Friday, July 17, 2015

தொந்தியைக் குறைக்கும் இஞ்சி!

தொந்தியைக் குறைக்கும் இஞ்சி!

தொந்தியைக் குறைக்கும் இஞ்சி… நோய் நீக்கி இளமையை கூட்டும்!

* இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு, வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

* இஞ்சி சாறில் தேன் கலந்து, தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

* காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட, பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

* இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

* இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட, மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

* இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

* இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

* இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

* இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட, வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.

* பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கோப்பை வெந்நீரில் கலந்து, காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட, மார்பு வலி தீரும்.

* இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட, நல்ல பசி ஏற்படும்.

* இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட, ஜீரணம் ஏற்படும்.

* இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து, அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

* இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து, ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட, வாய்வுத் தொல்லை நீங்கும்.

* இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து, காலையில் ஒரு கரண்டி வீதம், ஒரு வாரம் குடித்துவர, நீரிழிவு குறையும்.

* இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர, தொடக்கத்தில் உள்ள ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

No comments:

Post a Comment