Wednesday, July 24, 2013

இன்ப, துன்பத்துக்குக் காரணம் எது?


  • கேள்வி: எவன் சுகமாக வாழ்கிறான்?
  • பதில்: செல்வம் உடையவன்.
  •  
  • கேள்வி: செல்வம் என்பது யாது?
  • பதில்: எது நமக்குப் பிரியமானதோ, அதுவே நமக்குச் செல்வம்.
  •  
  • கேள்வி: உலகில் எல்லா இன்ப, சுகங்களுக்கும் காரணம் எது?
  • பதில்: புண்ணியச் செயல்கள்
  • .
  • கேள்வி: துன்பத்துக்குக் காரணம் எது?
  • பதில்: பாவச் செயல்கள்.
  •  
  • கேள்வி: எல்லாவிதச் செல்வங்களும் யாருக்குக் கிடைக்கும்?
  • பதில்: பக்தியுடன் பகவான் சங்கரனை பூஜிப்பவருக்கு.
  •  
  • கேள்வி: எவன் மேன்மேலும் வளர்ச்சியுறுகிறான்?
  • பதில்: அடக்கம் உடையவன்.
  •  
  • கேள்வி: எவன் வளர்ச்சி குன்றி வருந்துகிறான்?
  • பதில்: திமிர் அல்லது அகங்காரம் கொண்டவன்.
  •  
  • கேள்வி: எவன் நம்பத் தகாதவன்?
  • பதில்: அடிக்கடி பொய் பேசுகிறவன்.
  •  
  • கேள்வி: எந்த சூழ்நிலையில் பொய் பேசுவது பாவச் செயல் ஆகாது?
  • பதில்: தர்மத்தைக் காக்கச் சொல்லப்படும் பொய்.
  •  
  • கேள்வி: எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தர்மம் எது?
  • பதில்: அவரவர் குலத்தில் தோன்றிய முன்னோர்களும் ஆசார சீலர்களும் கடைப்பிடித்த தர்மமே.
  •  
  • கேள்வி: சாதுக்களுக்கு பலம் எது?
  • பதில்: தெய்வம்.
  •  
  • கேள்வி: சாது என்பவன் யார்?
  • பதில்: எதிலும் எப்போதும் திருப்தியோடு உள்ளவன்.
  •  
  • கேள்வி: தெய்வம் என்பது யாது?
  • பதில்: ஒருவனால் செய்யப்பட்ட நல்ல செயல்கள்.
  •  
  • கேள்வி: ஸுக்ருதி என்பவன் யார்?
  • பதில்: நல்லவர்களால் போற்றப்படுபவன்.
  •  
  • கேள்வி: இல்லறத்தில் உள்ளவனுக்கு உண்மை நண்பன் யார்?
  • பதில்: அவனுடைய மனைவி.
  •  
  • கேள்வி: இல்லறத்தான் யார்?
  • பதில்: யாகங்கள் செய்கிறவன்.
  •  
  • கேள்வி: யாகங்கள் யாவை?
  • பதில்: வேதங்களில் சொல்லப்பட்டவையும் மனித சமூகத்துக்கு நன்மை அளிப்பவையுமான செயல்கள்.
  •  
  • கேள்வி: யாருடைய செயல்கள் பயனுள்ளவை?
  • பதில்: நல்ல அனுஷ்டானங்களை உடையவனும், வேதத்தில் கூறப்பட்டபடி நடப்பவனும்.
  •  
  • கேள்வி: அவனுக்கு பிரமாணம், வழிகாட்டி எது?
  • பதில்: வேதமே ஆகும்.
  •  
  • கேள்வி: அனைவராலும் தாழ்த்தப்படுபவன் யார்?
  • பதில்: வேதநெறிப்படி செயல் ஆற்றாதவன்.
  •  
  • கேள்வி: எவன் உண்மையிலேயே பாக்யசாலி?
  • பதில்: முற்றும் துறந்தவன்.
  •  
  • கேள்வி: எவன் மதிக்கத்தக்கவன்?
  • பதில்: புலமையும் சாதுத் தன்மையும் ஒருங்கே கொண்டவன்.
  •  
  • கேள்வி: எவனுக்கு நாம் பணிவிடை செய்யலாம்?
  • பதில்: தானம் கொடுக்கும் தாராளமனம் படைத்தவனுக்கு.
  •  
  • கேள்வி: கொடைக்குணம் படைத்தவன் என்பவன் யார்?
