Tuesday, December 18, 2018

சாதனை படைப்பது எப்படி? இயற்கையை வெற்றி கொள்!

* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். 
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.
* ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான். 
* தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம்.
* குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.
* பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவனே பேறு பெற்றவன்.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
* தன்னை மறந்து பணியாற்றும்போது தான் கடமையில் சாதனை படைக்க முடியும்.
* கோபப்படும் மனிதனால் சிறப்பாக பணியில் ஈடுபட முடியாது. மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனே, தனது பணியில் தீவிரமாக செயல்பட முடியும்.
* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.
* கருணை நிறைந்தவர்களாக மாறுங்கள். ஏனெனில், கருணையே இனிய சொர்க்கம்.
* எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.
* வாழ்வில் ஒரு நன்மையாவது செய்யுங்கள். அதனால், பாவம் அனைத்தும் தீர்ந்து விடும். 
* பிறவிப்பிணி நீங்க வேண்டுமானால், ஆசையின் சாயலே அற்றுப் போய் விட வேண்டும். வேறெந்த முயற்சியும் வீணானவை தான்.
* யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டுஇருக்கட்டும். எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதை கடவுளின் வழியில் செய்து கொண்டிருங்கள்.
* பெண்ணுக்கு நாணமே ஆபரணம். அது இல்லாத பெண்ணைப் பெண் என்றே சொல்ல முடியாது. 
* ஆசையை யாராலும் விலக்க முடியாது. உடம்பு என்ற ஒன்று இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். ஆனால், அதை கட்டுக்குள் வைக்க வேண்டும். 
* "கடவுள் என்னுடையவர்' என்ற சிந்தனையை விதைப்பதற்கு ஏற்றது குழந்தைப் பருவமே. பக்தியை குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொடுங்கள். 
* தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார்.
* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். 
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். 
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்.
* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. 
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. 
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.
* திண்ணையில் உட்கார்ந்திருப்பவன் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.
* உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், "தான் ஒருவனே மகா கெட்டிக்காரன், மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே, துன்பப்படுபவனும் "தான் ஒருவன் மட்டுமே உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்' என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை.
* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து வழிபடுங்கள்.
* "இன்றைய நாள் முழுவதும் நல்ல பொழுதாக அமைய வேண்டும்' என்று தினமும் வேண்டிக் கொள்ளுங்கள்.
* புண்ணிய நதிகள், பசு, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர்களை குறைந்தது ஒரு நிமிடமாவது சிந்தியுங்கள்.
* வாரம் ஒருமுறையாவது கோயில் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
* அண்டைவீட்டாரையும், மற்ற மனிதர்களையும் அன்புடன் நேசித்து வாழுங்கள்.
* சாப்பிடும் முன் மிருகம், பறவைகளுக்கு உணவு அளித்த பின்னரே சாப்பிடுங்கள்.
* அன்றாடம் அவரவர் சக்திக்கேற்ப தர்மம் செய்து வருவது நன்மை அளிக்கும்.
* நீராடிய பின் நெற்றியில் தவறாமல் திருநீறு, குங்குமம் வைத்துக் கொள்வது அவசியம்.
* உறங்கும் முன் அன்றைய நாளில் நடந்த நல்லது, கெட்டதை எண்ணிப் பார்ப்பது நம்மைத் திருத்திக் கொள்ள வழிவகுக்கும்.
* பாவிகளை நாம் வெறுப்பதாலும், அவர்களை கோபிப்பதாலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்பவேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.
* நம் நாட்டில் முற்காலத்தில் கல்வியின் முதல் நோக்கம் அமைதியை அடைவதே ஆகும். ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் 'பரவித்யை' எனவும், மற்றவற்றை 'அபரவித்யை' எனவும் கூறுவர்.
* பாவத்திற்கு மூலம் கெட்ட காரியம். கெட்ட செயலுக்கு மூலம் ஆசை. ஆகையால், நம் கஷ்டம் அனைத்திற்கும் மூலகாரணமாகிய ஆசையை நிவர்த்தி பண்ணினால், நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.
* கடவுள் ஒன்று என்று சொல்வதோடு மற்ற மதங்கள் இருந்துவிடுகின்றன. ஆனால், இந்துமதமோ ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு வழிபட பலப்பல தெய்வ வடிவங்களை நமக்குக் காட்டுகிறது.
* தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட அவனை ஆதரிக்கும். அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான்.
* அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தா போகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. இப்படியே ஓர் ஆசை பூர்த்தியானவுடன் இன்னொரு ஆசை மூள்கிறது.
* கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.
* தமிழ்நாடு ஒரு குளிர்சாதன பெட்டி போல எல்லா பாஷைகளையும், எல்லா நாகரீகங்களையும் கெடாமல் குளிர்ச்சியுடன் காத்துத்தந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நிறைந்திருப்பது எது? வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாடியது உண்மையாகும்.

