Friday, August 12, 2016

ஆறு கட்டளைகள்

கவியரசு கண்ணதாசனின் ஆறு கட்டளைகள்

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

உள்ளத்தில் உள்ளது அமைதி!

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்

இறைவன் வகுத்த நியதி!


சொல்லுக்குச் செய்கை பொன்னாகும், வரும்

இன்பத்தில் துன்பம் பட்டாகும் – இந்த

இரண்டு கட்டளை அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும்!


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும்! – நிலை

உயரும்போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்!


உண்மை என்பது அன்பாகும் – வெரும்

பணிவு என்பது பண்பாகும் – இந்த

நான்கு கட்டளைகள் அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும்!


ஆசை, கோபம், களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்!

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்

மனித வடிவில் தெய்வம்!


இதில் – மிருகம் என்பது கள்ளமனம்

உயர் – தெய்வம் என்பது பிள்ளைமனம்

இந்த – ஆறு கட்டளை அறிந்தமனது

ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்!

No comments:

Post a Comment