Monday, September 22, 2014

மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்!!!

மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்!!!

எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள். மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம்.

 இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவருவது எப்படி என்பது குறித்த சில முக்கியமான குறிப்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோம். நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களோ மனச்சோர்வில் இருந்தால், இவற்றை படிக்குமாறு கூறி, வாழ்வை இனிமையாக்குங்கள்.

(1)உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை நீக்க சிறந்த வழி உடற்பயிற்சி.

இது நல்ல உடல் அமைப்பை கொடுப்பது மட்டுமின்றி, நேரிடையான சிந்தனைகளையும் அதிகரிக்கின்றது. உணர்வுகளை சீர்படுத்துகின்ற செரோடொனின் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஆகியவற்றை சுரக்க உடற்பயிற்சி உதவுகின்றது. அதோடு மனச்சோர்வு அளிக்கும் சிந்தனைகளையும் ஒதுக்கிவிடுகின்றது.

(2)உதவி கேட்பது:

 வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கையாள உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை. வாழ்க்கையின் சுமைகளை தனியாக சுமக்க வேண்டும் என்று யாரும் எதிர்பாப்பது இல்லை. ஆகவே தாய், தந்தை, துணைவர், உடன் பணியாளர் அல்லது நண்பர் இடம் இருந்து உதவி கேட்பது உணர்வுச் சுமையை ஓரளவு குறைக்கும்.

(3)சுய விழிப்புணர்வு:

 வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாமல், தங்களை அளவுக்கு மீறி அழுத்துவதால் மக்கள் பொதுவாக மனச்சோர்வு அடைகிறோம். எனவே சரியாக தம்மை புரிந்து கொண்டு, அதை சந்தோஷமாக விரும்பி செய்தால், மனச்சோர்வானது நீங்கும்.

(4)எடை குறைத்தல்:

 மனச்சோர்வுக்கு அதிகமான எடை பிரச்சனையாக இருந்தால், எடையை குறைக்க முயல்வது ஒரு நல்ல தீர்வைத் தரும். மேலும், உடல் வலிமை ஆரோக்கியத்தையும், சுய கருத்துக்கும் நேர்மறையான சிந்தனையை கூட்டுகின்றது.

(5)நண்பர்கள்:

 நல்ல நண்பர்கள் தேவையான ஆறுதலையும், வாழ்க்கையின் சோர்வூட்டும் சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும், தேவையுள்ள நேரத்தில், சொல்வதை காதுகொடுத்து கேட்கும் நண்பர் இருந்தால், மனதில் இருக்கும் சந்தேகங்களும், எதிர்மறையான சிந்தனைகளும் முற்றிலும் களைந்துவிடும்,.

(6)எதிர்மறையான மக்களிடம் இருந்து விலகி இருப்பது:

 தொடர்ச்சியாக பிறரை குறைத்து பேசுகிறவர்களோடு இருக்க யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து விலகி இருப்பது மன அமைதியையும், சமாதானத்தையும் கொடுக்கும்.

(7)தனிமையாக இருப்பதை தவிர்ப்பது:

 மனச்சோர்வோடு இருக்கும் போது, தனிமையில் இருந்தால், மனம் மேலும் சோர்வுடன் தான் இருக்குமே தவிர, அமைதியடையாது. அதற்காக எப்போதுமே கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால், அவை முழுமையான தீர்வை கொடுக்காவிட்டாலும், மனச்சோர்வு தரும் சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும்.

(8)நேர்மறையான எண்ணங்கள்:

 வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பதே மனச்சோர்வு கொடுக்கும் சிந்தனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. மனதிலே எதிர்மறை உணர்வுகள் இருக்கின்றன. சிந்தனைகளை நேர்மறையான திசையில் செலுத்துவதன் மூலமாக, மனச்சோர்வின் தாக்கங்களை அகற்றிவிடலாம்.

(9)இசையை கேட்பது:

 மனச்சோர்வில் இருக்கும் போது, உணர்வை எழுப்பும் இசையை கேட்பது சோர்வடைந்த மனதிற்கு ஊக்கம் அளிக்கும். உணர்வுகளை மாற்றவும், ஆன்மாவை உயர்த்தவும், உணர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் ஆற்றல் இசைக்கு இருக்கின்றது. எனினும், மிகவும் உணர்வுபூர்வமான பாடல்களை கேட்பதால், எதிர்மறையான விளைவு ஏற்படும் என்பதால், அவற்றை தடுக்க வேண்டும்.

(10)நிகழ்காலத்தில் வாழ வேண்டும்:

இறந்தகால தவறுகளிலும், எதிர்காலத்தின் நிலையின்மையிலும் உழல்வதில் அர்த்தமே இல்லை. அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், அச்சூழ்நிலையில் உங்கள் உணர்வுகளை செலுத்துவது பலன் அளிக்காது. 'எப்போது',‘எங்கே' மற்றும் ‘நாளை' என்பனவற்றுக்கு பதிலாக, 'இப்போது', ‘இங்கே',‘இன்று' என்பனவற்றில் கவனம் செலுத்துங்கள்.

Thursday, September 11, 2014

ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம் - திருமண் இடுவது எப்படி?

ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம் - திருமண் இடுவது எப்படி?

ஆனால் அதற்கு என்று ஒரு முறை இருக்கிறது . அந்த நெறிமுறையோடு இட்டுக்கொள்ளவேண்டும். திருமண் காப்பிடுவதற்குவிரல்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் .கவனிக்கவும் வேறு பொருள்களை பயன்படுத்தகூடாது. விரல்களிலும் கூட நடு விரலையும் நாகத்தையும் பயன் படுத்தக்கூடாது.

ஒவ்வொரு விரலையும் ஒவ்வொரு பயன் கருதி உபயோகிக்க வேண்டும் என்பது பழைய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. திருமண் காப்பு இடும் போது, புத்திரப்பேரு விரும்பிகிறவர்கள் மோதிர விரலைப் பயன்படுத்தி இட்டு கொள்ள வேண்டும் .

மோட்சத்தை விரும்பிகிறவர்கள் ஆட்காட்டி விரலாலும், ஆயுளை விரும்பிகிறவர்கள் சுட்டு விரலாலும், பொருளை விரும்பிகிறவர்கள் கட்டை விரலாலும் இட்டு கொள்ள வேண்டும்.

நடுவிரலினாலும் இடக்கையினாலும் திருமண் இட்டுகொள்ளக்கூடாது .

பிறரைக் கொண்டும் திருமண் தரித்துக்கொள்ளுவது கூடாது என்று கூறப்படுகிறது . ஆனால் வயதானவர்கள், கண் பார்வை குறையுடையவர்கள் இதற்கு விதிவிலக்கு .

