Wednesday, January 1, 2014

வைராக்யம் எழுத்து குறிக்கோள் இலட்சியம் நம்பிக்கை நோக்கம்

வைராக்யம் எழுத்து குறிக்கோள் இலட்சியம் நம்பிக்கை நோக்கம்
                     
வைராக்யம்
  • மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திட வில்லையே
  • வெல்லுவோம் இனியும் மீட்போம் நம்புகழ் ஜ்யம் இல்லையே
  • கரையாத் ஆர்வமும் கலங்காத மனமும் இருந்தால் கரையேறாலாம்
  • மறையாத திடமும் மங்காத திறமும் இருந்தால் லட்சியமடையலாம்
  • தோல்வி என்பது பலருக்கு சவப்பெட்டிக்கு ஆணி
  • தோல்வி என்பது சிலருக்கு பணப்பெட்டிக்கு ஏணி
  • கடந்த காலத்தை பொற்காலமென களிப்பவர் வீணர்கள்
  • நடந்த காலத்தை பொற்காலமாக்க உழைப்பவர் வீரர்கள்
  • மன உறுதியென்பது கருங்கல்லின் சத்தம்
  • பிடிவாதமென்பது மண்பானையின் சத்தம்
  • முடிந்தவர்கள் சாதிக்கிறார்கள்
  • முடியாதவர்கள் போதிக்கிறார்கள்
  • இடிந்தவர்கள் வீழ்கிறார்கள்
  • எழுந்தவர்களே வெல்கிறார்கள்
  • சோர்வும் நெஞ்சமும் பேர்வுறும் சித்தமும் தேர்வுறுவதில்லை
  • நேர்வுறும் நெஞ்சமும் நிலையான உறுதியும் தேரேறுவாரே
  • வெற்றியின் மகுடங்களோ நம்மை வீழ்த்தும் பெரும்பாலும்
  • தோல்வியின் தழும்புகளோ நம்மை தூண்டும் மின்சாரம்
  • முயற்சி செய்து வென்றால் தான் இனிமை கூடும்
  • முயற்சி செய்து தோற்றாலும் வலிமை கூடும்      

துணிவு
  • நெஞ்சத்தில் துணிவு எண்ணத்தில் தெளிவு வேண்டும்
  • நேர்மையின் துணையும் வாய்மையின் வாக்கும் வேண்டும்
  • காரணமே இல்லாமல் கோபப்படுவன் மனிதன் ஆக மாட்டான்
  • காரணம் இருந்தும் கோபப்படாதவன் அறிஞன் ஆக மாட்டான்
  • புதைபடும் கணைக்கும் புறம் கொடாது யானை
  • யாது வரினும் மயங்காதே மானமே பெரிது
  • சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் ஒன்றும் ஆழமில்லை
  • வாழத் துணிந்தவனுக்கு வறுமை ஒன்றும் பாரமில்லை
  • அறிவும் தெளிவும் உள்ளவருக்கு வாழ்வில் பொருளும் தேவையில்லை
  • பணிவும் துணிவும் உள்ளவருக்கு பாதையில் துணையும் தேவையில்லை
  • கண்ணிருந்தும் கல்வியில்லாதவர் குருடரே
  • கையிருந்தும் துணிவில்லாதவர் முடவரே
  • காதிருந்தும் கேள்வில்லாதவர் செவிடரே
  • கருத்திருந்தும் சொல்லில்லாதவர் ஊமையே
  • தைர்யம் என்ற கைப்பிடி இல்லாது பல வாள்கள் உறங்குகின்றன 
  • துணிவு என்ற கைத்தடி இல்லாது பல கால்கள் முடங்குகின்றன‌
  • பணிவாக பழகத் தெரிந்தவருக்கே பாசம் கிடைக்கும்
  • துணிவாக மறுக்கத் தெரிந்தவருக்கே சுதந்திரம் கிடைக்கும்
  • பகையை தவிர்ப்பது என்பது தற்காலிகத் தீர்வு
  • பகையை சந்திப்பது என்பதுவே நிரந்தர பாதுகாப்பு

