Tuesday, April 26, 2016

வெற்றியைக் காண சிறந்த வழிகள் எவை?

என் கனவுகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில் …

 செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.

- ஜேம்ஸ் ஆலன்.

 உன் விதியை வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உனக்குள்ளேயே குடிகொண்டு இருக்கின்றன.

- சுவாமி விவேகானந்தர்.

 தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே ஒதுங்கிக் கொள்கிறது.

- எமர்சன்.

 வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- நெப்போலியன்.

 அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில் தேர்வை வைக்கிறது. பின்னர் பாடம் கற்பிக்கிறது.

- வெர்ணன்.

 வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதுபோலத்தான் வாழ்வில் உயர்வதும்.

- ரூசோ.

 அடுத்தவரின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நினைப்பவன் புத்திசாலி.

- சாணக்கியன்.

 சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே வாழ்க்கையை சிறப்பான வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.

-டென்னிசன்.

 மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு;மனிதனை வெறுக்காதே.

- ஷேக்ஸ்பியர்.

 எல்லாத் தடைகளையும் தாண்டி, எடுத்த செயலை நன்னெறிப் பாதையில் முடிப்பவனே உண்மையான மனிதன்.

- துளசிதாசர்.

 நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;அது திரும்பிவராது.

- ஜேஷி.

 அறிவு மௌனத்தைக் கற்றுத்தரும். அன்பு பேச்சைக் கற்றுத்தரும்.

- ரிக்டர்.

 உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.

- ஷெல்லி.

 தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவந்தான் வலிமையானவன்.

- சாணக்கியன்.

 அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.

- ரஸ்கின்.

 வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.வேறு குறுக்கு வழிகள் இல்லை.

- எட்மண்ட் பர்க்.

 பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.

- ஹிட்லர்.

 வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.

- விவேகானந்தர்.

 மனம் சொர்க்கத்தை நரகமாக்கும்/நரகத்தை சொர்க்கமாக்கும் தன்மையுடையது.

- மில்டன்.

 தீயுள்ள இடத்தில் சூடுண்டு; சூடுள்ள இடத்தில் தீயுண்டு. அறிவுள்ள இடத்தில் நினைப்புண்டு; நினைப்புள்ள இடத்தில் அறிவுண்டு.

- ஜேம்ஸ்ஆலன்.

 உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.


- எடிசன்

No comments:

Post a Comment