வெற்றி வாழ்வின் ரகசியம் - தைரியமாக இருங்கள்

* மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது.
* திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். அது போதும்.
* கோழை தான் வாழ்வில் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.
* மக்களிடம் உண்மையான சமத்துவம் எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.
* சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
* மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.
* சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.
* பிரதிபலன் பாராமல் நன்மை செய்யுங்கள்.

வெற்றி வாழ்வின் ரகசியம்

* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
* உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும். 
* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.
* இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.
* மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான். 
* கற்புநெறியில் இருந்து பிறழும் போது, மனித சமூகம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.
* நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம்.

உண்மையைப் பின்பற்றுங்கள்!

* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. 
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. 
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.

நம்மால் சாதிக்க முடியும்!

* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். 
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். 
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்

உலகத்துக்காக தியாகம் செய்!

* நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.
* ஒருவருக்கொருவர் நன்மை செய்வதன் மூலமாகத் தான், நற்பலன்களை அடைய முடியும்.
* மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கே செல்லவும் தயாராக இருக்கவேண்டும். மரணம் ஒருநாள் உறுதி என்னும்போது நல்ல செயலுக்காக உயிரை விடுவது மேலானது.
* பெரியவர்கள் பலர் செய்த தியாகத்தின் பயனையே இன்று மனிதகுலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை உலகம் முழுவதிலும் காணமுடியும்.
* உன் சொந்த முக்திக்காக நீ உலகத்தைத் துறந்து விட விரும்பினால் அது ஒன்றும் பாராட்டத்தக்கது அல்ல. ஆனால், உலக நன்மைக்காக உன்னை நீயே தியாகம் செய்ய முடியுமானால் கடவுளாகி விடுவாய்.
* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்காதே. வெற்றி, தோல்வி என்று கவனித்துக் கொண்டிருக்காதே. உடனடியாக, தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு.

உழைத்து வாழ வேண்டும்ஜனவரி 10,2013,14:01  IST
* தைரியமாயிருங்கள். பலமுடையவர் ஆகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்பு களையும் சுமத்திக் கொண்டு செயல்படுங்கள். 
* உங்கள் விதியை நிர்ணயிப்பவர் நீங்களே. உங்களுக்கு வேண்டிய பலமும், துணையும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
* கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும், ஒழுக்கமும் கொண்ட நல்லவர்களையே இந்த மண்ணுலகம் வேண்டி நிற்கிறது.
* உழைத்து வாழுங்கள். இவ்வுலக வாழ்வு எத்தனை நாள் என்பது நமக்குத் தெரியாது. உலகில் தோன்றியதன் அறிகுறியாக ஏதேனும் நல்லதைச் செய்ய முயலுங்கள்.
* உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துங்கள். அதன் பின் உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் சீராகி ஒழுங்காகி விடும். 
* வாழ்வில் நன்மை பெற வேண்டுமானால், மனிதர்களுக்கு முதலில் தொண்டு செய்யுங்கள்.
விவேகானந்தர்
(இன்று விவேகானந்தர் பிறந்ததினம்) 


இயற்கையை வெற்றி கொள்!

* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். 
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.

உள்ளத்தை ஒழுங்குபடுத்து!

* உங்களுக்கு வருகிற துன்பம் எதுவென்றாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
* உலகத்தில் உள்ள தீமைகளைப் பற்றி வருந்த வேண்டாம். உங்கள் உள்ளத்தில் இருக்கும் தீமையைப் போக்க வழிகாணுங்கள்.
* உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால், எல்லா இடத்திலும் கடவுளைக் காண்பீர்கள்.
* பாவ எண்ணமும், பாவச் செயலும் ஒன்று தான். அதனால், தீய எண்ணமும் கூட ஒருவனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறவாதீர்கள்.
* சுதந்திரம் இல்லாத வரையில் ஒரு மனிதனிடம் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.
* உயிர் போகும் வேளையில் கூட, ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம். 
* தன்னை அடக்கக் கற்றுக் கொண்டவன் தரணியையே அடக்கும் வலிமை பெறுகிறான்.
* நேர்மை, அக்கறை உணர்வுடன் ஈடுபடும் எந்த விஷயத்திலும் சாதனை நிகழ்த்த முடியும்.

தவறுகளைத் திருத்திக்கொள்!

* ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தியதோடு, அதை கடைபிடித்தவர்களில் புத்தருக்கு இணையான ஒருவரை உலகம் இதுவரை காணமுடியவில்லை.
* ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம் நல்ல ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றி நடக்க முடியும். 
* ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே தவிர, வெறும் பேச்சன்று.
* இரும்பைப் போன்ற மன உறுதியும், மலைகளைத் துளைத்துச் செல்லும் வலிமையும் வந்து விட்டால் கடலையும் கடக்க முடியும்.
* அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. அது தான் நம்முடைய மனதை ஒருமுகப்படுத்துவதாகும்.
* அன்பில்லாதவன் பெற்ற உலகியல் அறிவும், ஆன்மிக ஞானமும் பயனற்றது. அவனால் கடவுளை ஒருபோதும் அடைய முடியாது.
* "நான் கெட்ட செயலை செய்து விட்டேன்' என்று வருந்துவதைக் காட்டிலும் அதை திருத்திக் கொள்வதே மேலானசெயல்.