எழுத்து
  • வாள் எடுக்கும் வீரன் கை ஒரு எதிரியை எதிர்க்கும்
  • சொல் தொடுக்கும் போனா மை ஒரு கோடியை எதிர்க்கும்
  • மருந்தும் விருந்தும் சில நாளோ
  • பெயரும் புகழும் பல நாட்கள்
  • உடலும் உயிரும் சில நாளே
  • சொல்லும் எழுத்தும் பல நாட்கள்
  • கருத்துகள் என்பது கட்டப்படாத உதிரிப்பூக்கள்
  • கவிதைகள் என்பது லயத்தில் தொடுத்த மலர் மாலை
  • உள்ளத்தைச் சொல்பவரை  விட உவப்பத்தை சொல்பவர் பின் உலகம்
  • நல்லதைத் சொல்பவரை விட நாக்குக்கு குறிப்பவர் முன்செல்வம்
  • தீமையை நன்மையென்று போற்றினால் துயரம்
  • நன்மையை தீமையென்று தூற்றினால் பெருந்துயரம்
  • சில புத்தகண்க்களை படித்தேன் என்று வெளியில் சொன்னால் வெட்கம்
  • சில புத்தகங்களை படித்ததில்லை என்று வெளியில் சொன்னால் வெட்கம்
  • நல்ல ப்ஃழக்கம் எனும் கற்களால் கட்டபட்ட கோபுரமே ஒழுக்கம்
  • நல்ல கருத்து எனும் சொற்களால் கட்டபட்ட மாலையே கவிதை
  • ஒரு பெண்ணை விரும்பும இரு நன்பர்கள் விரைவில் பகைவராவார்கள்
  • ஒரு புத்தகத்தை விரும்பும் இரு உள்ளங்கள் சிறந்த நண்பர்களாவறார்கள்

குறிக்கோள்  : இலட்சியம்
  • ஒரு இலக்கை அடையும் முன் அளந்தால் பெரிதாக தோன்றும்
  • ஒரு இலக்கை அடைந்த பின் அளந்தால் சிறிதாகத் தோன்றும்
  • இலக்கியம் என்பது வாழ்வை ஒவியமாக்கி அழகூட்டும்
  • இலட்சியம் என்பது வாழ்வை காவியமாக்கி புகழ்ட்டும்
  • காட்சிகளை கவிதையாக்குவது நம் இலக்கியம்
  • கவிதைகளை காட்சிகளாக்குவது நம் இலட்சியம்
  • உன் நன்பனது பெயர் தெரிந்தால் நீ யரென் நான் சொல்வேன்
  • உன் இலட்சியத்தின் பெயர் தெரிந்தால் உன் குணமெது நான் சொல்வேன்
  • என்னை இறை படைத்தது எதற்காக என்று கேட்டவன் மனிதன்
  • தன்னை இறை படைத்தது இதற்காக என்று அறிந்தவன் புனிதன்
  • உடைந்த கற்களும் வளைந்த பாத்திரங்களும் உலக அதிகமாகாது
  • உடலின் தேவைகளும் ஆடம்பர ஆசைகளும் வாழ்வின் குறிக்கோளாகாது
  • இழிந்த ஆசையில் வெற்றிபெற்றாலும் நல்லதல்ல
  • உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுற்றாலும் தோல்வியல்ல
  • எந்தச் செயல் செய்பவர்க்கும் இம்மையில் தம்மை
  • இயக்குவதற்கு ஒர் இன்பம் தரும் இலக்கு வேண்டும்
  • நரம்பிலே மின்னலும் நாடியின் குருதியிலே புனலும் வருவது கொள்கையாலே
  • உடம்பிலே மிருக்கும் உறுதியில் பிடிப்பும் வருவது குறிக்கோளாலே
  • சிறிய மலையைத் தேர்ந்தவர் சீக்கிரம் ஏறி சீரழிகிறார்
  • பெரிய மலையை ஏறியவர் தாமதமானாலும் புகழ்பெறுகிறார்

