Tuesday, April 26, 2016

அலுவலக மன அழுத்தங்களை எளிதாக சமாளிக்கலாம்

போட்டிகளும் சவால்களும் நிறைந்த இந்த உலகில் வாழ்வில் வெற்றி பெற எப்படியாவது முன்னேற வேண்டும் என்று இயங்குகின்ற இன்றைய இளைஞர்களுக்கு 24 மணி நேரம் போதவில்லை. படிப்பு முடிந்த கையோடு சம்பாதிக்க வேண்டும் என்று சகல வழிகளையும் தேர்ந்தெடுத்து களத்தில் இறங்கும் நமக்கு சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் மட்டும் நிம்மதி தங்கிவிடுகிறதா என்ன?

அங்குதான் ஆரம்பிக்கிறது அடுத்தக் கட்டப் பிரச்சினைகள். அலுவலக வேலைணூ; சூழலில்  தங்களது வாழ்க்கையை சிக்கவைத்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் அதிகம். காரணம் அதிக வேலை தரும் பதற்றம், விளைவு ஒவ்வொரு முறையும் தன் மேலதிகாரி கூப்பிடும்போது நகத்தைக் கடித்துக் கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.


கஷ்டமான அலுவலக வேலைகளையும் எளிதாக சந்தோஷமாக மாற்றிக் கொள்ளும் வித்தை உள்ளன.
 மன அழுத்தம் என்பது வாழ்வின் அன்றாடம் நடக்கக்கூடிய ஒரு விடயம். மன அழுத்தம் வந்தாலும் மூளை தன்னைத் தயார்படுத்திக் கொண்டு எதையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடும்.


குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை செய்து முடிக்க முடியாத நிலையில் தான் ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க நேர நிர்வாகம் மிக முக்கியம். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு முன்பு அதை எப்போது எப்படி முடிக்கப் போகிறோம் என்று திட்டமிடுங்கள். எதை முதலில் செய்ய வேண்டும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து பணியைத் தொடங்குங்கள். பதற்றம் நெருங்கவே நெருங்காது.


மன அழுத்தம் ஏற்பட்டால் முன்பு இதேபோன்ற சூழ்நிலையை எப்படி வெற்றிகரமாகக் கையாண்டோம் என்பதை எண்ணிப்பாருங்கள். பயம், பதற்றம் விலகி தைரியம் பிறக்கும். அலுவலகத்துக்குச் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தாலோ பலருக்கு மன அழுத்தம் வரும். இதை முன்கூட்டியே எதிர்பார்த்து அதற்கேற்ப முன்கூட்டியே கிளம்புவதன் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலலாம்.

மன அழுத்தம் இருந்தால் அந்த விடயத்தைத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். அதையே யோசித்து  விளைவுகளை எண்ணி இன்னும் மன  அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ளக்கூடாது. தீர்வைக் கண்டுபிடிப்பதன் மூலம் நம்  குறிக்கோள்களைச் சென்று அடைவதற்கான வழி கிடைத்துவிடும்.


நாளைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது மாதிரியான நெருக்கடி நேரங்களில் இரவில் வேலை செய்வது தவிர்க்க முடியாதது. அதற்காக தினமும் அலுவலக வேலையில் மட்டும் பழியாய் கிடப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது 
அல்ல. அலுவலக வேலைகளை வீட்டுக்குக் கொண்டு வருவதும் தவறு. இதனால் குடும்ப உறவில் பாதிப்பு ஏற்படலாம்.


நாம் இல்லாத  நேரத்தில் ஏதேனும் முக்கியமான விடயம் நடந்து அதை நாம் தவற விட்டுவிடுவோமோ என்ற பயத்திலேயே பலர் அலுவலகத்திலேயே ஆணி அடித்தாற்போல் இருப்பார்கள். இதுவும் தவறு. நீங்கள் இல்லை என்றாலும் உங்களின் பணி வேறு ஒருவரால் செய்யப்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
"உன்னால் விழுங்க முடியாததைக் கடிக்காதே' என்று ஒரு முதுமொழி 
உண்டு.

அதன்படி யார் எந்த உதவி கோரினாலும் கூடுதல் பணியைக் கொடுத்தாலும் அது நம் கடமையாக இல்லாதபோதும் மரியாதை நிமித்தமாக செய்து தருவதாக ஒப்புக்கொண்டு முடிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்காதீர்கள். அந்த வேலையை உரிய நேரத்தில் செய்ய இயலாது என நிச்சயமாகத் தெரிந்தால் மன்னிக்கவும் இதை நான் ஏற்பதற்கு இல்லை என்று சொல்லுங்கள்.
பணியில் இருக்கும் போது கூடுமானவரை அடிக்கடி தேநீர், கோப்பி குடிப்பது, அரட்டை அடிப்பது என்று அலுவலக நேரத்தை வீணாக்காதீர்கள். இவையெல்லாம் உங்களை இன்னும் பதற்றப் பேர்வழியாக மாற்றுவதோடு உங்கள் உடல் நலத்துக்கும் வேட்டு வைத்துவிடும்.


ஐம்புலன்களையும் எப்போதும் விழிப்புணர்வுடன், கூர்மையாகவும் உற்சாகமாகவும்  வைத்திருந்தால் ஒருவித த்ரில் தம்மில் ஊடுருவுவதை உணர முடியும். அந்த த்ரில்லே ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உற்சாக மனநிலைக்கு நம்மை மாற்றும்.
சக மனிதர்களுடன் அன்புடன் பழகுங்கள். இதனால் மனதில் கோபம், பகை, பொறாமை, விரோதம் போன்ற அனைத்து தீய குணங்களும் அடித்துச் செல்லப்படும். வேலையிலும் ஆர்வம் அதிகரிக்கும்.


எந்த வேலையையும் ஒரு விளையாட்டாக பொழுது போக்காக செய்யுங்கள். நம் எண்ண ஓட்டத்தைப் பொருத்துக் கடினமான வேலைகள் கூட எளிதாக மாறும். வேலை செய்யும் சோர்வே இருக்காது.