விருப்பத்துடன் வேலை செய்

* பகை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் தோன்றிய இடத்திற்கே திரும்பி வந்து விடும்.
* நன்மை செய்வதே சமயவாழ்வின் சாரம்.
* எல்லாவற்றையும் செவி சாய்த்துக் கேளுங்கள். ஆனால், உங்களுக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதை மட்டும் உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அஞ்ச வேண்டாம். அதையே துணிச்சலுடன் பின்பற்றுங்கள். ஒருபோதும் கோழையாக இருக்காதீர்கள்.
* தன்னை அடக்கிப் பழகியவன் வேறு எதற்கும் வசப்பட மாட்டான். அத்தகையவனே உலகில் நன்றாக வாழும் தகுதி பெற்றவன்.
* எந்த வேலையாக இருந்தாலும், அதை தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்பவனே அறிவாளி.
* அன்புடைய மனிதனே வாழ்கிறான். சுயநலம் கொண்டு மற்றவர்கள் மீது வெறுப்பு கொள்பவன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பது பொருள்.

ஒரே எண்ணம் வாழ்வில் வெற்றி தரும்

* ஒருவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், ""நான் பாவியாக இருக்கிறேனே! எப்படி கடைத்தேறப் போகிறேன்!'' என்று அழுது கொண்டிருப்பதனால் பயன் சிறிதும் இல்லை.
* வெறும் வருத்தத்தினாலும், புலம்பலினாலும் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஊக்கத்தோடு நம் கடமைகளைச் செய்தால் நிச்சயம் உருப்படலாம்.
* மனங்களில் நல்லமனம் என்றும், கெட்டமனம் என்றும் இருவேறு மனங்கள் இல்லை . மனம் என்பது ஒன்று தான் இருக்கிறது.
* நாம் அனுபவிக்கும் இன்பத்தை அறியாமையால் புறவுலகத்தில் இருந்து பெறுவதாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் இன்பம் நமக்குள்ளே தான் இருக்கிறது.
* கடவுளின் பேரால் எவ்வளவு பாரத்தைக் கொடுத்தாலும் அவ்வளவையும் அவரே ஏற்றுக்கொள்வார். ஆனால், நாம் நம் மனதில் சுமைகளை சுமப்பதால் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறோம். 
* உழைப்பும் சமூகசேவையும் உலகத்திற்கு நன்மை செய்வனவாகும். உழைப்பின் மீதும், நம்மால் முடிந்த சேவைகளையும், பிறருக்கு உதவி செய்வதையும் உங்கள் அடிப்படைக் கடமையாகக் கொள்ளுங்கள்.

சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும்.
அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.
மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.
மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.
அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.
நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும்.
உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.

* முற்பிறவியில் புண்ணியவினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.
* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.
* விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது.
* பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது

Friday, November 9, 2018

வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணங்கள்!

வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணங்கள்!

நாணயம் புக் செல்ஃப்


புத்தகத்தின் பெயர்: தி பவர் ஆஃப் மொமென்ட்ஸ் (The Power of Moments: Why Certain Experiences Have Extraordinary Impact)

ஆசிரியர்கள்: Chip Heath and Dan Heath

பதிப்பகம்: Simon & Schuster

நம்மில் பெரும்பாலானோர் வாழ்வில், ஒரு சில தருணங்களே நமக்குள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறோம். வாழ்வில் நிறைய விஷயங்கள் நடக்கிறபோதிலும் இதுபோன்ற தருணங்கள் மறக்க முடியாததாக ஆகிவிடுகின்றன. இவற்றில் சில தருணங்கள் எதேச்சையாக  நடந்தவையாகவும், சில தருணங்கள் அதிர்ஷ்டத்தால் நடந்தவையாகவும் இருக்கின்றன. 

இப்படி வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள் எதேச்சையாகவும் அதிர்ஷ்டத்தின் காரணமாகவும் மட்டுமே உருவாகும் தன்மைகொண்டதா என்று கேட்டால், அதுதான் இல்லை. இதுபோன்ற தருணங்களை எதேச்சை மற்றும் அதிர்ஷ்டத்திற்கு ஒதுக்கிவிடாமல், திட்டமிட்டு நம்மால் அதனை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதையும், எப்படி அதைத் திட்டமிட்டுச் செயலாக்குவது என்பதையும் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

சிப் ஹீத் மற்றும் டேன் ஹீத் என்ற இருவர் இணைந்து எழுதிய ‘சில தருணங்கள் உருவாக்கும் சக்தி’ (The Power of Moments) என்னும் புத்தகத்தில், நம் வாழ்வில் ஏற்படும் ஒரு சில அனுபவங்கள் நமக்குள்ளே ஏன் பெரும் தாக்கங்களைக் கொண்டுவருகிறது என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்கள்.  