தற்காலத்தில் நாம் குச்சி, வெள்ளிக்கம்பி ப்போன்றவற்றை உபயோகித்து திருமண் காப்பைத் தரிக்கிறோம் . இவ்வாறு செய்வது ஆசாரகுறைவு என்பதோடு அங்கீகாரம் செய்யப்படாததும் ஆகும். பலர் துடைப்பக் குச்சியாலும், நூற்றுக்குத் தொண்ணூறு பேர் எறிந்து மிச்சமிருக்கும் ஊதுபத்தியின் அடிப்பகுதிக் குச்சியலும் திருமண் இட்டு கொள்வதை வழக்காமாக்கிக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் தினமும் திருமன் அணியாமல் என்றோ ஒருநாள் இத்டுக்கொள்வது தான் . தினமும் இட்டுக்கொள்ளும் பழக்கம் இருந்தால் அதற்கு தேவையான திருமன்பெட்டி ,திருமண் எனப்படும் நாமக்கட்டி, ஸ்ரீசூரணம் ஆகியவற்றை வாங்கி வைத்திருப்போம் அல்லவா ?

திருமண் காப்பு நன்றாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்க வேண்டும் என்பது விதி. எனவே விரலால் சரியாக அழகாக இட முடியவில்லை என்றாள் முதலில் விரலால் எழுதி ,பிறகு வெள்ளிக் குச்சியால் கோணல் இல்லாமல் சரி செய்துகொள்ளவேண்டும்.

எனவே குச்சியாலும் மற்ற பொருள்களாலும் திருமண் காப்பு தரிக்கப்பாடும் அநாசாரமான வழக்கம் ஒழிக்கப்பாட வேண்டும். தினமும் திருமன் இட்டுக்கொண்டு அலுவலகம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் . இதனால் தவறேதும் இல்லை. நான் வைஷ்ணவன் என்று சொல்லிக் கொள்வதில் ஒவ்வொரு மனிதனும் பெருமை கொள்ளலாம் . அந்த அளவிற்கு மனிதநேயத்தோடு நடந்துகொள்வதை வைஷ்ணவம் மிக எளிமையாகச் சொல்லித்தருகிறது. வைஷ்ணவம் என்றாலே சாந்தமானவன், நம்பகமானவன், தூய்மையானவன் என்ற எண்ணம் மற்றவர்களின் மனதில் ஏற்படும்படி திருமண் நமக்கு ஒரு யோகியதையை அளிக்கிறது .

திருமண் காப்பு தரிப்பதையும் அழகாக அளவோடு தரிக்க வேண்டும்,. நெற்றி,கழுத்தின் மூன்று புறம் , பிடரி, மற்றும் முதுகு ஆகிய இடங்களில் நான்கு அங்குல நீளமுடைய திரும்ன்நைதரிக்க வேண்டும் . வயிற்றில் இடுகின்ற திருமண் பத்து அங்குல நீளமுடையதாக இருக்க வேண்டும் . மார்பிலும் இரண்டு தோள்களிலும் தரிக்கும் காப்பு எட்டு அங்குல
நீளம் உடையதாக இருத்தல் வேண்டும்.
அடுத்ததாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது திருமண்காப்பின் நடுவில் இடம்பெறும் ஸ்ரீசூரணத்தை பற்றித்தான். இது மஹாலக்ஷ்மியின் சொருபமானது .ஸ்ரீசூரானத்தில் வருகின்ற ஸ்ரீ என்ற பதம் மஞ்சளையும் மஹாலக்ஷ்மியையும் குறிப்பதாகும். சூரணம் என்பது பொடி என்பது பொருள்.

சித்த வைத்தியத்தில் இந்தப் பெயரை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.

ஸ்ரீசூரணம் பொதுவாக சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். செம்பட்டு உடுத்திய மஹாலக்ஷ்மியைக் குறிப்பது சிவப்பு நிறம். ஸ்ரீசூரணம் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. தங்கத்தை மிக மெல்லிய கம்பியாக அடித்தால் அது சற்று சிவப்பு நிறத்தில் இருப்பதை பார்க்கலாம்.

எனவே பொண்மகளான மஹாலக்ஷ்மியின் அம்சமாக இடப்படும் ஸ்ரீசூரணம் சிவப்பு நிறத்தில் இருப்பதே உசிதமானது என்பது பெரியோர் கொள்கை . வைதீக காரியங்களில் ஈடுபடுகிறவர்களும், வேதம் ஓதம் பிரஹ்மச்சாரிகளும் மஞ்சள் ஸ்ரீசூரணத்தை இட்டு கொள்வது உண்டு.

ஸ்ரீசூரணத்தை இட்டுக்கொள்வதில் கூட சில நெறிமுரைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆண்கள் மட்டும் அல்லாமல், சுமங்கலிப்பெண்கள், கன்னிப் பெண்கள், கைம்பெண்கள் ஆகியோரும் நெற்றியில் ஸ்ரீசூரணத்தை தரித்துக்கொள்ள வேண்டும். ஆண்கள் புருவத்தின் நடுப்பகுதி முதலாக, நெற்றியில் கேசப்பகுதி வரையில் இட்டுக்கொள்ளவேண்டும். சுமங்கலிப் பெண்கள் மூங்கில் இலையைப் போலவும் . கைம்பெண்கள் எள்ளின் வடிவதிலும், கண்ணி பெண்கள் பூசணி விதை வடிவத்திலும் ஸ்ரீசூரணம் தரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .
திருமண் காப்புக்கு நடுவில் ஸ்ரீசூரணத்தைத் தரித்துக்கொண்டு, அதன் அடியில் மஞ்சளையும் வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு செய்து மஹாலக்ஷ்மியை அதில் ஆவாகணம் செய்தல் வேண்டும் .

ஆண்கள் பன்னிரண்டு திருமண் இட்டுக்கொண்டபிறகு, மஞ்சள் காப்பை ஸ்ரீசூரணத்தின் அடியில் இட்டுக் கொள்ள வேண்டும் .
அப்போது கீழ்க்கண்ட நாமாவை உச்சரித்தல் வேண்டும்.
நெற்றியில் - ஸ்ரீ தேவியை நம
நடுவயிறு - ஸ்ரீ அமீர்தோத்பாவையை நம
மார்பில் - ஸ்ரீ கமலாயை நம
கழுத்தில் - ஸ்ரீ லோக சுந்தர்யை நம
வலப்புற வயிறு - ஸ்ரீ விஷ்ணுபத்நியை நம
வலது பூஜம் - ஸ்ரீ வைஷ்ணோ தேவியை நம
வலது கழுத்து - ஸ்ரீ வராரோஹாயை நம
இடப்புற வயிறு - ஸ்ரீ ஹரிவல்லபாயை நம
முதுகு அடியில் - ஸ்ரீ மஹாலக்ஷ்மி நம
பிடரியில் - ஸ்ரீ லோகபூஜிதாயை நம

இவ்வாறு பெருமாளையும் தாயாரையும் மனத்தில் தியானித்து திருமண் இட்டுக்கொள்வதன் மூலமாக நாம் சகல சௌபாக்கியங்களையும் இந்த உலகில் அடைவதோடு, வைகுண்ட பதவியும் பெறுவது நிச்சயம் .

