Thursday, July 25, 2013

வாழ்க்கையின் இரகசியம்!


1)நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களைஉன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்! 

2) யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோஅவரே உண்மையில் உயர்ந்த மனிதர்! 

3)பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. 

4)தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே!மனிதன் முன்பாக வெட்கப்படு! அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்! 

5)மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிடஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்! 

6)அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன. மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான்இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம். 

7) ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை! 

8)நன்றாகப் பேசுவது நல்லதுதான்ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது! சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது! 

9)முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழிமெளனமாக இருப்பதுதான! பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்! பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்! 

10) தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!இதுதான் வாழ்க்கையின் இரகசியம்

No comments:

Post a Comment