உதாரணத்துக்கு, எங்கோ பயணிக்கும் போதோ அல்லது ஒரு மீட்டிங்கிலோ புதியதாக ஒருவரைச் சந்திக்கிறோம். ஒரு சில மணி நேரம் அவரிடம் பழகிய பின்னர் பிரிகிறோம். ஆனால், அவர் நாளடைவில் நெருங்கிய நண்பராக மாறி நமக்குப் பெரும் பக்கபலமாய் இருக்க ஆரம்பிக்கிறார். இது எப்படிச் சாத்தியம்? பயணத்தில் சந்திக்கும் அனைவரும் நண்பர்களாவதில்லை. நண்பர்களாகும் அனைவரும் பக்கபலமாய் இருப்பதில்லை அல்லவா? இதுபோன்ற விஷயங்களைப் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம். 

நம் வாழ்வில் வரையறுக்கும் பல கணங்களை (Defining Moment) நாம் எதிர்கொள்கிறோம். ஆனால், அவையெல்லாம் வெறுமனே எதேச்சையாக நடந்தவை என்றே நாம் நினைத்துக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, காதலியை முதன்முதலாகச் சந்தித்த தருணம்,  புதிதாக வந்த ஆசிரியர் நமக்கே தெரியாத ஆனால், நம்மிடம் இருக்கும் திறமை ஒன்றைக் கண்டறிந்து சொல்லும் தருணம், வாழ்க்கை என்பது நிரந்தரம் என்று எல்லோரையும் போல் நாம் நினைத்திருக்க, திடீரென்று முளைத்த ஒரு பிரச்னையால் வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்று நாம் புரிந்துகொண்ட தருணம், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேலையில் இனிமேல் ஒருநாள்கூட இருக்கக்கூடாது என்று நாம் முடிவெடுக்கும் தருணம்போன்ற எல்லாவற்றை யுமே நாம் அதிர்ஷ்டத்தால் நடந்தது அல்லது எதேச்சையாய் நடந்தது என்றே அர்த்தம் செய்துகொள்கிறோம். 

‘‘இது உண்மையா என்றால் இல்லை. இவை எதுவும் எதேச்சை யாக நடப்பது இல்லை. நம்மால் ஒரு சினிமா/டிராமாவைப்போல் ஸ்கிரிப்ட் எழுதி அவற்றை நிகழ வைக்க முடியும்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள். இதுபோன்ற வரையறுக்கும் தருணங்கள்  பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றில் இருக்கும் ஒற்றுமைகள் என்ன என்பதையும், அந்த வரையறுக்கும் தருணங்களை உருவாக்குவது எப்படி என்பதையும் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். 

வரையறுக்கும் தருணங்கள் பலவற்றையும், புத்தகத்தின் ஆசிரியர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அவை அனைத்திலுமே சில ஒற்றுமையான விஷயங்கள் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. இதனாலேயே இதுபோன்ற தருணங்களை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

எதற்காக இதுபோன்ற தருணங்கள் நமக்குத் தேவை அல்லது உருவாக்கப்பட வேண்டும் என்கிறீர்களா? வாழ்க்கையை வளப்படுத்த, மற்றவர்களிடம் தொடர்பு ஏற்படுத்த, நினைவிலிருந்து நீங்காத அனுபவங்களை ஏற்படுத்த, வாடிக்கையாளர், நோயாளி, பணியாளர் என நம்முடைய துறைக்கு ஏற்றாற் போல் அனைவருக்கும் சுகமான அனுபவத்தைத் தரவும்தான் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இந்தவித வரையறுக்கும் தருணங்களில் இருக்கும் ஒற்றுமைகள் என்னென்ன?

உயர்ந்த நிலையைத் தருபவை

நம்முடைய சாதாரண நாள்களில், சாதாரணத் தருணங் களைவிட இந்தத் தருணங்களில் கிடைக்கும் அனுபவங்கள் அதிக அளவு உயரம் கொண்டவையாக இருக்கின்றன. இந்தத் தருணங்கள் சிறப்பானவையாக அமைய, நம்முடைய உணர்வுகளைத் தொடுபவையாக அவை இருக்கவேண்டும்.

நுண்ணறிவைத் தருபவை

இந்தத் தருணங்கள் உலகம் குறித்த நம் புரிந்துகொள்ளுதல்களை மாற்றியமைப்பதாக இருக்கிறது. இந்த நிமிடம் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கப்போகிறது என்பதை நாம் உணர்கிறோம். நம் வாழ்நாள் முழுவதும் இது பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை உணர்கிறோம். இந்த நேரத்தில்தான், ‘நான் வேலையை விட்டுவிட்டுத் தொழில் ஆரம்பிக்கப்போகிறேன்...இவளைத்தான் கைப்பிடிக்கப் போகிறேன்...’ என்பது போன்ற உள்ளுணர்வுடன் கூடிய புரிந்து கொள்ளுதல்களை ஏற்படுத்து வதாக இந்தத் தருணங்கள் இருக்கின்றன.

