Tuesday, December 10, 2013

நேர்மறை எண்ணங்கள் / கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்ப‍டி?

♥♥ツ.. உண்மையான அன்பை சொல்லி புரிய வைக்க முடியாது .. கணக்கு பாடம் போல நடத்தாதீர்கள் .. உணர்த்துங்கள்!!!

♥♥ツ.. இமை மூடி நீ உறங்கு .. விழியின் வழியில் நான் காவல் இருக்கிறேன் .. விழியின் மீது வலி வராமல் காக்க ..

♥♥ツ.. முடிவு என்பது தான் கடைசி அப்புறம் என்ன முடிவை மாத்திக்க மாட்டேன்

♥♥ツ.. ஞானம் இல்லாவிட்டால் வானத்தை எட்ட முடியாது

♥♥ツ.. விவேகம் காண்பவன் சுயநலம் காண்பதில்லை

♥♥ツ.. எதிரிகளே சிறந்த ஆசிரியர்

♥♥ツ.. தோல்விகளே சிறந்த புத்தகம்

♥♥ツ.. தோல்வி என்றுமே வெற்றிக்கான முதல் படி இல்லை முயற்சி தான் வெற்றிக்கான முதல் படி

♥♥ツ.. குறை கண்டால் நிறை காண முடியாது

♥♥ツ.. குறை காண்பவன் நிம்மதியாக வாழ முடியாது

♥♥ツ.. உண்மையானவன் என்றும் உள்ளத்தையும் உள்ளதையும் மட்டுமே பார்ப்பான்

♥♥ツ.. எழுத்தின் ருசி கண்டவனுக்கு எழுதியவனின் வலி தெரியாது

♥♥ツ.. உணர்வாளன் என்றுமே அடுத்தவன் உணர்வை உணர்ந்தது இல்லை

♥♥ツ.. பாதை மாறியவன் பதவி அடைவதில்லை

♥♥ツ.. சிலைகளின் அழகையும் கலைநயத்தையும் காண்பவன் கடவுளின் அன்பை காண்பதில்லை
♥♥ツ.. பாசம் கொண்டவர்களுக்கு பகையும் வருவதில்லை போரும் வருவதில்லை

♥♥ツ..விலையை கண்டவனுக்கு உழைப்பின் அருமை தெரியாது

♥♥ツ.. சந்தோசமாய் இருப்பவர்கள் தான் சந்தோஷத்தை தர முடியும் என்பது தவறு

♥♥ツ.. குணம் கொண்டவர்கள் சினம் கொள்வதில்லை

♥♥ツ.. நினைவுகள் கொண்டவர்கள் நிம்மதி அற்றவர்கள்

♥♥ツ.. தோற்காதவன் ஜெயிப்பது இல்லை

♥♥ツ.. கல்லுக்குள்ளே ஈரம் இருக்க ஏன் மனிதன் சொல்லுக்குள்ளே இருக்க கூடாதா ..?

♥♥ツ.. நஷ்டம் என்று வருத்தம் கொள்ள நம்முடையது என்று ஏதுமில்லை

♥♥ツ.. மனம் கட்டுப்பாடு இல்லை என்றால் சினம் கட்டுப்படாது

♥♥ツ.. குற்றம் உள்ளவர்கள் தான் குறை கூறுவார்கள் 10

♥♥ツ.. உள்ளத்தின் அழகை கண்டவனுக்கு வெளி தோற்றம் பொருட்டல்ல

♥♥ツ.. உதவாத பொருளை தான் வைத்திருந்தும் பயனில்லை

♥♥ツ.. தற்செயலுக்கு ஸ்டேட்டஸ் தெரியாது

♥♥ツ.. இறைவனிடம் இல்லை என்பதே இல்லை ஆனால் இறைவனே இருந்தால் பரவா”யில்லை”

♥♥ツ.. பணத்தின் மீது பேராசை கொண்டவர்கள் பாவங்கள் புரிய பயப்படுவதில்லை

♥♥ツ.. விட்டது மீண்டும் திரும்பி வராது .. வாயினால் வந்த சொல்லும் அம்பு எய்த வில்லும்

♥♥ツ.. கனவு காண்பவன் கடைசி வரை கண்களை திறந்து நிஜங்களை காண்பதில்லை

♥♥ツ.. எதையும் எதிர் பாராமல் இருந்து விடு ஏமாற்றம் அடையாமல் வாழலாம்

♥♥ツ.. கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே -கீதை கடமையை செய் பலனை எதிர் பார் – விவேகானந்தர் ஏப்பா இதுல எத செய்ய

