Wednesday, December 18, 2013

அறிஞரின் அவையிலிருந்து - 2

                    
 மன்னிப்பு

மன்னிப்பு என்பது தண்டனையை விட கொடிது 
அவரது மனம் தண்டிக்கும்__‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__ஆல்டஸ்ஷக்ஸ்லி

பொதுமக்களுக்கு சகிப்பு அதிகம் 
அறிவாளிகளை மட்டும் மன்னிக்கமாட்டார்கள்____ஆஸ்கார் ஒயில்ட்

பலகீனமானவரால் மன்னிக்க முடியாது.
 பலமுள்ளவரே மன்னிக்க தெரிந்தவர்____மகாத்மா

தவறுவது மனித இயல்பு
 மன்னிப்பதே தெய்வீககுணம்____அலக்ஸாண்டர் போப்

மன்னிப்பு என்பது வேறு மறப்பது என்பது வேறு____மகாத்மா

நாம் யாரையும் மன்னிக்க விரும்புகிறோம் 
ஆனால்  சுலபமானதையே மன்னிக்கிறோம்____சாமுவேல் ஸ்மைல்ஸ்

மன்னிக்கும் சக்தி உடையவருக்கே அன்பின்  சக்தி வலுப்படும்____‍மார்டின் லூதர்கிங்

உடனடியாக மன்னிப்பவருக்கு 
துரோகத்தின் காயம் விரைவாக ஆறும்_____சாமுவேல் ஜானஸன்

தூயஉள்ளம் உள்ளவரின் தவறுகள் யாராலும்  மன்னிக்கபடும் ______வால்ட் வில்ட்மேன்

மன்னிப்பு கடந்த காலத்தை மாற்றப் போவதில்லை 
ஆனால் எதிர்காலத்தை விரிவாக்கும்___‍‍பால் போஸ்.

கோபம்

கோபமுடைய மனிதன் போரில் மட்டுமல்ல 
வாழ்விலும் தோற்பான்

கோபத்துக்காக சரியான பதில் வார்த்தை மெளனமே

துணிவு தீ போன்றது வெறும் கோபம் புகை போன்றது___டிஸ்ரேலி

கோபம் என்பது தான் வீழ்த்தியவரின் 
சாம்பலோடு தானும் அழியும்___செனீகா

அடிக்கடி கோபப்படுபவன்
விரைவில் வயோதிகனாகி விடுவான்____அரிஸ்டாடில்

ஒரு சிறு ஆத்திரமான வினாடி 
பல பெரிய திட்டங்களை சீரழிக்கும் கன்பூசியஸ் 

கூரானது நாக்கு கோபத்தால் இன்னும் கூராகும்_லாங்பெல்லோ

நீதியோ அநீதியோ 
கடுமையான சொற்கள் தீங்கிழைப்பைவையே_சொபக்ஸ்ஸ்

நம்மால் ஒரு மணி நேரம் தொடர்ந்து 
யாரிடமும் அன்பாய் இருக்க முடிவதில்லை_டென்னிஸன்

சினம் என்பது முட்டாள்களின் சேற்றில் வளரும் செடி‍_ஜன்ஸ்டீன்

மனிதன்

ஒரு ரகசியக் கதவு வழியாக 
ஒவ்வொருவருக்குள் இறைவன் வருகிறான்_எமர்சன்

இறைவன் கொடுத்த பரிசு இந்த வாழ்வு,
சரியாக பயன்படுத்துவது மனிதன் முயற்சி _வால்டேர்

இறைவன் நமக்கு கொடுத்த முகம் ஒன்று 
அதற்கு நாம் முகமூடி போட்டுகொள்கிறோம் ___ஷேக்ஸ்பியர்

இறைவன் தந்திரமானவன் 
ஆனால் ஒரு போதும் ஏமாற்ற மாட்டான்___எய்ன்ஸ்டீன்

இறைவன் ஆசிர்வாதம் செய்வதற்கு முன் 
பல அல்லல் தருவான்__மகாத்மா

இறைவன் மனிதனை படைத்த பின் திருப்தியடைந்தான் 
ஆனால் ஏமாந்து விட்டான்__சாமுவேல் பட்லர்

இறைவா என்னை உனது தொண்டரிடமிருந்து காப்பாற்று

இறைவன் தீயவரை தண்டிக்கிறான் 
நல்லவரை பாராட்டுகிறான் என்பதை நம்பமுடியவில்லை___எய்ன்ஸ்டீன்

இறைவன் மனிதனை படைத்த போது 
தனது திறமையில் தோற்றுவிட்டன்___ஆஸ்கார் ஒயில்

இறைவன் நம்முடன் இருக்கும் போது 
எவர் நமக்கு எதிராக இருக்க முடியும்___பைபிள‌

அகங்காரம்

எனது அதிட்டம் வீழ்ந்த போது அகங்காரம் வீழ்ந்தது ___சேக்ஸ்பியர்

ஏழை நாடுகள் பசியிலே வளர்ந்த நாடுகள் 
பசியும் அகத்தையும் ஒன்றுபடுவதில்லை_ஸ்விபிட்

அழிவுக்குமுன்னே அகத்தையும் 
வீழ்ச்சிக்கு முன்னே வீராப்பும் ஒளிவிடும்

மனிதருடைய அகந்தை 
தேவதைகளாகவே விரும்புகிறது__அலக்ஸான்டர் போப்

முடிவில்லாத அகங்காரம் உள்ளவர் 
எப்போதும் வளராது சிறிதாக தேய்வார்___வால்டேர்

காயப்பட்ட அகந்தையின் தழும்புகள் 
முதுமையிலும் துயரம் தரும்___சந்தாயானா

அகந்தையினால் நம்மை நாமே ஏமாற்றிகொள்கிறோம் 
ஆழமான ஆன்மா அதை ஏற்பதில்லை_கார்ல்யுங்

அகந்தையும்/ சினமும் அகிம்சையை ஏப்பம் விடும் அரக்கர்கள்__மகாத்மா

பெருத்தன்மை என்பது சக்திமீறி கொடுக்கும் 
கர்வம் தேவையைகூட மறுக்கும்__கலீல்கிப்ரன்

ஆசை/அகந்தை என்ற அழுக்கு நீங்கினால் 
மனம் பரிசுத்தமான அமைதியடையும்___சாய்பாபா

No comments:

Post a Comment