பெருமை அளிப்பவை 

மேலும், இந்தத் தருணங்கள் நமக்குப் பெருமையளிப்பதாக இருக்கின்றன. அதாவது, சாதனைத் தருணம், துணிச்சலான தருணம் என்பது போன்ற தருணங் களை இதற்கு உதாரணமாகச் சொல்கின்றனர் ஆசிரியர்கள். இந்தப் பெருமைமிகு தருணங்களை உருவாக்க, பெருமை குறித்து நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் சாதனைகளை மைல்கல்களால் அளவிடுவதைப் போன்று எப்படி அமைத்துக்கொள்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் காலையில் அதிக தூரம் ஜாக்கிங் போய்ப் பழகுங்கள் என்று சொன்னால் கேட்காதவர்கள், ‘Couch to 5k’ (படுக்கையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர்) என்ற மைல்களை வைத்து ஜோடிக்கப்படும் திட்டங்களில் சேர்ந்து தினமும் ஜாக்கிங் போவது இதனால்தான் என்கின்றனர் ஆசிரியர்கள். 

தொடர்புகளால் வருபவை 

திருமண விழா, பட்டமளிப்பு விழா, சுற்றுலா, பார், சொற்பொழிவு, விளையாட்டுப் போட்டிகள் எனக் கூட்டம் சேர்கிற இடங்களிலெல்லாம் இந்த வரையறுக்கும் தருணங்கள் துளிரத் தயாராய் இருக்கின்றன. ஏனென்றால், இந்தத் தருணங்களை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். அது எப்படி மற்றவர்களுடன் இணையும்போது இது உருவாகிறது? பரிசோதனை முயற்சியாக தனி அறைக்குள் இருவரை அனுப்பி, 45 நிமிடங்கள் அங்கே அமரச் செய்தால், பெரும்பாலானோர் வெளியே வரும்போது நல்ல நண்பர்களாகி விடுகின்றனர். இவ்வித தனிமையான ஒருங்கிணைப்புகளே நட்பை வளர்க்கிறது. மருத்துவர் - நோயாளி,  சில்லறை விற்பனைக் கடை பணியாளர் -  வாடிக்கையாளர் போன்றவர்கள் நடுவேகூட நட்பு மலர்வதற்குக் காரணம் கூட்டமில்லாத சூழலில், அவர்கள் இருவரும் தனியே சந்திக்கும் வாய்ப்புகள் உருவாவதுதான் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

வரையறுக்கும் தருணங்கள் என்பவை பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் தருணங்களாகவும் இருக்கக்கூடும். ‘‘நெகட்டிவ் தருணங்களே, ‘நான் யாருன்னு காட்டுகிறேன்’ என்று திசைமாற்றும் தருணமாக இருக்கிறது இல்லையா?” என்று கேட்கின்றனர் ஆசிரியர்கள். 

இந்த நான்கு விஷயங்களே நம்முடைய வாழ்வில் தோன்றும் வரையறுக்கும் தருணங்களில் பெரும்பாலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லியிருக்கும் ஆசிரியர்கள், இவற்றை எப்படி உருவாக்கி வளர்த்தெடுப்பது என்பதையும் தெளிவாக உதாரணங்களுடன் சொல்லியிருக்கின்றனர். 

உயர்ந்த அனுபவங்களை எப்படி உருவாக்கிக்கொள்வது, உலகம் குறித்த புரிதலை எப்படி வளர்த்துக்கொள்வது, பெருமையளிக்கும்படி எப்படி நம் வாழ்க்கைமுறையைக் கட்டமைத்துக்கொள்வது, உறவுகளை உருவாக்கி எப்படி அவற்றை உரம்பெறச் செய்வது என்பதையெல்லாம் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

ஒருசில தருணங்களே நம் வாழ்க்கையை வரையறுக்கிறது. அந்த வரையறுக்கும் தருணங்களை நாமே கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டி, அதற்கான வழிமுறைகளையும் விளக்கமாகச் சொல்லியுள்ள இந்தப் புத்தகத்தை, வெற்றி பெற விரும்பும் அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.

குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting

குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting

தனித்திறனை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு குழந்தைக்கும் வயது வேறுபாடு இருக்கும். உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்
குழந்தைகளின் தனித்திறனை வளர்க்கும் முயற்சிகளில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை! #GoodParenting
குழந்தைகளைப் படிப்புடன் எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ்களில் சேர்த்து ஜீனியஸ் ஆக்கும் கனவு எல்லாப் பெற்றோருக்குமே இருக்கும். ஸ்விம்மிங், ஸ்கேட்டிங், கராத்தே எனக் குழந்தைகளுக்கான பன்முக வாய்ப்புகள் திரும்பும் திசையெல்லாம் கொட்டிக்கிடக்கின்றன. பெற்றோர் குழந்தைகளுக்கான எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிடிஸ்களை வளர்க்கும் விதம் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர், சியாமளா ரமேஷ் பாபு.பெற்றோர்

பெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய 2 வயதில், சின்னச் சின்ன செயல்பாடுகளின் மூலம் குறிப்பிட்ட விஷயத்தில் தனித்தன்மையைத் வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். அது தாளத்துக்கு ஏற்ப ஆடுவதோ, பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிப்பதோ, எதைப் பார்த்தாலும் வரைவதோ என இருக்கலாம். இப்படிக் குழந்தை ஆர்வம் காட்டும் செயல்களைத் தொடர்ந்து கண்காணித்து அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தை இப்படி ஏதேனும் ஒரு செயல்பாட்டைத் தொடரும்பட்சத்தில், ``செல்லம், உங்களுக்குப் பாட்டு, நடனம் கத்துக்க ஆசையா? சேர்த்துவிட்டா கத்துப்பியா?' எனக் கேளுங்கள்

.குழந்தை வெளிப்படுத்தும் திறனை வளர்க்கும் இடங்களுக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திப் பாருங்கள். குழந்தை அதில் ஆர்வம் காட்டுகிறதா, அச்சம் அடைகிறதா என உற்றுநோக்குங்கள். குழந்தை திரும்பத் திரும்ப அங்கே போக ஆர்வம் காட்டினால், க்ரீன் சிக்னல் என அர்த்தம்.

புதிதாக ஒரு கலையைக் கற்பிக்க சேர்க்கிறோமே தவிர, அதில் ஜெயிப்பது மட்டுமே நோக்கமில்லை, பரிசுக்காகச் சேர்க்கவில்லை என்பதைக் குழந்தைகளுக்குப் புரியும்விதத்தில் சொல்லுங்கள். அதற்கு முன்பு, பெற்றோர்களுக்கும் இதில் தெளிவு அவசியம்.

தனித்திறனை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு குழந்தைக்கும் வயது வேறுபாடு இருக்கும். உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். குழந்தைக்கான தனித்திறன் 10 வயதிலும் வெளிப்படலாம். எனவே, பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

என் குழந்தை எந்தக் கூடுதல் வகுப்புக்குச் சென்றாலும் ஆர்வமே காட்டுவதில்லை என அங்கலாய்க்கும் பெற்றோர் உண்டு. அதை, அப்போதைக்கு அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். வளர வளர நண்பர்களின் ஊக்கத்தாலோ, சக மாணவர்களின் செயல்களைப் பார்ப்பதாலோ, ஆசிரியர்கள் மூலமோ அவர்களுடைய ஆர்வம் விரிவடையும்.

பெற்றோர்

புதிதாக ஒன்றைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க முடிவெடுக்கும் முன்பு, குழந்தையின் உடல் ஆரோக்கியம், பள்ளிக்கூட நேரம், பாடத்திட்டத்தின் வரையறை, குழந்தையின் ஆர்வம், குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் அனைத்தையும் மனதில்கொண்டு தொடங்குங்கள்.

குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுவதற்குத்தான் இந்த வகுப்புகளே தவிர, வதைக்க அல்ல. `இது எக்ஸ்ட்ரா கிளாஸ். ஃபீஸ் கட்டியாச்சு. நீ போய்த்தான் ஆகணும்' என வற்புறுத்தாமல், அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். ஆர்வம் இருந்தால், அவர்களே எனர்ஜிட்டிக்காகச் செயல்படத் தொடங்குவார்கள்.

சமீப காலமாக, வாய்ப்பாட்டு, நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், தற்காப்புக் கலைகள், வரைதல் போன்றவை ஊடகங்களால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்படுகிறது. எனினும், இவற்றில் ஆர்வம் காட்டாத குழந்தைகள் சாதிக்க முடியாது என்ற எதிர்மறை எண்ணத்தைக் கைவிட்டு, உங்கள் குழந்தையின் திறனை ஊக்குவிப்பது அவசியம்.

சில குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைவிட ரசிக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த ரசனை பின்னாள்களில் பெரிய அளவிலான தனித்திறனாக மாற வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளின் ரசனையை மதியுங்கள். அவர்களுடன் சேர்ந்து ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

எல்லாவற்றிலும் நம் குழந்தையே பரிசை அள்ளி வர வேண்டும் என நினைக்காமல், அவர்களின் குழந்தைப் பருவத்துக்கு மதிப்பு அளித்து, அவர்கள் விரும்புவதைச் செய்ய வழிகாட்டுங்கள்.

இனி உங்கள் குழந்தையும் ஆல்-ரவுண்டரே!

வெற்றி இலக்கை அடைய சுலபமான 5 வழிகள்!

ஒரு ஈசியான வழி இருக்கிறது. எப்போதும் எடுக்கும் முயற்சியைவிட, கூடுதலாக நீங்கள் கடுமையாக உழைத்தால் வெற்றிக்கு அருகில் நீங்கள் சென்று விடுவீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற தீவிரமாக உழைக்கவேண்டும். உழைப்பின்றி வெற்றிக்கனி கிடைப்பதென்பது நிஜத்தில் சாத்தியமற்றது.

உங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் 5 சுலபமான வழிகள் இதோ!

