Monday, January 6, 2014

விமர்சனத்தை தாங்க மாட்டாதவர்கள்

விமர்சனத்தை தாங்க மாட்டாதவர்கள்

திருவாளர் சுயகாதல்:
            
ஒரு சதவீதத்தினருக்கும் குறைவாகவே பெரும்பாலும் ஆண்களிடம் காணப்படும்.

அதிகமாக சுயமுக்கியத்துவமும் உலகிலேயே முதன்மையானவன் என்ற சுய முடிவும் தனிபட்ட முக்கியத்துவத்தையும் புகழையும் எதிர்பார்கிறார்கள்.

விமர்சனத்தை தாங்க மாட்டாதவர்கள்.விமர்சகர்களை தீவிரமாக எதிர்க்கிறார்கள்.தீவிரமாக பெரிய பெரிய பதவிகள் வெற்றிகள் மற்றும் கற்பனைக் கொட்டாத ஒருதலை காதல் போன்ற கற்பனைகள் பகல் கனவுகள் காண்கிறார்கள்.

மற்றவர்களை கேவலமாக நினைக்க கூடியவர்கள் எந்நேரமும் தன்னை துதிப்பவர்களையும் புகழ்பாடுபவர்களையும் விருப்ப கூடியவர்கள்.
      
ஆனால் என்றும் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தி சுரண்ட கூடிய உண்மையில் உணர்வுபூர்வமான ஆழமான உணர்வில்லாத தொடர்புடையவர்கள்.

முதுமையில் தனது உண்மையான நிலையை ஏற்றுகொள்ள முடியாமல் தவிப்பும் சோர்வும் அடைகிறார்கள்.

திருவாளர் ஒத்துழையாமை:

கோபம் எதிர்ப்பு உடன்பாடில்லாததை வெறுப்பை எதிர்மறை உணர்வை வெளிப்படுத்த பெரும்பாலானவர் நேரடியாக வெளிப்படையாக தனது ஆக்ரோசத்தை வண்மையாக தெளிவாக உணர்த்துவது இயல்பு.
      
மிகச்சிலர் இதற்க்கு நேர்மாறான மறைமுக எதிர்ப்பு என்ற ஒத்துழையாமை குணத்தில் உணர்த்த முயல்கிறார்கள்.
     
குழந்தைபருவம் தொடங்கி வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம்.பயமும் தெளிவான ஆழ்மன உணர்வும் காரணங்கள்.

சமூக வாழ்வில் அடக்கபட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதமில்லாதவர்களுக்கு அவர்கள் அனைவரும் ஒத்துழையாமை செய்தால் பலனிருக்கலாம்.

ஒரு தனிமனிதனாக பள்ளியில் குடும்பத்தில் வேலையிடத்தில் பொது இடத்தில் சமூகத்தில் இந்த குறைபாடு வெளிப்படும் போது தன்னைதானே தோற்கடிக்து விலக்கபடவும் வாய்ப்பாக அமையும்.கல்வியை வேலையை இழக்கவும் வழி வகுக்கிறது.

மற்றவரது  (பெற்றோர்/ஆசிரியர்/மேற்பார்வையாளர்)எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் உத்த்ரவுகளையும் எப்போதும் அக்கிரமம் அநீதி 

அதீதமானது என்று சரியாக புரியவில்லையென்பது சொல்லவில்லையென்று மறுப்பது மற்றவரை குற்றம் சொல்வது போன்ற நடத்தை உள்ளவர்கள்.
      
எதிர்ப்பவர்கள் விரக்தியும் தோல்வியும் இழப்பும் ஏற்பட மறைமுகமாக செயல்படுகிறார்கள்.

பள்ளியிலும்வேலையிடத்திலும் அயலரிடத்தும் காண்பிக்கிறார்கள்

No comments:

Post a Comment