ஆசிரியர் பெயர் - திரு. வேணு ஸ்ரீநிவாசன் 
புத்தகத்தின் பெயர் -ஸ்ரீவைஷ்ணவம்

ஸ்ரீ ரங்கநாதன் ஸ்ரீ ரங்கம் வந்த கதை

ஸ்ரீ ரங்கநாதன் ஸ்ரீ ரங்கம் வந்த கதை .........

எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய
சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என்
அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறுவேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என்பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்டஇத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும். ஸ்ரீரங்கம்.......

திருமாலின் திவ்ய தேசங்கள் 108ல் இத்திருவரங்கம் தலையாயது
சோழநாட்டுத் திருப்பதிகளுள் முதன்மையானது. கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று பிரதானமாகச் சொல்லப்பட்ட மூன்றினுள்முதன்மையானது. அதாவது.....

கோயில் என்றால் ஸ்ரீரங்கம். 
திருமலை என்றால்திருப்பதி. 
பெருமாள் கோயில் என்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதி.

பெரிய கோயில் என்றும், பூலோக வைகுண்டம் என்றும் போக 
மண்டபம் என்றும் போற்றப்படும் இத்தலத்தை, அண்டர் கோன் அமரும்அணியரங்கமென்றும், தென்திருவரங்கமென்றும், செழுநீர்த் 
திருவரங்கமென்றும் திட்கொடிமதில் சூழ்த் திருவரங்கமென்றும் ஆழ்வார்கள்மாந்தி மகிழ்வர்.

பரமபதம், திருப்பாற்கடல், சூரிய மண்டலம், யோகிகளுடைய
உள்ளக்கமலம், இவையனைத்தும் இனியவை எனக்கருதி எம்பெருமான் ஸ்ரீ மந் நாராயணன் தானே மனமுவந்து இங்கு வந்து தங்கி, தேனும் பாலும்,கன்னலும், நெய்யும் அமுதும் கலந்தாற்போன்று மறைந்து உறைகின்றான்.

இங்கெல்லாம் மறைந்துறைகின்ற எம்பெருமான், இப்பூவுலகில் மாந்தரெல்லாம்தன்னைக் கண்ணாரக்கண்டு, தன் பேரழகை அள்ளிப்பருகிக் களிப்பெய்ததானே ஒரு அரங்கத்தைத் தெரிவு செய்து பள்ளிகொண்ட இடம்தான்ஸ்ரீரங்கம்.

எம்பெருமானின் பள்ளிகொண்ட திருக்கோலத்தையே பெயராகத் தாங்கிஸ்ரீரங்கநாதன் பள்ளியென்றே அழைக்கப்பட்ட இவ்விடம், தமிழில் திருச்சீரங்கநாதன் பள்ளியாகி அவ்விதமே அழைக்கப்பட்டு காலப்போக்கில்திருச்சிராப்பள்ளியாகி தற்போது திருச்சியாயிற்று.

இத்தலம் பற்றி எண்ணற்ற புராணங்களும், வடமொழி நூற்களும்
பண்டைத் தமிழ் இலக்கியங்களும் விவரங்களை வாரியிறைக்கிறது. 
இங்கு பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதன் பெருமாள் சத்தியலோகம் எனப்படும்பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்ட திருவாராதனப்பெருமாள் ஆவார்.

இப்பூவுலகில் சூரிய குலத்தில் வந்த மனு குமாரரான இட்சுவாகு 
என்னும் மன்னன் பிரம்மனைக் குறித்து கடுந்தவமியற்றினான். இவன் தவத்தைமெச்சிய பிரம்மன் இவனுக்கெதிரில் தோன்றி வேண்டிய வரம் கேள் என்றான்.

அதற்கு இட்சுவாகு, பிரம்மனே, உம்மால் தினந்தோறும் பூஜிக்கப்படும்
திருமாலின் திருவாராதன விக்ரகமே எனக்கு வேண்டுமென்று கேட்கபிரம்மனும் மறுப்பின்றி வழங்கினான். அப்பெருமானை அயோத்திக்குகொணர்ந்த இட்சுவாகு பூஜைகள் நடத்தி வந்தான். திருப்பாற்கடலில்பள்ளிகொண்ட வண்ணத்தில் உள்ள இப்பெருமானே இட்சுவாகு மன்னன்முதல் இராம பிரான் வரையில் உள்சூரியகுலமன்னரெல்லாம் வழிபட்டுவந்த குலதெய்வமாயினான்.

இட்சுவாகு மன்னனால் விண்ணுலகில் இருந்து இங்கு கொண்டுவரப்
பட்டு அவன் குலத்தோர்களால் பூஜிக்கப்பட்டு பின்பு எல்லோருக்கும்
உரியவனான். இப்பெருமாள் இட்சுவாகுவால் கொணரப்பட்டதால் இப்பெருமாள்இட்சுவாகு குலதனம் என்றே அழைக்கப்பட்டார்.

திரேதா யுகத்தில் இராமாவதாரம் மேற்கொண்ட திருமால்
இராவணனையழித்து, அயோத்தியில் பட்டம் சூட்டிக் கொண்டார்.
இலங்கையிலிருந்து தன்னுடன் போந்த வீடணனுக்கு விடைகொடுத்துஅனுப்பும்போது, தன் முன்னோர்களால் பிரம்மனிடமிருந்து கொணரப்பட்டஇந்த திருவாராதனப் பெருமாளை வீடணனுக்கு (விபீஷணனுக்கு) சீதனமாககொடுத்தார். வீடணன் இப்பெருமாளைப் பெற்றுத் திரும்பியதை வால்மீகி தமது இராமாயணத்தில்......

விபிஷனோபி தர்மாத்மா ஸஹ தைர் நைர்ருதைர்ஷபை
லப்தவா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாந்த மஹாயா

என்று கூறுகிறார்.

(வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 128 வது ஸர்க்கம், 
87 வது சுலோகம்.)

