்கு முன்பு, பெற்றோர்களுக்கும் இதில் தெளிவு அவசியம்.

தனித்திறனை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு குழந்தைக்கும் வயது வேறுபாடு இருக்கும். உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். குழந்தைக்கான தனித்திறன் 10 வயதிலும் வெளிப்படலாம். எனவே, பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

என் குழந்தை எந்தக் கூடுதல் வகுப்புக்குச் சென்றாலும் ஆர்வமே காட்டுவதில்லை என அங்கலாய்க்கும் பெற்றோர் உண்டு. அதை, அப்போதைக்கு அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். வளர வளர நண்பர்களின் ஊக்கத்தாலோ, சக மாணவர்களின் செயல்களைப் பார்ப்பதாலோ, ஆசிரியர்கள் மூலமோ அவர்களுடைய ஆர்வம் விரிவடையும்.

பெற்றோர்

புதிதாக ஒன்றைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க முடிவெடுக்கும் முன்பு, குழந்தையின் உடல் ஆரோக்கியம், பள்ளிக்கூட நேரம், பாடத்திட்டத்தின் வரையறை, குழந்தையின் ஆர்வம், குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் அனைத்தையும் மனதில்கொண்டு தொடங்குங்கள்.

குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுவதற்குத்தான் இந்த வகுப்புகளே தவிர, வதைக்க அல்ல. `இது எக்ஸ்ட்ரா கிளாஸ். ஃபீஸ் கட்டியாச்சு. நீ போய்த்தான் ஆகணும்' என வற்புறுத்தாமல், அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். ஆர்வம் இருந்தால், அவர்களே எனர்ஜிட்டிக்காகச் செயல்படத் தொடங்குவார்கள்.

சமீப காலமாக, வாய்ப்பாட்டு, நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், தற்காப்புக் கலைகள், வரைதல் போன்றவை ஊடகங்களால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்படுகிறது. எனினும், இவற்றில் ஆர்வம் காட்டாத குழந்தைகள் சாதிக்க முடியாது என்ற எதிர்மறை எண்ணத்தைக் கைவிட்டு, உங்கள் குழந்தையின் திறனை ஊக்குவிப்பது அவசியம்.

சில குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைவிட ரசிக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த ரசனை பின்னாள்களில் பெரிய அளவிலான தனித்திறனாக மாற வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளின் ரசனையை மதியுங்கள். அவர்களுடன் சேர்ந்து ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

எல்லாவற்றிலும் நம் குழந்தையே பரிசை அள்ளி வர வேண்டும் என நினைக்காமல், அவர்களின் குழந்தைப் பருவத்துக்கு மதிப்பு அளித்து, அவர்கள் விரும்புவதைச் செய்ய வழிகாட்டுங்கள்.

இனி உங்கள் குழந்தையும் ஆல்-ரவுண்டரே!

வெற்றி இலக்கை அடைய சுலபமான 5 வழிகள்!

ஒரு ஈசியான வழி இருக்கிறது. எப்போதும் எடுக்கும் முயற்சியைவிட, கூடுதலாக நீங்கள் கடுமையாக உழைத்தால் வெற்றிக்கு அருகில் நீங்கள் சென்று விடுவீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற தீவிரமாக உழைக்கவேண்டும். உழைப்பின்றி வெற்றிக்கனி கிடைப்பதென்பது நிஜத்தில் சாத்தியமற்றது.

உங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் 5 சுலபமான வழிகள் இதோ!

இந்த முக்கிய கேள்விகளை உங்களிடமே நீங்கள் கேளுங்கள்

உங்கள் கனவை நோக்கிய பயணம் ஏன் இத்தனை முக்கியமானது என்று கேட்டுக் கொள்ளுங்கள். லாபத்தை காட்டிலும் உயரிய குறிக்கோளை கொள்ளவேண்டும். சமூகத்தில் உங்கள் ஐடியா ஏற்ப்படுத்தப் போகும் மாற்றம் என்ன என்று சிந்தியுங்கள். சமூகத்தில் நீங்கள் ஒரு நேர்மறை தாக்கத்தை விட்டுச்செல்லப் போகிறீர்கள் என்ற நினைப்பே உங்களுக்கு ஊக்கத்தை கொடுத்து உந்துதலை அளிக்கும். உங்களின் கடின உழைப்பின் பலனை உணர்ந்தால் நீங்கள் செய்யும் வேலை சுலபமாக தெரியும், அதனோடு உங்களுக்கு நெருக்கமும் கிட்டும்.

உங்கள் முன்னேற்றத்தை அளவிடும் செயற்திட்டத்தை உருவாக்குங்கள்

எத்தனை கடுமையாக உழைத்தாலும், உங்களின் முன்னேற்றத்தை பற்றி அறியாமல் இருந்தால் அது அர்த்தமற்றதாக ஆகிவிடும். உங்களின் இலக்கு, அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் பணியை முடிக்கும் கெடுநாள் ஆகியவற்றை தெளிவாக வரையறுங்கள். இந்த திட்டம் ரெடி ஆனவுடன், பணியை தொடங்குங்கள். ஒரு ஐடியா முழுதும் நிறைவு பெறாமல் அடுத்தவற்றுக்கு தாவாதீர்கள். 

தொழில் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்

தொழிலில் ஏற்கனவே வெற்றி அடைந்தவர்களுடன் தொடர்பில் இருங்கள். போராடி வென்றவர்கள் பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து உங்களுக்கு உதவி செய்து முன்னேற்றத்திற்கான வழியை சொல்வார்கள். அதே போல் உதவி தேவைப்படும் பிறருக்கும் நீங்கள் உதவிடுங்கள். மற்றவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு உதவிட முடியும் என்று பார்த்து நடந்துகொண்டு, ஒரு நல்ல உறவுமுறையை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சுயநலமாக இருந்து உங்களைப் பற்றி மட்டும் யோசித்தால், மற்றவர்களும் அதேபோல் உங்களிடம் இருப்பார்கள் என்பதை மறவாதீர்கள். 

உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிடுங்கள்

உங்கள் வேலை பலு அதிகமாக இருக்கும். ஆனால் அதற்காக உங்களின் நேரத்தையும் தொழில், பணிக்கு மட்டுமே செலவிடுவது நல்லதல்ல. குடும்பம், நண்பர்கள் என்று அவருகளுடனான உங்கள் நேரத்தை திட்டமிட்டு ஒதுக்குங்கள். அதே போல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படிப்பது, சினிமா என்று நீங்கள் விரும்பிய ஒன்றை செய்ய தவறாதீர்கள். அதுவே உங்களை புத்துணர்வாக்கி செய்யும் வேலையை சிறப்பாக செய்ய உதவிடும். 

உங்களின் முக்கிய இலக்கை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்

நீங்கள் தொடங்கிய முக்கிய இலக்கை எப்போதும் மறவாமல் அதை அடையவே உழைத்திடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே மிகமுக்கியம். உயரிய இலக்கை அடைய மூன்று வழிகளை எழுதிவைத்து அதை ஒவொன்றாக நிறைவேற்றிடுங்கள். அதே போல் ஒவ்வொரு நாளும் அதே ஊக்கத்துடன், குறிக்கோளுடன் செயல்பட்டால் மட்டுமே அந்த இலக்கை நீங்கள் நெருங்கமுடியும். 

வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு தெளிவாக வகுத்துக்கொண்டு வாழ்ந்தால் மட்டுமே உங்கள் கனவு நிறைவேற வழி கிடைக்கும். உற்சாகமாக மேற்கூறிய வழிகளை பின்பற்றிப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!

மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் :) : மஹாத்மா காந்தி வரலாற்று குறிப்பு

மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் :) : மஹாத்மா காந்தி வரலாற்று குறிப்பு


1893-ம் வருடம். தென்னாப்பிரிக்காவின் ஆளரவம‌ற்ற ஒரு ரயில் நிலையத்தில் கடும் குளிரில் இரவைக் கழித்துக் கொண்டிருந்தான் 24 வயது இளைஞன். ரயில் பயணத்துக்கான முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தும், நிறவெறி காரணமாக கீழே இறக்கப்பட்ட அராஜகத்தை நினைத்துத் துடித்தான். வழக்கறிஞர் தொழில் செய்யும் தனக்கே இந்த கொடுமை நிகழ்கிறது என்றால், படிக்காத இந்தியர்களுக்கு என்னெவல்லாம் அநியாயம் நிகழும் என எண்ணிப் பார்த்தான்.

இந்த அநியாயத்தை எதிர்த்து நிற்பதா அல்லது இந்தியாவுக்கு திரும்பிவிடுவதா என்ற இரண்டே கேள்விகள்தான் அவனிடம் அப்போது இருந்தது. இரெவல்லாம் சிந்தித்தவன், காலையில் சூரியன் கண் விழிப்பதற்குள் மிகத் தெளிவான போராளியாக மாறினான். அடிமைத்தனத்தையும் அராஜகத்தையும் எதிர்க்கத் துணிந்தான். போராட வேண்டுமாயின் பணபலம் மற்றும் ஆள்பலம் வேண்டும், உன்னிடம் இரண்டும் இல்லை என்பதால் தோற்றுவிடுவாய் என்று அவநம்பிக்கை விதைத்த நண்பர்களைப் பார்த்து, ‘மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்’ என்று போராட்டத்தை தொடங்கினான். அதில் வெற்றிபெறவும் தொடங்கினான். ஆம்… பாரதத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் அந்த இளைஞன்.

21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தின்
வெற்றியைக் கண்டுதான், இந்தியா அவரை கைநீட்டி அழைத்தது. 1869-ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. பன்னிரெண்டாவது வயதில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் ‘மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்’ என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மை மட்டுமே பேசும் புதிய மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்தியேபாதோ எப்போதும் கைவிட்டதேயில்லை. ஒரு வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றவர், கோர்ட்டுக்குக் கொண்டு சென்ற வழக்குகளைவிட, கோர்ட்டுக்கு வேளியே பேசித் தீர்த்துவைத்த வழக்குகள்தான் அதிகம்.

தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது. போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதன்முறையாக ‘அகிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். ‘‘ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் உறுதியுடன் நின்று சாத்வீக‌மாக போராடுவதுதான் உண்மையான வீர‌ம், எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல’’ என்ற காந்திஜியின் அகிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான், சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழுந்தபோது, ‘‘மன உறுதியுடன் போராடினால், வெற்றி நிச்சயம்’’ என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.

