Wednesday, October 25, 2017

“ஜாதிகள் இல்லையடி பாப்பா” - படித்ததில் பிடித்தது.

• பள்ளியில் ஜாதிசான்றிதழ் வாங்கிட்டு “ஜாதிகள் இல்லையடி பாப்பா” சொல்லும்போதே, படிப்புக்கும், வாழ்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று புரிகின்றது..

• பூஜையோ, ஜெபமோ, தொழுகையோ.. ஒரு பருக்கை சோற்றைக் கூட தராது..
உழைச்சா தான் சோறு..

• ஒரு பெண் சிரிக்கும்போது, அழகாக இருப்பாள்.. அவளை சிரிக்க வைத்து ரசிக்கும் ஒரு ஆண் அதை விட அழகாக தெரிவான்..

• ஒரு பெண் உன்னிடம் தன் பிரச்சனையை சொல்கிறாள் என்றால், அதற்காக அவள், அவர்களை குறை கூறுகிறாள் என்று அர்த்தம் இல்லை.. உன்னை முழுமையான நம்புகிறாள் என்று அர்த்தம்..

• ஒருவர் உங்களிடம் ஆறுதல் தேடிவரும் போது, அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு, பிறகு அவரை பற்றி மற்றவரிடம் குறை கூறினால், அதை விட நம்பிக்கை துரோகம் என்ன இருக்கு..

• எழுதி வைத்துகொள்ளுங்கள், பல அடுக்கு மாடி கட்டிடங்களை இடித்து விவசாயம் செய்யும் நாள் வரும் வெகுவிரைவில்..

• உயிரை கொடுத்தாலும் திரும்ப கிடைக்காதது, “நேரம்”..அந்த நேரத்தை ஒருவருக்காக செலவழிக்கும் முன் அவர் அதற்கு தகுதியானவரா என ஆராய்வது நல்லது..

• சுதந்திரம் இல்லாத காலத்தில், வெள்ளைக்கார கவர்னர்களையேகூட எதிர்த்து தைரியமாக குரல்கொடுக்க முடிந்த நம்மால் சுதந்திரம் பெற்ற பிறகு,
ஒரு வார்டு கவுன்சிலரை பார்த்துக்கூட எதிர்த்துக்குரல் கொடுக்க முடியவில்லையே ஏன்?

• “கவலைப்படாதே” என்பதை விட, “நான் பார்த்துக்கிறேன்” என்பதே சிறந்த ஆறுதல்..

• இன்று உன்னால் சிரித்தவர்கள், நாளை உனக்காக அழுதால், நீ வாழ்ந்த வாழ்கை அர்த்தமானது..

• இறந்தவருக்கு சிலை வைப்பதற்கு பதிலாக, பசியோடு இருப்பவருக்கு, இலை வையுங்கள்..

•“ஏமாத்திட்டாங்க”ளேன்னு வருத்தப்படாம, “இவர்களைப் போய் ஏமாத்திட்டோ”மேன்னு வருத்தப்பட வைக்கிற மாதிரி வாழனும்..

• நம்ம கூட இருந்த ஒருத்தர், நமக்கு துரோகம் “பண்ணிட்டாங்க”ன்னு கூட இருக்க மத்த எல்லோரையும் சந்தேகப்பட்டா வாழ்வில் நிம்மதி இருக்காது..

• குத்திக்காட்டும் மனிதர்க்கும், சுட்டிக்காட்டும் மனிதர்க்கும், இடையில் சிரித்து செய்து வாழ்ந்தாலே பெரும் சவால்..

• அடுப்பு கல்லு உள்ளே இருந்தால், உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால்,
சாதா ஹோட்டல்.. இவ்வளவு தான் வாழ்கை..

• தெருவில் கிடக்கும் காகிதமாக யாரையும் வெறுக்காதே.. நாளை அது பட்டமாக பறந்தால், நீ அவர்களை நிமிர்ந்து பார்க்க நேரிடும்..

• வாழ்க்கையில் எல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதே.. சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே நல்லது..

• உறவு என்பது ஒரு கோவில். அதற்குள் செல்லும் முன், “ஈகோ” எனும் செருப்பை கழட்டிவைத்தல் நலம்.

• நாம் தேடிச்செல்வோரை விட, நம்மை தேடி வருவோர் மீது அதிகம் அன்பையும் அக்கறையும் செலுத்துங்கள்..

• வேலை செய்பவரின், பணம் தான் நம் கண்ணுக்கு தெரிகிறது.. அவர்களின் உழைப்பும், கஷ்டமும் நம் கண்ணுக்கு தெரிவதே இல்லை..

• யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீகள்.. யாரோ ஒருவரால் நிராகரிப்பு, ஒருவரால் நேசிக்கப்படுகின்றது..

No comments:

Post a Comment