மிக்க பயபக்தியுடன் ப்ரணா வாக்ருதி என்ற விமானத்துடன்
அப்பெருமானை எழுந்தருளச் செய்து இலங்கைக்கு வீடணன்
கொண்டுவருங்காலை, வண்டினம் முரல, குயில் கூவ, மயிலினம் ஆட, செழுநீர் சூழ தன் சிந்தைக்கு இனிய அரங்கமாகத் தோன்றின, இந்த காவிரி,கொள்ளிட நதிகட்கிடையில் பள்ளி கொள்ள விரும்பிய திருமால் வீடணனுக்குசற்றுக் களைப்பையும் அசதியையும் உண்டுபண்ணிவீடணன் இப்பெருமாளைஇவ்விரு நதிக்கிடைப்பட்ட இவ்விடத்தில் சற்றே கிடாத்தினான்.

அம்மட்டே தன் உள்ளங்கவர்ந்த இடமாதலால் அசைக்க இயலா
அளவிற்கு வீடணன் செல்ல வேண்டிய தென்றிசை நோக்கி இன்றுள்ள வடிவில் பள்ளி கொண்டார்.

வீடணனோ விழுந்தான், தொழுதான், அழுதான், அலற்றினான்.
ஆற்றொன்னாமையால் அலமந்தான். இப்பகுதியை ஆண்டுவந்த 
சோழமன்னன் தர்ம வர்மன், என்பவன் இந்நிகழ்ச்சியை அறிந்து ஓடிவந்துபெருமாளையும் தொழுதுவிட்டு வீடணனுக்கு ஆறுதல் கூறினான்.

பித்துப் பிடித்த நிலையில் சின்னாட்கள் இங்கு தங்கியிருந்த 
வீடணணின் கனவில் வந்த எம்பெருமான் தான் இவ்விடத்தே பள்ளிகொள்ளத்திருவுள்ளம் பற்றியதை தெரிவித்து, நீ செல்லக்கூடிய பாதையை நோக்கியேநான் பள்ளி கொண்டுள்ளேன். கவலை வேண்டாம் என்று கூறி,ஆண்டுக்கொருமுறை வந்து தன்னை வழிபட்டுச் செல்லுமாறும் அருளினார்.

இதைத்தான் தொண்டரடிப் பொடியாழ்வார்......

“குடதிசை முடியை வைத்து

குணதிசை பாதம் காட்டி

வடதிசை பின்பு காட்டி

தென்திசை இலங்கை நோக்கி

கடல்நிறக் கடவுள் எந்தை

அரவணைத் துயிலுமா கண்டு

உடல் எனக்கு உருகு மாலோ

என் செய்கேன் உலகத்தீரே” என்பார்.,,,,,,,

பின்னர் தர்மவர்மன் அவ்விமானத்தைச் சுற்றி சிறிய கோவில் எழுப்பிவழிபாடு செய்ய ஆவன செய்தான். இக்கோவில் காவிரியாற்றின் வெள்ளப்பெருக்கால் சிதல மடைந்து, மண் அரித்துக்காடு சூழ்ந்து யாருக்கும்தெரியாவண்ணம் மறைந்து இருக்கையில் தர்மவர்மாவின் மரபில் வந்த கிள்ளி
வளவன் இக்காட்டிற்கு வேட்டையாட வந்து ஒரு மர நிழலில்
தங்கியிருக்கும்போது அம்மரத்தின் மீதிருந்த கிளி ஒன்று.......

காவேரீ விரஜா சேயம் - வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ வாஸூதேவோ ரெங்கேஸ ப்ரத்யக்ஷம் பரமம்பதம்.

வைகுண்டத்தில்உள்ள மகாவிஷ்ணுவின் கோவிலான திருவரங்கம் இருந்த இடம் இது.இப்போதும் அக்கோவிலைக் காணலாமெனத் திரும்பத் திரும்பச் சொல்லியது.இதைக்கேட்டுப் பலவிடத்தும் தேடியலைந்தும் கோவிலைக்காணாது அயர்ந்தகிள்ளிவளவனின் கனவில் தன் இருப்பிடத்தை எம்பெருமான் தானேகாட்டியருளினார். அவ்விடத்தைக் கண்ட கிள்ளி வளவன் மெய்சிலிர்த்துதொழுது நின்று மீளவும் மதிலும் கோபுரமும் எழுப்பினான். .......
கிள்ளி வளவன் ( கிளி சோழன் ) பின் வந்த சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள்,விஜயநகர மன்னர்கள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் ஆகியோரின்தொடர்பணியால் இன்று உள்ள அளவு உயர்ந்தோங்கி செம்மாந்து நிற்கிறதுதிருவரங்கம்.

மூலவர்
ஸ்ரீரெங்கநாதன், பெரிய பெருமாள்

நம் பெருமாள், அழகிய மணவாளன் என்னும் திருப்பெயர்களும்
உண்டு. ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு தெற்கே திருமுகம் காட்டிய
புஜங்க சயனம்

உற்சவர்
நம் பெருமாள் (கஸ்தூரி ரங்கன் )
தாயார்
ஸ்ரீரங்க நாச்சியார், மற்றும் ஸ்ரீ தேவி , பூ தேவி ( உபய நாய்ச்சிமார்)

தீர்த்தங்கள்:

இங்கு மொத்தம் 9 தீர்த்தங்கள்

1. சந்திரபுஷ்கரணி 2. வில்வ தீர்த்தம்
3. நாவல் தீர்த்தம் 4. அரசு தீர்த்தம்
5. புன்னை தீர்த்தம் 6. மகிழ் தீர்த்தம்
7. பொரசு தீர்த்தம் 8. கடம்ப தீர்த்தம்
9. மா தீர்த்தம்

இதில் இன்று இருப்பதும், பிரதானமானதும் சந்திர புஷ்கரணியே.

ஸ்தல விருட்சம்
புன்னை
விமானம்
ப்ரணா வாக்ருதி

காட்சி கண்டவர்கள்

வீடணன், தர்மவர்மன், கிள்ளிவளவன், சந்திரன்.

சிறப்புக்கள்

இத்தலம் பற்றிய சிறப்புக்களைத் தொகுத்து தனி நூலொன்றே எழுதி
விடலாம். சிலவற்றை மட்டும் ஈண்டு நோக்குவோம்.

1) திருமகள் தினமும் வந்து பூஜித்துச் செல்லும் இத்தலம் இராமாயண
காலத்தோடு தொடர்பு கொண்டு இந்தியாவின் தேசியத்திற்கு மதமும் ஒருகாரணம் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

2) சிலப்பதிகாரத்தில் இத்தலம் கீழ்க்கண்டவாறு குறிக்கப்படுகிறது.
விரிந்த அலைகளோடு கூடிய மிகப்பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில்,திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவனும், நீலநிறம்கொண்டவனுமாகிய திருமால் ஆயிரம் தலைகளுடையவனுமாகிய ஆதிசேடன்என்னும் சிறந்த பாம்பனையாகிய பள்ளியணை மீது அழகுறச்சாய்ந்து
கொண்டிருக்கும் தன்மை நீல நிறமுடைய ஒரு மேகமானது ஒருபொன்மலையைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கிறது
.
“நீல மேகம் நெடும் பொற்குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர் தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தி
திருவமர்மார்பன் கிடந்த வண்ணம்”

என்கிறார் இளங்கோவடிகள்.

