Tuesday, November 3, 2015

வெற்றி நிச்சயம் - Active Version

வெற்றி நிச்சயம் - Active Version 
நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம் . ஆனால் , அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை . இந்த காரியத்தில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை ; மாறாக , அவ்வளவு தான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது . ஆசையுடன் சில செயல்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும் . அதற்கு செய்ய வேண்டியன என்ன ?

இதோ சில டிப்ஸ் உங்களுக்காக ...

* நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும் , நம்பிக்கையும் தேவை . அந்த நம்பிக்கை , " என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் " என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும் . அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும் .

* பிரச்னைகள் வரும் போது , நான் இவ்வளவுதான் , இது என் விதி என்று மனம் தளரக் கூடாது . மாறாக , என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும் . அப்படி . நம்பினால் , நீங்கள் புதியவனாக , புதியவளாக மாற முடியும் . அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை , வெற்றியாளராக்கும் ; சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும் .

* உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள் . அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும் , நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும் . பின் , ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும் .

* தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம் . மாறாக , எதிர்மறையான ( நெகடிவ் ) எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் , விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும் . ஏனென்றால் , < உங்கள் ஆழ்மனம் , உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது . ஆழ்மனதிற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ , அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகிறது . உதாரணமாக , தாழ்வுணர்ச்சி , பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது , அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகிறது . ஆக , நீங்கள் < உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள் .

எனவே , மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து , அதில் , ஆரோக்கியமான , ஆக்கப்பூர்வமான , தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள் . வெற்றி நிச்சயம் !

No comments:

Post a Comment