Tuesday, November 3, 2015

மனதை வருடிய வரிகள்

மனதை வருடிய வரிகள்
  1. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்…!!!
  2. தந்தையிடம் பணம் இருந்தால் அவர் பெயரை நம் பெயரோடு இணைகிறோம் நம்மிடம் பணம் இருந்தால் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம்…!!!
  3. உன் வாழ்கையில் எந்த ஒரு நாளில் உன் முன்னாள் எந்த பிரட்சனையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய்…!!!
     
  4. செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால் உடனே அவர் தம்மை விட கீழ்யிருப்பவர்களை நினைத்து பார்க்கட்டும்…!!!
     
  5. ஆயிரம் பறவைகளின் நிம்மதியை கெடுக்க ஒரு ‘கல்’ போதும்! ஆயிரம் மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு ‘கெட்டவன்’ போதும்!
     
  6. “நமக்கு வரும் தடைகளை கண்டு மிரளுவதை விட ஒரு முறை துணிவதே மேல் வரலாற்றில் பல சரித்திரங்களை மாற்றியவர்கள் எல்லாம் தடைகளை தவிடு பிடியாக்கியவர்கள்
     
  7. உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன
     
  8. நீ கிழே விழுந்து விட்டால் உடனே எழுந்து விடு..! இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்..
  9. மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் , இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான். – நபிகள் நாயகம்
     
  10. நீ யாரிடம் உன் இரகசியங்களைச் சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய் – லாவோட்சு
     
  11. தவறுகளை ஒப்புக் கொள்வதற்கான தைரியமும், அதைத் திருத்திக் கொள்வதற்கான பயனும்தான் வெற்றிக்கான வழி.
     
  12. மீனாக பிறந்து மடிவது என்று முடிவெடுத்துவிட்டால்.. பொழுதுபோக்கிற்கு மீன்பிடிப்பவனின் வலையில் சிக்காதே! பிழைப்பிற்காக மீன்பிடிப்பவனின் வலையில் சிக்கிடு. உன் மரணமும் ஒருவனை வாழ வைக்கட்டும்..!
     
  13. அன்பிற்கும் நோபல் பரிசு வழங்க பெற்று இருப்பது உண்மையில் பாராட்ட கூடிய விசையம் அன்பையே மையமாக வைத்து வாழ்ந்து காட்டிய அன்னை தெரேசா தான்
     
  14. இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல . அதை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நல்லவர்களால் தான்.
     
  15. “வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையே செய்வோம்
     
  16. நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்
     
  17. நீ வெற்றி பெறும் பொழுதெல்லாம்…உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள்…!
     
  18. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
     
  19. பயத்தை விடு…! இல்லை இலட்சியத்தை விட்டு விடு…!”
     
  20. நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். – தோழர் மாவோ
     
  21. பு ரட்சிகள் உருவாகுவதில்லை நாம்தான் உருவாக்கவேண்டும் ! தோழர் – சேகுவாரா
     
  22. சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அத்தகைய கடிகாரம் ஓடினாலென்ன? நின்றாலென்ன?
     
  23. நீ வெற்றி பெறும் பொழுதெல்லாம்…உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள்…!
     
  24. நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்
     
  25. குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
     
  26. நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்
     
  27. கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே நல்லது ஏனெனில் அறியாமை தான் தீவினையின் மூல வேர்”..!
     
  28. எத்தனை நிறைகள் இருந்தாலும், ஒரு குறை இருந்தால்…!!! இவ்வுலகம் உன்னை கூர்ந்து கவனிக்க தொடங்கிவிடும்…!!!
     
  29. வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும் !! தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும் !!
     
  30. அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு!
     
  31. ஒரு மொழியைக் கற்கும் போது குழந்தைபோல் இருக்க வேண்டும்… !! தவறாகப் பேசுவதற்குக் குழந்தை வெட்கப்படுவதே இல்லை…!!
     
  32. விதைகள் கீழ் நோக்கிஎறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல்நோக்கி வளரும்..! விழும்போது விதையென விழு… விருட்சமாய் எழு…!
     
  33. செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை !!! உனக்குள் இருக்கும் திறமையே நீ வளர்த்துகொண்டால் அதுவும் ஒரு செல்வம் தான் !!!
     
  34. “அறிவின் ஆழம் புரியட்டும் சிகரம் கண்ணில் தெரியட்டும் …!
     
  35. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவான செயல் ..!!
  36. முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல. அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்துவது என்பதும்
     
  37. நம்மை சிந்திக்க தூண்டும் வரிகள் !!!
     
  38. வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சையம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்
     
  39. உண்மையான போராளியின் உண்மையான வார்த்தைகள் !!
     
  40. “வெற்றியே விட தோல்விக்கு பலம் அதிகம் ” “வெற்றி சிரித்து மகிழ வைக்கும் ” “தோல்வி சிந்தித்து வாழ வைக்கும் ”
     
  41. நீ கிழே விழுந்து விட்டால் உடனே எழுந்து விடு..! இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.
     
  42. இதமான வார்த்தைகளை பேச முடியாத பட்சத்தில்மௌனம் காப்பது மேல்… அல்லது உங்களின் சூழ்நிலையை மாற்றுவது சிறந்தது…!
     
  43. “போராட்டம் என்பது ஓரிருவர் சீறிப் பாய்வதல்ல .. மாறாக நாம் அனைவரும் சேர்ந்து ஓரடி முன் வைப்பதே”…!!
     
  44. ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை..!
     
  45. புரட்சியாளன் வெற்றிப்பெற்றால் அவன் போராளி..! தோல்வியுற்றால் அவன் தீவிரவாதி..!

No comments:

Post a Comment