1930-ம் வருடம். 61 வயதான காந்தி, உப்புக்கு வரி போட்ட ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து ‘தண்டி யாத்திரை’யை தொடங்கினார். 241 மைல் தூரத்தை 24 நாட்களில் கடந்த காந்தி, ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார். நாடெங்கும் பல்வேறு தலைவர்கள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

காந்தியின் மன உறுதியையும் அகிம்சையின் பலத்தையும் கண்டு மக்கள் மலைத்து நிற்க ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள்.
1947-ம் வருடம். காந்தியின் இந்த‌விடாத போராட்டத்தால், இந்தியாவுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தேடி வந்தும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் தீண்டாமை, ஏழ்மை, மதக் கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.

‘120 வயதுவரை வாழ்ந்தால் மட்டுமே நான் நினைத்திருக்கும் எல்லா
காரியங்கைளயும் செய்து முடிக்க முடியும்’ என்ற காந்திஜியை 78வது வயதில்
மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் முடித்துவைத்தான் நாதுராம் வினாயக
கோட்ஸே. காந்தி மறைந்தாலும் மன உறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ,
அங்ெகல்லாம் ெவற்றி உருவத்தில் அவைர தரிசிக்க முடியும்.

மனதில் உறுதி வேண்டும்

நம் வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகளினால் மனம் மிகவும் கனமாகி மன அழுத்திற்கு ஆளாகிறார்கள். தாங்க முடியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கின்ற தயக்கம், எந்த செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போகச் செய்யும் மன உளைச்சல் இவை அனைத்தும் மன அழுத்தின் அறிகுறிகளாகும்.

நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் சரி தைரியத்தையும் விடாமுயற்சியையும் கைவிடாதீர்கள். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் மிக அற்புதமான திட்டத்தை வைத்திருக்கிறார். அதை முறையே நடத்துவதற்கான வழி முறையும் அவருக்கு தெரியும். தேவையில்லாமல் நாம் அவரை நிந்திக்க வேண்டாம். சந்தோசமாக இருக்கும் போது நம் கைப்பிடித்துக் கொண்டு மிகவும் நல்ல முறையில் நடத்தி வந்த கடவுளுக்கு துன்பப்படும் போது அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கான வழியும் தெரியும். எனவே நமக்கு வரும் கஷ்டங்களை நுண்ணோக்கி வைத்து பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டு விட்டு வேறு வழியைத் தேடவும்.

தற்பொழுது நாம் படும் கஷ்டத்திற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். இந்த கஷ்டங்கள் நம்மை மிகப்பெரிய கஷ்டத்திலிருந்து தடுத்து நம்மை காப்பாற்றி சிறு துன்பம் மட்டும் கொடுத்திருக்கலாம். ஆனால் நமக்கு இதுவே மிகப்பெரும் பாராமாக இருக்கலாம் அப்படியே பாராமாக இருந்தாலும் கடவுள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வெகுவிரைவில் தருவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கவலை நாளையத் துயரங்களை அழிப்பதில்லை

இன்றைய வலிமையை அழித்துவிடும் – என்பதை மறந்து விடாதீர்கள்.

எவ்வளவு சிரமங்கள் வந்தாலும், எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் நாம் நினைத்து எதிர்மாறாக நடந்தாலும், எடுத்த காரியம் நடக்கவில்லை என்றாலும் துவண்டு விடாதீர்கள். ஏன் அடுத்த விநாடியிலேயே மாறலாம். எனவே ஒரே அடியாக மனதிற்கு அதிக சந்தோஷத்தையும் அதிக துக்கத்தையும் மனதில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். மனதை ஆல்பா நிலையிலே வைத்திருக்கவும். சந்தோஷம் எவ்வளவு வந்தாலும் வரவேற்புடன் ஏற்றுக்கொள்கின்ற நம்மால் சிறு தோல்வி வந்தாலும் ஏற்க மறுக்கின்றன. எனவே நம் மனது பக்குவப்பட வேண்டும். முதலில் இவை கடினமாக இருக்கும். பிறகு நம் மனது எல்லாவற்றையும் சமமாக பார்க்கின்ற பக்குவ நிலைக்கு வந்து விடும். இதுவே ஆல்பா நிலையாகும்.

எந்த ஒரு வேலையும் தொடர்ந்து முயல்வோர்களின் விடாமுயற்சி வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்ப்படுத்துகிறது. இருந்தாலும் சில சமயங்களில் நமக்கு வெறுப்பும், அழுகையும் ஏற்படும்.

“முடியும் வரை முயற்சி செய்

உன்னால் முடியும் வரை அல்ல

நீ நினைத்த செயல்

முடியும் வரை”

முயற்சி செய்து தோற்கும் செயல்களை தோல்வியாக கருதக்கூடாது முதல் முயற்சியில் கிடைத்த வேலை, முதல் பயிற்சியில் தேர்ச்சி போன்றவை சில நேரங்களில் ஆபத்தானவை. ஏனென்றால் அவர்களால் அந்த தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் அவர்களுக்கு முயற்சி செய்யும் எண்ணமே இருக்காது. நம்மால் மட்டும் தாங்கிக் கொள்ள முடியுமா என கேட்கலாம். சாதனை படைப்பவர்களிடம் மட்டுமே கடவுள் பல பெரும் பொறுப்புகளை ஒப்படைத்து இருக்கிறார். ஏனென்றால் கடவுள் உங்களை கண்மூடித்தனமாக நம்புகிறார். அப்படி கடவுளை நம்புகிறவர்களில் நீங்களும் ஒருவர் என பெரு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள்.

பல பேர் கொடும் வார்த்தைகளால் நம் மனதை காயப்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் நாம் பொறுமையுடன் இருக்கவும்.  இதனால் நீங்கள் கெட்டுப் போவதும் இல்லை; உங்கள் நிலை தாழ்ந்து போவதும் இல்லை. மேலும் வாழ்வில் யாரையும் அதிக அளவு நம்பாதீர்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். நீதிக்கு புறம்பாக நடக்காதீர்கள். நீங்கள் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் சத்தியத்தை கடைபிடியுங்கள். நம் நாட்டு கலாச்சாரத்தோடு வாழப் பழகுங்கள். முடிந்தால் அதை பிறருக்கு கூறுங்கள்.

கடவுளைத் தவிர யாரும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை உணருங்கள். எனவே எந்த ஒரு செயல் செய்வதற்கும் பிறரை நம்பி இருக்காதீர்கள். அவர்களால் வரமுடியாவிட்டால் தைரியமாக தாங்களே சென்று வெற்றிகரமாக செய்து முடியுங்கள்.

சில சமயம் நாம் எவ்வளவு மன உறுதியுடன் இருந்தாலும் சில சம்பவங்களால் நம் மன உறுதியையும் சுக்கு நூறாக வெடிக்கின்ற நிலை ஏற்படலாம். மனம் வெறுத்தும் போகலாம். எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். எதற்கும் ஒரு நாள் உண்டு எல்லோருக்கும் வாழ்வு உண்டு என்பதில் உறுதியாக இருங்கள். உங்களின் வியத்தகு செயலினால் நாளை உலகமே உங்களை போற்றி புகழாரம் சூட்டலாம். முயற்சி செய்யுங்கள் அதை விரும்பி செய்யுங்கள்.

லட்சியத்தில் ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டோம்னா, லட்சியத்தை தவிர மற்ற எல்லா சந்தோஷத்தையும் நாம் தியாகம் பண்ணியே தீரனும். அதுதான் அதனுடைய விலை. லட்சியவாதிகள் அனைவரும் அதிகப்படியான நேரங்கள் உழைத்தவர்களாக இருப்பார்கள். அதாவது மற்றவர்கள் உறங்கும் நேரத்தில் இவர்களை விழித்திருந்து உழைத்திருப்பார்கள்.

 யாரையும் தெரியாமல் கூட சபிக்காதீர்கள், மனசார வாழ்த்துங்கள். மற்றவர்களை மனசார வாழ்த்தும் போதெல்லாம், இறைவனும் உங்களை ஆசிர்வதிக்கின்றார். நமக்கு இடையூறு செய்பவர்கள் நம் வாழ்க்கை ஓட்டத்தை தடுத்து நிறுத்த நினைப்பவர்களிடம் மல்லுக்கு நிற்கக்கூடாது. வீண் வாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை விட நம் இலட்சியப் பாதையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் எதிரிகள் தான் உங்கள் எதிர்காலத்தை காட்டுகிறார்கள். அவர்கள் தான் உங்கள் சிகரத்தின் காவலாளிகள்.

வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிற எவரும் செய்ய வேண்டிய முதல் காரியம் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து பிரமித்து நின்று விடக்கூடாது. தோல்வியில் துவண்டு விழவும் கூடாது.

நம் மனதை உறுதியோடு வைத்துக் கொள்வதற்கான சில வழிகள். இவைகள் நம் வாழ்வை வளமாக்கி வெற்றிப்படியில் நிற்க வைக்கும்.

நாளை நமக்காக

காத்து இருக்கிறது

சோர்வை அகற்றி

நம்பிக்கை வளர்ப்போம்

1. செயல்களை முறையாக திட்டமிட வேண்டும்

2. இப்பொழுதே செயலில் ஈடுபட வேண்டும்

3. ஆழமாக சுவாசியுங்கள, இதனால் உடலும் மனமும் தளர்வு அடைவதை உணரலாம்

4. நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லாம் நன்மைக்கே என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள்

5. முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்

6. இசை கேளுங்கள் (அ) பாடுங்கள் எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு

7. கடவுளை நம்புங்கள்

8. வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம். பழகிப் பார்த்து முடிவு செய்யவும்

9. குறைவாக பேசுங்கள் அதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ளுங்கள்

10. பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள். அதேபோல் உங்களுடைய நேரத்தை பிறர் வீணாக்க ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்

11. உங்களுக்கு ஒன்றை பற்றி தெரியாவிட்டால், உண்மையை சொல்லிவிடுங்கள் தெரியும் என்று நடிக்காதீர்கள்

12. வெற்றி பெற்றால் எல்லோருடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்

“மண்ணில் பிறப்பது ஒரு முறை

வாழ்வது ஒரு முறை

சாதிப்போம் பல முறை

வாழ்த்தட்டும் தலைமுறை”

நீங்கள் சாதனையாளரே!

