Saturday, July 27, 2013

வாழ்வின் நம்பிக்கைத் தத்துவங்கள்!

ஈரம் இருக்கும்
வரை இலைகள்
உதிர்வதில்லை..!!!
நம்பிக்கை
இருக்கும் வரை
நாம்
தோற்பதில்லை..!!!
***************
உன் தாய் தந்தையின் அருமை
நீ வளரும் போது தெரியாது
உன் பிள்ளையை
வளர்க்கும் போது தான் தெரியும்...!!!
***************
துன்பத்தை நினைத்து
மகிழ்ச்சியை இழக்காதே!
காதலை நினைத்து
வாழ்க்கையை இழக்காதே!
சோதனையை நினைத்து
சாதனையை இழக்காதே!
தோல்வியை நினைத்து
வெற்றியை இழக்காதே!
****************
கஷ்டங்கள் மட்டும்
இல்லை என்றால்....
போராடும் எண்ணமே நமக்கு
இல்லாமல் போய்விடும்!!!
***************

No comments:

Post a Comment