Wednesday, January 8, 2014

பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்

பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்
                 
பக்குவம்

காமத்தை கடந்தவன் கர்ம வீரன்
சினத்தை வென்றவன் சிற‌ந்த வீரன்
நெருப்பினால் பதப்பட்ட இரும்பு எந்த எடையும் தாங்கும்
பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்
கல்லும் மணியானது காலத்தாலே
சொல்லும் புகழானது ஞானத்தாலே

புல்லும் மருந்தானது குணத்தாலே
கல்லும் கடவுளானது நம்பிக்கையாலே
மாங்காய் கனிந்தால் புளிப்பு போய் இனிப்பு வரும்
மனமெனும் காய் கனிந்தால் சலிப்பு போய் சிரிப்பு வரும்
மூடிக் கிண்டிருந்தால் வாய்க்குள் ஈக்கள் வருவதில்லை
மூடிக் கொண்டிருக்கும் வாய்க்கு வம்புகள் வருவதில்லை
துணிவு உல்ளவர்கள் தான் மன்னிக்க முடியும்
மகிழ்வு உள்ளவர்களால் தான் மறக்க முடியும்
சலிப்புள்ள மனங்களுக்கு ஒரு போதும் சகிப்பு வருவதில்லை
மமதையுள்ள மனிதர்களுக்கு ஒரு போதும் மன்னிக்க தெரிவதில்லை
வெப்பமாக வெகுளும் மனிதர் வேதனை பெற்றெடுத்த பிள்ளைகள்
தெப்பமாக குளிரும் மாந்தர் தெய்வம் பெர்றுதந்த பிள்ளைகள்
மலை போல அறிவிருந்தாலும் ஒருதுளி பொறுமைக்கு ஈடாகாது
கடல்போல பண்பிருந்தாலும் சிறுதுளி அன்புக்கு அது ஈடாகாது

No comments:

Post a Comment