3) பரமபதத்தில் இரண்டு மணத்தூண்கள் உள்ளது. பரமபதத்திற்குச்
செல்வோர் இந்த மணத்தூண்களைத் தழுவி நித்ய சூரிகளாக
விளங்குகின்றனர். (நித்ய சூரி-அழிவில்லாத பேரின்பமயமான சூழ்நிலையில்எம்பெருமானுக்கு பணிவிடைபுரியும் ஆத்மாக்கள்)இதே போல் இங்குள்ளகருவறையிலும் இரண்டு மணத்தூண்கள் உள்ளன. இந்த மணத்தூண்களைத்தழுவிக்கொள்வோர் பரமபதத்து நித்ய சூரியாகும் பாக்கியம் பெறுவர், என்பதுஐதீஹம். இந்த மணத்தூண்களை பற்றிக்கொண்டு எம்பெருமானை வாழ்த்தும்நாள் எந்நாளோ என்று குலசேகராழ்வார், மயங்கி நிற்கிறார். இதோ அவரின்பாடல்,.....

“கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூனே பற்றி நின்றென்
வாயாரா என்று கொலோ வாழ்த்தும் நாளே”

4) உலகு போற்றும் காவியமான கம்ப இராமாயணத்தை கம்பர்
இங்குதான் அரங்கேற்றினார். இவ்விடம் தாயார் சன்னதிக்கு எதிரே கம்பர்மண்டபம் என்ற பெயரில் நின்றிலங்குகிறது. கம்பர் தமது இராமாயணத்தில்இரண்யனை சம்ஹாரம் செய்த வரலாற்றை விளக்குகிறார். இராமாயணத்தில்இரண்ய வரலாறு வரக்கூடாது இதை ஏற்கமாட்டோம் என அறிஞர் பலரும்உரைக்கவே, அவ்வாறாயின் எம்பெருமான் திருமுன்பு அரங்கேற்றம்நடத்துவோம் அவர் ஒப்புக் கொண்டால் அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான், என்று முடிவு கட்டி இவ்விடத்தே வந்து கம்பர் தமதுராமாயணத்தை அரங்கேற்றம் செய்யும் வேளையில் இச்சன்னதிக்குள்மேட்டுப்புறத்தில் எழுந்தருளியுள்ள அழகிய சிங்கப் பெருமாள்,கம்பரின் இராமகாதையை நாம் அங்கீகரித்தோம் என்ற கர்ஜனையுடன்பெருமுழக்கம் செய்ததாகக் கூறுவர். இந்த மேட்டு அழகிய சிங்கர் கோவில்5வது திருச்சுற்றுக்குள் 5வது மதிலுக்குள்) உள்ளது.

5) இப்பெருமானுக்கு அழகிய மணவாளன் என்பதும் ஒரு திருநாமம்.
அதாவது இவர் மிகவும் அழகான மாப்பிள்ளை ஆவார். எனவேதான் அழகியமணவாளர் ஆனார். ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளையும், உறையூர்கமலவல்லி நாச்சியாரையும் இவர் அழகான மாப்பிள்ளை திருக்கோலத்தில்ஏற்றுக் கொண்டார். தான் பேணி வளர்த்த பெண்ணான ஆண்டாளைஇப்பெருமாள் பெண்டுகொண்டு போனதைப் பற்றி பெரியாழ்வார்.......

.ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனான்பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்றவசோதை
மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறம் செய்யுங்கொலோ

- பெரியாழ்வார் திருமொழி 3-8-4
என்று மயங்கி மகிழ்வார்.

6) ஆழ்வார்கள் பன்னிருவரில் பதினோரு ஆழ்வார்களின்
மங்களாசாசனத்தைப் பெற்ற திவ்யதேசமாகும் இது. 11 ஆழ்வார்கள் 247
பாக்களில் மங்களாசாசனம் பொழிந்த திவ்யதேசம். 108திவ்யதேசங்களில்இப்பெருமை வேறெந்த திவ்ய தேசத்திற்கும் இல்லை.

12 ஆழ்வார்களில்மதுரகவியாழ்வார் வேறொன்றும் நானறியேன் என்று நம்மாழ்வார் ஒருவரைமட்டுமே மங்களாசாசனம் செய்து உய்ந்தார். இவர் எந்த திவ்ய தேசத்தையும்பாடவில்லை. திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள்
மதுரகவியாழ்வார் தவிர்த்த மீதி 11 ஆழ்வார்கள்தான். இந்த 11
ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதால் இவர் ஆழ்வார்களுகந்தஎம்பெருமான் என்று போற்றப்படுகிறார்.

Monday, September 8, 2014

திருமணம் கைகூட பெண்கள் பாடவேண்டிய வாரணம் ஆயிரம்

திருமணம் கைகூட பெண்கள் பாடவேண்டிய வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான்
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாலை கழுகு பரிசுடை பண்டர்கிழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காலை புகுத கனாக் கண்டேன் தோழி நான்
இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திர கொடி யுடுத்தி மணமாலை
அந்தரிநாட்ட கனாக் கண்டேன் தோழி நான்
நாள்திசை தீர்த்தம் கொணர்து நாணிநல்கி
பார்பன சித்தர்கள் பல்லார் எடுதேத்தி
பூப்புனை கன்னி புனிதனோடு என்றென்னை
காட்ட கனாக் கண்டேன் தோழி நான்
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரிள மங்கையர்தாம் வந்தேதிர்கொள்ள
மதுரையார் மன்ன திநிலை தொட்டேங்கும்
அதிரபுகுத கனாக் கண்டேன் தோழி நான்
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்ரூட
முத்துடை தமம் நிறைந் தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசுதன் வந்தென்னை
கைதளம்பற்ற கனாக் கண்டேன் தோழி நான்
வாய் நல்லார் நல்ல மறையோதி
மந்திரத்தால் பச்சிலை நாணல் பதித்து
பறிதிவெய்து கைச்சின்னமாகாளிரன்றான் என்கை பற்றி
தீவலம் செய்ய கனாக் கண்டேன் தோழி நான்
இமைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடயதிருக்கையால் தாழ் பற்றி
அம்மி மிதிக்க கனாக் கண்டேன் தோழி நான்
வாரிசிலை வாள்முகத்து என்னை மார்தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அறிமுகன் அச்சுதன் கைமேல் எங்கை வைத்து
பொறி முகம் தட்ட கனாக் கண்டேன் தோழி நான்
குங்குமம் அப்பி குளிச்சந்தம் மட்டித்து மங்கள
வீதி வலம் செய்தி மணநீர் அங்கவ னோடும்
உடன்சென்ற ரங்களை மேல் மஞ்ச மாட்ட
கனாக் கண்டேன் தோழி நான்
ஆயனுக்காக தான் கண்ட கனவினை
வேயர் புகழ்வில்லு புத்துர்கொன் கொடை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வள்ளலார் வாயும்
நான் மக்களாய் பெற்று மகிழ் வாரே
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

(பெண்கள் இந்த பாடலை பக்தியுடன் பாடி வந்தால் திருமணம் கைகூடும். நல்ல கணவர் அமைவார்)

Monday, September 1, 2014

மற்றவர்கள் உங்களை விரும்பசெய்வது எப்படி?

