Tuesday, April 15, 2014

பொது அறிவு

பொது அறிவு

• முதன் முதலில் தமிழில் தந்தி அனுப்பும் முறை ஈரோட்டில் அறிமுகமானது.

• தமிழ்ப் பத்திரிகைகளில் முதன் முதலில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் மகாகவி பாரதியார்.

• ஜப்பானியர்களுக்கு 3 என்ற எண் பிடிக்காது.

• ஒரு குண்டூசியின் தலைப் பரப்பில் பத்தாயிரம் பாக்டீரியாக்களை அடுக்க முடியும்.

• இமய மலையில் வசிக்கும் யாக் எருமையின் பால் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

• டி.வி.ஆன்டெனா, சமயங்களில் இடிதாங்கியாகவும் செயல்படும்.

• டிப்பர் என்ற பறவை நீரின் அடி ஆழத்திற்குச் சென்று, இரையைப் பிடிக்கும்.

• ஆழ்கடலைப் பற்றி ஆராயக்கூடிய இயலுக்கு ஓஷனோகிராஃபி என்று பெயர்.

• இந்தியாவில் 22,000-க்கும் மேற்பட்ட ரெயில்வே லெவல் கிராஸிங்குகளுக்கு மூடுகதவே (கேட்) கிடையாது.

• இந்தியாவில் முதன் முதலாக மின்சார வசதியைப் பெற்றது கல்கத்தா நகரம்.

• முதன் முதலில் மருத்துவமனை அமைக்கப்பட்ட நாடு இத்தாலி.

• நீர்யானை மனிதனைவிட வேகமாக ஓடும்.

• ஆஸ்திரேலியாவில் மனிதர்களைவிட ஆடுகளே அதிகம்.

• உலகில் 26 நாடுகளில் கடற்கரை கிடையாது.

• பூமிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமே 4,02,32,500 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளதாம்.

• விரல்களின் 40 சதவீத பலம் கட்டை விரலில்தான் இருக்கின்றது.

• ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக முதழி முதலில் கொண்டாடிய நாடு இங்கிலாந்து.

• யானை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே பிற மிருகங்களுடன் சண்டையிடும்.

• விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இரண்டு முறை எம்.பி.ஆக இருந்தவர்.

• ஒரு சிலந்தி வலையிலுள்ள நூல் முமுவதையும் இழுத்துப் பார்த்தால் 2000 மைல்கள் நீளம் கூட இருக்கும்

No comments:

Post a Comment