Tuesday, April 15, 2014

கரும்புள்ளிகள் மறைய

கரும்புள்ளிகள் மறைய

 ஒரு சிலருக்கு முகத்தில் பருக்கள் பெறியளவில் தோன்றி சில நாட்கள் அல்லது ஒரு வாரம் வரை இருக்கும் இதுபோன்ற பருக்களால் முகத்தில் கரும்புள்ளி ஏற்படும். இதனைப் போக்க....

பயிற்றம்மா மஞ்சள் தூள் தயிர் ஆகியவற்றை குழைத்து கரும்புள்ளிகள் மேல் தடவி குளிர்ந்து தண்ணீரினால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்

நன்கு பழுத்த தக்காளியை வெட்டி முகத்தில் பூசி சிறிது நேரத்தின் பின் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

முட்டை வெள்ளைக்கருவுடன் தேசிக்காய்ச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்களின் பின்னர் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். தயிருடன் கடலைமா கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்களின் பின்னர் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

ஒரு ஸ்பூன் தயிருடன், பாதி தக்காளிப் பழத்தை நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் ஊற விட்டுக் கழுவினால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

எலுமிச்சை, வெள்ளரிக்காய் சாறு எடுத்து முகத்தில் தடவி காய்ந்ததும் முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் படிப்படியாக குறையு
 \ 
முட்டை சருமத்திற்கு மிகவும் சிறந்த பொருள். அதனை சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெறுவதுடன், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளும் போய்விடும்.

அதற்கு முட்டையின் மஞ்சள் கருவுடன், ஜெலட்டின் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து, 1 நிமிடம் சூடேற்றவும். பின் அதனை நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதனை முகத்திற்கு தடவி, 5-10 நிமிடம் காய வைக்க வேண்டும். பிறகு அதனை முகத்தில் இருந்து விரல்களால், உரித்து எடுக்கவும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் தடவவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, சருமமும் இறுக்கமடையும்.

எலுமிச்சை சாற்றில் இருக்கும் ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா, கிருமிகள் போன்றவற்றை அழிப்பதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், கரும்புள்ளிகளை எளிதில் நீக்கிவிடும்.

மேலும் எலுமிச்சை சாற்றை முட்டையின் வெள்ளை கருவோடு கலந்து பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் கழித்து, அதனை முகத்தில் இருந்து உரித்துவிட வேண்டும். பின் அதனை மைல்டு ஃபேஸ் வாஷால் கழுவி விட வேண்டும். இதனால் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்கள் நீங்கிவிடும்.

ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, பாலுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்திற்கு தடவ வேண்டும். வேண்டுமென்றால் அதில் சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கலந்து தடவலாம்.

அவ்வாறு அதனை தடவி 10-15 நிமிடம் காய வைத்து, பின் அதனை நீக்கிவிட்டு, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க பெரும்பாலோனோர் இந்த முறையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மேற்கூறியவற்றையெல்லாம் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, மற்ற பிரச்சனைகளும் வராமல் இருக்கும்.

முக்கியமாக முகத்தை கழுவியப் பின், முகத்தில் அரிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க கிளின்சரை வைத்து ஒருமுறை கழுவி விட வேண்டும். இதனால் முகமானது நன்கு பொலிவோடு, மிருதுவான சருமத்தோடு அழகாக இருக்கும்.

No comments:

Post a Comment