  • பதில்: உதவி நாடி வருபவனை திருப்திபடுத்துகிறவன்.
  •  
  • கேள்வி: உடலைப் பெற்றவர்களுக்குச் சிறந்த பாக்கியம் எது?
  • பதில்: உடல் நலம்.
  •  
  • கேள்வி: உழைப்பின் பலனை முழுமையாகப் பெறுபவன் யார்?
  • பதில்: பயிர்த் தொழில் செய்பவன்.
  •  
  • கேள்வி: யாரை பாவங்கள் அணுகுவதில்லை?
  • பதில்: ஜபம் செய்கிறவனை.
  •  
  • கேள்வி: முழுமையான மனிதன் என்று யாரைச் சொல்லலாம்?
  • பதில்: மக்கட் பேறு பெற்றவனை.
  •  
  • கேள்வி: செயற்கரிய செயல் எது?
  • பதில்: மனத்தை அடக்கி நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது.
  •  
  • கேள்வி: பிரும்மசரியம் உடையவன் என்று யாரைக் கூறமுடியும்?
  • பதில்: தன்னுடைய வீரியத்தை வீணாக்காமல் கட்டுப்படுத்தி தியானத்தின் மூலம் அதை நல்ல முறையில் பயன்படுத்துபவனை.
  •  
  • கேள்வி: உலகுக்குத் தலைவன் யார்?
  • பதில்: சூரியன்.
  •  
  • கேள்வி: அனைவருக்கும் வாழ்வைக் கொடுப்பது எது?
  • பதில்: மழை.
  •  
  • கேள்வி: சூரன் என்று யாரைக் கூறலாம்?
  • பதில்: பயந்தவனைக் காப்பவனை அல்லது பயத்திலிருந்து மற்றவர்களைக் காப்பவனை.
  •  
  • கேள்வி: நம்மைக் காப்பவர் யார்?
  • பதில்: நம்முடைய குரு.
  •  
  • கேள்வி: ஜகத்குரு என்று யாரைக் கூறலாம்?
  • பதில்: பரமசிவனை.
  •  
  • கேள்வி: ஞானம் யாரிடமிருந்து கிடைக்கும்?
  • பதில்: பரமசிவனிடமிருந்து.
  •  
  • கேள்வி: எவ்வாறு நாம் மோட்சத்தைப் பெறலாம்?
  • பதில்: முகுந்தனிடம் பக்தி செய்வதன் மூலம்.
  •  
  • கேள்வி: முகுந்தன் என்பவன் யார்?
  • பதில்: உலக மாயை அல்லது அவித்யையில் இருந்து நம்மை விடுவிக்கிறவன்.
  •  
  • கேள்வி: அவித்யை என்பது யாது?
  • பதில்: ஆத்மாவைப் பற்றிய அறிவு அல்லது நினைப்பு இல்லாமை.
  •  
  • கேள்வி: யாருக்குத் துயரம் வராது?
  • பதில்: கோபம் கொள்ளாதவனுக்கு.
  •  
  • கேள்வி: சுகம் என்பது எது?
  • பதில்: மன நிறைவு.
  •  
  • கேள்வி: அரசன் என்பவன் யார்?
  • பதில்: மக்களை மகிழ்விப்பவன்.
  •  
  • கேள்வி: யாரை நாய்க்கு ஒப்பிடலாம்?
  • பதில்: நீசர்களை அண்டி, அவர்களுக்குச் சேவகம் செய்பவனை
  • .
  • கேள்வி: மாயாவி என்பவன் யார்?
  • பதில்: பரமேஸ்வரன்.
  •  
  • கேள்வி: இந்திரஜாலம் போல் தோற்றம் அளிப்பது எது?
  • பதில்: இந்தப் பிரபஞ்சம்.
  •  
  • கேள்வி: கனவுத் தோற்றத்துக்கு நிகரானது எது?
  • பதில்: விழித்திருக்கும்போது நடைபெறும் நிகழ்ச்சிகள்.
  •  
  • கேள்வி: ஸத்யமானது, உண்மையானது எது?
  • பதில்: பிரும்மம்.
  •  
  • கேள்வி: பொய்யான தோற்றம் எது?
  • பதில்: உண்மை அறிவால் போக்கக் கூடிய தவறான எண்ணம்.
  •  
  • கேள்வி: பயனற்றது எது?