நம்பிக்கை
  • பிரச்னைகளுக்கு தீர்வை காண்பவன் நம்பிக்கை வாதி
  • தீர்வுகளில் பிரச்னையை காண்பவன் அவநம்பிக்கைவாதி
  • மனிதர்க்கு இருகன் அறிஞருக்கு மூன்றாவது கண் ஞானக்கன்
  • அற்பருக்கு இருகை ஆற்றலுள்ளவர்க்கு மூன்றாவது கை நம்பிக்கை
  • மரணத்துக்கு பின் வாழ்வு உண்டு என்று நம்பிக்கை தவறு
  • தோல்விக்கு பின் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கை உயர்வு
  • நம்பிக்கையெனும் எரிபொருள் தீராத வரை நம் உயிர் வாகனம் ஒடும்
  • நம்பிக்கையெனும் எண்ணெய் காயாத வரை நம் தீப விளக்கு எரியும்
  • உண்மை ஒருநாள் ஒளிரும்
  • நல்ல உள்ளங்கள் அன்று தெளியும்
  • உலகம் ஒருநாள் திருந்தும்
  • கள்ள உள்ளங்கள் அன்று வருந்தும்
  • உலகின் கொடுமை முட்டாள்கள் தம் அறிவை நம்புவதால் வந்தது
  • உலகின் வறுமை அறிஞர்கள் தம் அறிவை நம்பாத்தால் வந்தது
  • மருந்து பலன் தரும் என்று நம்பி உண்டாலே அது குணம் தரும்
  • வாழ்வு பயன் தரும் என்று நம்பி வாழ்ந்தாலே அது சுகம் தரும்
  • அதிட்ட நம்பிக்கை கொண்டவன் கைத்தடியில் நடக்கும் குருடன்
  • இறை நம்பிக்கை கொண்டவன் இறக்கையில் பறக்கும் பறவை
  • ஒருவனை நல்லவனாக மாற்றும் வழிநம்பிக்கை வைப்பதே
  • ஒருவனை வல்லவனாக மாற்றும் வழி நம்பி கை கொடுப்பதே.

நோக்கம்
  • நோக்கம் நேர்மையானது என்றால் வேற்றியில் சந்திதேகமில்லை
  • நோக்கம் நியாயம் இல்லை என்றால் தோல்வியில் சந்தேகமில்லை
  • இலக்கு இல்லாத கப்பலும்
  • இலட்சியம் இல்லாத மனிதனும் மூழ்குவார் 
  • இலக்கு இல்லாத அம்பும் 
  • இனிமை இல்லாத சொல்லும் ஆபத்து தரும்
  • கல்லைக் கன்டவன் கடவுளை உணர்வதிலை
  • முள்ளைக் கன்டவள் மலரை பறித்ததில்லை
  • தெளிவான ஒழுக்கமுடையவர்க்கு காலமும் கடவுளும் பணியாட்கள்
  • தெளிவான இலட்சியமுடையவர்க்கு காற்றும் கானலும் வேலையாட்கள்
  • பணத்தை பெருமையாக நினைத்த பலர் கயவராகி விட்டனர்
  • நமக்காக நாம் பிரார்த்திக்கும் போது நமது உறுதி மொத்தமாகிறது
  • பிறருக்காக நாம் பிரார்த்திக்கும் போது நமது குருதி சுத்தமாகிறது
  • அறிஞர் மனம் ஆசை என்ற குப்பைகளால் குவிக்கப்பட்டுள்ளது
  • இலக்கணம் இல்லாத வாழ்க்கை வெறும் பிதற்றலே
  • இலட்சியம் இல்லாத வாழ்க்கை வெறும் பதட்டமே
  • மலர்செடியில் முள்ளா என்று விருந்துபவன் அவநம்பிக்கைவாதி
  • முள்செடியில் மலரா என்று வியப்பவள் நம்பிக்கைவாதி

No comments:

Post a Comment