 சிலர் இயல்பிலேயே சின்ன விடயத்துக்கும் அதிகமாகப் பதற்றப் படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தினமும் தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் செய்வதன் மூலம் பதற்றம் குறைந்து எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைப் பெற முடியும்.
எதிலும் மீண்டும் வருவோம் என்று எவ்வளவுக்கு எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறோமோ அந்த அளவுக்கு மன அழுத்தம் குறையும்.


சக அலுவலரின் சாதனையை முறியடிக்க வேண்டுமெனப் போட்டியிடுவது நல்ல விடயம்தான். இதற்கு ஒரே வழி நாம் நம் தகுதியை வளர்த்துக் கொள்வதுதான். தகுதி உள்ளவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதும் அவர்களை மட்டம் தட்டும் விதத்திலும் செயல்படுவது உடல் மற்றும் மன நலன்களைப் பாதிக்கும்.


எந்தக் காரணத்துக்காகவும் வேலையைத் தள்ளிப் போடாதீர்கள். அந்த வேலையை பிடிக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக முடித்துக் கொடுங்கள். ஐயோ... இந்த வேலை செய்யவே எனக்குப் பிடிக்கலை... என்று நினைத்தாலே மனதில் சோர்வு வந்து புகுந்து கொள்ளும்.


மன அழுத்தத்தை குறைக்கிறேன் என்று புகை, குடி என்று பாதை மாறாதீர்கள். இதனால் நிலை தடுமாறுதல், தரம் தாழ்ந்து போதல், எல்லை மீறுதல், வரம்பு மீறுதல், கீழ்த்தரமாக நடந்து கொள்ளுதல் போன்றவை நிகழக்கூடும். வேலைக்கும் உலை வைக்கும்.


மாற்றங்கள் என்பது என்றும் மாறாது. அதற்கு நம்மை உட்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நான் இப்படித்தான் இருப்பேன்... என்ற வறட்டுப் பிடிவாதம் முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.


குறுகிய வழிகளை யோசிக்கக்கூடாது. ஒருவர் அலுவலகத்தில் உயர் அதிகாரியிடம் பாராட்டுப் பெறுகிறார் என்றால் நம்மால் வாங்க முடியவில்லையே என்று வருத்தப்படலாம். ஆனால் வேறு ஒருவர் வாங்கிவிட்டார் அதனால் நம்மால் இனி வாங்கவே முடியாது என்கிற ரீதியில் யோசிக்கக்கூடாது. எதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளுங்கள்

3 எளிதான வழிகள் மன Toughness அதிகரிக்கும்

மன கடுமைத்தன்மையை இன்றைய சவாலான உலகில் ஒரு மதிப்புமிக்க திறன் உள்ளது.

பெரும்பாலான மக்கள் உடல் வலிமை உருவாக்க எப்படி தெரியும் - ஆனால் அது மன வலிமை கட்டும் போது நிறைய தெளிவின்மை இருக்கிறது.

காரணம் எளிது.

உங்கள் எண்ணங்கள் நீங்கள் உணர என்ன மேல் சக்தி வாய்ந்த செல்வாக்கு மற்றும் நீங்கள் எப்படி நடந்து.

உண்மையில், விஞ்ஞானிகள் நியூரோ இமேஜிங் ஆய்வகம் மதிப்பீடு மனிதர்கள் பற்றி 70,000 நாள் ஒன்றுக்கு எண்ணங்கள். என்று நீங்கள் வேண்டும் என்பதாகும் 70,000 வாய்ப்புகளை சாதகமாகவும் யோசிக்க அல்லது உங்களை கிழிப்பதற்கு.

பல பயிற்சிகள் உள்ளன போது என்று நீங்கள் மன கடுமையான உதவ முடியும், இங்கே இருக்கிறீர்கள் 3 சுலபமான வழிகள் மன கடுமைத்தன்மையை அதிகரிக்க:

1. ஒரு நம்பகமான நண்பர் போல் உங்களை பேச.
முன்பு கூறியது போல, நம் எண்ணங்கள் நாம் உணர என்ன மேல் சக்தி வாய்ந்த செல்வாக்கு மற்றும் நாம் எப்படி நடந்து கொள்ள.

உண்மையில், உங்கள் உள் மோனோலாக்கை ஒரு சுய நிறைவேற்றும் தீர்க்கதரிசனம் ஆக ஒரு போக்கு உள்ளது. போன்ற விஷயங்களை நினைத்து, “நான் லாபம், இந்த வணிகத்தை பெற மாட்டேன்,” அல்லது “விஷயங்கள் என்னை வெளியே வேலை இல்லை,” இந்த கணிப்புக்கள் நனவாகும் செய்கிறது என்று ஒரு வழியில் உங்கள் நடத்தை மாற்ற முடியும்.

நம்பிக்கை தான் இந்த எதிர்மறை எண்ணங்கள் மாற்றவும்.

நீங்கள் உங்களை போன்ற ஏதாவது யோசித்து கவனிக்கும் போது, “நான் இந்த கண்டுபிடிக்க முடியாது,” உங்கள் எண்ணங்கள் அவசியம் உண்மை இல்லை என்று உங்களை ஞாபகப்படுத்த.

மாறாக, உங்களை கேட்க, “நான் இந்த நடக்கும் அடைவதற்காக நம்பிக்கை என்ன?” பின்னர், அதற்கு பதிலாக என்ன செய்ய முடியும் கவனம் செலுத்த என்ன நீங்கள் முடியாது.

2. உங்கள் உணர்வுகளை பொறுப்பை.
உணர்வுகளை உங்கள் கவனம் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது உங்கள் சக்தி மாறிவிடுகிறது.

உணர்ச்சிகள் நடவடிக்கைகளை சிக்னல்களை விட எதுவும் இல்லை. இந்த சமிக்ஞைகள் ஏதாவது மாற்ற வேண்டும் என்று நீங்கள் சொல்லி.

நீங்கள் உங்கள் தற்போதைய மூலோபாயம் உங்கள் இலக்கை நீங்கள் பெற போவதில்லை, ஏனெனில் அது தான் விரக்தி என்றால் - நீங்கள் உங்கள் அணுகுமுறை மாற்ற வேண்டும்.