“விரும்பியது கிடைக்காவிட்டால்,
கிடைத்ததை விரும்பு” – இது ஆக்கபூர்வமான சிந்தனையின் அடித்தளம்.

தொழில்:

இந்தச் சிந்தனை தொழிலுக்கு மிகவும் பொருத்தமானது. படிப்புக்கும், பார்க்கும் பணிக்கும் சம்பந்தமில்லாத நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சாதனையாளர்கள் எப்படி ஒரு செயலைச் செய்ய வேண்டுமென கீழக்கண்டவாறு வள்ளுவம் வழிகாட்டுகிறது.

இலாபம் – நட்டம் ஆராய்ந்து செய்தல்;
முதலுக்கு மோசமின்றி செயல்படுதல்;
தவறான செயல்களைச் செய்யாதிருத்தல்;

இவைகள் சுலபமாகச் செயல்படுத்தக் கூடியது தான்.

நோக்கம்:

தொழில் செய்வதன் நோக்கம் பொருளீட்டுதல்; பொருளீட்டுவதன் நோக்கம் ‘வாழ்க்கையை வாழ்வதற்கே!’ ஆனால் பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கை என ஒரு சாரார் – அதிலும் குறிப்பாக ஆட்சி மற்றும் அதிகாரப் பொறுப்பிலுள்ளோர் செயல்படுவதால் பொதுமக்களும் அவர்களது செயல்களால் பாதிக்கப்படுகின்றனர்.

பாதிப்பு சாதாரணமானதல்ல. இந்தப் பூவுலகில் வாழவும் வேண்டுமா? எனத் தவறான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளபடுமளவுக்கு பாதிப்பு.

காலால் நடந்தால் காத தூரம் செல்லலாம்,

கையால் நடந்தால்…??

தவறான வழியில் சேர்க்கும் பொருள், நிச்சயமாகத் துன்பத்தைத் தான் தரும்.

“பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்” – குறள் 675

பலமுறை யோசித்து, மயக்கமில்லாமல், அவசரப்படாமல் – என்ன தொழில் (பணி) செய்யப் போகிறோம்; அதனைத் தொடங்க வேண்டிய காலம்; அதைச் செயல்படுத்தும் (பணிபுரியும்) இடம்; அதற்கான கருவிகள் (இயந்திரங்கள்); இந்தத் தொழில் துவங்கத் தேவையான முதலீடும், அதனால் கிடைக்கும் வருமானமும் என்ற ஐந்தையும் ஒன்றுக்குப் பலமுறை ஆலோசித்து, முடிவு செய்து துவங்கினால், அதனால் எதிர்பார்க்குமளவு சம்பாதிப்பதுடன், அது இன்பத்தையும் தருவதாக அமையும். ஓர் உதாரணம் பார்ப்போம்.

பருக்கை:

இது ஒரு புத்தகத்தின் பெயர். மனிதன் உயிர் வாழ இறைநிலை வழங்கிய அடிப்படைத் தேவைகள் பசியும், தூக்கமும். வாழ்க்கையை இனிமையாக வாழ வழங்கியது தான் மறதி. இதில் முக்கியமானது பசி. பசியே இல்லாத நிலையை நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் பிடிப்பே இருக்காது. இந்தப் பசியைப் போக்கவும், இதர தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவுமே இன்று எல்லோரும் பணி / தொழில் செய்கிறோம்.

மாணவப் பருவத்தில், பகுதி நேர வேலை (Part Time Job) பார்த்துக் கொண்டு படிக்கும் பழக்கம் இப்போது பரவலாகிவிட்டது. பொருள் வசதியில்லாதவர்கள் தான் இப்பணிகளை நாடிச்செல்கின்றனர். படித்துப் பட்டம் வாங்கி நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் எதிர்நீச்சல் போடும் இவர்களின் சாய்ஸ் – பெரும்பாலும் திருமண கேட்டரிங்; காரணம் சம்பளத்துடன் சாப்பாடும் கிடைப்பது தான்.

இந்தப் பகுதிநேரப் பணியை மேற்கொண்டு பி.எச்.டி. (Ph.D.)  தமிழ் பாடத்தில்,  சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவரின் அனுபவம் தான் பருக்கை எனும் இந்த நூல்.

இதோ அவர் பேசுகிறார்:

“திருவண்ணாமலை  அருகில் அத்தனூர் கிராமம் சொந்த ஊர்; அப்பா பட்டறைத் தொழிலாளி. நான்கு குழந்தைகளில் நான் கடைக்குட்டி. படிப்பின் மீது ஆர்வம். நன்றாகவும் படிப்பேன். பள்ளிக்குப் பேருந்தில் செல்ல வசதியில்லாமல் நடந்து சென்று படித்தேன்.

மேற்கொண்டு படிக்க விரும்பியபோது வீட்டில் தடுத்தார்கள் – என் மூலமாக வரும் வருமானம் நின்றுவிடும் என்பதால். என் கனவை விட்டுக்கொடுக்க தயாராயில்லாமல், சென்னைக்கு வந்தேன்.

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் தங்க இடமும், உணவும் கிடைக்கவில்லை. கடற்கரை, பூங்கா எனப் பல இரவுகள் உறங்கினேன். எனது கஷ்டத்தைப் பார்த்த உடன் படிக்கும் மாணவன் தனது அறையில் எனக்கு இடம் கொடுத்தான்.

விடுதி ஆய்வாளர் கண்களில் படாமல் அறையில் தங்கும் போதும், விடுதி உணவைச் சாப்பிடும் போதும் மனதில் ஏற்பட்ட வலியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

எவ்வளவு காலம் தான் இப்படி மறைந்து வாழ்வது? தேவைகளைப் பூர்த்தி செய்ய பகுதிநேர வேலை பார்க்க முடிவு செய்தேன். சாப்பாடும் கிடைக்கும் என்பதால் கேட்டரிங் வேலையைத் தேர்வு செய்தேன். இது சந்தோஷம் தான். ஆனால் அனுபவிக்கும்போது தான் பல சிரமங்கள் புரிந்தது.

கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை தான். கல்லூரி மாணவன் என்றாலும், ஏஜென்டுகளைப் பொறுத்தவரை நான் கூலியாள் தான். மாட்டைவிடக் கேவலமாக விரட்டுவார்கள். ஏதாவது பேசினால், அடுத்த முறை வேலை கொடுக்கமாட்டார்கள்.

கிரிக்கெட்:

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கர். சிறுபிழை என்றாலும் அவுட் தான். அம்பயர்களது தவறான கணிப்பால், இவர் பலமுறை ஆட்டமிழந்துள்ளார். மிகமிக எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.

சாதனை:

ஆனால், வாழ்க்கை எனும் விளையாட்டில் நாம் எப்படி விளையாடினாலும், இயற்கை எனும் அம்பயர் பலவிதமான வாய்ப்புகளைத் தந்து கொண்டே இருக்கும். வாய்ப்புகள் வரும்போது கட்டாயம் பயன்படுத்திச் செயல்பட்டால் சாதிக்க முடியும். மூச்சுக்காற்று நமக்குச் சொல்வது, எல்லா மனிதர்களும் சாதிக்கவே பிறந்துள்ளார்கள்.

எந்த அளவு வெயில், குளிர், மழை என்றாலும், உடலுக்குள் செல்லும் மூச்சுக்காற்று நமக்குத் தேவையான பிராண சக்தியைத் தந்து கொண்டே இருப்பதன் மூலம், நாம் எந்தச் சூழ்நிலையிலும் நமது கடமையை வேண்டா வெறுப்பாகச் செய்யக் கூடாது என்ற பாடத்தைப் போதிக்கிறது.

“செய்வன திருந்தச் செய்”  இது சாதனைக்கான தொடர்படி, என்ன செய்தாலும் சுயதிருப்தி (Self Satisfaction) முக்கியம். மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ? விமர்சனம் செய்வார்களோ? எனக் குழம்பவே கூடாது.

எண்ணித் துணிந்து செய்யும் செயல்கள் என்றும் நமக்கு ஏற்றத்தை மட்டுமே – அதாவது முன்னேற்றத்தை மட்டுமே தரும். இப்போதைய நிலைக்கு வருத்தப்படுவதால் பயன் ஏதுமில்லை. கிடைத்ததை ஏற்பதும், அதனை விரும்புவதும் மட்டுமே சாதனைக்கு நம்மை இட்டுச் செல்லும்.

மற்றவர்கள் நம்மை சாதனையாளர் எனப் பாராட்ட வேண்டும் எனக் காத்திருக்கக் கூடாது. உங்கள் ஈடுபாடு உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்களிடமுள்ள அபரிமிதமான, அளப்பரிய, அற்புத மனசக்தியின் மூலம் எதையும் சாதிக்க முடியும். அந்த மனசக்தி தான் ஆழ்மனம் என்பது. இதை உபயோகியுங்கள்.

ஆழ்மனக் காட்சிகள் அற்புதங்களை நிகழ்த்தும். நீங்கள் நம்புங்கள்! நீங்கள் சாதனையாளர் தான். மீண்டும் ஒருமுறை படியுங்கள். உங்களாலும் சாதிக்க முடியும். சாதிப்பதற்காகவே பிறந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

வெற்றி மனிதனின் அடையாளம்



ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமான தனிப்பட்ட திறன்களும், செயல்பாடுகளும் கொண்ட ஆளுமைகளின் அடையாளம் ஆவர். அதனால் தனி மனிதத்திறன் என்பது மிகவும் வேறுபட்ட ஆற்றல்களும், அறிவுத் திறன்களும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும். தனி மனிதனை உருவாக்கும் பண்புகளைப் பற்றியோ, அவ்வாறு ஒவ்வொரு மனிதனை உருவாக்குவதில் குடும்பங்களின் பங்கு பற்றியோ அல்லது தனி மனிதனை அடையாளப்படுத்துவதாகக் கணக்கிடப்படும் தனி மனிதனுடைய உடல் அழகைப் பற்றியோ இல்லை இங்கு கூறப்போவது.

