Wednesday, July 17, 2013

அறிவாளிகள் தான் வெற்றி பெறுவார்களா?

நாம் பெறுகிற வெற்றியில் அறிவுக் கூர்மை முக்கியம். இதை யாரும் மறுக்க முடியாது. யாராவது ஒருவர் எதிலாவது வெற்றி பெற்றால், அவர் அறிவுக்கூர்மை உடையவர் என்று அனைவரும் நினைப்ப துண்டு. ஒருவருக்கு அறிவுக் கூர்மையில் தடை ஏற்பட்டால், அவருக்கு வெகுமதியாக கிடைப்பது வெறும் அவமானங்கள் மட்டுமே. அப்படியென்றால் அறிவாளிகள் தான் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கான விடையை, சற்று வேறு விதமான கண்ணோட்டத்துடன் பார்க்கலாம்.

சராசரி அறிவுக் கூர்மை உடையவர், ஒரு செயலில் ஈடுபடும் போது பயம் மற்றும் சந்தேகத்துடன் இறங்கினால் வெற்றி பெறுவாரா? அல்லது ஒரு செயலில் ஈடுபடும் போது நேர்மறையான கண்ணோட்டத்துடன் இறங்கினால் வெற்றி பெறுவாரா? என்ற இரண்டு கேள்விகளை நீங்கள் ஆராய்ந்து உணர்ந்தாலே போதும். யார் ஒருவர் நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறார்களோ அவருக்கே வெற்றி வசமாகும் என்பது தான் உண்மை.

அதே சமயத்தில், உங்களது பணியில் அறிவுக்கூர்மை முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், உங்களது பணி ஒரு எல்லைக்கு உட்பட்டதாகும். அதனால் தான் மிக அதிகமான மக்கள் நேர்மறையான சிந்தனையே, வெற்றிக்கு வழி வகுக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். திறமை, அறிவு மற்றும் செயல்திறன்கள் உள்ளிட்ட அனைத்தும் இரண்டாம் பட்சம் தான் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஆகவே, எந்த செயலிலும் நேர்மறையான சிந்தனையோடு செயல்பட்டு வெற்றியை அடையுங்கள்...

No comments:

Post a Comment