Monday, January 23, 2017

ஒரு வருடத்தில் வரும் 24/25 ஏகாதசிகளும் அதில் விரதம் இருப்பதால் கிட்டும் பலன்களும்*"

" *ஒரு வருடத்தில் வரும் 24/25 ஏகாதசிகளும் அதில் விரதம் இருப்பதால் கிட்டும் பலன்களும்*"
1. *உற்பத்தி* (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - *சகல பாக்கியங்களும் கிடைக்கும்.*
2. *மோட்ச* - மார்கழி - சுக்ல பக்ஷ- *வைகுண்டம் கிடைக்கும்.*
3. *ஸபலா* - தை - க்ருஷ்ண பக்ஷ- *பாப நிவர்த்தி* (உலும்பகன் மோட்சம்).
4. *புத்ரதா* - தை - சுக்ல பக்ஷ- *புத்ர பாக்கியம் கிடைக்கும்* (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்).
5. *ஷட்திலா* - மாசி - க்ருஷ்ண பக்ஷ- *அன்ன தானத்திற்கு ஏற்றது.*
6. *ஜயா* - மாசி - சுக்ல பக்ஷ- *பேய்க்கும் மோட்சம் உண்டு* (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்).
7. *விஜயா* - பங்குனி - க்ருஷ்ண பக்ஷ- *ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்.*
8. *ஆமலதீ* - பங்குனி - சுக்ல பக்ஷ- *கோதானம் செய்ய ஏற்றது.*
9. *பாப மோசனிகா* - சித்திரை - க்ருஷ்ண பக்ஷ - *பாபங்கள் அகலும்.*
10. *காமதா* - சித்திரை - சுக்ல பக்ஷ- *நினைத்த காரியம் நடக்கும்*.
11. *வருதிந்* - வைகாசி - க்ருஷ்ண பக்ஷ- *ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், பாரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)*.
12. *மோஹினி* - வைகாசி - சுக்ல பக்ஷ- *பாவம் நீங்கும்*.
13. *அபரா* - ஆனி - க்ருஷ்ண பக்ஷ- *குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்*.
14. *நிர்ஜலா (பீம)* - ஆனி - சுக்ல பக்ஷ - *எல்லா ஏகாதசி பலனும் உண்டு* (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்).
15. *யோகினீ* - ஆடி - க்ருஷ்ண பக்ஷ- *நோய் நீங்கும்* (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்).
16. *சயிநீ* - ஆடி - சுக்ல பக்ஷ - *தெய்வ சிந்தனை அதிகமாகும்* - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்).
17. *சாமிகா* - ஆவணி - க்ருஷ்ண பக்ஷ - *விருப்பங்கள் நிறைவேறும்.*
18. *புத்ரஜா* - ஆவணி - சுக்ல பக்ஷ- *புத்ர பாக்கியம் கிடைக்கும்*.
19. *அஜா* - புரட்டாசி - க்ருஷ்ண பக்ஷ - *இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்*.
20. *பத்மநாபா* - புரட்டாசி - சுக்ல பக்ஷ- *பஞ்சம் நீங்கும்.*
21. *இந்திரா* - ஐப்பசி - க்ருஷ்ண பக்ஷ - *பித்ருக்கள் நற்கதி பெறுவர்.*
22. *பாபாங்குசா*-ஐப்பசி- சுக்ல பக்ஷ - *கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்* பாபங்கள் அகலும்.
23. *ரமா* - கார்த்திகை - க்ருஷ்ண பக்ஷ - *உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்.*
24. *ப்ரபோதினி* - கார்த்திகை - சுக்ல பக்ஷ - *பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்.*
25. *கமலா* - (சில வருடங்களில் மட்டும்) - *மகாலட்சுமி அருள் கிடைக்கும்*
"துவாதசிக்கு சமமான திதி இல்லை"
எங்கும் நிறைந்த விஷ்ணுவே சகல ஜனங்களையும் , ரக்ஷிக்க வேண்டி துவாதசி எனும் திதியாக மாறி கருணை செய்கிறான் என்கிறது வராஹ புராணம். 
" விஷ்ணுவுக்குச் சமமான தெய்வமில்லை. துவாதசிக்கு சமமான திதியும் இல்லை " என்பார்கள். எனவே " துவாதசி அன்று தானம் செய்தாலும், போஜனம் செய்வித்தாலும், பூஜை செய்தாலும் பத்து மடங்கு பலன் தரும்" எனக் கூறுகிறது பத்ம புராணம். தெரிந்தோ தெரியாமலோ செய்த " நம்முடைய ஏழு ஜென்மத்து பாபங்கள் துவாதசியில் ஹரியைப் பூஜித்த அடுத்த க்ஷணம் போய்விடும்" என்கிறது பத்ம புராணம்.
" ஏகாதசி விரதமிருந்து துவாதசியில் துளஸியுடன் கூடிய விஷ்ணு பிரசாதத்தைச் சாப்பிட்டவருக்கு கோடி ஜென்ம பாபம் போய் விடும்" என்கிறது ஸ்காந்தம்.
" ஏகாதசி விரதமே மோக்ஷ ஸாதனம்" 
" துவாதசியில் விஷ்ணுவைப் பூஜிப்பவர்கள் சுகமாய் வாழ்வார்கள், முக்தியும் பெறுவார்கள்" எனகிறார் சௌனகர்.
" தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய இந்த மூன்று தினங்களிலும் சந்தன, தாம்பூல, புஷ்ப, ஸ்த்ரீ சங்கமம் ஆகிய நான்கையும் விலக்க வேண்டும் " என்கிறது நாரதீய புராணம்.
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் "

No comments:

Post a Comment