Monday, May 27, 2019

வாழ்வில் வெற்றி பெற முத்தான வழிகள்

இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது.

‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என பல புத்தகங்களும், ‘தோல்வியை கண்டு துவளாதீர்கள்’ என ஆறுதல், தரும் புத்தகங்களும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வழிமுறைகளைப் பற்றி சொன்னாலும், ‘இதுதான் வெற்றி, இதுதான் தோல்வி’ என தீர்மானிக்கும் விதம் வேறுபடுகிறது.

அதுவும் இந்த வேறுபாடு நாட்டுக்கு நாடு, மதத்திற்கு மதம், ஏன் ஆண்களுக்கு ஒரு மாதிரி பெண்களுக்கு ஒரு மாதிரியாகவும் கூட வேறுபடுகிறது.

பணம் நிறைய சம்பாதிப்பதை வெற்றி என்று எடுத்துக் கொண்டால், கோடீஸ்வரர்கள், மனநோயாளிகளாகவோ, தற்கொலை செய்து கொள்பவர்களாகவோ இருந்திருக்க கூடாதல்லவா? காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதை வெற்றி என்று எடுத்துக்கொண்டால், காதல் தம்பதிகள் விவாகரத்து செய்யக் கூடாதல்லவா? தோல்வி பற்றிய கண்ணோட்டம் என்பது சமூக சூழ்நிலைகளினாலும் பெருவாரியான மக்கள் ஆதரிக்கும் கருத்துக்களாலும் நிலை பெறுகிறது.

இந்த கருத்துக்கள் தான் குடும்பம், அரசியல், ஆன்மிகம், கலைத்துறை, கல்வித்துறை என்று பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்து, வெற்றி பெறுகிறவர்களுக்கு சந்தோஷத்தையும் தோல்வி பெறுகிறவர்களுக்கு துக்கத்தையும் தருகிறது. ஒரு தலைமுறையினர், இன்னொரு தலைமுறையினருக்கு சொல்லும் கருத்துக்களில், முக்கால்வாசி இந்த வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான் இருக்கிறது.
ஒரு தலைமுறையினர் மிகப்பெரிய வெற்றி என்று நினைத்தது, அடுத்த தலைமுறையினருக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அந்த காலகட்டத்தில் சொல்லப்படும் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்களுக்கு இடையே அல்லல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

வெற்றி, தோல்வி பற்றிய தெளிவு இல்லாவிட்டால் அது தேவையில்லாத மன அழுத்தத்தையும், சோர்வையும், சக்தியற்ற நிலைமையையும் உருவாக்கி விடும். ஒரு வகையினர் வெற்றியை ஆர்ப்பாட்டமாக கொண்டாடுகிறார்கள், இன்னொரு வகையினர், அமைதியாக இருப்பதே பெரிய வெற்றி என்று கூறுகிறார்கள்.

ஆனால் இரு வகையினருமே, வெற்றி என்ற வார்த்தைக்குள் தான் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வெற்றி என்பது ஒரு அடையாளமா? அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா? என்று கேட்டால், அதை ஒரு அடையாளம் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த அடையாளம் தான் சிறந்த மாணவன், சிறந்த வியபாரி , சிறந்த அரசியல்வாதி , சிறந்த மருத்து வர் என்று பல் வேறு முத்திரைகளைப் பெறுகிறது. சில நேரங்களில் இந்த முத்திரை மாறிக் கொண்டு இருக்கும். டிவி நிகழ்ச்சிகளில் தோல்வி அடைந்தவர்கள் கண் கலங்குவதும், அதைப்பார்த்து பெற்றோர்கள் தாரை தாரையாக கண்ணீர் விடுவதும், வெற்றி பெற்று விட்டால், அலப்பறை பண்ணுவதும் இரண்டுமே தவறான அணுகுமுறைகள்.

காரணம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக்கூடிய திறமை, அறிவு என்பது வேறு வேறு. கொஞ்ச விகிதத்தில் மாறி மாறி இருக்கும். அதை உன்னிப்பாக கவனிக்காமல், சிறந்த ஓவியம் வரையக்கூடிய மாணவன் சரியாக பாடவில்லையே என்று நினைப்பதும், நன்றாக பாடக்கூடிய மாணவி நன்றாக ஆடவில்லையே என்று நினைப்பதும் பல்வேறு மன உளைச்சல்களைத்தான் உருவாக்கும்.

ஒரு மயில், சிங்கத்தை போல கர்ஜனை செய்ய முடியவில்லையே என்று நினைக்கவே நினைக்காது. அதே போல், ஒரு சிங்கம் மயிலைப் போல் ஆட முடியவில்லையே என்று நினைக்காது. அவைகள், தங்களின் இயல்புக்கேற்ப முழுமையாக இருக்கின்றன.

