Monday, February 29, 2016

எழுந்து வா..

உனக்கான வாழ்க்கை அங்கே காத்திருக்கிறது..

யாருக்குத்தான் இவ்வுலகில் பிரச்சனைகள் இல்லை சொல் ?

பிரச்சனைகள் மட்டுமே வாழ்க்கையில்லை..

பிரச்சனைகள் இல்லாமலும் வாழ்க்கையில்லை..

சின்னஞ்சிறு பிள்ளையை பார்

நடக்க முயல்கையில் ஆயிரம் முறை கீழே விழும்

ஆனால், உடனே எழுந்து நடக்கும்..

உன் வாழ்விலும் சறுக்கல்கள் இருக்கும்.

அதனால் வாழ்வே முடிந்துவிட்டதாய் அர்த்தம் இல்லை..

எழுந்து வா..

உன்னால் முடியும் !

No comments:

Post a Comment