மற்றவர்கள் உங்களை விரும்பசெய்வது எப்படி?

இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்களின் சுய சரிதையை படித்தோம் என்றால் அவர்களிடத்தில் ego என்ற குணமே இருக்காது. தன்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி அல்லது வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி உரியவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் தயங்கமாட்டார்கள்.

"நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் ‍ பெரும் பணிவு என்பது பண்பாகும்" என்ற  பழைய திரைப்பட பாடலுக்கு ஏற்ப ஒருவர் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்.    

தற்பெருமை என்பது ஒருவரை மற்றவர்கள் அருவருக்க செய்து விடும். தற்பெருமை பேசும் ஒருவரை கண்டாலே தலை தெறிக்க ஓடி விடுவார்கள். சிலர் பார்த்தீர்கள் என்றால் வாயை திறந்தாலே தன்னை பற்றியே பேசி கொண்டு இருப்பார்கள். எதிரில் உட்கார்ந்து இருப்பவர் நெளிந்து கொண்டு இருப்பதை கூட புரிந்து கொள்ளாமால் அவர் பாட்டுக்கு தன்னுடைய சுய புராணத்தை பாடி கொண்டு இருப்பார். தற்பெருமை பேசும் ஒருவரை மற்றவர்கள் விரும்ப மாட்டார்கள்.

தெரியாத விஷயத்தை அடக்கத்துடன் தெரிந்து கொள்ளுங்கள். வயது வித்தியாசம் பார்க்காதீர்கள். இவன் என்ன பெரிய ஆள் இவனிடம் நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைக்காதீர்கள். உங்களது அடக்கம் மற்றவர்கள் உங்களை நேசிக்க செய்யும்.

மற்றவர்களிடம் பழகும்போது எந்த வித சுய நலத்துடனும் பழகாதீர்கள். பின்னால் உங்களுக்கு ஆகவேண்டிய காரியத்திற்காக மற்றவர்களிடம் போலியாக பழகாதீர்கள்.
சுயநலமில்லாத உங்களது பழக்கம் மற்றவர்களிடத்து  உங்களை பெரிதும் விரும்பசெய்யும்.

நட்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கள்ளம் கபடமில்லாத நட்புடன் பழகுங்கள். அதே சமயத்தில் உங்கள் நட்பை மற்றவர்கள் அவர்களுடைய சுயநலத்திற்காக பயன் படுத்த நினைக்கும்போது நாசூக்காக அந்த நட்பை அவர்கள் மனம் கோணாதபடி ஒதுங்கி கொள்ளுங்கள்.

நல்லவர்களுடைய நட்பு கிடைக்கும்போது உங்கள் நட்பு கிடைத்தமைக்கு அவர்கள் பெருமை படும்படி உங்கள் பழக்க வழக்கங்கள் எந்த வித சுயநலமும் இல்லாமல் இருக்க பார்த்து கொள்ளுங்கள்.

உங்களிடம் உள்ள சில பிடிக்காத குணங்களை தவிர்த்து விடுங்கள். உதாரணமாக கோபம்,
ego போன்றவற்றை அடியோடு ஒழித்து விடுங்கள். ஏனென்றால் கோபம், ego போன்ற மனப்பான்மை உள்ளவர்களை பொதுவாக மற்றவர்கள் நேசிக்கமாட்டர்கள். பல நல்லவர்களின் நடப்பை இது போன்ற குணங்கள் இருந்தால் நீங்கள் இழக்க வேண்டி வரும்.

எல்லோரையும் விரும்ப கற்று கொள்ளுங்கள். யாரையும் வெறுக்க கூடாது. மற்றவர்களிடம் உங்களுக்கு பிடிக்க தகாத விசயங்கள் இருந்தால் அவர்கள் மாற்றி கொள்ளும் மன நிலையில் இல்லாமல் இருந்தால், அவர்கள் மனம் புண்படாதபடி நாசூக்காக ஒதுங்கி கொள்ளுங்கள்.

மற்றவர்களை மனம் திறந்து பாராட்ட கற்று கொள்ளுங்கள். உங்களிடம் ஒருவர் பேசும்போது அவருடைய பேச்சில் தெரியும் நல்ல பண்புகளை செயல்களை குணங்களை
மனம் திறந்து பாராட்டுங்கள். உங்கள் பாராட்டின் மூலமாக ஒருவருக்கு அங்கீகாரம் கிடைக்கின்றபோது அவர் உங்களை பன்மடங்கு விரும்புவார்.

மற்றவர்களின் துன்பத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுங்கள். உங்களுடைய ஆறுதல் வார்த்தைகள் உங்களைப்பற்றி ஒரு உயர்வான எண்ணம் அவர் மனதில் எப்போதும் நிலைத்து இருக்கும்.

சரி, மேலே கூறிய பண்புகளை மற்றவர்கள் விரும்ப வேண்டும் என்றால் கடை பிடிக்க முடியுமா?

சற்று சந்தேகம்தான். ஏனென்றால் ஒவ்வொருவருடைய வேலை, தொழில், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களினால் நல்ல பண்புகளாக இருந்தாலும் கடை பிடிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். அதனால் மற்றவர்கள் வெறுக்கும் நிலையிலோ அல்லது விரும்பாத சூழ்நிலையோ இருக்கலாம்.

அப்படி என்றால் இதற்க்கு என்னதான் தீர்வு? உங்கள் மனதுதான் அதற்கு சரியான தீர்வு அல்லது வழியை காட்டும். உங்கள் மனது சரியான தீர்வு அல்லது வழியை கட்ட தியானத்தின் துணையை நாடலாம்.

தியானம் பழகும்போது நட்பு மனப்பான்மை பெருகும். நட்பு மனப்பான்மை பெருகுகின்ற போது மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்க தொடங்கி விடுவார்கள். தியானத்தின் மூலம் interpersonal relationship அதிக அளவில் வளர்கின்றது என பல ஆராய்சிகள் தெரிவிக்கின்றன. தியானத்தின் மூலம் கோபம், ego, கள்ளம், கபடம், சூது, வாது போன்ற செய்கைகள், எண்ணங்கள் களைய படுகின்றன. சூது, வாது, கபடம் இல்லாத ஒருவரை பொதுவாக எல்லோருமே விரும்புவர்.