இந்த முக்கிய கேள்விகளை உங்களிடமே நீங்கள் கேளுங்கள்

உங்கள் கனவை நோக்கிய பயணம் ஏன் இத்தனை முக்கியமானது என்று கேட்டுக் கொள்ளுங்கள். லாபத்தை காட்டிலும் உயரிய குறிக்கோளை கொள்ளவேண்டும். சமூகத்தில் உங்கள் ஐடியா ஏற்ப்படுத்தப் போகும் மாற்றம் என்ன என்று சிந்தியுங்கள். சமூகத்தில் நீங்கள் ஒரு நேர்மறை தாக்கத்தை விட்டுச்செல்லப் போகிறீர்கள் என்ற நினைப்பே உங்களுக்கு ஊக்கத்தை கொடுத்து உந்துதலை அளிக்கும். உங்களின் கடின உழைப்பின் பலனை உணர்ந்தால் நீங்கள் செய்யும் வேலை சுலபமாக தெரியும், அதனோடு உங்களுக்கு நெருக்கமும் கிட்டும்.

உங்கள் முன்னேற்றத்தை அளவிடும் செயற்திட்டத்தை உருவாக்குங்கள்

எத்தனை கடுமையாக உழைத்தாலும், உங்களின் முன்னேற்றத்தை பற்றி அறியாமல் இருந்தால் அது அர்த்தமற்றதாக ஆகிவிடும். உங்களின் இலக்கு, அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் பணியை முடிக்கும் கெடுநாள் ஆகியவற்றை தெளிவாக வரையறுங்கள். இந்த திட்டம் ரெடி ஆனவுடன், பணியை தொடங்குங்கள். ஒரு ஐடியா முழுதும் நிறைவு பெறாமல் அடுத்தவற்றுக்கு தாவாதீர்கள். 

தொழில் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்

தொழிலில் ஏற்கனவே வெற்றி அடைந்தவர்களுடன் தொடர்பில் இருங்கள். போராடி வென்றவர்கள் பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து உங்களுக்கு உதவி செய்து முன்னேற்றத்திற்கான வழியை சொல்வார்கள். அதே போல் உதவி தேவைப்படும் பிறருக்கும் நீங்கள் உதவிடுங்கள். மற்றவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு உதவிட முடியும் என்று பார்த்து நடந்துகொண்டு, ஒரு நல்ல உறவுமுறையை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சுயநலமாக இருந்து உங்களைப் பற்றி மட்டும் யோசித்தால், மற்றவர்களும் அதேபோல் உங்களிடம் இருப்பார்கள் என்பதை மறவாதீர்கள். 

உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிடுங்கள்

உங்கள் வேலை பலு அதிகமாக இருக்கும். ஆனால் அதற்காக உங்களின் நேரத்தையும் தொழில், பணிக்கு மட்டுமே செலவிடுவது நல்லதல்ல. குடும்பம், நண்பர்கள் என்று அவருகளுடனான உங்கள் நேரத்தை திட்டமிட்டு ஒதுக்குங்கள். அதே போல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படிப்பது, சினிமா என்று நீங்கள் விரும்பிய ஒன்றை செய்ய தவறாதீர்கள். அதுவே உங்களை புத்துணர்வாக்கி செய்யும் வேலையை சிறப்பாக செய்ய உதவிடும். 

உங்களின் முக்கிய இலக்கை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்

நீங்கள் தொடங்கிய முக்கிய இலக்கை எப்போதும் மறவாமல் அதை அடையவே உழைத்திடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே மிகமுக்கியம். உயரிய இலக்கை அடைய மூன்று வழிகளை எழுதிவைத்து அதை ஒவொன்றாக நிறைவேற்றிடுங்கள். அதே போல் ஒவ்வொரு நாளும் அதே ஊக்கத்துடன், குறிக்கோளுடன் செயல்பட்டால் மட்டுமே அந்த இலக்கை நீங்கள் நெருங்கமுடியும். 

வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு தெளிவாக வகுத்துக்கொண்டு வாழ்ந்தால் மட்டுமே உங்கள் கனவு நிறைவேற வழி கிடைக்கும். உற்சாகமாக மேற்கூறிய வழிகளை பின்பற்றிப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!

மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் :) : மஹாத்மா காந்தி வரலாற்று குறிப்பு

மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் :) : மஹாத்மா காந்தி வரலாற்று குறிப்பு


1893-ம் வருடம். தென்னாப்பிரிக்காவின் ஆளரவம‌ற்ற ஒரு ரயில் நிலையத்தில் கடும் குளிரில் இரவைக் கழித்துக் கொண்டிருந்தான் 24 வயது இளைஞன். ரயில் பயணத்துக்கான முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தும், நிறவெறி காரணமாக கீழே இறக்கப்பட்ட அராஜகத்தை நினைத்துத் துடித்தான். வழக்கறிஞர் தொழில் செய்யும் தனக்கே இந்த கொடுமை நிகழ்கிறது என்றால், படிக்காத இந்தியர்களுக்கு என்னெவல்லாம் அநியாயம் நிகழும் என எண்ணிப் பார்த்தான்.