நீங்கள் பெரிய மாநாட்டில் உங்கள் வழங்கல் பற்றி பயம் என்றால் - நீங்கள் ஒரு விதிவிலக்கான வழங்கல் கொடுக்க உங்களை தயார் செய்ய வேண்டும்.

பல உணர்ச்சி பிரச்சினைகள் கோளாறுகளை தவிர்க்க ஒரு ஆசை இருந்து ஸ்டெம்.

அடிக்கடி பொருட்டு புதிய சவால்களை தவிர்க்க தோல்வி பயப்பட மக்கள் விரிகுடாவில் தங்கள் கவலையை வைக்க. ஆனால், உணர்ச்சி கோளாறுகளை தவிர்க்கும் பொதுவாக நீண்ட கால பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று ஒரு குறுகிய கால தீர்வு.

உங்கள் உணர்வுகளை உங்கள் கவனம் பாதிக்கும் எப்படி ஒரு விழிப்புணர்வை உருவாக்க.

மற்றும் உங்கள் உணர்வுகளை கட்டுப்பாட்டில் இருக்க முடிவு, அதனால் அவர்கள் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டாம் என்று. தலை சங்கடமான உணர்வுகளை முகம் மற்றும் உங்கள் கவனம் பொறுப்பை ஏற்கச்.

கோளாறுகளை ஏற்றல் நீங்கள் இன்னும் நம்பிக்கையை கொடுக்கும் நீங்கள் புதிய சவால்களை எதிர்கொள்ள திறன் பெற வேண்டும்.

3. சூழ்நிலைகளிலும் உற்பத்தித்திறன் நடந்து.
நீங்கள் எந்தச் சூழ்நிலையில் கவனம் செலுத்தி வருகிறோம் போது நீங்கள் கட்டுப்படுத்த முடியாது அது மன கடுமையான உணர முடியாத காரியம்.

உங்கள் வாழ்க்கை இல்லை வெறும் செய்கிறது “நடக்கும்.” அதை நீங்கள் வடிவமைக்கப்பட்டது, அது உனக்கு அல்லது இல்லை என்பதை. தேர்வுகள், அனைத்து பிறகு, உன்னுடையது. நீங்கள் மகிழ்ச்சியை தேர்வு. நீங்கள் சோகம் தேர்வு. நீங்கள் இறுதியான தேர்வு. நீங்கள் வெறுப்பற்ற நிலையை தேர்வு. நீங்கள் வெற்றி தேர்வு. நீங்கள் தோல்வி தேர்வு.

வெறும் ஒவ்வொரு நொடியும் என்பதை நினைவில், ஒவ்வொரு நிலைமை, ஒரு புதிய தேர்வு வழங்குகிறது. அதை நீங்கள் விஷயங்களை வித்தியாசமாக செய்ய இன்னும் சாதகமான விளைவுகளைக் ஒரு சரியான வாய்ப்பு கொடுக்கிறது.

மன Toughness கட்ட
அனைவரும் மன கடுமையான இருக்கும் திறனை கொண்டுள்ளது.

ஆனால் மன கடுமைத்தன்மையை வளரும் பின்னடைவு மற்றும் நம்பிக்கை சிந்தனை தேவை.

கவனம், நீங்கள் உங்கள் எண்ணங்கள் கட்டுப்படுத்தும் தேவை விழிப்புணர்வு உருவாக்க வேண்டும், உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த, மற்றும் productively உங்கள் சூழ்நிலையிலும் நடந்துகொள்ள.

உங்கள் மன வலிமையை எப்படி கற்றல் வாழ்க்கையில் உங்கள் மிக பெரிய திறனை அடையும் முக்கிய உள்ளது.

உங்கள் இலக்கு ஒரு தொழில்முறை தடகள அல்லது ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வேண்டும் என்பதை, அல்லது ஒரு சிறந்த பெற்றோர் - மன வலிமை நீங்கள் உங்கள் இலக்கை அடைய உதவும்.

நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அதிலிருந்து மீண்டு வர‌ இதோ சில குறிப்புகள்

உங்களைப்பற்றிய உங்கள் எண்ணங்கள், அபிலாசைகளைக் காட்சிப்படுத்துங்கள். நீங்கள் கூச்சப்படும், அல்லது பதட்டப் படும் ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்யுங்கள்.

அந்த இடத்தில் நீங்கள் ஒரு தன்னம் பிக்கையோடும் மகிழ்ச்சி யோடும் இருப்பவராகக் கற்பனை செய்து அக்காட்சியை உங்கள் மூடிய கண்களுக்குள் கொண்டு வாருங்கள். இதைசெய்யும்போது வசதியாக சாய்ந்து அமர்ந்தவாறு கண்களை மூடிக்கொண்டு அந்தக் காட்சியைக் காணுங்கள்.

அந்தக் காட்சியின் போது நீங்கள் அடையும் உணர்வுகள், காட்சிக்கேற்ற ஒலிகள், நறுமணம், உங்கள் நகர்வு என எல்லா வகையான உணர்வுகளையும் கற்பனையில் கொண்டு வந்து, அந்தக் காட்சியை உண்மையான காட்சியாக உணருங்கள். இதையும் அடிக்கடி செய்யுங்கள். இது கொஞ்சம் முட்டாள் தனம் போலத் தோன்றினாலும் இது ஒரு மிகவும் வலிமையான பயிற்சி மனதின் எண்ணங்களே எம்மை வலுப்படுத்துகின்றன.

மேற்கூறிய பயிற்சி போலவே இதுவும், உங்களுக்குள் நீங்களே தட்டிக் கொடுத்துப் பேசிக் கொள்வது. அல்லது ஒரு கூச்சமான, மற்றும் பதட்ட மான மன நிலையை மறுத்து அதற்கு எதிரான வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கூறுதல். உதாரணமாக, நாளைக் காலையில் பாடசாலைக்குச் செல்லும்போது “இன்றைக்கு நான் யாருக்கும் பயப்படப்போவதில்லை. யார் என்னைப் பார்த்து சிரித்தாலும் கவலைப்படப் போவதில்லை. நான் கற்பதற்காகவே செல்கிறேன்.

