Tuesday, June 16, 2015

விடாமுயற்சி வெற்றி தரும்!!!

விடாமுயற்சி வெற்றி தரும்!!!
  • முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். லட்சியத்தை தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது.
  • ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளாதீர்கள். இதை பின்பற்றினால் வாழ்வில் ஒருபோதும் துன்பம் நம்மைத் தீண்டாது.
  • ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் கல்வி அவசியம். அப்பொழுது சமூதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமதர்ம சமுதாயம் உண்டாகும்.
  • பகுத்தறியும் ஆற்றல் இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இதுவே என் கொள்கை என்று வாழ்பவனிடம் பகுத்தறியும் ஆற்றல் இருக்கும்.
  • தன்னம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி உறுதி நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். விடாமுயற்சியே வெற்றியை கொண்டு வந்து விடும்.
  • எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நேர்மை இருக்குமானால் அக்னிக்கு நிகரான ஆற்றல் நம்மிடம் உண்டாகி விடும்

No comments:

Post a Comment