சக்தியுடைய தனி மனிதர்களை வார்த்தெடுக்கும் சில பண்புகள் இருக்கின்றன. தன்னம்பிக்கை, குறிக்கோள், ஒருமுகத்தன்மை, சிதறாத கவனம், முடியும் என்கிற உள்ளுணர்வு (Will Power), தளராத உற்சாகம் போன்றவை எல்லாம் தனி மனிதனுடைய ஆற்றலை வெளிப்படுத்தும் வெற்றி மனிதனின் அடையாளங்கள் ஆகும். மிகச்சிறந்த தனி மனிதனை வெளிப்படுத்துவது அவனுக்குள் இருந்து ஒளிவிடும் தன்னம்பிக்கையால் அவன் மற்றவர்களோடு பழகும்விதமே. மேற்கொண்ட செயலை செய்து முடிக்க தன்னால் முடியும், அதற்கான காரியங்களைச் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்து முடிக்கக்கூடிய திறமை தனக்கு உண்டு, செயல்படும் போது இடையிடையே குறுக்கிடும் வெற்றி தோல்விகளை சமமாகக் கருதும் மனம் தனக்கு இருக்கின்றது என்கிற மனப்பான்மை உள்ளவனுக்கு இருப்பதுதான் இந்த அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் அடையாளம்.

ஆனால் அதே நேரத்தில் அளவுக்கதிகமாக தன்னைத்தானே நம்பிக்கொள்வதும் சில சமயங்களில் ஆபத்தில் முடியும். பல தடவை தோற்று ஓடிய குரூஸ் அரசனுக்கு கடைசியாக வெற்றி பெற முடிந்ததும், வாய் பேச முடியாத, விழித்திறனை இழந்த, காது கேட்காத ஹெலன் கெல்லர் கல்வித்துறையிலும், புத்தகங்கள் எழுதுவதிலும் புகழ் பெற்றதும், செவித்திறன் இல்லாத பீட் ஓவன் சங்கீதத்தில் பிரசித்தி பெற்றதும் உறுதியான தன்னம்பிக்கையால் தான்.

தனிமனித ஆளுமையை அடையாளப்படுத்தும் இன்னொரு குணம்தான் லட்சியம். குறிக்கோள். தீர்க்கமான குறிக்கோள் ஒன்றை கொண்டிருப்பதும், அதை உறுதியாக பசு மரத்தில் பதிந்த ஆணிபோல பதித்துக் கொள்வதும், வெற்றி ஆளுமையின் பாகம் ஆகும். படிக்க வேண்டும், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகளை வளர்க்க வேண்டும், வீட்டையும் காரையும் வாங்க வேண்டும். இதற்கு மேல் லட்சியம் என்று எதுவும் இன்று பெரும்பாலோருக்கு கிடையாது.

வேலை கிடைப்பதைக் காட்டிலும் மாற்று லட்சியம் இல்லாதவர்கள் கிடைத்த வேலையை உந்தித்தள்ளியும், விரட்டியடித்தும் மாதங்களையும், வருடங்களையும் கடத்துகிறார்கள். லட்சியத்துக்கு உரிய படிக்கட்டாக வேலையை கருதும்போது வேலையில் நிறைவு பெற முடியும்.

உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் அவரை போற்றுவார்கள். எங்கே போக வேண்டும் என்று உறுதியான திட்டம் இருக்கும்போது நம் திறமைகள் எல்லாவற்றையும் அதை நோக்கிமற்றவர்கள் நடந்து நடந்து போட்ட பாதையில் இல்லை நாம் பயணிக்க வேண்டியது. நமக்கு என்று சொந்தமாக ஒரு பாதையை நாமே போட்டுக் கொண்டு அதில் நடக்க வேண்டும். உறுதியான குறிக்கோள் என்ற ஒன்று இருந்தால்தான் மூளையும் செயல்திறன் கொண்டதாக மாறுகிறது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

லட்சியத்துக்குரிய பயணத்தில் நம் கால்கள் பல வழிகளிலும் சென்றால் நம் ஒருமுகமான கவனத்தை நாம் இழந்துவிடுவோம். துரோணாச்சாரியார் அம்பை எய்யச் சொன்னபோது, அர்ஜூனன் தன் இலக்கை மட்டுமே குறி பார்த்து அம்பை எய்தான். அவரவர்களுடைய திறமைக்கு ஏற்றவாறு நேரத்தை நிர்வாகம் செய்து லட்சியத்தை நோக்கிப் பயணப்படுவதே சிறந்தது ஆகும்.

வாழ்க்கையில் சந்திக்கும் தோல்விகளில் சிக்கி அகப்பட்டுப் போகாமல் மனதுடைய ஆற்றலை வலிமையாக்கி, ஒரு அடி பின்னால் செல்லும்போது இரண்டு அடி முன்னோக்கி நடக்க மனதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும. மனதின் ஆற்றல் ஆளுமையை வலிமையுடையதாக்கும். சோம்பேறிக்கு எந்தத் திறமையும் கைவராது என்பது நிதர்சனமான உண்மையாகும். சோம்பேறிக்கு கல்வி மட்டும் இல்லை எந்த ஒரு முன்னேற்றமும் வாழ்க்கையில் ஏற்படாது.

தளராத உற்சாகம் இருந்தால் எல்லாவற்றையும் கைப்பற்றலாம். உற்சாகம் உள்ளவர்கள் அதை தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் இனிமையான பூவின் நறுமணத்தைப்போல பரவச் செய்துவிடுகிறார்கள். அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியரை வீறுகொண்டு விடுதலையுணர்வு பெற்று எழச்செய்த காந்திஜி தளராத உற்சாகத்தின் சின்னமாக இருந்தார். எதிலும் திருப்தியடையாமை, துக்கம், கோபம், வெறுப்பு, கௌரவம், அலட்சிய மனப்பான்மை, பொறாமை இவைகள் எல்லாம் சர்வசதா காலமும் வெளிப்படுத்துபவர்களை எந்த மனிதரும் நெருங்குவது இல்லை. திறந்த மனதுடன் பேசும் பேச்சு அடுத்தவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள். எல்லையில்லாத அறிவு சிறந்த ஆளுமையின் சிறப்பு அம்சம் ஆகும். நல்ல ஒரு கேட்பவராவதும், விசாலமான மனதுடையவராக இருப்பதும், அற்புதமான மனிதருடைய அடையாளம் ஆகும். மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்றால் நாம் மற்றவர்களை விரும்ப வேண்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் கண்கள், அருவிபோல மனம் திறந்த பேச்சு, மாறாத புன்னகை போன்றவையும் மகாத்மாக்களின் அடையாளங்கள் ஆகும். ஆக தன்னம்பிக்கை, லட்சியம், தளராத உற்சாகம், முடியும் என்ற நம்பிக்கை ஆகியவை பிரகாசிக்கும் தனிமனித ஆளுமை வெற்றியின் சின்னமாக ஆகிறது.

உன்னையறிந்தால்

ஒருவன், கிணறு ஒன்றைத் தோண்ட துவங்கினான். மாதக்கணக்கில் தோண்டியும், தண்ணீரைக் காணவில்லை.இருபது அடிகள் தோண்டியும் நீர் இருப்பதன் அறிகுறியையே காணாத போதிலும், அவன் முயற்சியைக் கைவிடவில்லை.

அந்த வழியாக சென்ற ஒரு வழிப்போக்கன், தோண்டுபவனைப் பார்த்து, “ஐயா, நான் பல நாள், நீங்கள் தோண்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அங்கு தண்ணீர் வரவில்லையே, வேறு இடத்தில் தோண்டிப் பார்க்கக் கூடாதா?”என்றான்.

அதற்கு அவன், “இல்லையில்லை. நான் என் முயற்சியைக் கைவிடமாட்டேன். இங்கு தண்ணீர் இருக்கும்” என்றான்.

சில நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் அந்த வழிப்போக்கன், அம்மனிதனைப் பார்த்து, கோபமாக, “அட, நீ என்ன முட்டாளா? இந்த இடத்தில் நிச்சயம் தண்ணீர் உனக்குகிடைக்காது. ஏன் தோண்டிக் கொண்டே இருக்கிறாய்?” என்றுகேட்க, அதற்கு அவன், “நான் முதலில் தோண்ட ஆரம்பித்தபோது, என் மனைவி எதிர்த்தாள். அவளை நான் பொருட்படுத்தவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு, என் உறவினர்கள் தடுக்கும் வகையில் அறிவுரைகள் கூறினார்கள். அவர்களையும் அலட்சியம் செய்தேன். அதன்பிறகு, கிராம மக்கள் என்னைத் தடுத்தனர். அவர்களையும் நான் பொருட்படுத்தவில்லை.

என் முயற்சிகள் எல்லாம் வீண் என்றும், எனக்கு தண்ணீர் கிடைக்காது என்றும், எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், நான் இதை நிறுத்தினால், மற்றவர்களின் விமர்சனத்தைக் கேட்க வேண்டியிருக்கும். நான் தோற்றவனாகிவிடுவேன். அதற்கு எனக்கு தைரியமில்லை. இப்போது நிறுத்தினால், என்னை அவர்கள் ‘முட்டாள்’ என்பார்கள்.

வாழ்க்கையில் என் முயற்சிகள் அனைத்தும் தண்ணீரைக் கண்டுபிடிக்கவே சரியாக இருக்கும். இதை நிறுத்தினால், என் வாழ்க்கையில் ஓர் அர்த்தமும் இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னைப் பற்றியே நான் கீழ்த்தரமாக நினைத்து விடுவேனோ எனப் பயமாக உள்ளது” என்றானாம்.

நாமும் பல சமயங்களில், இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டிருப்போம் அல்லவா?நமக்கு விருப்பமே இல்லாத ஒரு தொழிலில் நாமாகவே சிக்கியிருப்போம்.நம்மால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஏனென்றால், முதலில் மனைவி அதற்கு தடை விதித்திருக்கலாம்.

இப்போது கைவிட்டால், மனைவி கூறியது சரியாகிவிடும். கோபமான மனைவியை எதிர்கொள்வதை விட, விருப்பமில்லாத தொழிலைச் செய்வது மேலானது எனத் தோன்றும். பிடிக்காத உறவு முறையில் சிக்கிக்கொண்டு, வெளிவரவும் முடியாமல் இருக்கிறோம் என்றால், எதிர்காலத்தில் தனிமையை எதிர்கொள்ள பயம். ஏதேனும் ஓர் அபிப்ராயத்தையோ, கொள்கையையோ பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உள்ளார்ந்த உண்மை.