அதனால் பிழை விட்டு படிப்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை” போன்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருங்கள். இப்படிச் சொல்வதன் மூலம் உங்கள் ஆழ் மனதை மாற்றிவிடமுடியும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். முரண்டுபிடிக்கும் உங்கள் மனத்தையே நீங்கள் ஏமாற்றிவிடலாம். எனவே இந்தப் பயிற்சியை எல்லா சூழலுக்கும் ஏற்ப நீங்கள் பயிற்சி செய்யலாம்.

அசௌகரியமான சூழ்நிலையில் நீங்கள் மாட்டிக் கொள்ளும் போது அந்த இடத்தைவிட்டு வெளியே போய்விடத் தோன்றும். ஆனால், போகாதீர்கள். சூழ்நிலையை எதிர்கொள்ளுங்கள். அப்பொழுது தான் அந்தச் சூழ்நிலைகளை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய சூழ்நிலையை உங்கள் ஆராய்ச்சிக் கேற்ற இடமாக மாற்றிவிடுங்கள்.

உங்களை நீங்கள் நிதானித்து ஆராயுங்கள். இப் பொழுது எனக்கு இந்த சூழ்நிலை ஏன் அசௌகரியமாக இருக்கிறது? எது என்னை வெளியே போகச் சொல்கிறது? நான் ஏன் வெளியே செல்ல வேண்டும்? என உங்களுக்குள் ஆராய்ந்து கொள்ளுங்கள். இதனால், உங்களை ஆராய்வது மட்டுமன்றி சூழ்நிலை அவதானியாகவும் செயற்படுகிறீர்கள்.

மறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு கற்றலின் போது தவறுகள் ஏற்படுவது இயல்பு. எனவே சுட்டிக் காட்ட பட்ட தவறு தனிப்பட்ட உங்களைத் தாக்குவதற்காக அல்ல. மறுப்புக்கள் வருவது வாழ்க்கையில் / கல்வியில் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு சுயபச் சாத்தாபம் (சுயபரிதாபம்) ஏற்பட்டால் அதனை உடனேயே இனம் கண்டு கொண்டு அதனை நீக்கி விடுங்கள். சுயபரிதாபம் உடையவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

எப்போதும் நாம் எம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டு நோக்கக் கூடாது. நாம் இயல்பாக காரணமேயின்றி பிரபலமானவர்களை எம்முடன் ஒப்பிட்டுநோக் குவதுண்டு. ஆனால் நாம் அவர் களைப்போல் இருக்க முடியாது. நமக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனித்தனி அச்சுக்களில் வார்க்கப்பட்ட பொம்மைகளைப் பாருங்கள். ஒரு பொம்மைக்குரிய அச்சில் வேறு அச்சில் வார்க்கப்பட்ட பொம்மையைப் பொருத்த முடியாது.

அப்படித் தான் நாமும். எனக்கு உங்களைப்போல் பேசத் தெரியாது, எனக்கு அவனைப்போல் பாடவராது , எனக்கு அவர்களைப்போல் சிரிக்கத் தெரியாது என்றெல்லாம் மற்றவர்களோடு ஒப்பிடுவதை விடுத்து, நான் மற்றவர்களைவிட வித்தியாசமானவன். என்னிடம் இருக்கும் பல விடயங்கள் மற்றவர்களிடம் இல்லை. அதனால் நான் தனித்துவமானவன் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த எண்ணம் வலுப்படும் போது நீங்கள் மற்றவர்கள் முன்னி லையில் அடையும் கூச்சமும் பதட்டமும் இல்லாமல் போயிருக்கும்.

இதுவும் மேலே குறிப்பிட்டது போல் தான். உங்களை நீங்களே எதிர்மறையாக முத்திரை குத்திக் கொள்ளாதீர்கள். நான் கூச்ச சுபாவமுடையவன், எனக்குப்பயம், நான் பேச மாட்டேன், நான் சிரிக்க மாட்டேன், நான் எழுதமாட்டேன் என்று நீங்களே உங்களைச் சொல்லிக் கொள்வதால் அது ஆழ்மனதில் பதிந்து விடுகி றது. நீங்கள் நீங்கள்தான். ‘ உங்களுக்கென்று சில இயல் புகள் உண்டு’ என்ற சிந்த னையோடு நிறுத்தி விடலாம் அல்லவா? மேலதிக சிந்தனை எல்லாம் எதற்கு? பதட்டம் ஏற்படும் சூழ்நிலைகளில் உங்களுக்குள் மந்திரம் போல மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருங்கள். இப்படிக் கேட்டுக் கொண்டிருப்பது, அந்த சூழ்நிலையில் இருந்து உங்கள் கவனத்தை திசை திருப்பும்.

நான் சீராக மூச்சுவிடுகிறேனா?

நான் இயல்பாக இருக்கிறேனா?

இன்னமும் இயல்பாகச் செயற்படுகிறேனா?

நம்மால் முடியாது அல்லது தோல்வியடைந்து விடுவோம் என நினைக்கும் விடயங்களில் தலையிடுங்கள். இது உங்கள் கூச்சத்தை அல்லது பயத்தை நீங்கள் போக்க உதவும். இந்தக் காரியத்தில் நீங்கள் வெற்றியடையா வி ட்டாலும், நீங்கள் நினைத்த அளவுக்கு அது ஒன்றும் பூதாகாரமான பிரச்சனை இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஒரு வேளை முதலில் உங்கள் ஈகோ இதற்கு இடம் கொடுக்காது. ஆனால் பின்னர் அதை வெகு விரைவிலேயே விளையாட்டாய் எடுத்துக் கொண்டு சந்தோசமாய் இருக்க முடியும்.

எந்த நேரமும் நல்ல இருக்கை நிலையைத் தெரிவு செய்யுங்கள். பலர் இருக்கும் இடத்தில் நிமிர்ந்து இருத்தல், கைகளை விரித்து வைத்திருத்தல் போன்ற இருக்கை நிலைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நிற்கும்போதும் வளைந்து நிற்காமல் நிமிர்ந்து நில்லுங்கள். யாருடனாவது பேசும்போது கையில் எதையும் வைத்து நோண்டிக் கொண்டிருக்காதீர்கள்.

