Wednesday, January 20, 2016

உங்கள் வேலையை நேசியுங்கள் முழு திருப்தியடைய முடியும்

கடமை

கருமத்தை அற்ற முடிப்பவன் அறிவுடையோன்___முன்னுரை அரையனார்

கடமையைக் கடவுளாகக் கொண்டாடுபவருக்கு வெற்றி தானே வரும்__தம்மபதம்

கடமையும் அதற்கான கொள்கையும்         
                மனிதனுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகள்__அரவிந்தர்

யாருடைய கடமைகளுக்கும் நாம் தடையாக இருக்கக் கூடாது__குருநானக்

நம் கடமையைச் செய்வதே சிறந்த கடவுள் வழிபாடு__பஞ்சதந்தரா

நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவே நமது சரீரம் உள்ளது__தேவர்

கடமையென்ற பாத்திரத்தில் தான் உரிமைகள் ஒளிந்து கிடைக்கின்றன__வினோபா

கடமையாற்றாமல் நன்மையைப் பெறுகிறவன் திருடன்__தயானந்த சரஸ்வதி

கடமையும் அன்புமே ஆன்மாவின் கருவிகள்__அரவிந்தர்

கடமைகளில் குறைகள் இருந்தாலும் விட்டு விடக் கூடாது__கீதை

என் கடன் பணி செய்து கிடப்பதுவே__திருநாவுகரசர்

உழைப்பு

உழைத்துத்தான் உண்ண வேண்டும் என்பது உலகத்து தர்மம்___நாகாமராசன்

உழைக்காத அன்று உணவு உண்ண உரிமையில்லை___பிரேம்சந்த்

வெறும் பொறுப்புணர்வு மட்டும் கடும் உழைப்புக்கு ஈடாகிவிடாது__கலாம்

காய்கள் கனிந்த போதும் வேர்கள் பங்கு கேட்பதில்லை___தாகூர்

உழைப்புக்கு மதிப்பு கொடுப்பதுதான் உண்மையான பெருமை___வினோபா

ரசம் பிழிந்த பிறகு கரும்பை யாரும் மதிப்பதில்லை___வேமணா

உடலும் வளரும் தொழிலும் வளரும் உழைப்பாலே___பட்டுகோட்டையார்

தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ___பாரதிதாசன்

ஒருசாண் வயிற்றை வளப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்___வாலி

உழைக்காமல் ஊதியம் வாங்கும் தொழில்தான் மானங்கெட்ட தொழில்__முவ‌
                 
செயல்

கர்மயோகத்தின் அற்புதம் இறைஎதிர்ப்பு கூட முக்திக்கு வழிவகுக்கும்___அரவிந்தர்

படைப்பை மலர வைக்கும் அம்சங்கள் செயல்பாட்டு பரிமாணங்கள்தாம்___கலாம்

செயலற்ற தியானம் பயனற்றது அவையிரண்டும் சேர வேண்டும் ___திலகர்

சொற்கள் புத்தியில் பிறக்கின்றன செயல்கள் 
         ஆன்மாவில் பிறக்கின்றன___இராதாகிருக்ஷ்ணன்

எண்ணுங்கள் பணக்காரர் ஆகலாம் என்பது சுத்த மடத்தனமானது__ஓஸோ

செயலில்லாமல் விளைவில்லை/ விளைவில்லாத செயலுமில்லை___மகரிஷி

கருவி கர்மா கர்த்தா மூன்றும் செயலுக்கு மூலகாரணமாகிறது__கீதை

பேச்சை விதையாக அல்ல 
       செயலை விதையாகக் கொண்டே உலகம் வளர்கிறது___அப்பாதுரையார்

உங்கள் வேலையை நேசியுங்கள் முழு திருப்தியடைய முடியும்__தயானந்தஸரஸ்வதி

செய்வது நம் கடமை செயல்படும் நாம் கடவுளின் கருவியே___சிவானந்தா
          
செல்வம்

உடையவராய் சென்றால் நமக்கு ஊரெல்லாம் சுற்றம்_அவ்வையார்

கர்வத்தை தாராதே உண்மையான செல்வம் எனப்படும்_பஞ்ச தந்த்ரா

பணத்துக்கு உள்ள காந்த சக்தியால் அது எல்லாவற்றையும் ஈர்க்கின்றது_அண்ணா

செல்வம் சேர்ப்பதில் அதிகமான ஆசை வைப்பவன் கெடுகிறான்_இராதா கிருஷ்ணன்

போகும் வரும் இரண்டு அது செல்வமும் வறுமையும்_தேவர்

செல்வம் அது நிலவு போல நிலையற்றது_வேமனா

தாய்க்கும் மகனுக்கும் கூட தகராறைத் தேடித் தருவது தனம்_வேமனா

பொண்ணொடு மணியுண்டானால் புலையனும் கிளைஞனான்_பட்டீஸ்வரர்

அடக்கம் இல்லாது நடப்பவன் செல்வம் குரங்கின் கை கொள்ளி போலே
நீரில் குமிழி இளமை செல்வம்_குமரகுருபரர்

மகிழ்கின்ற செல்வம் கவிழ்கின்ற நீர் செல்லும் கப்பல் போலே_திருமூலர்
உடல் உருவம் குணம் அறிவு சுகம் செல்வம் புகழ் ஆக ஏழு வளங்கள்_ மகரிஷி

                                     
அதிட்டம்

நாம் விதைப்பதைத்தான் நம்மால் அறுவடை செய்ய முடியும்___குருநாகை

தேடுபவனுக்கு அதிட்டம் கிடைக்காமல் போகலாம்
    அதிட்டத்துக்கு ஒரு ஆள் கிடைக்காமல் போகாது____காளிதாசர்

அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்து விட்டு 
    அதிட்டம் இல்லையென்று அலட்டி கொண்டார் பட்டுகோட்டையார்

காலம் வரும் போது புயல் வீசும் போது எச்சிலைகளும் வானில் பறக்கும்_____முவ‌

தாளாளன் என்பவள் கடன்படாது வாழ்பவன்____திரிகடுகம்

நமது தீர்வை நாம்தான் கண்டுபிடிக்கவேண்டும்
         வேறு யாரும் வந்து தீர்த்து விடமுடியாது___புத்தா

விதி எனும் புத்தகத்தின் வரிகள் எல்லாம் செயல் என்ற எழத்துக்களே___குருநானக்

பூ மலர்ந்தவுடன் ஈக்களுக்கு  அழைப்பிதழ் தேவையில்லை ____ராமகிருஷ்ணன்

அதிட்டத்தை நம்பி உழைக்காது காத்திருப்பவன் அழிவில் வீழ்வான்____சாணக்யன்,

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

No comments:

Post a Comment