Wednesday, March 25, 2015

மகிழ்ச்சிக்கு 8

மகிழ்ச்சிக்கு 8

உங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப்படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம்பிங்கள். அது உங்களுக்கு புத்துயிர்பையும், புத்துணர்வையும் ஊட்டும். வாழ்க் கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரித்து பார்த்து, முக்கிய மானவற்றில் அதிக கவனம் செலுத்த கற்றுக் கொள்ளுங் கள். அதன்பின், அலுப்பூட்டும் வாழ் க்கை ஆனந்தமய மாக மாறிவிடும்.

நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இங்கே…

1.சரியான சாப்பாட்டு நேரம்

ஒழுங்கற்ற உணவு வேளைகள் உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முயலுங்கள்.

2.போதுமான உறக்கம்

தினசரி உங்களுக்கு எவ்வளவு நேர உறக்கம் தே வை என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். அந்த அளவின்படி தினமும் இரவு தூங்க முயலுங்கள்.

3.தூய்மை நேரம்

தினமும் நன்றாகக் குளிப்பதற்கு, புனித நீராடுவதற்கு, அழகு நிலையம் செல்வதற்கு, `மசாஜ் தெரபிகள்’ மேற்கொள்வதற்கு, இவை போன்ற தூய்மை பணிகளுக்கு திட்டமிட்டு நேரம் ஒதுக் குங்கள்.

4.அன்றாட வேலைகள்

அன்றாட சின்னச்சின்ன வேலைகள் தவிர்க்க முடி யாதவை. ஆனால் உங்களின் பணி அட்டவணையை பாதிக்காத வகையில் அவை `அட்ஜஸ்ட்’ செய்யபட வேண்டும்.

5.உங்கள் விருப்பத்துக்கு…

நீங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயத்துக்கு வாரம் ஒரு மாலை வேளையையாவது ஒதுக்குங்கள். அப்போது செல்போனை அணைத்து விடுங்கள், கம்ப்யூட்டர் உறங்கட்டும். நீங்கள் உங்களுக்கு பிரியமான விஷயத்திலேயே ழுழ்கி போய் விடுங்கள்.

6.ஆதரவுக் கரங்கள்

நீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன்றிரண்டு பேராவது இருக்கட்டும். அவர்கள், தேவைப்படும்போது உதவி செய்யும் உறவினர் களாக இருக்கலாம், நீங்கள் வெளியூர் செல்லும் போது வீட்டைக் கவனித்துக்கொள்ளும் அண்டை வீட்டாராக இருக்கலாம்.

7.தனிப்பட்ட நேரம்

உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிபட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளியுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசைதிருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.

8.இந்தக் கணம் முக்கியம்

நீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என் றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறி விடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றியோ சிந்திக்கக் கூடாது.

No comments:

Post a Comment