Saturday, December 28, 2013

தன்னம்பிக்கை -போராட்டம்- மனோசக்தி– மனோதிடம்- அஞ்சாமை — கொள்கை

தன்னம்பிக்கை

  • உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு
  • உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு
  • தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை
  • தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை
  • விழவது நம் வாடிக்கை
  • வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை
  • தொழுவது நம் நம்பிக்கை
  • நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை
  • மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான்
  • முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே தோற்கிறான்
  • கண்ணிலே நம்பிக்கை இருந்தால் கல்லீலே  தெய்வம் உண்டு
  • கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
  • வெற்றி நிச்சயம் என்ற எண்ணமே வெற்றிக்கு முதல் இரகசியம்
  • தோல்வி நிச்சயம் என்ற அச்சமே தோல்விக்கு மூல காரணம்
  • உங்களது சந்தேகங்களையே சந்தேகித்து விரட்டுங்கள்
  • உங்களின் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை வையுங்கள்
  • என்னாலும் செய்ய முடியும் என்பது நம்பிக்கை
  • என்னால்தான் செய்யமுடியும் என்பது அகந்தை
  • பறக்கத் துணிந்தவருக்கு இறகுகள் பாரமில்லை
  • இறக்கத் துணிந்தவருக்கு மரணம் ஒரு பயமில்லை.                                 

போராட்டம்

  • விமர்சனம் என்பது கடல் பயணத்தின் தடை கல் விலகிச்செல்ல முடியும்
  • வீண்பகை என்பது சாலை பயணத்தின் தடை கல் தகர்த்தே செல்ல முடியும்
  • உரிமை மேல் ஆண்மை பாராட்டாதவர் சாந்தம்
  • பெருமை இல்லாத பிணத்தில் பிறந்ததோர் சாந்தக்குளிரே
  • உன் சுயசக்தியே உனது ஆயுதம் துஞ்சாமல் போராடு
  • உன் சுயபுத்தியே உனது ஆசான் அஞ்சாமல் போராடு
  • மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
  • தயங்குபவர் தலைவராக இருப்பதில்லை
  • கலங்குபவர் கலைகளில் சிறப்பதில்லை
  • கசங்குபவர் முண்ணனியில் வருவதில்லை
  • எடை இல்லாது விலையில்லை
  • நடை இல்லாது நாட்டியமில்லை
  • படை இல்லாது போருமில்லை
  • தடை இல்லாது வெற்றியுமில்லை
  • காவியினால் மட்டுமே வறுமைக்கு சாவி கிடைக்காது
  • கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
  • துடுப்பு இலொலாமல் தோனியில்லை
  • துணை இல்லாமல் பயணமில்லை
  • படி இல்லாமல் ஏணியில்லை
  • அடி வாங்காது ஏற்றமில்லை
  • கடல்கள் மையத்திலிருந்து பல புயல்கள் புறப்படுகின்றன‌
  • இதயத்திலிருந்து பல புரட்சிகள் புறப்படுகின்றன,

மனோசக்தி
  • தண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட வறட்சி வரும்
  • கண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட துயரம் வரும்
  • ஒரு நொடி அழும் போது மரணம் ஓரடி முன்னோறுகிறது
  • ஒரு நொடி சிரிக்கும் போது மரணம் ஒரடி பின்னேறுகிறது
  • கவ்விய கவலையும் துயரும் விட்டு விட்டால்
  • உலகு எல்லாம் சேரினும் நம் முன் தீயிலிட்ட பங்சே
  • சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
  • புதைப்படும் கணைக்கும் புறம் கொடாது யாணை
  • அண்டத்தையே பிண்டமாக்கும் அழிவு சக்தி அனுவுக்குள்ளே
  • பிண்டத்தையே அண்டமாக்கும் ஆக்க சக்தி ஆன்மாவுக்குள்ளே
  • உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
  • உடலிலே உழைப்பிருந்தால் காலன் பயமும் மறைந்து போய்விடும்
  • வீரமுள்ள மனிதனை கொல்ல முடியும் தோற்கடிக்க முடியாது
  • விவேகமுள் அறிஞனை விரட்ட முடியும் வீழ்த்த முடியாது
  • நல்ல தொழிலாளியிடம் கடின வேலை தருகிறார் முதலாளி
  • நல்ல இருதயத்திடம் தனது வேலையைத்தருகிறான் இறைவன்
  • தீராத பசியை விட ஒயாத உணவால் மாண்டவர் பலர்
  • ஒயாத உழைப்பை விட தீராத உறக்கத்தில் அழிந்தவர் பலர்
  • துயரத்தின் தீயில் இருந்தே பல மாமேதைகள் கருவானர்கள்
  • துன்பத்தின் சாம்பலில் இருந்தே பல மாமனிதர்கள் உருவானர்கள்