ஏனென்றால், அதை விட்டுவிட்டால், நாம் சின்னாபின்னமாகி விடுவோம் எனும் எண்ணம். கல்லூரியில் நமக்கு பிடிக்காவிட்டாலும், நம் மனம் வேறு ஏதோ துறையை நாடிய போதும் அதில் பிடிவாதமாக தொடர்கிறோம். காரணம் நம் தந்தையின் அறிவுரைக்கு மாறாக அதில் சேர்ந்திருப்பதுதான்.

பயம் தான் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப்படுத்துகின்றது. அது தொழில், செல்வம், ஆரோக்யம் அல்லது உறவுமுறைகள் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நமக்கு தெரிந்த, பழக்கமான, சுகங்களை இழக்க விருப்பம் இல்லை. மாற்றத்தைக் கண்டு பயப்படுகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பற்றி நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள பலவீனமான உருவகம் அல்லது நம் முகமூடி உடைந்துவிடுமோ என்ற பயம்.

நாம் நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவாறு நாம் இல்லை என்ற உண்மையை, எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பயம். இந்த பயம் நம் வளர்ச்சியைத் தடுக்கின்றது. முயற்சிக்கும், பிடிவாதத்திற்கும், அகங்காரத்திற்கும் வேறுபாடு தெரியாமல் செய்ய வைத்து தன்னம்பிக்கையை மட்டுமல்ல மனிதனுக்கு இயல்பாக இருக்கின்ற, இருக்க வேண்டிய நம்பிக்கையைக் கூட அழித்துவிடுகிறது.

இதை ஆழமாக ஆராய்ந்தால் தான் உண்மையைக் காண முடியும். புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கவோ, கற்கவோ வேண்டும் என்றால், நம்மை ஆட்கொண்டுள்ள பயத்திலிருந்து வெளிவர வேண்டும். பயத்தை விட்டுவிட வேண்டும் என்று காலம் காலமாக கூறி வருகின்றனர். அதற்காக ‘பாஸிட்டிவாக’ (Positive) எண்ணுவதற்கு முயற்சி செய்கிறோம்.

ஒவ்வொரு முறை நாம் ‘பாஸிட்டிவாக’ எண்ணுவதற்கு முயற்சி செய்கின்றபோதும், நமக்குள்ளிலிருந்து ஓர் ஆழமான குரல், “அதைச் செய்யாதே, அப்படி நடக்காது” என்றுகூறுகின்றது. அந்தக் குரல் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.அப்படியென்றால், மனிதன் தான் சிக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளிலிருந்து எப்படிவெளிவர முடியும்?

மாற்றங்களுக்கு ஏற்றவாறு அவன் எப்படி மாறமுடியும்? அதாவது,

‘பாஸிடிவ்’  எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பது மேலும், நிலைமையை மோசமாக்கும். ஒவ்வொருமுறைஒரு எதிர்மறை(நெகடிவ்) எண்ணத்திற்கு மாறாக, எதிராக, ‘பாஸிடிவ்’ எண்ணத்தை வளர்த்துக் கொள்ளும் போதும் நம் மனதோடு நாம் போராடுகிறோம். மனதுடன் அதிகமாக போராட, போராட அது மேலும் சக்தி பெறுகிறது.

கடல் அலையை எதிர்த்து செயல்படும்போது, பலமாக அடி விழுவதைப்போல ஆகிவிடும்.

இதற்கு ஒரே தீர்வு, “நாம் சிக்கிக் கொண்டோம்” என்றும், “அந்த பயம் தான் நம்மை கட்டுப்படுத்துகிறது” என்றும் உணர்ந்து, அதே உண்மையில், அப்படியே நிற்க வேண்டும். நம்மால், நம்மையே நேரடியாக பார்க்க முடியவில்லை என்றஉண்மையை, நம் முகமூடிகிழித்துவிடும் என்ற உண்மையை எதிர்கொள்ளவேண்டும்.

இதுவே மாற்றத்தின் முதற்படியும், கடைசிப்     படியுமாகும். இந்த உண்மையில் அப்படி உறைந்து போனால், மாற்றத்தில் கதவுகள் திறப்பதையும், வளர்ச்சி என்பது எளிதாக இருப்பதையும், தன்னம்பிக்கை வளர்வதையும் காண முடியும். இது பலமடங்காக நமக்கு சக்தியை அளிக்கும்.

“அதுவே  நிரந்தர வளர்ச்சியைக் கொடுக்கும்.”

உழைப்பை விதையாக்கு! உயர்வை உனதாக்கு!!

அனுபவங்களைப் பாடமாக கருதுபவர்கள் மட்டுமே வாழ்க்கைத் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பார்கள். அந்த அனுபவ பாடத்தின் மூலம் வெற்றியை எட்டி நிற்பவர்.

* ஒவ்வொரு முறையும் முதல்முறையாக விற்பனை செய்கிறோம் என்கிற மனநிலையோடு நல்ல உற்பத்தி விளைபொருட்களையே விவசாயிகளுக்கு கொடுத்து அவர்கள் மனதில் ‘நம்பிக்கைக்குரியவர்’ என்கிற பெயரைப் பெற்றிருப்பவர்.

* ஒரு முயற்சி எவ்வளவு கடினமானதாகவும் இருக்கலாம். ஆனால் கடினமானது என்றால் ‘இயலாதது’ எனப் பொருள் கொள்ளக்கூடாது. மேலும் முயற்சித்தோம் என்றால் ‘நிச்சயம்’ அம்முயற்சி நமக்கு வெற்றியை பெற்றுத்தரும் என பிறருக்கு உந்துசக்தியாக இருக்கக்கூடியவர்.

* புதிய புதிய தொழில்நுட்பங்களோடு பயணப்பட்டு விதையின் தரத்தை மேம்படுத்த உறுதியாக இருந்து செயல்பட்டு வருபவர் தான் ஈரோடு, தரணி அக்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனர் திரு. கே. தரணிதரன் அவர்கள். இனி அவரோடு நாம்…
விதை நிறுவனம் அமைக்கும் எண்ணம் தோன்றக் காரணம்?

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயத்தைச் சார்ந்த தொழிலையே மேற்கொள்ள வேண்டும் என விரும்பியதால் விவசாயம் சம்பந்தமான பாடப்பிரிவினை எடுத்து 1994ம் ஆண்டு முடித்தேன். முதலில் இத்தொழிலை மிகவும் குறுகிய இடத்தில் செய்ய ஆரம்பித்தேன்.எனது மனைவியும் விவசாய பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். மேலும் 10 ஆண்டுகள் விவசாய சம்பந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவமும் இருந்தது. இதுவே விதை நிறுவனம் தொடங்கக் காரணமாக அமைந்தது. மேலும் எனது உறவினர்கள் சிலர் சொந்தத் தொழில் செய்து உயர்ந்த நிலையில் இருந்தார்கள். நான் நடுத்தர வாழ்க்கையில் பேருந்து பயணம் என்றிருந்தபோது, வாழ்க்கையில் நாமும் அடுத்த படிக்கு செல்ல வேண்டும் என விரும்பி 2004ல் விதை நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். பிறகு 2010ல் நவீன யூனிட் தொடங்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.

விவசாயக் கல்வியைக் கற்றதால் இத்தொழில் எனக்கு ஏற்புடையதாகவே அமைந்தது. விதை சம்பந்தப்பட்ட விற்பனைத் துறையில் இருந்த 10 ஆண்டுகால அனுபவத்தால், தொழில் துறையிலும் நட்பு வட்டாரம் விரிந்திருந்தது. நான் தொழில் தொடங்க எண்ணியபோது, விதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மிகவும் குறைந்த அளவில் தான் இருந்தது. எனவே நிச்சயம் இதைத் தொடங்கலாம் என உறுதியுடன் முயற்சிகள் மேற்கொண்டேன்.

படிக்கும் பொழுதே தனியாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று தான் விவசாயத் துறையைத் தேர்வு செய்தீர்களா?

எனக்கு முதலில் கல்லூரியில் பேராசிரியராக வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது. அதற்காக சஉப தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்றேன். ஆனால் அக்காலகட்டத்தில் எனக்கு அந்தப் பணி கிடைக்கவில்லை. மாறாக, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வியாபார உத்திகள் அனுபவமாக கிடைத்ததால் சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் வலுப்பெற்றது.

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்ததற்கும், தற்பொழுது தங்களது நிறுவனத்தில் வேலை செய்வதற்கும் உள்ள வேறுபாடு எப்படி இருக்கிறது?

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்த போது மேலதிகாரிகளின் மேற்பார்வையிலே தான் வேலை செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இப்பொழுது, விற்பனை விரிவாக்கம் என்றாலும், நிறுவனத்தில் மேற்பார்வை என்றாலும் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. எடுக்கும் முடிவுகள் பணியாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எனவே முடிவெடுப்பதில் சுதந்திர உணர்வு இருந்தாலும், பொறுப்பும் கூடுதலாகவே இருக்கிறது.

இப்பொழுது விவசாயத்தில் இந்த விதைத் தொழிலின் பங்கு எவ்வாறு உள்ளது?

உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்களுடன் ஒப்பிடும்போது, என்ன தான் பருவ மழை பொய்த்தாலும் விதை பயன்பாட்டில் பெரிய அளவு குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் முதல் மற்றும் முதன்மையான இடுபொருள் விதையே.

விவசாயமக்களின்தேவைக்குஏற்பவிதைநிறுவனங்கள்செயல்படுவதுகுறித்து?

முதலில் விவசாயிகளின் மனநிலையைப் பொறுத்து தான் விதை நிறுவனங்களே செயல்படுகிறது. விவசாயிகள் எந்தக் காலத்தில் எதைப் பயிரிடுவார்கள் என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சில நேரத்தில் இருப்பு விதைகள் நல்ல விலைக்கும் போகலாம்; மிகவும் குறைவான விலைக்கும் போகலாம். இதை முன்கூட்டியே ஆய்வு செய்து திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினால் நல்ல இலாபம் பெறமுடியும். விற்பனை வியாபாரிகளை நாடி, தரமான, உற்பத்தி பொருட்களை அவர்களிடம் கொடுத்து முறையாக வியாபாரம் செய்தாலே நிறுவனத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்துவிடும்.

நிறுவனம்தொடங்கும்பொழுதுஏற்பட்டஇடர்பாடுகள்குறித்து?