கூச்ச சுபாவம் என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில் இருந்து நீங்கள் வெளியில் வரும்போது பல வெற்றிகளை அடைந்திருப்பீர்கள். நீங்கள் எங்கெல்லாம் வெற்றியடைந்தீர்கள் என்பதைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிகளை மீண்டும் படிக்கும் பொழுது உங்கள் தன்னம்பிக்கை வளர்வது மட்டுமன்றி, உங்களுக்கு பயன் கிடைக்கக் கூடிய விடயங்களை நோக்கி உங்கள் கவனத்தை நகர்த்தும்.

உதவுங்கள் உயருங்கள்


வாழ்க்கை என்பது ஒருவழிப்பயணம். ஆனால் வளர்ச்சி என்பது இருவழிப்பயணம். ஆம்! முயன்றால் வளர்ச்சி, தளர்ந்தால் வீழ்ச்சி. ஆகவே வாழ்க்கைப் பயணம் வளர்ச்சியை நோக்கியே இருக்க முயற்சித்துக் கொண்டே இருங்கள். மேலும், வாழ்வில் ஒரு முறை நிகழ்ந்த எதுவும் மறுமுறை நிகழ்வதில்லை. கடந்த பொழுதில நிகழ்ந்தவை மீண்டும் மலர்வதில்லை. காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆகவே எதுவும் திரும்பி வருவதில்லை. வாழ்க்கை என்ற வாய்ப்பு மறுமுறை மலராத நிகழ்வுகளின் தொகுப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு நொடியும் நமது கனவுகளின் விடியலை நோக்கி பயணப்ப்ட்டுக் கொண்டே இருக்கின்றோம்.

நம்பிக்கை கீதம்

உங்களுடைய மன வானொலியில் தன்னம்பிக்கை கீதங்கள் மட்டுமே இருபதினான்கு மணி நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் தன்னம்பிக்கைதான் வாழ்வின் ஆதாரம். நமது கனவுகள் நிச்சயம் நனவுகள் ஆகும் என்று நம்ப வேண்டும். இதைத்தான் வானொலி இயக்குனரும், கவிஞருமாகிய திரு. ஜெ. கமலநாதன் அவர்கள் “நாளை நமது கனவுகள் நனவுகள் ஆகும்; நலிந்த கவலைகள் நம்மை விட்டுப் போகும்” என்கிறார். கோவை வானொலி நேயர்களின் மனதில் தன்னம்பிக்கையை விதைத்து வெற்றியின் இரகசியத்தைப் புரிய வைத்த இந்த வரிகளை அவரே சொல்லும்போது, கேட்போரின் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்து தன்னம்பிக்கையும் உத்வேகமும் உள்ளத்தில் ஒளிர்வதை உணரமுடியும். பல்லாயிரக்கணக்கான நேயர்களின் கழுத்தில் வெறிமாலை விழுவதற்கு இந்த வரிகளே காரணமாகவும், தூண்டுதலாகவும் இருந்தது என்றால்அது மிகையல்ல; முற்றிலும் உண்மையாகும்.

தினசரி காலை எழுந்தவுடன் “எனது கனவுகள் நிச்சயம் நனவுகள் ஆகும்” என்று ஆழ்மனதில் அழுத்தமாகச் சொல்லி வாருங்கள். உங்களுடைய எண்ணங்களில் தன்னம்பிக்கை கலந்து செயலில் உத்வேகம் கொடுப்பதை உணர முடியும். தன்னம்பிக்கையும், உழைப்பும் உங்களை ஒருபோதும் கைவிடாது என்பதை உணர்வீர்கள்.

கனவுக்குக் கரையில்லை

சிலர் கனவு காணக்கூட அஞ்சுவார்கள். ஒரு இலக்கை நோக்கிப் பயணப்படும்போது, நிச்சயம் இலக்கை அடைவோம் என்று நம்ப வேண்டும் அப்பொழுதுதான் நம்மால் முன்னோக்கி நகர முடியும்.

இரு நணபர்கள் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார்கள். ஒருவன் மற்றவரிடம் கேட்டான். நீ என்ன இலட்சியத்துடன் படிக்கின்றாய்? என்று. “நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும்” என்ற கனவோடு படிக்கிறேன் என்றான். மற்றவன், “அப்படி நீ ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியானால் என்னை உனது கார் டிரைவராக வைத்துக் கொள்வாயா?” என்றான் முதலாமவன். நிச்சயம் முடியாது என்றான் இரண்டாமவன். நீ எனது உயிர் நண்பன், இந்த சிறிய உதவியைக்கூட செய்யக்கூடாதா? என்று கேட்டான் முதலாமவன். நாம் இருவரும் ஒரே வகுப்பில் படிக்கிறோம், என்றாலும், கனவு காணக்கூட துணிவில்லாத உனக்கு எப்படி உதவ முடியும் என்றான் இரண்டாமவன்.

ஆகவே, கனவு காணக்கூட துணிவில்லாமல் நீங்கள் இருப்பீர்கள் என்றால் அது வேதனைக்குரியது. ஆகவே நமது குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியதுபோல் கனவு காணுங்கள் வெல்வீர்கள்.

செயல்களே வெற்றிப்படிகள்

நமது கனவுகள் நனவுகளாக வேண்டும் என்று சதா எண்ணிக் கொண்டு இருப்பதோடு அதற்கான செயலில் இறங்குவது இன்றியமையாத்தாகும். நான் கோடி கோடியாக சம்பாதிப்பேன் என்பது உங்களுடைய கனவாக இருக்கலாம். “எனது தொழிலை மென்மேலும் உயர்த்தி உலகளாவிய வாடிக்கையாளர்களையும், அங்கீகாரத்தையும் பெறுவேன்” என்பது உங்களுடைய கனவாக இருக்கலாம். உங்களுடைய கனவு எதுவாயினும் அதை நோக்கியே உங்களுடைய செயல்பாடுகள் இருக்கட்டும். தோல்வி நேர்ந்து விடுமோ என்ற பயத்தில் எதையும் சாத்தியமில்லை என்று ஒதுங்கிவிடாதீர்கள். உலகத்தில் சாத்தியமில்லாதது என்று எதுவுமேயில்லை என எண்ணுகிறவர்கள்தான் பல்வேறு கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்கள்.