ஆனால், சிங்கத்தையும், மயிலையும் கூண்டில் அடைக்கத் தெரிந்த மனிதர்களாகிய நாம்- புலம்பல் என்ற ஒரு பெரிய கூண்டை உருவாக்கி அதில் நாமே மாட்டிக் கொண்டிருக்கிறோம். சரி இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியேறுவது? கூண்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் முதலில் நாம் கூண்டிற்குள் தான் அடைபட்டுக் கிடக்கிறோம் என்ற விழிப்புணர்வு முக்கியம்.

அடைபட்டுக் கிடப்பது என்பது ஒருவிதமான மனநோய், அதன் அறிகுறியை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவரை பார்த்து இப்படி ஆகிவிட வேண்டும், அப்படி வாழ வேண்டும் என்ற நினைப்பு தான் அது. ஆனால் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து அதே போல் ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு ஆரோக்கியமான சிந்தனை தானே, அது எப்படி மனநோயாக இருக்க முடியும் என கேட்கலாம்.

எந்த ஒரு விஷயமும் சுயமாக ஆராய்ந்து, முடிவு எடுக்காமல், பிறரைப் பார்த்து எடுப்பது என்பது நிச்சயம் ஒரு சமயத்தில் குழப்பத்தை தந்து காலை வாரிவிட்டு விடும். இன்னொரு பக்கம், உங்களுக்கே உரித்தான, நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியத்தையும், நீங்கள் மட்டுமே அடையக் கூடிய அந்த அனுபவத்தையும் நிச்சயமாகத் தவற விடுவீர்கள்.

இந்த வெற்றி, தோல்வி கண்ணோட்டம் பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாகி, ஓய்வு பெறும் வயது வரை உங்களை பாடாய்ப்படுத்துகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எது எது சந்தோஷம் தருகின்றதோ, அவைகளுக்கு வெற்றி என்று பெயர் சூட்டியும், எது எது துக்கம் தருகின்றதோ, அவைகளுக்கு தோல்வி என்று பெயர் சூட்டியும் பழகி விட்டோம்.

இதற்கு ஆரம்ப வித்து பள்ளியில் இருந்தே முளைவிடத் தொடங்கியது. ‘கிளாஸ் பர்ஸ்ட், ஸ்கூல் பர்ஸ்ட், ஸ்டேட் பர்ஸ்ட் வரணும்” ”ஒரு என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆயிரணும்” ஓ.கே. இந்த விதிமுறைகள் ஒன்றும் தப்பில்லை ‘பாசிட்டிவ்’ சிந்தனைகள் தான். ஆனால், பொதுவான ஒரு விதிமுறையை நாம் கவனிப்பது இல்லை.

அனைவரும் நன்றாக படித்து சென்டம் வாங்கினால் யார் கிளாஸ் பர்ஸ்ட்? அப்படி ஒரு சம்பவம் எப்பொழுதும் நடப்பதில்லை. மாணவர்களைச் சுற்றி ‘மெஷின் கன்’னை வைத்து கொண்டு மிரட்டி படிக்க சொன்னால் கூட, உயிருக்கு பயந்து கூட அனைவரும் ‘முதல் ரேங்க்’ எடுக்க மாட்டார்கள். எடுக்கவும் முடியாது.

ஆக, பொது விதிமுறை அனைவராலும் ‘முதல் ரேங்க்’ எடுக்க முடியாது என்பது தான்… இன்னொரு பொதுவிதிமுறை, படிப்பில் 25-வது ரேங்க் எடுப்பவன், விளையாட்டில் முதலிடம் வரலாம். வகுப்பில் கடைசி ரேங்க் எடுப்பவன் பாட்டு போட்டிகளில், நன்றாக பாடி லட்சங்களில் பரிசை அள்ளலாம்.

ஆக எவருமே சாதாரண நபர்களில்லை, ஒரே மாதிரி நபர்களுமில்லை… ஒரு மனிதனோட கட்டைவிரல் ரேகை மாதிரி, இன்னொரு மனிதனுக்கு இருக்காது. 700 கோடி கட்டை விரல் ரேகைகளும் வேறு தான்… இயற்கையே இவ்வளவு ‘சிம்பிள்’ஆக சொல்லி விட்ட பிறகும் கூட நாம் தான் முதல் இடம், இரண்டாம் இடம் என்று அடித்துக் கொண்டிருக்கிறோம்.

சிந்தனையை ஒருமுகமாக்கி எடுத்துக் கொண்ட செயல்களில் முழுமையாக நம்மை ஒப்படைக்கும்போது நாம் முயற்சிக்கும் எந்தவொரு செயலுக்கும் எப்படியும் வெற்றி வந்தே தீரும்.

