Wednesday, December 10, 2014

தினம் ஒரு சிந்தனை 3 - தடங்கல்கள்.

தினம் ஒரு சிந்தனை 3 - தடங்கல்கள்.

'தடங்கல்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் வாழ்க்கையில் தோல்விதான் மிஞ்சும்.'

இது நம்முடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து நாம் அன்றாடம் கேட்கும் அறிவுரை.

இது அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தறிந்தது.

ஆனால் தடங்கல்களை எதிர்பார்த்து அதை எப்படி எதிர்கொள்வது என முன்னதாகவே திட்டமிடல் வேண்டும் என்பதையும் மறுக்கவியலாது. நம்முடைய திட்டங்கள் எவ்வித தடங்கலும்

இல்லாமல் நிறைவேறிவிடவேண்டும் என்பது நம் ஒவ்வொருவருடைய ஆவல். ஆனால் நம்முடைய அன்றாட வாழ்வில் நம்முடைய எந்த திட்டமும் தடங்கல்கள் இல்லாமல்

நிறைவேறுவதில்லை என்பதும் உண்மை.

'Expect the unexpected' என்பார்கள். 'உன்னுடைய எதிரியை எதிர்கொள்ள செல்வதற்கு முன் உன்னுடைய தரப்பு வாதங்களை சரிபார்த்துக்கொள்'. என்கிறது பைபிள். அதுபோன்றுதான்

நம்முடைய திட்டங்களும். அவற்றை நிறைவேற்ற முனைவதற்கு முன் எத்தகைய தடங்கல்கள் வர வாய்ப்புள்ளது என்பதை நன்றாக ஆய்வு செய்து அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள

நம்மை தயார்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம். எப்படி சாலையில் ஏற்படும் விபத்துகளுக்கு நாம் மட்டுமே பொறுப்பில்லையோ அதுபோன்று நாம் எதிர்கொள்ள நேரும்

தடங்கல்களுக்கும் நம்முடைய திட்டமின்மையோ அல்லது கவனக்குறைவோ மட்டுமே காரணம் இல்லை. நாம் சற்றும் எதிர்பாராத, நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட தடங்கல்களும்

தீர்க்கமாக நாம் திட்டமிட்டு செயல்பட விழையும் திட்டங்களை குலைத்துவிடுவதுண்டு.

அத்தகைய சமயங்களில் அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு நாம் வெற்றிகொள்கிறோம் என்பதில்தான் நம்முடைய தனித்தன்மையை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும். தடங்கல்கள்

இல்லாமல் நம்முடைய திட்டங்கள் வெற்றிபெற வேண்டும் என கனவு காண்பதை விட எத்தகைய தடங்கல்கள் வந்தாலும் அதை வெற்றிகரமாக என்னால் எதிர்கொள்ள முடியும் என

நினைப்பவனே தன்னையொத்தவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொள்வான்.

என்னுடைய திட்டங்களை வெற்றிகரமாக முடித்துத்தர எனக்கு உதவிபுரியவேண்டும் இறைவா என்று வேண்டுபவனை விட எவ்வித தடங்கல்கள் வந்தாலும் அவற்றை நான் துணிச்சலுடன்

எதிர்கொள்ளும் மனவலிமையை எனக்கு தா இறைவா என்று வேண்டுவபவனுக்கே இறைவனும் துணை வருவார்.

ஆகவே தடங்கல்கள் தடைகற்களாக நம்மை தடுத்து நிறுத்திவிடாமல் நம்முடைய வெற்றிக்கு துணைபோகும் நடைகற்களா

No comments:

Post a Comment