Tuesday, April 7, 2015

நம்பிக்கை!!!

நம்பிக்கை!!!

இது ஒருவித மனநிலை சார்ந்த விடயமாகும்.

அதாவது ஒருவர் மீது அல்லது ஏதோ ஒன்றின் மீது வைக்கும் அதிதீவிர ஆசையைஉண்மை என நம்புகையில் நம்பிக்கை எனும் உணர்வு மனித மனங்களில் உதயமாகிறது.

சில வேளைகளில் இவ் நம்பிக்கை உண்மையாகவே அல்லது பொய்யாகவே இருக்கலாம்.ஆகவே நம்பிக்கையானது விஞ்ஞான முறைப்படிஏற்றுக்கொள்ளபடவேண்டுமென்பதில்லை. இது ஓவ்வொருவருக்கும்வித்தியாசமாகவிருக்கும்.

இதனால் எது சரி எது பிழை என எமக்கு மிகநெருக்கமானவர்கள் எடுத்துக்கூறும்போது நாம் அவர்களிடம் கோபப்படுவதுண்டு அல்லது அதனை பகுர்த்துபாக்கும்மனநிலையையும் இழந்துவிடுகிறேம்.

படிப்பறிவால் கற்றுத்தெளிந்து அதன் மூலம் பகுத்து அறிவதே சரியென நம்பும் கொள்கையும் ஒரு நம்பிக்கையே ஆகும்.

இதற்கான காரணங்கள் யாதெனில்


  1. அவரவர் பிறக்கும்,வளரும், வாழும், சூழல் மற்றும் சமூகம் 
  2. சந்தர்ப்ப சூழ்நிலை
  3. பகுத்தறியும் தன்மை அற்றநிலை 
  4. ஏன் நமது நம்பிக்கைகள் மற்றவர்களுக்கு மூடநம்பிக்கையாயிருத்தல் 
  5. மதம் சார்ந்த நம்பிக்கைகள் 
  6. ஆழ்மன பதிவின் வெளிப்பாடாதிருத்தல்

நம்பிக்கை சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்
உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை- சுவாமி விவேகானந்தர்

எல்லோரையும் நம்புவது பயங்கரமானது, எல்லோரையும் நம்பாமலிருப்பது அதிபயங்கரமானது- முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்

என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள் -நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் போதும்-மாவீரன் நெப்போலியன்

விட்டுவிடுங்கள் என உலகமே சொல்லும் போது ‘நம்பிக்கை’ மெதுவாக உச்சரிக்கும் இன்னுமொரு முறை முயற்ச்சித்து பார்

பொய் சொல்பவரை நம்பாதீர்கள் ஆனால் உங்களிடம் நம்பிக்கை வைத்திருப்பவரை ஒருபோதும் ஏமாற்றாதீர்கள்

No comments:

Post a Comment