  • பதில்: முயலுக்குக் கொம்பு உண்டா என்பது போன்ற வீண் சர்ச்சைகள்.
  •  
  • கேள்வி: விவரித்துச் சொல்ல முடியாதது எது?
  • பதில்: மாயை (பொய்த் தோற்றம்).
  •  
  • கேள்வி: நாமாக நினைத்துக் கொண்டிருப்பது எது?
  • பதில்: ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்ற எண்ணம்.
  •  
  • கேள்வி: பாரமார்த்திகம் அல்லது முற்றும் உண்மையானது எது?
  • பதில்: அத்வைதம், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அறிவு.
  •  
  • கேள்வி: அறியாமை எப்போது உண்டாயிற்று?
  • பதில்: அது அனாதியாய் உள்ளது; தோன்றிய காலம் தெரியாது.
  •  
  • கேள்வி: உடலைக் காப்பது எது?
  • பதில்: அவரவர் செய்த நல்வினை, தீவினைகள். நாம் ஜென்ம ஜென்மாந்திரத்தில் செய்த பாவச் செயல்தான் அன்னத்தையும் கொடுத்துஆயுளையும் வளர்க்கச் செய்கிறது.
  •  
  • கேள்வி: வழிபாட்டுக்கு உரியவர் யார்?
  • பதில்: காயத்ரி மந்திரம், சூரியன், அக்னி மூன்றிலும் அடங்கியுள்ள பரமேச்வரனே.
  •  
  • கேள்வி: காயத்ரி, சூரியன், அக்னி ஆகியவற்றில் அடங்கி நிற்பது எது?
  • பதில்: பெற்ற தாய்.
  •  
  • கேள்வி: நம் பூஜைக்குரியவர் யார்?
  • பதில்: தந்தை.
  •  
  • கேள்வி: எல்லா தெய்வங்களையும் உள்ளடக்கி இருப்பவன் யார்?
  • பதில்: கல்வியும் கர்மானுஷ்டானங்களும் நிறைந்தவர்கள்.
  •  
  • கேள்வி: குல நாசத்துக்குக் காரணம் யாது?
  • பதில்: சாதுக்கள் மனம் வருந்தும்படி செய்யும் செயல்.
  •  
  • கேள்வி: யாருடைய சொற்கள் பொய்க்காதவை?
  • பதில்: சத்யம், மௌனவிரதம், சாந்தி ஆகியவற்றை விரதமாக மேற்கொண்டவர்களின் சொற்கள்.
  •  
  • கேள்வி: பிறவிக்குக் காரணம் யாது?
  • பதில்: சிற்றின்பத்தில் ஏற்படும் பற்று.
  •  
  • கேள்வி: நமது மேல் பிறப்பு என்பது எது?
  • பதில்: பிள்ளையாகப் பிறத்தல்.
  •  
  • கேள்வி: தவிர்க்க முடியாதது எது?
  • பதில்: மரணம்.
  •  
  • கேள்வி: எப்படிக் காலடி எடுத்து வைக்க வேண்டும்?
  • பதில்: நன்றாகப் பார்த்து, கவனித்து, சுத்தமான இடமென்று தெரிந்து கொண்டு.
  •  
  • கேள்வி: அன்னதானம் பெறத் தகுந்தவன் யார்?
  • பதில்: நல்ல பசியோடு இருப்பவன்.
  •  
  • கேள்வி: உலகில் யாரை நாம் பூஜிக்க வேண்டும்?
  • பதில்: பகவானின் அவதாரங்களை; அவதார வடிவங்களில் உள்ள மூர்த்தங்களை.
  •  
  • கேள்வி: பகவான் யார்?
  • பதில்: சங்கரனாகவும், நாராயணனாகவும் உள்ள பரம்பொருள்.
  •  
  • கேள்வி: பகவானிடத்தில் செலுத்தும் பக்திக்குப் பயன் என்ன?
  • பதில்: மாறாத, கலப்பற்ற ஆனந்தம்.
  •  
  • கேள்வி: மோட்சம் என்பது என்ன?
  • பதில்: அவித்யை நீங்குதல்.

  • கேள்வி: எல்லா வேதங்களுக்கும் உற்பத்தி இடம் எது?
  • பதில்: ஓம் என்னும் பிரணவம்.

No comments:

Post a Comment