Wednesday, April 8, 2015

நம்பிக்கை தத்துவங்கள்

நம்பிக்கை தத்துவங்கள்

வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது,
தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது!
———————————————————————————–
செயல்கள் எதுவும் நல்லது அல்லது கெட்டது என்று இல்லை .
அதன் அடிப்படையான ஆசை தான் அதை நிர்ணயிக்கிறது.
ஒரு பெரிய தளபதி கூட தோற்க கூடும் .
பாமரன் விவசாயியின் வைராக்கியம் தோற்காது.
———————————————————————————–
வாழ்வு காலத்தில் நன்மையை செய்…
தாழ்வு காலத்தில் சிந்தனையை செய்!
———————————————————————————–
நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும்.
———————————————————————————–
நல்ல நண்பனை அடைய விரும்பினால்
நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
———————————————————————————–
செல்வங்களை விட செல்வாக்கு மேலானது.
———————————————————————————–
கண்ணாடி வீட்டில் வசிப்பவன்,
அண்டை வீட்டார் மேல் கல் எறியக் கூடாது.
———————————————————————————–
தொடக்கத்தைவிட முடிவைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்.
———————————————————————————–
ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.

No comments:

Post a Comment