Monday, July 18, 2016

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்...

தெய்­வ­நி­லைக்கு உய­ருங்­கள்
* மற்­ற­வர்­க­ளுக்கு நன்மை ஏற்­ப­டு­மா­னால் நர­கத்­திற்­குக் கூட செல்­வ­தற்­குத் தயா­ராய் இருங்­கள். மர­ணம் வரு­வது உறு­தி­யாக இருக்­கும்­போது ஒரு நல்ல காரி­யத்­திற்­காக உயிரை விடு­வது மேல்.
* உல­கில் நல்­ல­வர்­கள் பெரிய தியா­கங்­க­ளைச் செய்­கி­றார்­கள். அதன் விளை­வாக வரும் நன்­மை­களை மனி­த­கு­லம் முழு­வ­தும் அனு­ப­விக்­கி­றது.
* உல­க­வாழ்­வில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்­டாம். வெற்­றியோ தோல்­வியோ போரா­டுங்­கள்.
* பாம­ரன் பண்­புள்­ள­வ­னா­க­வும், பண்­புள்­ள­வன் தெய்­வ­மா­க­வும் உய­ர­வேண்­டும். இதுவே ஆன்­மி­கத்­தின் பயன்.
* தெய்­வீ­கத்­தன்மை இல்­லா­மல் பெறும் மித­மிஞ்­சிய அறி­வும், ஆற்­ற­லும் மனி­தர்­களை மிரு­கங்­க­ளாக்கி கீழ்­நி­லைக்­குத் தள்­ளி­வி­டும்.
* சுய­ந­லம், சுய­ந­ல­மின்மை இந்த இரண்­டை­யும் தவிர கட­வு­ளுக்­கும் சாத்­தா­னுக்­கும் வேறு­எந்­த­வி­த­மான வேறு­பா­டும் கிடை­யாது.
மின்­னல் வேக மாற்­றம்
* ஆன்­மிக வாழ்­வில் பேரின்­பம் கிடைக்­கா­மல் போனால் அதற்­கா­கப் புல­னின்ப வாழ்­வில் திருப்தி கொள்­ளக்­கூ­டாது. இது அமு­தம் கிடைக்­கா­விட்­டால்­சாக்­க­டை­நீரை நாடிச் செல்­வ­தற்கு சமம்.
* மாபெ­ரும் வீரனே! உறக்­கம் உனக்­குப் பொருந்­தாது. துணி­வு­டன் எழுந்து நில்.
* உன்னை நீயே பல­வீ­னன் என்று நினைப்­பது உனக்கு பொருந்­தாது. "நான் ஒரு வெற்றி வீரன்' என்று எப்­போ­தும் உனக்­குள்­ளேயே சொல்­லிக்­கொள். மின்­னல் வேகத்­தில் உனக்­குள் புதிய மாற்­றம் ஏற்­ப­டு­வ­தைக் காண்­பாய்.
* கீழ்த்­த­ர­மான தந்­திர முறை­க­ளால் இந்த உல­கத்­தில் மகத்­தான காரி­யம் எதை­யும் சாதித்­து­விட முடி­யாது.
* அதிர்ஷ்­ட­தே­வதை உனக்கு அருள்­பு­ரி­யட்­டும் அல்­லது புரி­யா­மல் போகட்­டும். ஆனால் நீ, உண்மை என்­னும் பாதை­யில் இருந்து அணு­வ­ள­வும் பிறழ்ந்து போகா­மல் இருப்­ப­தில் கவ­ன­மாக இரு.

No comments:

Post a Comment