Monday, February 20, 2017

பெண்களின் #எதிர்பார்ப்புகள்…!!

♥இவ்வுலகில் உள்ள பெரும்பாலோர் , கணவனும் , மனைவியாய் இணைந்த பின் பல வருடங்களாக குடும்பம் நடத்தி இருந்தாலும், அநேக கணவர்மார்களுக்கு தெரிவதில்லை, தன் மனைவிக்கு என்ன தேவை?என்று. அவள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள்? என்பதையும், அவர்கள் ஒரு காலமும் புரிந்து கொள்வது இல்லை.

♥அவர்கள் மனதில் எண்ணுவதெல்லாம், தன் மனைவியுடன் உடல் ரீதியான உறவை வைத்துக்கொண்டால் மட்டும் போதும் ., மற்றபடி மனைவிகள், நம்மிடம் வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்? என்று, அவர்கள் தப்பான கணக்கு போட்டு விடுகிறார்கள். ஆனால் , கணவர்மார்களே! பெண்களின் தேடுதலும், அவர்களது எண்ணங்களும் வித்தியாசமானவைகள்.

♥எப்படியென்றால், கணவன்மார்கள் எல்லோரும், தங்கள் மனைவியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கும் வரை, உங்களுக்கு மட்டுமே வேலைக்காரியாக இருக்கும் வரை, நீங்களும் சேர்ந்து குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை, நீங்களும் சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் வரை, உங்களின் விருப்பங்களை உங்கள் மனைவியின் மேல் திணிக்காத வரை, ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு அன்பான மனைவியாகத்தான் இருப்பாள். ஆனால், இதற்கு நேர்மாறாக, கணவரானவர் தனது மனைவியிடம் நடந்து கொண்டால், அவளது மனம் மிகவும் வேதனைப்படும்.

♥குடும்ப நிம்மதி மொத்தமாக குலைந்து விடும். எனவே, ஒரு குடும்பத்தில் கணவன் நிம்மதியை இழந்தால், அவன் மட்டுமே பல காரியங்களை இழப்பான். ஆனால், ஒரு மனைவியானவள் குடும்பத்தில் நிம்மதியை இழந்தால், அந்த குடும்பமே , நிம்மதியை இழக்க நேரிடும். எனவே, எல்லா கணவன்மார்களும், இனியாவது தன் மனைவி,தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்து செயல்பட்டால், குடும்பமானது இன்பமாக இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், கணவனிடம் மனைவிமார் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பதை, சற்று விளக்கமாக பார்ப்போம்..

♥தங்கள் மனம் கவர்ந்த கணவரிடம் இருந்து, ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது, வெறும் உடல் ரீதியான உறவை மட்டுமல்ல., அவர்களது மன ரீதியான உறவையும் விரும்புகிறார்கள். எந்த பெண்ணும், உறவுடன் தொடர்பை முடித்துக்கொள்ள விரும்புவது இல்லை. அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.

♥அந்த தேடுதல், உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது. இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை. கணவன்மார்களே! மனைவியை புரிந்து கொண்டால் மட்டுமே உறவுகள் வலுப்படும்., அங்கு இனிமையும் கூடும். பொதுவாக, நிறையப் பெண்களுக்கு பேசுவது என்றால், மிகவும் பிடிக்கும். அதுவும், தன் அன்பான கணவரிடம் இருந்து வரும் ஆறுதலான பேச்சை நிறையவே எதிர்பார்ப்பார்கள், பெண்கள். ஆனால், ஆண்களோ, அதை புரிந்து கொள்வது இல்லை. தன் மனைவியிடம் அதிகம் பேசுவதும் இல்லை.

♥அடுத்ததாக மனைவிகள் விரும்புவது, பேசிக்கொண்டே நடப்பது. ஏனென்றால்,. இந்த பேச்சின் மூலம்தான், அன்பை, நட்பை பகிர்ந்து கொள்ள முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் எண்ணுகிறாள். எனவே, அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. இப்படி அவர்கள் விரும்புவது போல, நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது, இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது இருவருக்கும் ஒரு அருமையான அனுபவமும் கூட. மேலும், நாம் ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும். அடுத்ததாக, சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை அதிகமாக இருக்கிறது.

♥ஏனென்றால், தங்களது கணவர், நம்மை விரும்புவாரா? விரும்ப மாட்டாரா? என்ற கவலை அவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். எனவேதான், ஒவ்வொரு பெண்ணும், தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள்., அதற்காக கூடுதலாக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் பெண்கள், தன் கணவரை நேசிக்க தொடங்கி விட்டால், அவரின் புறத்தோற்றம் பற்றி பெண்கள் கவலை படுவது இல்லை., இது ஒரு நிதர்சன உண்மை. ஆனால், தன்னுடைய புறத்தோற்றத்துக்காக, பெண்கள் அதிகம் கவலைப்படுவார்கள்., தன் கணவர் எப்போதும் தன்னை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

♥எனவே, இதை ஆண்களும் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். மேலும், உங்கள் மனைவி ஒரு வேளை அழகில்லாமல்இருநதால், அவர்கள் அதற்காக கவலைப்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மனைவியிடம் பேசும் போது, “உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் உனக்கு அழகு” என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேச வேண்டும்.

♥அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், கணவர்கள் கட்டாயம் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு ஏற்ற துணைவர்களாக இருக்க முடியும். கணவன்மார்களே, இதுதான், ஒவ்வொரு பெண்ணும், உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகும். எனவே, அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, உங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்., உங்கள் எதிர்பார்ப்புக்களும், எதிர்பார்ப்பது போலவே இருக்கும்..!!!.

No comments:

Post a Comment