இந்த அநியாயத்தை எதிர்த்து நிற்பதா அல்லது இந்தியாவுக்கு திரும்பிவிடுவதா என்ற இரண்டே கேள்விகள்தான் அவனிடம் அப்போது இருந்தது. இரெவல்லாம் சிந்தித்தவன், காலையில் சூரியன் கண் விழிப்பதற்குள் மிகத் தெளிவான போராளியாக மாறினான். அடிமைத்தனத்தையும் அராஜகத்தையும் எதிர்க்கத் துணிந்தான். போராட வேண்டுமாயின் பணபலம் மற்றும் ஆள்பலம் வேண்டும், உன்னிடம் இரண்டும் இல்லை என்பதால் தோற்றுவிடுவாய் என்று அவநம்பிக்கை விதைத்த நண்பர்களைப் பார்த்து, ‘மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்’ என்று போராட்டத்தை தொடங்கினான். அதில் வெற்றிபெறவும் தொடங்கினான். ஆம்… பாரதத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் அந்த இளைஞன்.

21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டத்தின்
வெற்றியைக் கண்டுதான், இந்தியா அவரை கைநீட்டி அழைத்தது. 1869-ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. பன்னிரெண்டாவது வயதில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம், அவருக்குள் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. விசுவாமித்திரர் நடத்திய சோதனைகளை எல்லாம் ‘மன உறுதியால் தாங்கிக் கொண்டேன்’ என நாடகத்தில் அரிச்சந்திரன் சொன்னதைக் கேட்டு, உண்மை மட்டுமே பேசும் புதிய மனிதராக மாறினார். அவர் மன உறுதி மற்றும் நேர்மையை வெளிநாடுகளில் படிக்கச் சென்றபோதோ அல்லது கடும் நோயுடன் மரணப் போராட்டம் நடத்தியேபாதோ எப்போதும் கைவிட்டதேயில்லை. ஒரு வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றவர், கோர்ட்டுக்குக் கொண்டு சென்ற வழக்குகளைவிட, கோர்ட்டுக்கு வேளியே பேசித் தீர்த்துவைத்த வழக்குகள்தான் அதிகம்.

தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த நிறவெறியும் அடக்குமுறையும் காந்தியை ஒரு போராட்டக்காரராக மாற்றியது. போராட்டம் என்றால் வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் உலகிலேயே முதன்முறையாக ‘அகிம்சை’ போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். ‘‘ஆயுதம் கொண்டு தாக்குவதைவிட, எதிரியின் முன் உறுதியுடன் நின்று சாத்வீக‌மாக போராடுவதுதான் உண்மையான வீர‌ம், எதிரியிடம் காட்ட வேண்டியது எதிர்ப்பை மட்டுமே தவிர, வன்முறையல்ல’’ என்ற காந்திஜியின் அகிம்சை போராட்டத்தை ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் இந்த கோட்பாடுதான், சிதறிக்கிடந்த இந்திய சுதந்திரதாகத்தை ஒன்று சேர்த்து வலிமையாக்கியது. அதிக எண்ணிக்கையில் பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்தது. ஆனாலும் இந்த போராட்டத்தின் வெற்றி குறித்து சந்தேகங்கள் எழுந்தபோது, ‘‘மன உறுதியுடன் போராடினால், வெற்றி நிச்சயம்’’ என்று உறுதியுடன் சொன்னார் மகாத்மா காந்தி.

1930-ம் வருடம். 61 வயதான காந்தி, உப்புக்கு வரி போட்ட ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து ‘தண்டி யாத்திரை’யை தொடங்கினார். 241 மைல் தூரத்தை 24 நாட்களில் கடந்த காந்தி, ஆயிரக்கணக்கான காவலர்கள் முன்னிலையில் தண்டியில் உப்பு எடுத்தார். நாடெங்கும் பல்வேறு தலைவர்கள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

காந்தியின் மன உறுதியையும் அகிம்சையின் பலத்தையும் கண்டு மக்கள் மலைத்து நிற்க ஆங்கிலேயர்கள் பயந்து போனார்கள்.
1947-ம் வருடம். காந்தியின் இந்த‌விடாத போராட்டத்தால், இந்தியாவுக்கு கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு தேடி வந்தும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் தீண்டாமை, ஏழ்மை, மதக் கலவரம் போன்றவற்றுக்கு எதிராக மன உறுதியுடன் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார்.

‘120 வயதுவரை வாழ்ந்தால் மட்டுமே நான் நினைத்திருக்கும் எல்லா
காரியங்கைளயும் செய்து முடிக்க முடியும்’ என்ற காந்திஜியை 78வது வயதில்
மூன்று துப்பாக்கி குண்டுகளுடன் முடித்துவைத்தான் நாதுராம் வினாயக
கோட்ஸே. காந்தி மறைந்தாலும் மன உறுதி எங்கெல்லாம் இருக்கிறதோ,
அங்ெகல்லாம் ெவற்றி உருவத்தில் அவைர தரிசிக்க முடியும்.