Tuesday, April 1, 2014

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்..

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்

• வெற்றியில் சிரிப்பவன் வீரன்.
• கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.
• துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
• மகிமையில் சிரிப்பவன் மன்னன்.
• விளையாமல் சிரிப்பவன் வீணன்.
• இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.
• மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.
• மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.
• கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.
• ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.
• தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.
• நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.
• ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.
• கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.
• கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.
• இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.
• நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.
• தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.
• இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.
• குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.
• நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.
• அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.
• தற்பெருமையில் சிரிப்பவன் கோழை
• சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்.
• நிலை மறந்து சிரிப்பவள் காதலி.
• காதலால் சிரிப்பவள் மனைவி.
• அன்பால் சிரிப்பவள் அன்னை.

No comments:

Post a Comment