எனது மகள் இரண்டாம் வகுப்பு படித்த பொழுது ஏழுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இடமாற்றம் பெற்றாள். அந்த அளவிற்கு என் பணியில் இடமாற்றம் அலைச்சல் அதிகம் இருந்தது. ஒரு கட்டத்தில் என் தாயிடமும், மனைவியிடமும் இந்த வேலை வேண்டாம் என்றும், புதிதாக தொழிலைத் தொடங்க போகிறேன் என்றும் கூறினேன். அவர்களும் எனது வேலைப்பளுவைப் பார்த்து ஆறுதலாகவே பேசி வந்தார்கள். இதைப்பற்றி எனது தந்தையிடம் தெரிவிக்கவில்லை. ஆறுமாதத்திற்குப் பிறகு அவர் தெரிந்துகொண்டு மிகவும் வருத்தமடைந்தார்.

ஆனால் வேலையை விட்டுவிட்டால் குடும்ப நிலை எப்படி இருக்கும் என்றும், ஆரம்பிக்கும் தொழில் நல்ல முறையில் அமையாவிட்டால் எப்படி இருக்கும் என்றும் மிகுந்த குழப்பம் அடைந்தேன். அச்சமயம் திரு. பாஸ்கரன் என்பவரைச் சந்தித்தேன். அவர் பாங்க் ஆஃப் பரோடாவில் வங்கி மேலாளராகப் பணியாற்றி வந்தார். அவர் தான் தொழில் தொடங்க ஒரு உந்துதலாக இருந்தார்.பிறகு தொழில் ஆரம்பித்து அதை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளில் நம்பிக்கையுடன் ஈடுபட்டேன்.

நிறுவனம்தொடங்கியபிறகு, வெற்றிஅடைவோம்என்றஎண்ணம்எப்பொழுதுஏற்பட்டது?

நான் தொழில் தொடங்கிய 2004ம் ஆண்டில் விதை நிறுவனங்கள் குறைவாகத்தான் இருந்தது. அப்பொழுது வியாபாரத் துறையில் இருந்த நுணுக்கங்களைப் பற்றியும் கற்றுக் கொண்டேன். எனது நண்பர் ஒருவருக்கு 100 டன் பொருளை உற்பத்தி செய்து வைத்து தொழிலில் ஒரு முன்னோட்டம் செய்யும் வாய்ப்பிற்காக காத்திருந்தேன். அப்போதைய வேளாண்மை துணை இயக்குனர் திரு. முத்துசாமி என்பவர் வியாபார உத்தியைச் சொல்லிக் கொடுத்ததோடல்லாமல், புதிய முகவர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். புதிய முகவர்களின் அறிமுகத்தால் உற்பத்தியில் நல்ல இலாபம் பெற்றேன். அப்பொழுதுதே வெற்றி வெகுதூரம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். பொதுவாக, சந்தையில் என்ன பொருள் நன்றாக போகும் என்பதைக் கருத்தில் கொண்டு முயற்சியை மேற்கொண்டு செயல்படத் தொடங்கினாலே வெற்றி அடையலாம்.

விவசாயமக்களிடம்நம்பகத்தன்மையைஎப்படிபெறமுடிந்தது?

ஒரு வருடத்திற்கு மூன்று பருவம், ஐந்து வருடத்திற்கு 15 பருவம். ஐந்து வருடங்களாவது, நல்ல முறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தினால் தான் நல்ல தயாரிப்பாளர்கள் என்று விவசாயிகள் நம்புவார்கள். எந்த ஒரு தொழிலும் பொறுமையுடன் உண்மையும் இருந்தால்

வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை தானாக வந்துவிடும்.

தமிழகம் தவிர பிறமாநிலங்களுக்கு முதலில் 100 கிலோ என்றஅளவில் மட்டுமே விதை விற்பனை செய்து வந்தேன். அங்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு பெற்ற பிறகு டன் கணக்கில் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய நிறுவனங்களின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்குத் தேவை தரம் வாய்ந்த விளைபொருள்கள்.

உங்களின்மேலாண்மைக்குபள்ளிக்கல்விஎந்தவகையில்துணைபுரிந்தது?

என்னுடைய சொந்த ஊர் ராஜபாளையம். அப்பா ராணுவத்தில் ஓய்வு பெற்றவர். அம்மா பள்ளி ஆசிரியர் என்று குடும்பப் பின்னணி இருந்த போதிலும் எங்களது அடிப்படைத் தொழில் விவசாயம் சார்ந்தது தான். நான் பயின்றது நல்லமநாயக்கன் பட்டி என்ற கிராமத்திலுள்ள அரசுப்பள்ளி. அப்பள்ளியில் தமிழாசிரியர் மிகவும் நன்றாக பாடம் நடத்துவார்.கண்டிப்பும் கொண்டவர். அவரைப் பார்த்தபொழுது எனக்கும் தமிழாசிரியராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பிறகு, எங்கள் ஊரில் திரு. விவேகானந்தர் வங்கியில் விவசாய அதிகாரியாக இருந்தார். அவரைப் பார்த்து தான் என்னை விவசாயக் கல்லூரியில் படிக்க அனுப்பினார் எனது தந்தை.

கிராமப்புறவிவசாயத்திலிருந்துகிடைக்கும்நன்மைகள்?

நான் வளர்ந்த பகுதி ‘வானம் பார்த்த பூமி’ என்பதால் விளைச்சலைப் பற்றிய அறிவு கிடைக்கப் பெற்றேன். சில நேரங்களில் விதைத்த அளவு கூட உற்பத்தியாய் வராத நிலையும் இருந்திருக்கிறது. ஆனால் விதைகளை எப்பொழுதும் இருப்புகளாக வைத்திருக்க வேண்டும். உற்பத்தி சரியாக இல்லை என்றாலும், மீண்டும் எப்படி விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்ற உத்திகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். விளைச்சலின் போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி என்பதைக் கண்கூடாக கண்டதினால் தான் ஏற்றத்தாழ்வுகளின் போதும், வேறு பிரச்சனைகளை அணுகும்போதும் சரியாக சமாளிக்கும் மனநிலையைப் பெற்றுள்ளேன்.

தொழிலில்என்றும்முன்னிலைபெறத்தேவையானதகுதிகள்பற்றி?

 விதை உற்பத்தி என்பது மிகவும் உன்னதமான தொழில். இத்தொழிலில் படிப்படியாகத் தான் முன்னேறமுடியும். ஐந்து ஆண்டுகள் பொறுமையாக, வருகின்ற ஏற்றத்தாழ்வுகளை முறையாக சமாளித்து, நல்ல உற்பத்தி விளைபொருள்களை விவசாயிகளுக்கு கொடுத்தால் தான் தொழில் தொடர்ந்து நிற்க முடியும்.

 சொந்த மாநிலத்திலிருந்து பிறமாநிலங்களுக்கு விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டிய முறைகள் குறித்து?

ஒரு நிறுவனத்திற்கு முதன்முறையில் ஒரு பொருளை விற்பனை செய்யும் அதே மனநிலையில் அந்த நிறுவனத்திற்கு மீண்டும் தொடர்ந்து அனுப்பும் பொழுதும் இருக்கும். ஒவ்வொரு முறையும் அதுவே முதல் ஆர்டர் என்ற நோக்கிலே தான் உற்பத்திகளை பெருக்கிக் கொண்டிருக்கிறேன். பொதுவாகவே, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு மதிப்புகள் அதிகம். எனவே அதையும் கருத்தில் கொண்டு உற்பத்தியின் தரத்தில் எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் தான் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறேன். இப்படி தரம் வாய்ந்த பொருள்களை கொடுப்பதால் தான் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். தொடர்ந்து ஆதரவும் கிடைக்கப் பெறும். எந்தப் பொருளானாலும் தரமானதாக இருந்தால் அதற்கு எப்பொழுதும் வரவேற்பு இருக்கும்.

 உங்களின்அடுத்தஇலக்கு?

 எதிர்கால இலக்கு என்றால், தொடர்ந்து கிடைக்கப்பெறும் ஆதரவுகளை அடுத்த உற்பத்தியில் முதலீடு செய்வது தான். தரத்தில் என்றும் குறைவைக்கக்கூடாது என்பதில் கவனமுடன் செயல்பட்டு வருகிறேன். தரம் நிரந்தரமாக அமைய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த மிகவும் கவனம் செலுத்தி வருவேன்.

உங்களதுவாழ்க்கைத்துணைபற்றி?

தொழிலில் கவனம் செலுத்த வந்துவிட்டால் எப்படியும் குடும்பத்தோடு செலவிடும் நேரம் குறைவாகத் தான் இருக்கும். தொழில் தொடங்கிய காலத்தில் நேரம் முழுவதும் பயணிக்கத் தான் சரியாக இருந்தது. காரணம், தொழிலை கவனிப்பது, விற்பனையைப் பார்ப்பது, விளைநிலத்திற்குச் செல்வது என்று எல்லாவற்றையும் நேரடி பார்வையாக செய்ய வேண்டியிருந்தது. இப்படி நாள்தோறும் பயணம் மேற்கொண்டாலும் இன்று வரை விற்பனைப் பகுதியை நான் தான் கவனித்து வருகிறேன்

பணிச்சுமையின் பொழுது குடும்பத்தை கவனிக்க முடியாத சூழ்நிலைகளில் அவர் தான் முழுவதுமாக எனது பொறுப்புகளையும் சேர்த்து குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார். எனக்கும் என்றும் ஆதரவாகவே இருந்துவந்தார். எப்பொழுதும் ஊக்கம் அளித்து என்னை சுறுசுறுப்புடன் பணிபுரியச் செய்தவர் அவர்.

குடும்பப்பின்னணி…

அம்மா திருமதி.சீனியம்மாள், பள்ளி ஆசிரியை. மேலும் அவரின் நிதி மேலாண்மையே பின்னாளில் எனக்கும் பழக்கமானது. தந்தையார் திரு. கிருஷ்ணசாமி நாயக்கர். மிகவும் சுதந்திரத்துடன் கூடிய புரிதலைப் பழக்கினார். எனது தங்கையும், அவரின் கணவரும் சாத்தூரில் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். மனைவி திருமகள்ஜோதி, வேளாண்மை அலுவலர். எனக்கு அமிர்தவர்ஷினி, அவந்திகாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள்.

நண்பர்கள்உதவிகுறித்து…

படித்த துறையிலே தொழில் செய்வதால், தொழில் துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இன்று வரையிலும் அவர்களுடனான நட்பு நல்ல நிலையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது; என்றும் தொடரும்

தொழில்தொடங்கத்தேவையானபண்புகள்?