அதனால் முதல் இடமே லட்சியம் என்ற சிந்தனையை தோளில் தூக்கி சுமந்து திரியாமல் காரியமாற்றினால் அப்போது அதுவாகவே தேடிவரும். அந்தநே ரத்தில் அந்த வெற்றி உங்களுக்கு சாதாரணமாகவே படும் என்பது தான் ஆச்சரியம். பக்குவப்பட்ட வெற்றி எப்போதுமே அகந்தை தராது என்பது இதில் உணரவேண்டிய உண்மை

பொன்மொழிகள்

வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். —பிராங்க்ளின்.
தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. —போவீ. 
வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது. —அரிஸ்டாட்டில். 
நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!- நெப்பொலியன் ஹில் 
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.- கன்ஃப்யூஷியன்
மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.- டாக்டர்ஜான்சன் 
உடைமையில் உரிமை கோருவது அல்ல அன்பு. உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்- ஸ்ரீ அன்னை. 
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!- சுபாஷ் சந்திரபோஸ்.
நீ என்ன நினைக்கிறாயோ அது உன்னால் இயலாமல் போகும்போது உன் ரத்தத்தில் ஜனித்த ஜீவன் அதைச் சாதித்துக் காட்டிவிடும்- கிரந்தம்.
பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும் -அவ்பரி. 
கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது -பீட்டர். 

வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும். 
உன் விதியை நீயே நிர்ணயம் செய் இல்லையென்றால் மற்றவர்கள் நிர்ணயித்து விடுவார்கள்.
மரியாதை பெறும் ஒரே வழி அதனை முதலில் கொடுப்பதாகும். 
திருப்தியும் பேரின்பமும் எம்முள் இருப்பின் நாம் மற்றவர்களால் விரும்பப்படுவோம். 
எல்லா சந்தர்ப்பத்திலும் சமநிலையுடன் இருப்பதுதான் மகிழ்ச்சி.
நிரந்தரமற்றதின் மீது அன்பு செலுத்துவது உன் தோல்வியின் முதல்படியாக அமையும். 
பிடிவாதமும் கோபமும் உன் இயலாமையின் வெளிப்பாடாகும். 
நிஸப்தத்தை நாடுபவன் வாழ்வின் உண்மை நிலையை உணர்ந்துள்ளான். 
வாழ்வின் அறநெறியை தேடுபவன் தன் வாழ்வின் அன்பு நெறியை உணர்ந்திருத்தல் அவசியம். 
பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு.
அன்பை விலைக்கு வாங்குவது சுயநலமொன்றே, ஆகவே எச்சரிக்கையாய் இரு உன் அன்பர்களிடம்.
நீ உன் உரிமையை இழப்பின் உன் உணர்வையும் இழப்பாய். 
தொடங்கிய இடத்தை தெரிந்துகொள் அப்போதுதான் முடிக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம். 
அன்பு என்றும் உன் உள்ளத்திலிருந்தால் அறிவு என்றும் உன்னை விட்டகலாது. 
உன் சோம்பேறித்தனம் உன் வாழ்வின் தடைக்கல்லாய் அமையலாம்.
உன் அவசரப் பேச்சு உன்னை அனாதரவாக்காமல் பார்த்துக்கொள். 
ஒரு தவறை திரும்பத் திரும்பச் செய்வது மடமை, மடமையை திரும்பத் திரும்பச் செய்பவன் எப்படி முழு மனிதனாக முடியும்? .
பிறர் முன் பேசும் வார்த்தையிலும் செய்யும் செயலிலும் எச்சரிக்கையாய் இரு,உன்னை பிறர் எடை போட்டுக் கூறுபவை அவையே !
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம். 
சிந்திப்பதும் அதை வெளிப்படுத்துவதும் நாமெல்லாம் மனிதர்கள் என்பதன் அடையாளம். சிந்திப்பதை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டால் சிறிது காலத்தில் சிந்திப்பதே மறந்து விடும். 
அநியாத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை ஆனால், நியாயத்திற்கு கடவுளின் கருணை மட்டும் போதும். 
கடவுளை அடைய ஒரேயொரு வழிதான் உண்டு. அது அவர் செய்வதை நாமும் செய்வது படைப்பது.
வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி அழகான பசி ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

நட்பு பற்றிய பொன்மொழிகள்

*நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். 

*பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள். 

*எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை. 

*உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே. 

*வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன். 

*உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது. 

*உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன். 

*பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன். 

*நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள். 

*வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான். 

*ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள். 

*சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும். 

*உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன். 

*ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 

*நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர். 

*புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும். 

*புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம். 

*ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு. 

*நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை. 

*உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு. 

*உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் இறைத் தூதுவன்தான் நண்பன். 

*பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது. 

*சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன். 

*புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும். 

*காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து வைப்பது நட்புதான். 

*நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு. 

*நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய். 

*நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும். 

*நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை. 

*உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன். எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பான். 

*எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக. 

*புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது. 

*உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம்... நீ என்னை அறிந்துள்ளாய். 

*நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பா‌ட்டு‌ப் பாடும். 

Tuesday, December 18, 2018

சாதனை படைப்பது எப்படி? இயற்கையை வெற்றி கொள்!

* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். 
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.
* ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான். 
* தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம்.
* குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.
* பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவனே பேறு பெற்றவன்.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
* தன்னை மறந்து பணியாற்றும்போது தான் கடமையில் சாதனை படைக்க முடியும்.
* கோபப்படும் மனிதனால் சிறப்பாக பணியில் ஈடுபட முடியாது. மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனே, தனது பணியில் தீவிரமாக செயல்பட முடியும்.
* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.
* கருணை நிறைந்தவர்களாக மாறுங்கள். ஏனெனில், கருணையே இனிய சொர்க்கம்.
* எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.
* வாழ்வில் ஒரு நன்மையாவது செய்யுங்கள். அதனால், பாவம் அனைத்தும் தீர்ந்து விடும். 
* பிறவிப்பிணி நீங்க வேண்டுமானால், ஆசையின் சாயலே அற்றுப் போய் விட வேண்டும். வேறெந்த முயற்சியும் வீணானவை தான்.
* யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டுஇருக்கட்டும். எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதை கடவுளின் வழியில் செய்து கொண்டிருங்கள்.
* பெண்ணுக்கு நாணமே ஆபரணம். அது இல்லாத பெண்ணைப் பெண் என்றே சொல்ல முடியாது. 
* ஆசையை யாராலும் விலக்க முடியாது. உடம்பு என்ற ஒன்று இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். ஆனால், அதை கட்டுக்குள் வைக்க வேண்டும். 
* "கடவுள் என்னுடையவர்' என்ற சிந்தனையை விதைப்பதற்கு ஏற்றது குழந்தைப் பருவமே. பக்தியை குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொடுங்கள். 
* தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார்.
* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். 
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். 
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்.
* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. 
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. 
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.
* திண்ணையில் உட்கார்ந்திருப்பவன் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.
* உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், "தான் ஒருவனே மகா கெட்டிக்காரன், மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே, துன்பப்படுபவனும் "தான் ஒருவன் மட்டுமே உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்' என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை.
* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து வழிபடுங்கள்.
* "இன்றைய நாள் முழுவதும் நல்ல பொழுதாக அமைய வேண்டும்' என்று தினமும் வேண்டிக் கொள்ளுங்கள்.
* புண்ணிய நதிகள், பசு, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர்களை குறைந்தது ஒரு நிமிடமாவது சிந்தியுங்கள்.
* வாரம் ஒருமுறையாவது கோயில் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
* அண்டைவீட்டாரையும், மற்ற மனிதர்களையும் அன்புடன் நேசித்து வாழுங்கள்.
* சாப்பிடும் முன் மிருகம், பறவைகளுக்கு உணவு அளித்த பின்னரே சாப்பிடுங்கள்.
* அன்றாடம் அவரவர் சக்திக்கேற்ப தர்மம் செய்து வருவது நன்மை அளிக்கும்.
* நீராடிய பின் நெற்றியில் தவறாமல் திருநீறு, குங்குமம் வைத்துக் கொள்வது அவசியம்.
* உறங்கும் முன் அன்றைய நாளில் நடந்த நல்லது, கெட்டதை எண்ணிப் பார்ப்பது நம்மைத் திருத்திக் கொள்ள வழிவகுக்கும்.
* பாவிகளை நாம் வெறுப்பதாலும், அவர்களை கோபிப்பதாலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்பவேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.
* நம் நாட்டில் முற்காலத்தில் கல்வியின் முதல் நோக்கம் அமைதியை அடைவதே ஆகும். ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் 'பரவித்யை' எனவும், மற்றவற்றை 'அபரவித்யை' எனவும் கூறுவர்.
* பாவத்திற்கு மூலம் கெட்ட காரியம். கெட்ட செயலுக்கு மூலம் ஆசை. ஆகையால், நம் கஷ்டம் அனைத்திற்கும் மூலகாரணமாகிய ஆசையை நிவர்த்தி பண்ணினால், நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.
* கடவுள் ஒன்று என்று சொல்வதோடு மற்ற மதங்கள் இருந்துவிடுகின்றன. ஆனால், இந்துமதமோ ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு வழிபட பலப்பல தெய்வ வடிவங்களை நமக்குக் காட்டுகிறது.
* தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட அவனை ஆதரிக்கும். அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான்.
* அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தா போகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. இப்படியே ஓர் ஆசை பூர்த்தியானவுடன் இன்னொரு ஆசை மூள்கிறது.
* கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.
* தமிழ்நாடு ஒரு குளிர்சாதன பெட்டி போல எல்லா பாஷைகளையும், எல்லா நாகரீகங்களையும் கெடாமல் குளிர்ச்சியுடன் காத்துத்தந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நிறைந்திருப்பது எது? வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாடியது உண்மையாகும்.