அதே போன்று உண்மையான நட்பு எது, பொய்மையான நட்பு எது, என்பதை மற்றவர்களை பார்த்த உடனேயே எடை போடசெய்யும் சக்தியும்  தியானத்திற்கு உண்டு. அதனால் போலியான நட்பு கொண்டவர்களை சுலபமாக அடையாளம் காண செய்யும் சக்தி தியானத்திற்கு உண்டு. 

எனவே ஒருவருடைய மனதை புண்படுத்தாத, நல்ல குணங்கள் உங்களையும் அறியாமல் உங்களிடம் குடியிருக்கும்போது மற்றவர்கள் உங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?

மனிதர்களுக்கு பெரும்பாலும் சந்தோசத்தை கொடுப்பது 
அவர்கள் மனது சந்தோசமாக இருக்கும் போதுதான். 
அந்த சந்தோசம் என்பது அவர்கள் நினைக்கும் நினைப்பை 
பொறுத்துதான்.

ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்த காரியத்தில் 
வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும். 
வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில் 
காண வேண்டும். 

வெற்றி அடைவதை போன்று மனதில் உருவாக படுத்தி 
பார்க்கும்போது தோல்வி அடைந்துவிடுவோம் 
என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு 
இல்லை. 

வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால் 
நினைக்கும் போது அந்த காரியம் வெற்றி அடைந்து 
விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும் 
உங்கள் மனது ஏற்படுத்தி கொடுத்து விடும். 

உங்கள் மனதை சந்தோசமாக வைத்திருப்பதற்கு 
இன்னும் நிறைய வழிகள் உள்ளன.

ஒரு நாளை துவக்கும் போது உங்கள் மனதில் 
சந்தோசமான நிகழ்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள். 
அப்படி செய்யும் போது அந்த நாள் முழுவதும் 
மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். 
அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும் 
காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது.

மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான 
ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள். 
அந்த இடத்தில ஒரு மகிழ்சிகரமான சூழ்நிலை உருவாகுவதற்கு 
காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள் 
வெகு சுலபமாக கவரப்பட்டுவிடுவீர்கள். 

உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த 
மகிழ்சிகரமான நிகழ்சிகளை படங்களாக மாட்டி வையுங்கள். 
அவை தந்த மகிழ்சிகரமான நினைவுகளை அடிக்கடி 
நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள். 
வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும். 

உங்களுடைய அன்றாட வேலைகளை போல மனதில் 
அடிக்கடி சந்தோசமான நிகழ்சிகளை நினைப்பதற்கு நேரம் 
ஒதுக்க வேண்டும். அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான 
நிகழ்சிகளை செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு 
மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய 
காரியத்தில் வெற்றியும் கிட்டும். 

ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற 
நினைவு வரும்போது உடனடியாக அதற்க்கு மாற்று மருந்தாக 
நாம் வெற்றியடைய போகிறோம் நமக்கு சாதகமாக 
அந்த காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள். 

உடனே அந்த தோல்வி எண்ணங்கள் 
இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும் 
நிச்சயமாக வெற்றி அடையும். 

எந்த சக்தியாலும் உங்களை தோல்வி அடைய செய்ய முடியாது 
என்று அடிக்கடி எண்ணி கொண்டே இருங்கள். உங்களையும் 
அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும். 

என்னதான் நம்முடைய மனதை சந்தோசமாக வைத்துகொள்ள 
நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய 
மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று 
கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. 

தியானம் என்னும் அற்புத கலையினால் நம்முடைய 
மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை 
எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம் ...

மாற்றங்கள் - ஏமாற்றங்கள் - வாய்ப்புகள்

மாற்றங்கள் - ஏமாற்றங்கள் - வாய்ப்புகள்

வேலை கிடைப்பது, கிடைத்த வேலையை சிறப்பாகச் செய்வது, செய்யும் வேலையை மன நிறைவோடு செய்வது எனப் பல விஷயங்கள் பேசிவருகிறோம். வேலையைச் சிறு அங்கமாகப் பார்த்து அதைக் கையாள உபதேசங்கள் அளிக்காமல், வாழ்க்கையின் அங்கமாக வேலையைக் கருத்தில் கொண்டு, வாழ்வு சிறக்க, வேலையில் என்ன செய்யலாம் என்று பேசுவதில்தான் இந்தத் தொடர் வித்தியாசப்படுகிறது.

விழுங்கும் வேலை

வேலை ஒரு மனிதரின் விழித்திருக்கும் நேரத்தின் பெரும்பான்மையை விழுங்கிக் கொள்கிறது. சிலரின் வாழ்க்கையில் முழுமையையும் விழுங்கிக் கொள்கிறது. எனவே, ஒருவரின் வாழ்க்கையின் சகல கூறுகளையும் வேலை நிர்ணயிக்கிறது.

தனிப்பட்ட வாழ்க்கையின் சுக துக்கங்கள் வேலையைப் பாதிப்பதை விட வேலையின் சுக துக்கங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பது இதனால்தான். ஆகவேதான் வேலை தொடர்பான விஷயங்களை உளவியல் ரீதியாகப் பார்ப்பது முக்கியம்.

வேலையில் சிறக்கும் ஒவ்வொரு மனிதரும் வேலையைப் புரிந்து கொள்வதை விட தன்னைப் புரிந்துகொண்டவராகக் இருக்கிறார்.

தனக்கான வேலை எது என்று தீர்மானிப்பதில் சுய அறிதல் துவங்குகிறது. தன் பலங்கள், பலவீனங்கள், எதிர்பார்ப்புகள் என அனைத்தையும் எடை போட்டுத் தேர்வு செய்யும் போது ஏமாற்றங்கள் அதிகமிருக்காது. தன் இயல்பிற்கு ஏற்ற வேலையைச் செய்யும்பொழுது ஒருவரால் தன் சிறப்பான பங்களிப்பை எளிதாகத் தர இயல்கிறது.

மாறும் வேலைகள்

இருந்தும், மனிதர்களைப் போல வேலைகளும் காலத்திற்கேற்ப மாறுகின்றன. எண்பதுகளில் பணியாற்றிய வங்கி மேலாளர் வேலைக்கும் இன்றைய வங்கி மேலாளர் வேலைக்கும் தான் எத்தனை வேறுபாடு? அதனால் வேலையில் உள்ள மனிதர்கள் தங்கள் சுயத்தில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டு கொள்வதைப் போல வேலையில் ஏற்படும் மாறுதல்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

உலகம் மாற மாறத் தொழில்களும் வேலைகளும் மாறிப்போகின்றன. அதற்கேற்ப மனிதர்கள் மாறுவதில் தான் சிக்கல் இருக்கிறது.