எந்த ஒரு தொழிலைச் செய்வதாக இருந்தாலும் எளிதாக இருக்க வேண்டும், விரைவில் முன்னேறவேண்டும் என்று தொடங்குதல் கூடாது.எவ்வளவு தோல்விகள் வந்தாலும் அவைகளை நன்றாக சமாளிக்கும் திறன்களையும், எதிர்கொள்ளும் மனநிலையையும் பெற்றிருத்தல் வேண்டும். பிரச்சனைகளை சமாளிக்கும் அனுபவங்கள் தான் சிறந்த தொழில் நிறுவனர்களை உருவாக்கும். நேர்மையான உழைப்பு, தரமான உற்பத்திப் பொருள், உழைக்கும் திறன் இருந்தாலே தொழிலில் வெற்றி அடைவது உறுதி.

படித்ததில்பிடித்தது…

எனக்கு சிறுவயதிலிருந்தே தமிழ் மீது அதிக ஆர்வம் இருந்து வருகிறது. பொது அறிவு சார்ந்த புத்தகங்களை நான் படிப்பதோடு மட்டுமல்லாமல் எனது குழந்தைகளையும் படிக்க ஊக்குவிப்பேன். நமது வளரும் தலைமுறைகள் பாடப்புத்தகத்தோடு நில்லாமல், அன்றாட நாட்டு நடப்புகளையும் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.

என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்கள் திருக்குறளும், பாரதியார் எழுதிய புத்தகங்களும் தான். திருக்குறளில் என்றும் என் நினைவில் நிற்பது,

வெள்ளத் தனைய மலர்நீட்டர் மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு

 என்ற குறள். உழைப்பிற்கு ஏற்றவாறு உயர்வு கிடைக்கப்பெறும் என்பது உண்மை. வயதிற்கு ஏற்றாற்போல் மனநிலையை மாற்றிக் கொண்டாலே வாழ்வின் வெற்றியை பெறலாம்.

உங்கள்பயணம்என்பது…

 “கடக்க வேண்டிய தூரத்தை நோக்கி

என் பயணம் சென்று கொண்டே இருக்கும்”

 பாடுபடாமலேயேவெற்றிக்குஆசைப்படுவதுஎன்பது…

 விதைக்காமலே விளைச்சலுக்கு ஆசைப்படுவதைப் போன்றது தான்.

இலக்குஎன்பதுஎப்படிப்பட்டதாகஇருக்கவேண்டும்?

குறுகிய தூர இலக்குகளில் குறிவைத்து தோல்வி அடையும் விரக்தியைத் தவிர்ப்பதற்காக, தொலைதூர இலக்குகளில் குறிவைக்க வேண்டும் என்பார் நோபிள். அவர் கருத்தையே பதிலாக்குகிறேன்.

உங்கள்பார்வையில்துணிச்சல்…

ஆழம் தெரியாமல் காலைவிடுவது துணிச்சல் அல்ல…அளந்தறிந்து அதைக் கடப்பது தான் துணிச்சல்.

வெற்றி யாருக்கு எளிதாகும்…

கொழுந்து விட்டெறியும் நம்பிக்கை
பேரன்பு
தூய்மை
இம்மூன்றுடன் விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருப்பவர்களுக்கு வெற்றி எளிதாகும்.

தன்னம்பிக்கை…

ஒவ்வொருவரையும் ஆட்கொண்டு வழிநடத்திச் செல்வது.

வெற்றி மனிதனின் அடையாளம்

ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமான தனிப்பட்ட திறன்களும், செயல்பாடுகளும் கொண்ட ஆளுமைகளின் அடையாளம் ஆவர். அதனால் தனி மனிதத்திறன் என்பது மிகவும் வேறுபட்ட ஆற்றல்களும், அறிவுத் திறன்களும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும். தனி மனிதனை உருவாக்கும் பண்புகளைப் பற்றியோ, அவ்வாறு ஒவ்வொரு மனிதனை உருவாக்குவதில் குடும்பங்களின் பங்கு பற்றியோ அல்லது தனி மனிதனை அடையாளப்படுத்துவதாகக் கணக்கிடப்படும் தனி மனிதனுடைய உடல் அழகைப் பற்றியோ இல்லை இங்கு கூறப்போவது.

சக்தியுடைய தனி மனிதர்களை வார்த்தெடுக்கும் சில பண்புகள் இருக்கின்றன. தன்னம்பிக்கை, குறிக்கோள், ஒருமுகத்தன்மை, சிதறாத கவனம், முடியும் என்கிற உள்ளுணர்வு (Will Power), தளராத உற்சாகம் போன்றவை எல்லாம் தனி மனிதனுடைய ஆற்றலை வெளிப்படுத்தும் வெற்றி மனிதனின் அடையாளங்கள் ஆகும். மிகச்சிறந்த தனி மனிதனை வெளிப்படுத்துவது அவனுக்குள் இருந்து ஒளிவிடும் தன்னம்பிக்கையால் அவன் மற்றவர்களோடு பழகும்விதமே. மேற்கொண்ட செயலை செய்து முடிக்க தன்னால் முடியும், அதற்கான காரியங்களைச் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்து முடிக்கக்கூடிய திறமை தனக்கு உண்டு, செயல்படும் போது இடையிடையே குறுக்கிடும் வெற்றி தோல்விகளை சமமாகக் கருதும் மனம் தனக்கு இருக்கின்றது என்கிற மனப்பான்மை உள்ளவனுக்கு இருப்பதுதான் இந்த அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் அடையாளம்.

ஆனால் அதே நேரத்தில் அளவுக்கதிகமாக தன்னைத்தானே நம்பிக்கொள்வதும் சில சமயங்களில் ஆபத்தில் முடியும். பல தடவை தோற்று ஓடிய குரூஸ் அரசனுக்கு கடைசியாக வெற்றி பெற முடிந்ததும், வாய் பேச முடியாத, விழித்திறனை இழந்த, காது கேட்காத ஹெலன் கெல்லர் கல்வித்துறையிலும், புத்தகங்கள் எழுதுவதிலும் புகழ் பெற்றதும், செவித்திறன் இல்லாத பீட் ஓவன் சங்கீதத்தில் பிரசித்தி பெற்றதும் உறுதியான தன்னம்பிக்கையால் தான்.

தனிமனித ஆளுமையை அடையாளப்படுத்தும் இன்னொரு குணம்தான் லட்சியம். குறிக்கோள். தீர்க்கமான குறிக்கோள் ஒன்றை கொண்டிருப்பதும், அதை உறுதியாக பசு மரத்தில் பதிந்த ஆணிபோல பதித்துக் கொள்வதும், வெற்றி ஆளுமையின் பாகம் ஆகும். படிக்க வேண்டும், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகளை வளர்க்க வேண்டும், வீட்டையும் காரையும் வாங்க வேண்டும். இதற்கு மேல் லட்சியம் என்று எதுவும் இன்று பெரும்பாலோருக்கு கிடையாது.

வேலை கிடைப்பதைக் காட்டிலும் மாற்று லட்சியம் இல்லாதவர்கள் கிடைத்த வேலையை உந்தித்தள்ளியும், விரட்டியடித்தும் மாதங்களையும், வருடங்களையும் கடத்துகிறார்கள். லட்சியத்துக்கு உரிய படிக்கட்டாக வேலையை கருதும்போது வேலையில் நிறைவு பெற முடியும்.

உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் அவரை போற்றுவார்கள். எங்கே போக வேண்டும் என்று உறுதியான திட்டம் இருக்கும்போது நம் திறமைகள் எல்லாவற்றையும் அதை நோக்கிமற்றவர்கள் நடந்து நடந்து போட்ட பாதையில் இல்லை நாம் பயணிக்க வேண்டியது. நமக்கு என்று சொந்தமாக ஒரு பாதையை நாமே போட்டுக் கொண்டு அதில் நடக்க வேண்டும். உறுதியான குறிக்கோள் என்ற ஒன்று இருந்தால்தான் மூளையும் செயல்திறன் கொண்டதாக மாறுகிறது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

லட்சியத்துக்குரிய பயணத்தில் நம் கால்கள் பல வழிகளிலும் சென்றால் நம் ஒருமுகமான கவனத்தை நாம் இழந்துவிடுவோம். துரோணாச்சாரியார் அம்பை எய்யச் சொன்னபோது, அர்ஜூனன் தன் இலக்கை மட்டுமே குறி பார்த்து அம்பை எய்தான். அவரவர்களுடைய திறமைக்கு ஏற்றவாறு நேரத்தை நிர்வாகம் செய்து லட்சியத்தை நோக்கிப் பயணப்படுவதே சிறந்தது ஆகும்.

வாழ்க்கையில் சந்திக்கும் தோல்விகளில் சிக்கி அகப்பட்டுப் போகாமல் மனதுடைய ஆற்றலை வலிமையாக்கி, ஒரு அடி பின்னால் செல்லும்போது இரண்டு அடி முன்னோக்கி நடக்க மனதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும. மனதின் ஆற்றல் ஆளுமையை வலிமையுடையதாக்கும். சோம்பேறிக்கு எந்தத் திறமையும் கைவராது என்பது நிதர்சனமான உண்மையாகும். சோம்பேறிக்கு கல்வி மட்டும் இல்லை எந்த ஒரு முன்னேற்றமும் வாழ்க்கையில் ஏற்படாது.

தளராத உற்சாகம் இருந்தால் எல்லாவற்றையும் கைப்பற்றலாம். உற்சாகம் உள்ளவர்கள் அதை தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் இனிமையான பூவின் நறுமணத்தைப்போல பரவச் செய்துவிடுகிறார்கள். அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியரை வீறுகொண்டு விடுதலையுணர்வு பெற்று எழச்செய்த காந்திஜி தளராத உற்சாகத்தின் சின்னமாக இருந்தார். எதிலும் திருப்தியடையாமை, துக்கம், கோபம், வெறுப்பு, கௌரவம், அலட்சிய மனப்பான்மை, பொறாமை இவைகள் எல்லாம் சர்வசதா காலமும் வெளிப்படுத்துபவர்களை எந்த மனிதரும் நெருங்குவது இல்லை. திறந்த மனதுடன் பேசும் பேச்சு அடுத்தவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள். எல்லையில்லாத அறிவு சிறந்த ஆளுமையின் சிறப்பு அம்சம் ஆகும். நல்ல ஒரு கேட்பவராவதும், விசாலமான மனதுடையவராக இருப்பதும், அற்புதமான மனிதருடைய அடையாளம் ஆகும். மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்றால் நாம் மற்றவர்களை விரும்ப வேண்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் கண்கள், அருவிபோல மனம் திறந்த பேச்சு, மாறாத புன்னகை போன்றவையும் மகாத்மாக்களின் அடையாளங்கள் ஆகும். ஆக தன்னம்பிக்கை, லட்சியம், தளராத உற்சாகம், முடியும் என்ற நம்பிக்கை ஆகியவை பிரகாசிக்கும் தனிமனித ஆளுமை வெற்றியின் சின்னமாக ஆகிறது.