வெற்றி வாழ்வின் ரகசியம் - தைரியமாக இருங்கள்

* மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது.
* திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். அது போதும்.
* கோழை தான் வாழ்வில் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.
* மக்களிடம் உண்மையான சமத்துவம் எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.
* சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
* மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.
* சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.
* பிரதிபலன் பாராமல் நன்மை செய்யுங்கள்.

வெற்றி வாழ்வின் ரகசியம்

* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
* உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும். 
* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.
* இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.
* மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான். 
* கற்புநெறியில் இருந்து பிறழும் போது, மனித சமூகம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.
* நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம்.

உண்மையைப் பின்பற்றுங்கள்!

* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. 
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. 
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.

நம்மால் சாதிக்க முடியும்!

* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். 
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். 
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்

உலகத்துக்காக தியாகம் செய்!

* நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.
* ஒருவருக்கொருவர் நன்மை செய்வதன் மூலமாகத் தான், நற்பலன்களை அடைய முடியும்.
* மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கே செல்லவும் தயாராக இருக்கவேண்டும். மரணம் ஒருநாள் உறுதி என்னும்போது நல்ல செயலுக்காக உயிரை விடுவது மேலானது.
* பெரியவர்கள் பலர் செய்த தியாகத்தின் பயனையே இன்று மனிதகுலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை உலகம் முழுவதிலும் காணமுடியும்.
* உன் சொந்த முக்திக்காக நீ உலகத்தைத் துறந்து விட விரும்பினால் அது ஒன்றும் பாராட்டத்தக்கது அல்ல. ஆனால், உலக நன்மைக்காக உன்னை நீயே தியாகம் செய்ய முடியுமானால் கடவுளாகி விடுவாய்.
* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்காதே. வெற்றி, தோல்வி என்று கவனித்துக் கொண்டிருக்காதே. உடனடியாக, தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு.

உழைத்து வாழ வேண்டும்ஜனவரி 10,2013,14:01  IST
* தைரியமாயிருங்கள். பலமுடையவர் ஆகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்பு களையும் சுமத்திக் கொண்டு செயல்படுங்கள். 
* உங்கள் விதியை நிர்ணயிப்பவர் நீங்களே. உங்களுக்கு வேண்டிய பலமும், துணையும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
* கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும், ஒழுக்கமும் கொண்ட நல்லவர்களையே இந்த மண்ணுலகம் வேண்டி நிற்கிறது.
* உழைத்து வாழுங்கள். இவ்வுலக வாழ்வு எத்தனை நாள் என்பது நமக்குத் தெரியாது. உலகில் தோன்றியதன் அறிகுறியாக ஏதேனும் நல்லதைச் செய்ய முயலுங்கள்.
* உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துங்கள். அதன் பின் உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் சீராகி ஒழுங்காகி விடும். 
* வாழ்வில் நன்மை பெற வேண்டுமானால், மனிதர்களுக்கு முதலில் தொண்டு செய்யுங்கள்.
விவேகானந்தர்
(இன்று விவேகானந்தர் பிறந்ததினம்) 


இயற்கையை வெற்றி கொள்!

* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். 
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.

உள்ளத்தை ஒழுங்குபடுத்து!

* உங்களுக்கு வருகிற துன்பம் எதுவென்றாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
* உலகத்தில் உள்ள தீமைகளைப் பற்றி வருந்த வேண்டாம். உங்கள் உள்ளத்தில் இருக்கும் தீமையைப் போக்க வழிகாணுங்கள்.
* உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால், எல்லா இடத்திலும் கடவுளைக் காண்பீர்கள்.
* பாவ எண்ணமும், பாவச் செயலும் ஒன்று தான். அதனால், தீய எண்ணமும் கூட ஒருவனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறவாதீர்கள்.
* சுதந்திரம் இல்லாத வரையில் ஒரு மனிதனிடம் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.
* உயிர் போகும் வேளையில் கூட, ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம். 
* தன்னை அடக்கக் கற்றுக் கொண்டவன் தரணியையே அடக்கும் வலிமை பெறுகிறான்.
* நேர்மை, அக்கறை உணர்வுடன் ஈடுபடும் எந்த விஷயத்திலும் சாதனை நிகழ்த்த முடியும்.

தவறுகளைத் திருத்திக்கொள்!

* ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தியதோடு, அதை கடைபிடித்தவர்களில் புத்தருக்கு இணையான ஒருவரை உலகம் இதுவரை காணமுடியவில்லை.
* ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம் நல்ல ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றி நடக்க முடியும். 
* ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே தவிர, வெறும் பேச்சன்று.
* இரும்பைப் போன்ற மன உறுதியும், மலைகளைத் துளைத்துச் செல்லும் வலிமையும் வந்து விட்டால் கடலையும் கடக்க முடியும்.
* அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. அது தான் நம்முடைய மனதை ஒருமுகப்படுத்துவதாகும்.
* அன்பில்லாதவன் பெற்ற உலகியல் அறிவும், ஆன்மிக ஞானமும் பயனற்றது. அவனால் கடவுளை ஒருபோதும் அடைய முடியாது.
* "நான் கெட்ட செயலை செய்து விட்டேன்' என்று வருந்துவதைக் காட்டிலும் அதை திருத்திக் கொள்வதே மேலானசெயல்.

விருப்பத்துடன் வேலை செய்

* பகை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் தோன்றிய இடத்திற்கே திரும்பி வந்து விடும்.
* நன்மை செய்வதே சமயவாழ்வின் சாரம்.
* எல்லாவற்றையும் செவி சாய்த்துக் கேளுங்கள். ஆனால், உங்களுக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதை மட்டும் உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அஞ்ச வேண்டாம். அதையே துணிச்சலுடன் பின்பற்றுங்கள். ஒருபோதும் கோழையாக இருக்காதீர்கள்.
* தன்னை அடக்கிப் பழகியவன் வேறு எதற்கும் வசப்பட மாட்டான். அத்தகையவனே உலகில் நன்றாக வாழும் தகுதி பெற்றவன்.
* எந்த வேலையாக இருந்தாலும், அதை தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்பவனே அறிவாளி.
* அன்புடைய மனிதனே வாழ்கிறான். சுயநலம் கொண்டு மற்றவர்கள் மீது வெறுப்பு கொள்பவன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பது பொருள்.

ஒரே எண்ணம் வாழ்வில் வெற்றி தரும்

* ஒருவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், ""நான் பாவியாக இருக்கிறேனே! எப்படி கடைத்தேறப் போகிறேன்!'' என்று அழுது கொண்டிருப்பதனால் பயன் சிறிதும் இல்லை.
* வெறும் வருத்தத்தினாலும், புலம்பலினாலும் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஊக்கத்தோடு நம் கடமைகளைச் செய்தால் நிச்சயம் உருப்படலாம்.
* மனங்களில் நல்லமனம் என்றும், கெட்டமனம் என்றும் இருவேறு மனங்கள் இல்லை . மனம் என்பது ஒன்று தான் இருக்கிறது.
* நாம் அனுபவிக்கும் இன்பத்தை அறியாமையால் புறவுலகத்தில் இருந்து பெறுவதாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் இன்பம் நமக்குள்ளே தான் இருக்கிறது.
* கடவுளின் பேரால் எவ்வளவு பாரத்தைக் கொடுத்தாலும் அவ்வளவையும் அவரே ஏற்றுக்கொள்வார். ஆனால், நாம் நம் மனதில் சுமைகளை சுமப்பதால் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறோம். 
* உழைப்பும் சமூகசேவையும் உலகத்திற்கு நன்மை செய்வனவாகும். உழைப்பின் மீதும், நம்மால் முடிந்த சேவைகளையும், பிறருக்கு உதவி செய்வதையும் உங்கள் அடிப்படைக் கடமையாகக் கொள்ளுங்கள்.

சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும்.
அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.
மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.
மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.
அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.
நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும்.
உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.

* முற்பிறவியில் புண்ணியவினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.
* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.
* விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது.
* பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது

Friday, November 9, 2018

வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணங்கள்!

வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணங்கள்!

நாணயம் புக் செல்ஃப்


புத்தகத்தின் பெயர்: தி பவர் ஆஃப் மொமென்ட்ஸ் (The Power of Moments: Why Certain Experiences Have Extraordinary Impact)

ஆசிரியர்கள்: Chip Heath and Dan Heath

பதிப்பகம்: Simon & Schuster

நம்மில் பெரும்பாலானோர் வாழ்வில், ஒரு சில தருணங்களே நமக்குள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறோம். வாழ்வில் நிறைய விஷயங்கள் நடக்கிறபோதிலும் இதுபோன்ற தருணங்கள் மறக்க முடியாததாக ஆகிவிடுகின்றன. இவற்றில் சில தருணங்கள் எதேச்சையாக  நடந்தவையாகவும், சில தருணங்கள் அதிர்ஷ்டத்தால் நடந்தவையாகவும் இருக்கின்றன. 