நிகழ் காலம் போலவா எதிர்காலம்?

“நான் உயிரைக் கொடுத்து விற்கிறேன். அவன் ஆன்லைன்ல அள்ளிட்டுப் போறான்!” என்றார் ஒரு புத்தகக் கடைக்காரர்.

“லெக்சரர்னு பேர்.. கிளாஸ் எடுக்கறது மட்டுமில்லாம ஹாஸ்டல் முதல் ஹவுஸ்கீப்பிங் வரை பாக்கறேன் சார். இதெல்லாம் நான் செய்வேன்னு கனவுல கூட எதிர்பார்க்கலை!” என்றார் ஒரு தனியார் கல்லூரி ஆசிரியர்.

“பிராஞ்ச் மேனேஜரா 15 வருஷம் சர்வீஸ் சார் எனக்கு. இப்போ கிட்டத்திட்ட சேல்ஸ்மேன் மாதிரி வங்கியோட ப்ராடெக்ட்ஸ் விக்கறதுதான் வேலை. முன்ன என் கேபினுக்கு வந்து எல்லோரும் பல்ல இளிப்பாங்க. இப்ப எல்லோரையும் கேபினுக்கு கூப்பிட்டு நான் பல்ல இளிக்கறேன்!” என்றார் ஒரு வங்கி மேலாளர்.

“இந்த கம்ப்யூட்டர் எல்லாம் வந்த காலத்தில் எங்க டிபார்ட்மெண்டில் தான் முதல்ல வாங்கினோம். நமக்கெல்லாம் தேவைப்படாதுன்னு கடைசி வரைக்கும் கத்துக்கலை. இன்னிக்கு அது பெரிய குறையா இருக்கு!” என்றார் ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஒரு அதிகாரி.

“டிரான்ஸ்ஃபர் ஆகும்னே ப்ரொமோஷன் வேண்டாம்னு எழுதிக் கொடுத்தேன். குடும்பத்துக் காக தியாகம்னு நினைச்சு எல்லாம் பண்ணினேன். இன்னிக்கு குடும்பத்திலயும் மதிப்பில்லை. ஆஃபீஸ்லயும் மதிப்பில்லை. எப்ப தனியார் மயமாகும்னு தெரியலை. என் கூட வேலைக்கு சேந்தவங்க இன்னிக்கு நிறைய பேர் ஜி.எம்

ஆயிட்டாங்க. நான்தான் தோத்துப் போயிட்டேன்!” என்றார் ஒரு அரசுத் துறை ஊழியர்.

அடிப்படையில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? நிகழ் காலம் போலவே எதிர்காலம் இருக்கும் என நம்பியது தான்!

மாறும் உலகம்

யோசித்துப் பார்க்கையில் நாம் எல்லாருமே இதைச் செய்கிறோம். நம்மில் சிலர் உடனே விழித்துக் கொண்டு உலகம் மாறுவதை கண்டுகொள்கிறோம். சிலர் விழித்துப் பார்ப்பதற்குள் உலகம் அடையாளம் தெரியாத அளவு மாறிப் போய் விடுகிறது.

இதைச் சரியாக உணர வேண்டும் என்றால் நீங்கள் வாழ்ந்த ஊரை காலம் கடந்து சென்று பாருங்கள். அந்த வலியை உணர்வீர்கள்.

இன்றும் கோயமுத்தூர் செல்கையில் பீளமேட்டைத் தாண்டும் போது மனதில் 80- களின் பிம்பங்கள் வந்து சிதறடிக்கும்.

எங்கள் கல்லூரி எதிரில் சூரிய காந்தி தோட்டம் இருக்கும். விமான நிலையம் போகும் வழியில் ஒவ்வொரு கல்லும் அத்துப்படி. நிஷா பேக்கரியில் காரக்கடலை பிரபலம். சித்ராவி லிருந்து ஹாஸ்டல் செல்லும் வரை “சோலை புஷ்பங்களே...என் சோகம் சொல்லுங்களேன்” பாடல் விட்டு விட்டுக் கேட்கும்.

லுங்கி கட்டிய காளைகள் நாங்கள் ரோட்டில் குறுக்கும் நெடுக்கும் ஓடி விளையாடும் அளவு தான் சாலை போக்குவரத்து. காலேஜ் வாசல் ராஜு கடையில் எல்லா நேரமும் கூட்டம் இருக்கும்.

இன்று விமானத்திலிருந்து வெளியே வந்தால் டிவைடர், டிராஃபிக் சகிதம் அவினாசி சாலை மாறிப்போயிருக்கிறது. வழியெங்கும் கடைகள். சூரிய காந்தி பூக்கள் எல்லாம் காணாமல் போயிருந்தன.

ஆனால் அங்கே வசிக்கும் கோவைவாசிகளுக்கு என்னைப் போல அதிர்ச்சிகள் இருக்காது. மாறுதலை மெல்ல மெல்ல கவனித் தவர்கள் அவர்கள்.

இதே போலத் தான் வேலை மாற்றங்களும். காலம் கடந்து பார்த்தால் புரியாது. தொடர்ந்து கவனித்தால்தான் பிடிபடும்.

மாற்றங்களே வாய்ப்புகளாக

சரி, எப்படி தெரிந்து கொள்வது? உங்கள் தொழில் அல்லது துறை சார்ந்த செய்திகள் வந்தடைகிறதா? இல்லாவிட்டால் தேடிச் செல் கிறீர்களா? உங்கள் தொழில் அல்லது வேலை சார்ந்த வல்லுநர்கள் தொடர்பு உண்டா? உங்கள் வேலை அடுத்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் ஆகும் என கூகுள் செய்திருக்கிறீர்களா?

என் பயிலரங்குகளில் “உங்களுக்குத் துறை சார்ந்த வாசிப்பு இருக்கிறதா?” என்று கேட்டால் பெரும்பாலோர் உதட்டைச் சுளிப்பார்கள். உங்கள் வாசிப்பையும் தேடலையும் தொடர்புகளையும் உங்கள் வேலைக்கு உதவுவது போலவும் அமைத்துக்கொள்ளுதல் அவசியம்.

மாறுதல்கள் ஏமாற்றங்களாக இருக்க அவசியம் இல்லை. வாய்ப்புகளாகவும் இருக்கலாம்.

வருங்காலம் வருந்துங்காலம் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அக்கம் பக்கம் பாருங்கள். உலகம் மாறுவது தெரியும்.

கண்ணதாசனின் அமரத்துவம் நிறைந்த பாடல் இதை இன்னமும் அழுத்தமாகச் சொல்கிறது.

“ மாறுவதைப் புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்து விடும்!”