Tuesday, July 2, 2013

மாற்றி யோசியுங்கள்

இரண்டு கண்களும் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.

அவன் அருகில் இருந்த பலகையில்,

’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,

தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி வைத்து இருந்தான்.

அந்த வழியில் போவோர், வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள்.

யாரும் தருமம் செய்யவே இல்லை.

ஆனால் ஒருவர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டு விட்டு,

அந்த சிறுவனின் அருகில் வைத்து இருந்த பலகை பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் அதை படிக்கும் அனைவரும் அவன் தட்டில் சில்லரையை போட ஆரம்பித்தனர்.

மாலை ஆனதும் அந்த பலகையில் எழுதி வைத்தவர் வந்து பார்த்தார்.

அந்த சிறுவன் கேட்டான், ஐயா..! அந்த பலகையில் என்ன வாசகம்எழுதி வைத்தீர்கள் என்று கேட்டான் .

அவர் சொன்னார் நீ என்ன எழுதி வைத்தாயோ,

அதையே தான் நான் வேறு விதத்தில் எழுதி வைத்தேன் என்றார்.

அய்யா கொஞ்சம் எனக்கு படித்து காட்டுங்கள் என்றான் அந்த சிறுவன்.

”இன்றைய பொழுது நன்றாக விடிந்துள்ளது.

ஆனால்,

என்னால் தான் அந்த அற்புதத்தை பார்க்க முடியவில்லை”

என்று அந்த பலகையில் தான் எழுதிய வாசகத்தை அந்த சிறுவனுக்கு படித்து காண்பித்தார்.

இந்த வாசகத்தை படித்த அனைவரும்,

"உனக்கு கண் தெரியாது என்பதைவிட,

நல்ல வேளை நமக்கு கண் இருக்கிறது,

நம்மால் எல்லாவற்றையும் கண்டு ரசிக்கமுடிகின்றது"

என்று அவர்களின் மனதில் எண்ணி,

உனக்கு தருமம் செய்து விட்டு செல்கிறார்கள் என்று சொன்னார்.

அற்புதமானது எதுவென்றால் ஒருத்தன் மனசு விட்டு சிரிப்பது.

அவன் சிரிப்புக்கு காரணம் நீங்கள் தான் என்றால்,

அது அதைவிட அற்புதமானது…

No comments:

Post a Comment