இப்படி வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள் எதேச்சையாகவும் அதிர்ஷ்டத்தின் காரணமாகவும் மட்டுமே உருவாகும் தன்மைகொண்டதா என்று கேட்டால், அதுதான் இல்லை. இதுபோன்ற தருணங்களை எதேச்சை மற்றும் அதிர்ஷ்டத்திற்கு ஒதுக்கிவிடாமல், திட்டமிட்டு நம்மால் அதனை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதையும், எப்படி அதைத் திட்டமிட்டுச் செயலாக்குவது என்பதையும் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

சிப் ஹீத் மற்றும் டேன் ஹீத் என்ற இருவர் இணைந்து எழுதிய ‘சில தருணங்கள் உருவாக்கும் சக்தி’ (The Power of Moments) என்னும் புத்தகத்தில், நம் வாழ்வில் ஏற்படும் ஒரு சில அனுபவங்கள் நமக்குள்ளே ஏன் பெரும் தாக்கங்களைக் கொண்டுவருகிறது என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்கள்.  

உதாரணத்துக்கு, எங்கோ பயணிக்கும் போதோ அல்லது ஒரு மீட்டிங்கிலோ புதியதாக ஒருவரைச் சந்திக்கிறோம். ஒரு சில மணி நேரம் அவரிடம் பழகிய பின்னர் பிரிகிறோம். ஆனால், அவர் நாளடைவில் நெருங்கிய நண்பராக மாறி நமக்குப் பெரும் பக்கபலமாய் இருக்க ஆரம்பிக்கிறார். இது எப்படிச் சாத்தியம்? பயணத்தில் சந்திக்கும் அனைவரும் நண்பர்களாவதில்லை. நண்பர்களாகும் அனைவரும் பக்கபலமாய் இருப்பதில்லை அல்லவா? இதுபோன்ற விஷயங்களைப் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம். 

நம் வாழ்வில் வரையறுக்கும் பல கணங்களை (Defining Moment) நாம் எதிர்கொள்கிறோம். ஆனால், அவையெல்லாம் வெறுமனே எதேச்சையாக நடந்தவை என்றே நாம் நினைத்துக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, காதலியை முதன்முதலாகச் சந்தித்த தருணம்,  புதிதாக வந்த ஆசிரியர் நமக்கே தெரியாத ஆனால், நம்மிடம் இருக்கும் திறமை ஒன்றைக் கண்டறிந்து சொல்லும் தருணம், வாழ்க்கை என்பது நிரந்தரம் என்று எல்லோரையும் போல் நாம் நினைத்திருக்க, திடீரென்று முளைத்த ஒரு பிரச்னையால் வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்று நாம் புரிந்துகொண்ட தருணம், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேலையில் இனிமேல் ஒருநாள்கூட இருக்கக்கூடாது என்று நாம் முடிவெடுக்கும் தருணம்போன்ற எல்லாவற்றை யுமே நாம் அதிர்ஷ்டத்தால் நடந்தது அல்லது எதேச்சையாய் நடந்தது என்றே அர்த்தம் செய்துகொள்கிறோம். 

‘‘இது உண்மையா என்றால் இல்லை. இவை எதுவும் எதேச்சை யாக நடப்பது இல்லை. நம்மால் ஒரு சினிமா/டிராமாவைப்போல் ஸ்கிரிப்ட் எழுதி அவற்றை நிகழ வைக்க முடியும்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள். இதுபோன்ற வரையறுக்கும் தருணங்கள்  பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றில் இருக்கும் ஒற்றுமைகள் என்ன என்பதையும், அந்த வரையறுக்கும் தருணங்களை உருவாக்குவது எப்படி என்பதையும் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். 

வரையறுக்கும் தருணங்கள் பலவற்றையும், புத்தகத்தின் ஆசிரியர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அவை அனைத்திலுமே சில ஒற்றுமையான விஷயங்கள் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. இதனாலேயே இதுபோன்ற தருணங்களை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

எதற்காக இதுபோன்ற தருணங்கள் நமக்குத் தேவை அல்லது உருவாக்கப்பட வேண்டும் என்கிறீர்களா? வாழ்க்கையை வளப்படுத்த, மற்றவர்களிடம் தொடர்பு ஏற்படுத்த, நினைவிலிருந்து நீங்காத அனுபவங்களை ஏற்படுத்த, வாடிக்கையாளர், நோயாளி, பணியாளர் என நம்முடைய துறைக்கு ஏற்றாற் போல் அனைவருக்கும் சுகமான அனுபவத்தைத் தரவும்தான் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்தவித வரையறுக்கும் தருணங்களில் இருக்கும் ஒற்றுமைகள் என்னென்ன?

உயர்ந்த நிலையைத் தருபவை

நம்முடைய சாதாரண நாள்களில், சாதாரணத் தருணங் களைவிட இந்தத் தருணங்களில் கிடைக்கும் அனுபவங்கள் அதிக அளவு உயரம் கொண்டவையாக இருக்கின்றன. இந்தத் தருணங்கள் சிறப்பானவையாக அமைய, நம்முடைய உணர்வுகளைத் தொடுபவையாக அவை இருக்கவேண்டும்.