♥♥ツ.. சோம்பேறிக்கு ஒவ்வொரு நாளும் சுகம் உழைப்பாளிக்கு ஒவ்வொரு நாளும் யுகம்

♥♥ツ.. குப்பைகளும் குபேரன் சொத்துகள் தான் அதன் பயன் அறிந்தால்

♥♥ツ.. சிறு துரும்பு கிடைத்தால் பல்லை குத்தி அழுக்கை பெயர்த்து எடு பெரு துரும்பு கிடைத்தால் பல்லை யே பெயர்த்து எடு ஆனது ஆகட்டும்

♥♥ツ.. நம் மனதில் நின்றவர்கள் மீது என்றுமே நாம் பழி போடுவது இல்லை

♥♥ツ.. உங்களுக்கு பிடித்தவர்கள் எல்லாம் நல்லவர்கள் பிடிக்காதவர்கள் எல்லாம் கெட்டவர்கள் # நல்லா இருக்குயா உங்க பாலிஸி

♥♥ツ.. உணர்வாளன் உணர்வை அளந்தவன் அல்ல உணர்வால் உலகை ஆள்பவன்

♥♥ツ.. உணர்வாளர்களின் கடைசி கட்ட நிலை வெறியர்களாக தான் இருக்க கூடும்

♥♥ツ.. உணர்வாளர்கள் என்று ஊரை ஏமாற்றுபவர்கள் மத்தியில் உண்மையான உணர்வாளன் இருந்தாலும் உணர மாட்டார்கள் ம(ா)க்கள்

♥♥ツ.. ஜெயிக்கும் வரை தீவிரவாதிகள் ஜெயித்” தப்பின்” போராளிகள் #பில்லா

♥♥ツ.. நம்பிக்கையானவர்கள் எல்லாம் நண்பர்கள் தான் .. ஆனால் நண்பர்கள் எல்லாம் நம்பிக்கை ஆனவர்கள் அல்ல குற்றம் உள்ளவர்கள் தான்

கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்ப‍டி?

எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகி றோம். ஆனால் ஏதேனும் தொல்லைகள் வந்து சேரத்தான் செய்கிறது. எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் தவிக்கும். மனதிலும் உடலிலும் விரும்பத்தகாத மாற்றங் கள் ஏற்பட்டு குழப்பம் தோன்றிவிடும். இப்படிப் பட்ட சங்கடங்களை சமாளிக்கும் விதம் ஒவ் வொருவருக்கும் வேறுபடும். அவரவர்களுடை ய ஆளுமையை பொருத்து திறனும் இருக்கும். சிலருக்கு மிக எளிதாக இருக்கிறது. இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள் .இவர்களுக் கு சில தகுதிகள் அமைந்திருக்கின்றன. அல்ல து அவற்றை வளர்த்துக் கொண்டார்கள். அவை

எதிலும் நம்பிக்கை கொண்டிருப்பது.(confidence)

நம்மால் இதை சமாளிக்க முடியும் என்ற நம் பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.என்னால் முடியக்கூடிய ஒன்றுதான் என்ற நம்பிக்கை யை எப்போதும் மனதில் தாங்கி இருக்கிறா ர்கள்.தனக்கு திறன் இருக்கிறது என்று நம்புகி றார்கள். தன்னைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார் கள்.

சுய மதிப்பு .(self esteem)

நம்மை நாமே மதிக்காவிட்டால் யார்தான் நம் மை மதிப்பார்கள்? தான் சரியானவன் என்ற எண்ணமும் ,யாருக்கும் சளைத்தவன் இல்லை என்ற எண்ணமும் இருக்கிறது.

கடுமையாக உணர்வதில்லை.(sense of control)

பெரிய தீர்க்க முடியாத பிரச்சினையாக எதையும் நினைப்பதில்லை. கடி வாளத்தை கையில் வைத்தி ருக்கிறார்.உணர்ச்சிகளில் சிக்கி அலைக் கழிக்கப் படுவதில்லை.

நல்லதே நடக்கும் (optimism)

தனது முயற்சிக்கு நல்ல விளைவுகளை எதிர்நோ க்குகிறார்.இந்த நம்பிக்கை தடுமாற்றமில்லாமல் செயல்பட வைக்கிறது.

நேர்மறை எண்ணங்கள்.(positive thinking)

அவர் நேர்மறையாக சிந்திக்கிறார்.எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறார். மேலே சொல்லப் பட்ட வை நம்மை நாமே பரி சோதித்துக்கொள்ள சொ ல்லப்பட்டவை தான். இந்த தகுதிகள் நமக்கு இருக்கிறதா என்று பார்க் கவும், இல்லாவிட்டால் வளர்த்துக் கொ ள்ளவும் முடியும்.

No comments:

Post a Comment