Wednesday, April 16, 2014

பொது அறிவு...

பொது அறிவு...

* உலகிலேயே மிகப்பெரிய பாறை ஆஸ்திரேலியாவில் உள்ளது. ‘உலுறு’ என்ற இப்பிரமாண்ட பாறை 114 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமானது.

* சில மேகங்களின் உயரம் 16 கிலோமீட்டரை விடவும் அதிகம்!

* வாளை மீன்கள் வாயு வெளிப்படுத்துவதன் மூலமாக தகவல் பரிமாறிக் கொள்கின்றன.

* குதிரைகளால் ஒரே நாளில் 160 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

* கைரேகையைப் போலவே நாக்கின் ரேகைகளும் தனித்துவம் மிக்கவை.

* ஈபிள் டவரின் 1665 படிகளில் ஒருவர் ஒருமுறை சைக்கிள் ஓட்டிச் சென்றிருக்கிறார்.

* வெண் சுறாக்கள் 15 கொரில்லாக்கள் அளவு எடை கொண்டவை.

* 30 கோடி ஆண்டுகளுக்கு முன் 6 அடி நீளமுள்ள மரவட்டை பூச்சிகள் உலகில் சுற்றிக் கொண்டிருந்தன.

* கடலில் இதுவரை பொங்கிய அலைகளில் மிகப்பெரியது எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை விட உயரமானதாக இருந்தது.

* விண்கலத்தில் உருளைக்கிழங்குச் செடி வளர்த்து சோதனை செய்திருக்கின்றனர் விண்வெளி விஞ்ஞானிகள்.

* கிரிஸ்லி வகை கரடியால் குதிரைக்கு இணையான வேகத்தில் ஓட முடியும்.

No comments:

Post a Comment