வெற்றி உங்கள் கையில்

வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்

“வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” என்னும் எண்ணம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது.

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு “இவரின் உதவி வேண்டும். அவரிடம் சிபாரிசு பெற வேண்டும்” என்று நினைத்து, பிறரை மட்டுமே சார்ந்து வாழ்ந்து, வெற்றிக்காக காத்திருப்பவர்களும் உண்டு.

“எனக்கு நல்ல பெற்றோர் அமைந்திருந்தால், நான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பேன்”

“எனக்கு சிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தியிருந்தால், என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்”.

“புகழ்பெற்ற பள்ளியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்திருந்தால், எனக்கு சிறந்த வேலை கிடைத்திருக்கும்”.

“தரமான புத்தகங்கள் வைத்து படித்திருந்தால், நான் பல்கலைக்கழகத்தில் முதல் “ரேங்க்” எடுத்திருப்பேன்”.

“எங்கள் குடும்பத்தில் வறுமை இல்லாத நிலை அன்று இருந்திருந்தால், இன்று பெரும் கோடீஸ்வரனாக மாறியிருப்பேன்”.

என தங்களின் வாழ்க்கையை ‘மறு ஆய்வு’ செய்து, தாங்கள் தவறவிட்ட வாய்ப்புகளையும், இழந்த சூழல்களையும் எண்ணி பெருமூச்சு விடுபவர்களும் உண்டு.

“வாழ்க்கையின் வெற்றி” என்பது வெளியில் இருந்து பிறர் தரும் ஆதரவினாலும் சாதகமான சூழலினாலும் மட்டுமே நிகழ்கிறது” என்னும் கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.

உண்மையான ‘வெற்றி’ என்பது என்ன?

“As a man thinketh” என்பது புகழ்பெற்ற எழுத்தாளரான “ஜேம்ஸ் ஆலன்” எழுதிய நூலாகும். இந்த அற்புதமான நூலை “மனம் போல் வாழ்வு” என்னும் தலைப்பில் கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அந்த நூலில் “மனிதனது நினைப்புக்குத் தக்கவாறு அவனுடைய வாழ்வு அமைகிறது. மனிதன் எவ்வாறு நினைக்கிறானோ அவ்வாறே அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும், நிலைமையும் அமைகின்றன. பூமியில் மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் வித்திலிருந்து மரம் உண்டாகிறது. அதுபோல மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் நினைப்பிலிருந்து அவனது ஒவ்வொரு செயலும் உண்டாகிறது” எனக் குறிப்பிடுகிறார்.

மனித மனத்திற்கும் வெற்றிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மனத்தில் உருவாகின்ற எண்ணங்கள் தான் மனிதனின் செயலை நெறிப்படுத்துவதால் அந்த எண்ணத்தை உருவாக்கும் காரணிகளைப்பற்றி தௌல்வாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 

மனதில் எண்ணங்களை உருவாக்கும் காரணிகளை 2 வகையாகப் பிரிக்கலாம். அவை

1. புறக் காரணிகள் (External Factors)

2. அகக்காரணிகள் (Internal Factors)

ஆகும்.

“புறக் காரணிகள்”  (External Factors) என்பது மனிதனின் வெளி உலகில் தோன்றும் காரணிகள் ஆகும். சரியான நட்பு, தரமான தகவல் தொடர்பு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுதல், இணைந்து பழகும் தன்மை, பொறுமை, அன்பை வெளிப்படுத்தும் தன்மை – போன்ற பல புற காரணிகள் (External Factors) ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இதைப்போலவே, உறவினர்கள், சகோதர – சகோதரிகள், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்ற உறவுகளும் ஒருவரின் வெற்றிக்கு பெருமளவில் துணை நின்கின்றன. பள்ளி – கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடன்பயிலும் மாணவ-மாணவிகள், நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள் என பலவிதமான புறக் காரணிகளும் ஒருவரது வெற்றிக்கு துணை நிற்கின்றன.

“அகக் காரணிகள்”  (Internal Factors) என்பது ஒருவரின் மனதில் உள்ள காரணிகள் ஆகும். இந்தக் காரணிகள் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, குறிக்கோள்கள் (Goals)> தன்னம்பிக்கை (Self Confidence)> புத்தாக்க சிந்தனை (Creativity)> முடிவெடுக்கும் திறன் (Decision Making Skill)> தலைமைப்பண்புகள் (Leadership Qualities)> தன் மதிப்பு (Self Esteem) போன்ற பல காரணிகளும் ஒருவரின் வெற்றிக்கு பெருமளவில் உதவுகின்றன.

‘வெற்றி’ என்பது ஒரே நாளில் கட்டி முடிக்கப்படும் கட்டிடம் அல்ல. அது நாள்தோறும் நல்ல செயல்களால் உருவாக்கப்படும்  ‘மாளிகை’ ஆகும். ஒருவர் செய்யும் செயல்களின் அடிப்படையில்தான் ஒருவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

மனித வாழ்க்கையில் பிறப்புமுதல் இறப்புவரை உள்ள காலத்தை 6 நிலைகளாக பிரித்துக் கொள்வார்கள். கருவறைப் பருவம் (Prenatal Stage)> குழந்தைப் பருவம் (Infancy Stage)> சிறுபிள்ளைப் பருவம் (Childhood Stage)> ‘டீன் ஏஜ்’ எனப்படும் குமாரப்பருவம் (Adolescence Stage)> முதிர்நிலைப் பருவம் (Adult Stage) மற்றும் முதுமைப் பருவம் (Old Stage) என்னும் இந்த நிலைகள் ஒவ்வொன்றிலும் ஒருவரின் வெற்றி அமைந்துள்ளது. எனவே வாழ்வில் எல்லா நிலைகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

“எண்ணங்களையெல்லாம்  நல்ல செயலாக்கும் ஆற்றல்தான் வெற்றியாக வளர்ச்சி பெறுகிறது” என்பது ‘வால்டேர்’ என்பவரின் கருத்து ஆகும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் எண்ணங்களை செம்மைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது வெற்றிக்கான வழியாகும்.

ஒவ்வொரு ‘வெற்றி’யும் வித்தியாசமானவை ஆகும். இதனால் வெற்றியின் தன்மைக்கு ஏற்ப, அந்த வெற்றியை அடையும் காலமும் மாறுபடுகிறது.

வெற்றியை குறுக்கு வழிகளில் பெறுவதற்கு சிலர் முயற்சி செய்வதுண்டு.

புகழ்பெற்ற ‘ஜென்’ கதை ஒன்று வெற்றியைப்பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது.

சீனாவிலுள்ள ஒரு மன்னன் உலகத்தின் வரலாறு முழுவதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினான். “உலக வரலாறு  அனைத்தையும் தெரிந்து கொண்டால் ஞானியாகிவிடலாம்” என்றும் நினைத்தான்.

அவனது அமைச்சரவையிலிருந்து அறிஞர்களையும், புலவர்களையும் அழைத்தான். உலக வரலாற்றை எழுதித் தரும்படி கட்டளையிட்டான்.

சில ஆண்டுகள் கழிந்தன.

ஆயிரக்கணக்கான பக்கங்களில் உலக வரலாற்றை எழுதிக்கொண்டு பல அறிஞர்களும், புலவர்களும் வந்தார்கள். நூற்றுக்கணக்கான குதிரை வண்டிகளில் விரிவாக எழுதப்பட்ட உலக வரலாற்றுச் சுவடிகள் கொண்டுவரப்பட்டன.

அரண்மனை மண்டபம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு வரலாற்றுச் சுவடிகள் குவிந்தன.

மன்னன் அதிர்ச்சியடைந்தான்.

“உலக   வரலாறு இவ்வளவு  பெரியதா? இவற்றை என்னால் படித்து முடிக்க முடியாது. மிகவும் சுருக்கமாக எழுதித்தாருங்கள்” என்றான் மன்னன்.

“உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளை சுருக்கமுடியாது. அதிகமாக சுருக்கினால் உண்மைகளைத் தெரியமுடியாது” என அறிஞர்கள் சொன்னார்கள்.

“எப்படியாவது  நீங்கள் சுருக்கித் தாருங்கள்” என விடாப்பிடியாக விரட்டினான்.

பயந்துபோன அறிஞர்களும், புலவர்களும் ஒரு ஜென் குருவை சந்தித்து ஆலோசனை கேட்டார்கள். ஜென் குரு மன்னனை சந்திக்க நேரில் வந்தார்.

“உலக வரலாற்றை  மிகவும் சுருக்கமாக நான் எழுதித்தருகிறேன்” என்று ஜென் குரு கூறினார்.

மறுநாள், மன்னனை சந்தித்த ஜென் குரு ஒரு ஓலையை அவனிடம் நீட்டினார். அந்த ஓலையில்“உலகில்மனிதர்கள்பிறந்தார்கள். வாழ்ந்தார்கள். இறந்துபோனார்கள்” என எழுதப்பட்டிருந்தது.

மன்னன் ஆச்சரியமாகப் பார்த்தான். “உலக வரலாற்றை  மிகவும் சுருக்கமாக இப்படித்தான் எழுத முடியும்” என்று சொன்னார் ஜென் குரு.

மன்னனுக்கு உண்மை புரிந்தது.

“எந்த வெற்றியைப்  பெறுவதற்கும் முறையான வழிமுறையும், தேவையான கால அவகாசமும் தேவை” என்பதை மன்னன் புரிந்து கொண்டான்.

குறுக்கு வழியில் கிடைக்கும் ‘வெற்றி’ நிரந்தரமானதல்ல என்பதையும், தெளிவானது அல்ல என்பதையும் புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெறலாம்.