Monday, April 7, 2014

கனவுகள் தரும் பலன்கள்

கனவுகள் தரும் பலன்கள்

* சந்திரனை சூரியன் பிடிப்பதாக கனவு கண்டால் யோகம் தரும். 

* பழ மரங்கள், மலைப்பிரதேசம் போன்றவை கனவில் வந்தால் நன்மை அளிக்கும். 

* பழங்கள் அதிகமாக இருக்கும் மாமரம், புளிய மரம், காய்கள் நிறைந்த பாக்கு மரம், தென்னை மரம் கனவில் வந்தால் செல்வம் சேரும். 

* எதிலாவது ஏறுவது போல் கனவு கண்டால் உயர்நிலை பெறுவார்கள். 

* வெள்ளைப்பட்டு அணிந்த அழகான பெண்ணை கனவில் கண்டால் புகழ் கிடைக்கும். 

* அரசன், குதிரை, பசு, காளை போன்றவை கனவில் தோன்றினால் குடும்பம் மேன்மை பெறும். 

* இளம்பெண் தாமரை ஏந்தி கனவில் வந்தால் அதிர்ஷ்டம் வரும். 

* தேவர்களுடன் பேசுவதாகவும், அரசனுடன் இருப்பதாகவும் கனவு கண்டால் உயர்வு நிலையை அடைவார்கள்.

No comments:

Post a Comment