Monday, July 18, 2016

நேர நிர்வாக கலை

நேரமே வாழ்க்கை

நேரமே வாழ்க்கை.... வாழ்க்கை நேரம்
நேரத்தை இழந்தவன் வாழ்க்கையை இழக்கிறான்.
நேரம் ஒரு மனிதனை நிர்வகிக்கும் முன் ,மனிதன் நேரத்தை நிர்வகிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
இதைத் தான் நபிகள் நாயகம் மிக அழகாக சொல்கிறார். "மற்றவர்கள் உனக்காக பிரார்த்தனை செய்யும் முன் , நீங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்."

நேர நிர்வாகம்.

நேரத்தை நிர்வகிப்பது என்பது ஒரு முக்கியமான வாழ்க்கை கலை.
மனிதன் ஆய கலைகள் 64 யும் தெரிந்து கொண்டு இந்த ஒரு நேர நிர்வாகக்கலையை முறையாக தெரிந்து கொள்ளவில்லை என்றால் மொத்த மனித வாழ்க்கையும் அர்த்தமற்றதாகிவிடும். 
நேர நிர்வாக கலையை எந்த ஒரு நபரும் எந்த ஒரு காலக்கட்டத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
6 வயது முதல் 60 வயது வரை ஒவ்வொருவருக்கும் நேர நிர்வாகம் பற்றிய விழிப்பு உணர்வு வேண்டும். பிறகு அந்த விழிப்பு உணர்வு வழி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய நேரம்

சாதாரண மனிதன் வாழ்க்கையின் முதல் பாதியில் , அதாவது 60 வயது வரை உடல் ஆரோக்கியத்தை உதாசீனப்படுத்தி, மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கின்றான்.
பிறகு, வாழ்க்கையின் அடுத்த பாதியில் ,அதாவது 60 வயது முதல் இழந்த உடல் ஆரோக்கியத்தில் சிறிது அளவையாவது மீட்க வேண்டும் எண்ர ஆவலில், சம்பாதித்த பணத்தை தண்ணீராக ஆரோக்கியத்துக்காக செலவு செய்கிறான்.

ஆரோக்கியமே மனிதனின் மிகப் பெரிய சொத்து . நோய் இல்லாதவன் வாலிபன். இந்த உண்மை தெரிந்தும், புரிந்தும், இன்றைய இளைஞர்களுக்கு தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நேரம் இல்லை. மேலும் மனதை ஆரோக்கியமாகவும், அமைதி நிலையிலும் வைத்துக் கொள்ள இன்றைய இளைஞர்களுக்கு நேரம் இல்லை.

நேர விழிப்புணர்வு

நம்மில் அதிகமான இளைஞர்களுக்கு முதலில் நேர விழிப்பு உணர்வு இல்லை.
அவ்வாறு நேர விழிப்பு உணர்வு உள்ள சில இளைஞர்களில் பலருக்கு உடற்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு இல்லை.
நேர விழிப்பு உணர்வு மற்றும் உடற்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள சிலரில், பலருக்கு மனப்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு இல்லை.
அதிலும் நேர விழிப்பு உணர்வு, உடல் விழிப்பு உணர்வு மற்றும் மனப்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள சிலரில் பலருக்கு ஆன்மிகப் பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு துளி கூட இல்லை.

தற்சோதனை விழிப்பு உணர்வு

அவ்வாறு உடல் பயிற்சி, மனப் பயிற்சி மற்றும் ஆன்மிகப் பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள மிக சிலரில் பலருக்கு தன்னைத் தானே தற்சோதனை செய்து எண்ணத்தை சீரமைத்துக் கொண்டு , குண நலங்களை பண்படுத்திக் கொண்டு தெளிந்த வழியில் தினசரி வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்ளும் விழிப்பு உணர்வு இல்லை.
இதைத்தான் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார், " இளைஞர்கள் எல்லாம் வீண் அல்ல. இளைஞர் சமுதாயத்தின் ஆற்றலை , சிந்தனை வேகத்தை, இந்த முதிய சமுதாயம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை" 

தூக்கத்தில் பாதி

சாதாரண மனிதன் வாழ்நாள் முழுவதும் தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி என்ற நிலையில் நல்ல எதிர்காலத்தை பற்றி நினைத்து கனவு கண்டு , அதில் திளைத்து நல்ல நிகழ் காலத்தை கோட்டை விருகிறான்.

சமச்சீர் வாழ்க்கை

இளமை - முதுமை , ஆரோக்கியம்---நோய் , இன்பம் - துன்பம் என்ற வாழ்க்கை நிலைகளை ஒரு மனிதன் வாழ்க்கைப் பயணத்தில் எதிர் கொள்கிறான். இந்த நிலை இல்லாத உலகில் , உடல் நிலைக்கும் என்ற கனவில் வாழும் இளைஞனே.. வாழ்க்கையின் நிதர்சன உண்மையை குறிபாக நேர நிர்வாகத்தின் அவசியத்தை இளமை காலத்திலேயே உணர்ந்து கொள்.

தனிமனித மேம்பாடு

சுருங்க சொன்னால், நேர நிர்வாகம் என்பது தனிமனித சிந்தனை மேம்பாட்டு நிர்வாகம் 
நம் நேரத்தை சரியாக நிர்வகிக்க கற்றுக் கொள்வோம். சிந்தனஒயோடு நம் செயல்களை சரியாக செய்யக் கற்றுக் கொள்வோம். நம் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வோம்.
ஒரு நாளில் நமக்குக் கிடைக்கும் இந்த உன்னதமான 24 நிமிட நேரத்தை சரியான வகையில் நிர்வகிக்க கொள்வோம்

No comments:

Post a Comment