Tuesday, July 1, 2014

அனுபவம்

வாலால் தேளும் வாயால் பாம்பும் விடமென அறிந்து 

அடி முதல் முடிவரை ஆய்ந்து பாராது அழியாதே 

மனிதனை கயவானாக்குவது வளமையும் அதிகாரமும்தான்

மனிதனை புனிதனாக்குவது அறிவும் அனுபவமும்தான்

ஆசிரியரோ போதித்த பிறகே தண்டிக்கிறார்

அணுபவமோ தண்டித்த பிறகே போதிக்கிறது

காற்றுக்கு ஏற்ப மாறாதவன் கடலில் மூழ்குவான்

காலத்துக்கு தக்க மாறாதவன் கவலையில் மூழ்குவான்

தெளிந்தது கொண்டு தெளிய அறிவது நம்பி உறுதி கொண்டு

சிறிது சிறிதாக அறிவினை வளர்த்து அனுபவம் பெறுவார்     அறிஞர்

சுட்ட தங்கமும் துயர் பட்ட மனமும் புகழ் பெறுமே

துட்ட மனமும் தரம் கெட்ட மனிதரும் இதழ்பெறுவாரே

உலகை புத்தகத்தில் படிப்பது நிழலை காதலிப்பதாகும்

உலகையே புத்தமாக படிப்பது நிலவையே காதலிப்பதாகும்

கல்லிலும் நார் உரிப்பவர் கயவர்
கவலையிலும் பாடம் கற்பவர் அறிஞர்

பிறர் அனுபவத்தை பாடமாக கேட்பவன் காது உள்ளவன்

பிறர் பாடத்தை அனுபவமாக பார்ப்பவன் கண் உள்ளவன்

நம் பாதையை மறிப்பவர் எல்லாம் திருடருமல்ல 
ஆபத்தை தவிர்ப்பவராகலாம்

நம் கருத்தை மறுப்பவர் எல்லாம் பகைவருமல்ல 
நம் அழிவை தடுப்பவராகலாம்

No comments:

Post a Comment