மனோதிடம்

  • குளிரிலும் கோடையிலும் சமமாக இருப்பது உடலின் வெப்பம்
  • குறையிலும் நிறையினும் சமமாக வாழ்வது மனிதின் நுட்பம்
  • துயரங்கள் சிலரை சுட்ட எஃகு போல உறுதியாக்குகிறது
  • தோல்விகள் சிலரை சுட்ட கடுகு போல சிதைத்து விடுகிறது
  • உடல் தளர்வது தோலில் ஏற்படும் காயம் போல‌
  • உளம் தளர்வது எலும்பில் ஏற்படும் முறிவு போல‌
  • பலமில்லாதவர்கள் பாதையின் கற்கள் தடைக்கற்கள்
  • பலமுள்ளவர்கள் பாதையின் தடைகள் படிக்கற்கள்
  • இத்தனி உலகிலே எத்தனை துயர் கண்டாலும் அத்தனையும்
  • நம் அழுக்கையெரித்து நல் சுவர்ணமாக சோதிக்கத்தானே
  • பிறவிக்குருடனின் பால் நிறம் கொக்கு போல என்றாணம் ஒரு மூடன்
  • சற்றே பாதையாதிருந்து பாரும் எதிலும் பேரின்பமே திகழும்
  • துயரென்பது நரி போல ஒடதுடத்துரத்தும் நின்றதும் நின்று விடும்
  • துன்பமென்பது நிழழ்போல ஒட ஒடத் தொடரும் நின்றதும் நின்று விடும்
  • கையகலமே அவன் கொடை
  • கருணை மனத்தின் அகலமே மாண்பு
  • கண்ண கலமே அவள் கல்வி
  • கலங்காத இதயத்தின் அகலமே அவன் வாழ்வு
  • திறமையான வாளுக்குத் தேவை உறுதியான கைப்பிடி
  • வலிமையான கைகளுக்குத் தேவை உறுதியான இருதயம்

அஞ்சாமை
  • தங்கத்தை தீயிட்டாலும் அதன் தரம் குணம் மாறுவதில்லை
  • அங்கத்தை தீயிட்டாலும் ஆன்றோர் பொய் பேசுவதில்லை
  • இழப்பு இல்லாமல் ஒரு லாபம் அடைய முடியாது
  • ஆபத்து இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது
  • அஞ்சாமை என்பது தெளிந்த அறிவின் விளைவாகும்
  • துஞ்சாமை என்பது துணிந்த துணிவின் விளைவாகும்
  • அஞ்சாமையுடன் நெஞ்சிலிருந்து வீரத்திருமகள் கட்டியனைப்பான்
  • துஞ்சாமையுன் விழியிலிருந்தால் வெற்றித்திருமகள் வீட்டிலிருப்பான்
  • உழைப்பதற்கு முதுகு வளை
  • எதிர்ப்பவர்க்கு முதுகு வளைக்காதே
  • அறிஞருக்கு தலை வணங்கு
  • அறிவானுக்கு தலை குணியாதே
  • வளைந்து நெளிந்து குழைந்து தளர்ந்து வாழ்வது புழுவின் வாழ்க்கை
  • நிமிர்ந்து துணிந்து பாய்ந்து வளர்ந்து வெல்வது புலியின் வாழ்க்கை
  • கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாத கால்கள் ஊர் போய்ச் சேரும்
  • வில்லுக்கும் சொல்லுக்கு அஞ்சாத காதுக்கு புகழ் வந்து சேரும்
  • வளைந்து கொடுப்பவர் எந்தக் கதவுக்குள்ளும் நுழைந்து விடுவார்
  • நிமிர்ந்து நடப்பவர் எந்தத் தடையையும் தாண்டிவிடுவார்
  • அஞ்சாமை என்பது ஆண் முகத்தில் மீசை
  • ஆணவம் என்பது பெண் முகத்தில் மீசை

கொள்கை
  • பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொள்கை வைக்கிறான்
  • பிறக்கும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒரு செய்தி அனுப்புகிறான்
  • அற்புதமான இலட்சியத்திற்காக உதவியை உதறி விடு
  • அற்பனுன இலட்சியத்துக்காக இலட்சியத்தை உதறி விடாதே
  • அற்ப தூசுகள் காற்று வரும் போது பறக்கலாம் என காத்திருப்பார்கள்
  • அற்ப மனிதரும் அதிட்டம் வரும் போது ஆடலாம் என காத்திருப்பார்கள்
  • ஆடையை விட்டபின் கிடைத்தது வெற்றியுமல்ல‌
  • கொள்கையை விட்ட பின் அடைந்தது கோட்டையுமல்ல‌
  • கொள்கை என்பது பழமைக்கும் புதுமைக்கும் இடையே தடையாகக் கூடாது
  • குறிக்கொள் என்பது பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக வேண்டும்
  • துக்கத்துக்கு அழுவது முகம் துடைப்பது போல ஒரு பழக்கமாகி விட்டது
  • கொள்கையை பேசுவது மூக்கு சிந்துவது போல ஒரு வழக்கமாகி விட்டது
  • வெற்றி தொடர்ந்த போது பாதை மாறாதே
  • தோல்வி தொடர்ந்த போதும் கொள்கை மாறாதே
  • கொள்கை பிடிப்புள்ளவர் வாழ்வு நெடும் பயணத்தின் நீளம்
  • குரங்கு பிடிப்புள்ளவர் வாழ்வு செக்கு மாட்டின் வட்டம்
  • ஆடையை அவிழ்த்தவருக்கு பரிசு என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • கொள்கையை விட்டவருக்கு பதவி என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • இலக்கு இல்லாத கப்பல்கள் கரை சேர்வதில்லை
  • இலட்சியம் இல்லாத மனிதர்கள் வெற்றி காண்பதில்லை

No comments:

Post a Comment