நுண்ணறிவைத் தருபவை

இந்தத் தருணங்கள் உலகம் குறித்த நம் புரிந்துகொள்ளுதல்களை மாற்றியமைப்பதாக இருக்கிறது. இந்த நிமிடம் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கப்போகிறது என்பதை நாம் உணர்கிறோம். நம் வாழ்நாள் முழுவதும் இது பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை உணர்கிறோம். இந்த நேரத்தில்தான், ‘நான் வேலையை விட்டுவிட்டுத் தொழில் ஆரம்பிக்கப்போகிறேன்...இவளைத்தான் கைப்பிடிக்கப் போகிறேன்...’ என்பது போன்ற உள்ளுணர்வுடன் கூடிய புரிந்து கொள்ளுதல்களை ஏற்படுத்து வதாக இந்தத் தருணங்கள் இருக்கின்றன.

பெருமை அளிப்பவை 

மேலும், இந்தத் தருணங்கள் நமக்குப் பெருமையளிப்பதாக இருக்கின்றன. அதாவது, சாதனைத் தருணம், துணிச்சலான தருணம் என்பது போன்ற தருணங் களை இதற்கு உதாரணமாகச் சொல்கின்றனர் ஆசிரியர்கள். இந்தப் பெருமைமிகு தருணங்களை உருவாக்க, பெருமை குறித்து நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் சாதனைகளை மைல்கல்களால் அளவிடுவதைப் போன்று எப்படி அமைத்துக்கொள்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் காலையில் அதிக தூரம் ஜாக்கிங் போய்ப் பழகுங்கள் என்று சொன்னால் கேட்காதவர்கள், ‘Couch to 5k’ (படுக்கையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர்) என்ற மைல்களை வைத்து ஜோடிக்கப்படும் திட்டங்களில் சேர்ந்து தினமும் ஜாக்கிங் போவது இதனால்தான் என்கின்றனர் ஆசிரியர்கள். 

தொடர்புகளால் வருபவை 

திருமண விழா, பட்டமளிப்பு விழா, சுற்றுலா, பார், சொற்பொழிவு, விளையாட்டுப் போட்டிகள் எனக் கூட்டம் சேர்கிற இடங்களிலெல்லாம் இந்த வரையறுக்கும் தருணங்கள் துளிரத் தயாராய் இருக்கின்றன. ஏனென்றால், இந்தத் தருணங்களை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். அது எப்படி மற்றவர்களுடன் இணையும்போது இது உருவாகிறது? பரிசோதனை முயற்சியாக தனி அறைக்குள் இருவரை அனுப்பி, 45 நிமிடங்கள் அங்கே அமரச் செய்தால், பெரும்பாலானோர் வெளியே வரும்போது நல்ல நண்பர்களாகி விடுகின்றனர். இவ்வித தனிமையான ஒருங்கிணைப்புகளே நட்பை வளர்க்கிறது. மருத்துவர் - நோயாளி,  சில்லறை விற்பனைக் கடை பணியாளர் -  வாடிக்கையாளர் போன்றவர்கள் நடுவேகூட நட்பு மலர்வதற்குக் காரணம் கூட்டமில்லாத சூழலில், அவர்கள் இருவரும் தனியே சந்திக்கும் வாய்ப்புகள் உருவாவதுதான் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

வரையறுக்கும் தருணங்கள் என்பவை பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் தருணங்களாகவும் இருக்கக்கூடும். ‘‘நெகட்டிவ் தருணங்களே, ‘நான் யாருன்னு காட்டுகிறேன்’ என்று திசைமாற்றும் தருணமாக இருக்கிறது இல்லையா?” என்று கேட்கின்றனர் ஆசிரியர்கள். 

இந்த நான்கு விஷயங்களே நம்முடைய வாழ்வில் தோன்றும் வரையறுக்கும் தருணங்களில் பெரும்பாலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லியிருக்கும் ஆசிரியர்கள், இவற்றை எப்படி உருவாக்கி வளர்த்தெடுப்பது என்பதையும் தெளிவாக உதாரணங்களுடன் சொல்லியிருக்கின்றனர். 

உயர்ந்த அனுபவங்களை எப்படி உருவாக்கிக்கொள்வது, உலகம் குறித்த புரிதலை எப்படி வளர்த்துக்கொள்வது, பெருமையளிக்கும்படி எப்படி நம் வாழ்க்கைமுறையைக் கட்டமைத்துக்கொள்வது, உறவுகளை உருவாக்கி எப்படி அவற்றை உரம்பெறச் செய்வது என்பதையெல்லாம் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

ஒருசில தருணங்களே நம் வாழ்க்கையை வரையறுக்கிறது. அந்த வரையறுக்கும் தருணங்களை நாமே கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டி, அதற்கான வழிமுறைகளையும் விளக்கமாகச் சொல்லியுள்ள இந்தப் புத்தகத்தை, வெற்றி பெற விரும்பும் அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.