வெற்றி உங்கள் பக்கம்

“எதையும் சாதிக்க முடியும்” என்ற தன்னப்பிக்கையோடு முழுமையாக முயற்சிக்க வேண்டும். முயற்சிகளின் வலிமையும், நோக்கமும் நேர்மை மிக்கதாகவும் மனித நேயம் மிக்கதாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய செயல்கள் ஆற்றல் மிக்கதாக இருக்கும். ஆகவே உங்களுடைய சரியான செயல்கள் எப்பொழுதும் உங்களுடைய வெற்றியாக மலரும் என்பதை முழமையாக நம்புங்கள். ஒரு விதை முளைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக் கொள்கிறது. அரும்பு மலர்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக் கொள்கிறது. அது போலத்தான் உங்களுடைய செயல்கள் வெற்றியாக மலர்வதறகு ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக்கொள்கிறது. நம்பிக்கைகள் எப்பொழுதும் வெல்லும் என்ற எண்ணம் நெஞ்சில் ஆழமாக வேரூன்றினால் வெற்றி எப்பொழுதும் உங்கள் பக்கம்தான்.

மனதை வெல்லுங்கள்

வெற்றி பெறுவது என்பதை நாம் அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டு, ஓயாது அலைந்து கொண்டும் அல்லல் பட்டுக் கொண்டும் இருக்கின்றோம். உண்மையில் வெற்றி பெறுவது என்பது மனதை வெல்வதாகும். ஆம்! ஒருவர் தன்னுடைய மனதை வென்றுவிட்டால், அங்கு அமைதியும் சாந்தமும் குடியேறுகின்றது. பிறகு அவர் மகிழ்ச்சியுடையவராகவும் அனைவரையும் நேசித்து அன்பு செலுத்துபவராகவும் மாறி விடுகின்றார். இந்த உலகம் அவருக்கு சொர்க்கமாகவும், இன்பத்தின் தாய் வீடாகவும் தென்படுகிறது.

மனதை வெல்வது எளிதா?

மனதை வெல்வது அவ்வளவு எளிதானதல்ல என்பது முற்றிலும் உண்மை. மனதை அடக்கி வென்றுவிட்டால் போதும் நம்மால் உலகில் எதை வேண்டுமானாலும் சாதித்துக் காண்பிக்க முடியும்.

மனதை வெல்வதற்கு முதலில் அதில் தோன்றும் எண்ணங்களைக் கண்காணிது வரத்தொடங்க வேண்டும். ஏனென்றால் எண்ணங்களின் தன்மையைப் பொருத்தே மனம் அமைதியாகவோ ஆரவாரமிக்கதாகவோ இருக்கின்றது. அதாவது மனதில் அன்புமிக்க எண்ணங்கள் தோன்றும்போது மனம் அமைதியாகவும், அகந்தை மிக்க எண்ணங்கள் தோன்றும்போது மனம் ஆராவாரமிக்கதாகவும் இருக்கின்றது. மேலும் மனதில் அன்பு தவழும்போது வாழ்க்கை அமைதியானதாகவும், பாசமிகதாகவும் அமைந்து மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் நமக்குக் கொடுக்கின்றது.

வழிகள் அமைப்போம்

தடைகளைத் தகர்த்து வழிகளை அமைப்போம். பாதைகளில் முட்கள் இருக்கின்றதென முடங்கிவிடாமல் முட்களை அகற்ற முயல்வோம். அல்லது காலுக்குச் செருப்புகளைத் தயார் செய்து அணிவோம். பாதை இல்லை என்பதற்காக பயணத்தை நிறுத்துவதா? பாதையில் பயணப்படுவது சாதனை அல்ல. பயணப்படுவதற்கு பாதையை அமைப்பேத சாதனையாகும். வழிநெடுக மலர்களைத்தூவிய வரவேற்பை எப்பொழுதும் எதிர்பார்த்துக் காத்து இருக்கக்கூடாது. முதற்பயணம் வென்றால்தான் உங்களுடைய பாதையில் மலர்களைத் தூவி வரவேற்க மக்கள் வருவார்கள். ஆகவே எண்ணங்களை நெறிப்படுத்துவதுதான் மனதை வழிப்படுத்துவதாகும்.

“வழிகள் தெளிவானால் விழிகள் தெளிவாகும்

மனிதம் வளர்ப்போம்


மனித மனம் என்பது இன்பத்தை மட்டுமே நாடுகிறது.  அதை மட்டுமே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றது.  ஒரு குழந்தை பிறந்தபின், அவனது மழலைப்பருவத்தில் காண்பதெல்லாம் இன்பம்தான்.  ஏனென்றால், அவனது எதிர்பார்ப்பை அவனது சுற்றம் நிறைவேற்றுகின்றது.  அவனிடமிருந்து சுற்றமும் சமுதாயமும் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.  ஆனால் அவன் வளர வளர இந்நிலை மாறுபடுகிறது.

அவனது எதிர்பார்ப்புகளும், அவனிடத்து எதிர்பார்ப்புகளும் கூடுகிறது.  இது இருமுனைகளிலும் நிறைவேற்றப்படாதால் மிஞ்சுவது, எஞ்சுவது கசப்புதான்.  தனது குடும்பத்தில் வஞ்சிக்கப்படுவதாக நினைக்கும் அன்பைத்தேடி மற்றொரு மனிதரை  நாடுகிறான்.  அது நண்பனாக இருக்கலாம், அல்லது காதலியா…..

இளைஞர்களே!  சற்று சிந்தியுங்கள்.  துடுக்காக பேசுவதிலும், வேடிக்கையாக பிறரை கிண்டலடிப்பதிலும், நண்பர் குழுமத்துடன் நாகரீக உலகில் வெள்ளித்திரை ஹீரோகள் போல் நட்சத்திரம் மாதிரியாக உடையிலும், அசைவிலும் செயல்படுவதாலும் மட்டும் இன்பம் பெறமுடியாது. இளைய மனம் கட்டுப்பாட்டை விரும்பாதுதான்.  ஒரு சதுர  அறையுள் கல்வி கற்பதை வெறுத்து, ஒரு சதுர பெட்டியுள் இன்பம் கிடைப்பதாக நினைக்கிறோம்.

