Tuesday, January 7, 2014

தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத பேச்சால்

தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத பேச்சால்…

தேவையில்லாமல் பேசுவதும் தேவைப்படும் போது பேசாமல் இருப்பதுவும் ஆபத்து

       
அடிக்கடி நாம் இதை சட்ட மன்றம் பாராளு மன்றம் தொடங்கி டீக்கடை பெஞ்ச் வரை நிறைய பார்க்கிறோம்

பேச வேண்டியவர்கள் வாயைத்திறந்து பேசுவதே இல்லை
தேவையில்லாதவர் வாயை மூடி இருப்பதுவும் இல்லை

வீடாகட்டும்,நாடாகட்டும்,
தேவையில்லாத இடத்தில்
தேவையில்லாத நேரத்தில்
தேவையில்லாத பேச்சால்
தேவையில்லாமல் உருவாகும் 
வம்புகளும் கலவரங்களும் வளருகின்றன.

ஆனால் அதே நேரத்தில் தேவைப்படும் போது
பெற்றோர்களும்,பெரியோர்களும்
மூத்தவர்களும் அமைதியாக இருப்பதால்
ஏற்படும் விளைவுகள் அதை விட ஆபத்தாகின்றன.

No comments:

Post a Comment