நாம் நமது சுகத்தையும், இன்பத்தையும் நாடுகிற அளவுக்கு, பிறரது இன்பத்தைப் பேண முயல்கிறோமா?  யோசித்துப் பாருங்கள்.  விவசாயி கலப்பையைக் கொண்டு உழுவது சுகமற்றது என்று எண்ணினால் நம் உடல் உணவு என்ற சுகத்தை அறியாமல் உயிரற்றதாகிவிடும்.  பல அறிவியல் அறிஞர்களும், அறிவாளர்களும் தாம் வாழ்க்கையை இன்பமாகக்கழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், ஏன் உனது தாய், தந்தையர் அலுவலகப் பணியை மேற்கொள்வதை, தனக்கு சுமையாக நினைத்தால்

அப்படியென்றால் இவர்களெல்லாம் வாழவில் இன்பத்தையே உணரவில்லையா?  என்றால், இல்லை.  அவர்கள் விரும்பிய இன்பத்தின் தன்மை வேறு.  நாம் இன்பமாக வாழ, பிறரது உழைப்பை, அறிவின் செயல்பாட்டை எதிர்பார்ப்பது நியாயமன்று.

பிறரது இன்பத்தில், தனது இன்பத்தைக் கண்டனர் ஞானியர்.   சாதனையாளர்கள் தமது கடமையை சுமையாக நினைப்பின் எங்ஙனம் பிறர் இன்புற வழிவகுப்பது?  அரட்டை அடிக்கும் போது உறும் இன்பத்தைக் காட்டிலும், கடமையை நிறைவேற்றி, சாதனையை நிகழ்த்தும் போது உறும் இன்பம் அளவிடற்கரியது. எந்த சாதனையாளனின் வாழ்க்கைப் படிகட்டுகளும் பூக்களால் அலங்கரிப்பட்டதில்லை. முட்களால் கற்களால் நிரம்பிக்கிடப்பவை. சரித்திரம் படிக்க அயர்வுறும் நாம், சரித்திரம் படைப்பது எங்ஙனம்?

வாய்ப்புகளே வசந்தம்


இளமையை வசந்த வானமாக்கி வளமையை சொந்தமாக்குவோம்!

மனக்கதவுகளைத் திறந்து வைத்து வாய்ப்புகளை வரவேற்று ஏற்றம் பெற்றோர் பலர்.  ஒவ்வொரு நல்ல சந்தர்ப்பத்தையும் தவறவிடாமல் சந்தித்தவர்களே சாதனையாளர் ஆகின்றனர்.

பொறும் + சிந்தனை + விடாமுயற்சி இவற்றின் பலனே ஆற்றலின் பிறப்பிடம்

“யாகாவாராயினும் நாகாக்க” என்ற வள்ளுவனின் கூற்றுக்கேற்ப நல்லதையே பேசவேண்டும்.

நல்லதையே சாப்பிடவேண்டும். வாய்ப்புகளே வளம் சேர்க்கும் வித்தை நமக்கு சொத்தாகிவிட்டால் உலகை உவகையாக சந்திக்கும் சிந்தனை உருவாகிவிடும்.

பள்ளி மாணவராக இருந்தால் பல்கலையில் ஈடுபட்டு, எழுத்துப் பயிற்சியையும் சீராக்கி திறமையான மாணவராக உருடுத்து பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்து தன்னிலையில் சிறந்த மகிழ்ச்சியை கொண்டுவர  முடியும்.

கல்லூரிக்கு சென்றவுடன்  படிப்புடன் சேர்ந்து, கலை மற்றும் சில தொழில் துறைகளைக் கற்று, படிக்கும் போதே சம்பாதிக்கும் தன்மையை உண்டாக்கிக் கொண்டால் குடும்பத்தாருக்கு சுமையாக இருக்காமல் சொந்தக்காலிலே நிற்கும் தன்மை வந்துவிடும்.  இதனால்நாம் விரும்பும்வரை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  ஆம். நான்கூட அப்படித்தான் படித்தேன். சிறுதொழில் செய்து சம்பாதித்த பணத்தில் சித்த வைத்தியம் படித்தேன்.  ஆடைகள் விற்பனை செய்து கிடைத்த பணத்தில் அக்குபஞ்சர் வைத்தியம் படித்தேன். ஏனென்றால் படிப்பதற்காக என் முன்னாடி வந்த வாய்ப்பை நழுவவிட மனம் இல்லை.  அப்படிப் படித்ததின் காரணம் இன்றைய தன்னம்பிக்கை புத்தகத்தில் சாதனையாளராக அறிமுகமாகும் வாய்ப்பே வந்தது.  தொழில் துறையினராக இருந்தால் பல்துறையில் வல்லுநராக திகழும் ஆற்றலை வளர்க்க வேண்டும். வாய்ப்புகளை வரவேற்றால் ஆர்வம், திறமை பளிச்சிடும்.

தடைகளைத் தகர்ப்போம்


எந்த ஒரு மனிதனும் வெற்றியடைவதற்கு தனது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும்.  முழு ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றி பெறாதவர்கள் தோல்விக்கு தேடும் ஒரு காரணம் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

தாங்கள் வெற்றிபெற முடியாததற்கு ஏதேடும் ஒரு வலுவான காரணம் இருப்பதாக கூறுவார்கள்.  அவர்கள் கூறும் காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த தடையை உடைத்து முன்னேறுவது எப்படி?

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு காரணம் அல்லது குறைபாடு வெற்றிக்கு தடையாக இருப்பது இயற்கை.  ஆனால் எந்தவித தடையையும் தன்னம்பிக்கையால் கண்டிப்பாக சமாளித்துவிடமுடியும்.  சில தடைகள் சற்று பெரிதாக இருக்கக்கூடும். அவற்றை வெல்வதற்குச்சற்று கூடுதல் முயற்சியும் மனதிடமும் தேவைப்படும்..  அவ்வளவே!

குறைபாட்டை வெற்றிக்கு ஒரு ஏணியாக எப்படி பயன்படுத்தி சாதனைகளை சாத்தியமாக்குவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.  எந்தக் காரியத்தை செய்ய முயலும் போதும் எத்தனையோ இடையூறுகள் வருகின்றன.  அப்போது நாம் தேக்கமடைகிறோம்.  சோர்வடைகிறோம். ஆனால் இந்த இடையூறுகளை கூர்ந்து கவனிப்போமேயானால் இவையாவும் மனிதன்  தாமாக ஏற்படுத்திக் கொண்டதாகத்தான் இருக்குமேயொழிய இயற்கையாக உண்டானதாக இருக்காது.  பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் போதிய வாய்ப்புகளும், வசதிகளும், இயற்கை ஒழுங்கமைப்பில் நிறைந்தே இருக்கின்றன.  தடைகளும், பற்றாக்குறைகளும் மனிதன் தன் இயலாமையால் ஏற்படுத்தி கொண்டதேயாகும்.

மனிதன் தன் ஐம்புலன்களின் கட்டுப்பாடற்ற தன்னம்பிக்கை அதன் சுழலிலேயே சிக்கி தவிக்கிறான்.  ஐம்புலன்களை கட்டுப்படுத்தி அறிவை எப்போதும் விழிப்பு நிலையிலேயே வைத்திருந்து தனது ஆறாவது அறிவனை பயன்படுத்தி சிந்தனை ஆற்றலை வளர்த்து தன்னம்பிக்கை பெறும் பட்சத்தில் தடைகளை எளிதில் தகர்த்தெறிந்து வெற்றி பெற முடியும்.

தடைகளைத் தாண்டி வெற்றிபெற சில வழிமுறைகள்

1. வாய்ப்புகளை தேடுதல் (Serarch of Opportunities)

தனக்கு ஏற்ற வாய்ப்பு வரும் என்று காத்திராமல் வாய்ப்புகளைத் தேடி நாம் செல்ல வேண்டும்.  அதிர்ஷ்டத்தால் வாய்ப்பு கிட்டும் என எண்ணுவதை விட்டுவிட்டு முயற்சியால் வாய்ப்பினை தேடவேண்டும்.

2. சரியான வாய்ப்பினை தேர்ந்தெடுத்தல் (Select the Optinistic)

அவர்களிடம் இருக்கின்ற அனுபவம் என்கிற அற்புதமான கல்வியிலிருந்து, தங்களுக்குத் தேவைப்படும் பாடங்களைக் கற்கவேண்டும்..  அவைகளை, தங்களுக்கான சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றி செயல்படுத்த வேண்டும்.

வயதுக்கு மரியாதை தரவேண்டும் என்ற பண்பு காரணமாகாவாவது, முக்கியமான விஷயங்களில் மட்டுமாவது, அவர்களின் ஆலோசனைகளை கோரவேண்டும்.

ஒத்துவராது எனக்கருதும் அறிவுரையை, அவர்களின் மனம் நோகாதவாறு, பண்போடு ஒதுக்கவேண்டும்.

அவர்களை முகத்தளவிலாவது மதித்து மகிழ்விக்க வேண்டும்.  அவர்களின் அறியாமையைக் கண்டு ஏளனம் செய்யாமல், பொறுமைகாட்டி புரிய வைக்க வேண்டும்.  அவர்கள் சங்கடப்படும் அளவுக்கு, அதிகப் பிரசங்கித்தனம் காட்டக்கூடாது.

எல்லா நேரங்களிலும் இடங்களிலும் முக்கியமாக நாலுபேர் கவனிக்கும்போது மட்டுமாவது, மரியாதையும் மதிப்பும் தரவேண்டும்.

சுருக்கமாக,

ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்கும் உயர்ந்த குணம்  – Be helpful.  மற்றவர் உணர்வுகளை மதித்து நடக்கும் மாண்பு – Respect.

மற்றவர்களின் குறைகளையும் பலவீனங்களையும் ஒதுக்கித் தள்ளும் உத்தம குணம் – ignor short comings.   மற்றவர்களின் சுதந்திரத்தில் அளவுக்கதிகமாக மூக்கை நுழைக்காத நாகரிகம் – Decency.

தங்களுடைய சின்னச் சின்ன சௌகரியங்களையும் விருப்பங்களையும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை – Generosity.

மற்றவர்களுடைய இடத்தில் தன்னை இருத்தி அவர்களுடைய உணர்வுகளையும் சூழ்நிலையையும் புரிந்துகொள்ளும் தன்மை.

இந்த BRIDGE  இருந்தால் எந்த இடைவெளியையும் எளிதாக கடக்கலாமே.

நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் அதில் சரியானவற்றை தன்னால் வெற்றி முடியும் என்ற வாய்ப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும். இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

3. சரியாக திட்டமிடுதல் (Planning)

வாய்ப்புகளை தேர்ந்தெடுத்த பிறகு மேற்கொண்ட வாய்ப்பினை பயன்படுத்திட சரியாக திட்டமிடல் வேண்டும்.

4. செயல்படுத்துதல் (Implementation)

திட்டமிட்டு களத்தில் இறங்கி பிறகு திட்டத்தினை துரிதமாக தாமதமின்றி செயல்படுத்துதல்

5. தடைகளை தாண்டுதல் (Overcome the barriers)

செயல்படும்போது ஏற்படும் தடைகளையும், இடையூறுகளையும் ஏற்கனவே கூறியதுபோல தன்னம்பிக்கையுடன் போராட்ட குணம் கொண்டு தகர்த்தெறிதல் வேண்டும்.

6. தொடர்ந்து ஈடுபாடு (Continious Persistence)

எந்த நிலையிலும் தேக்கமின்றி தாமதமின்றி முழு முயற்சியாக ஈடுபட்டு செயல்படவேண்டும்.

7. இலக்கை எட்டுதல் (Achiveve the Goal)

தனது இலக்கான சாதனையை நிச்சயமாக அடைந்தே தீருவது.

மேற்கண்ட வழிகளை பின்பற்றி முயற்சி செய்யுங்கள்  சாதனைகள் யாவருக்கும் சாத்தியமாகும்.