Wednesday, July 24, 2013

1. சூரியனார் கோவில் - ஞாயிறு - Sooriyanar Temple

ஞாயிறு அல்லது சூரியன்  



நவக்கிரக கோவில்களில் ஒன்றான கோவிலே சூரியனார் கோவில் ஆகும். இந்தக் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. மற்ற நவக்கிரக கோவில்கள் அணைத்திலும் சிவபெருமானே மூலவராக இருக்க...இங்கு மட்டும் சூரிய பகவான் முக்கிய கடவுளாககாட்சியளிக்கிறார். 

வரலாறு:
இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோவில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 - கி.பி.1118)கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதலில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோவில் என்று மாறியது.

கட்டிடக்கலை:
இக்கோவிலின் இராஜகோபுரம் 50 அடி உயரம் கொண்டது. மொத்தம் மூன்று நிலைகளையும் ஐந்து கலச்ங்களையும் உடையது. இக்கோவிலின் முன் புஷ்கரினி தீர்த்தமும் நவக்கிரக தீர்த்தமும் உள்ளன.

சிற்பக்கலை:
கோவில் கோபுரம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவானும் இடது புறம் உஷா தேவியும் வலது புறம் ப்ரத்யுஷா தேவியும் காட்சியளிக்கின்றனர்.  மேலும் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.
உகந்தவை:
ராசி : சிம்ம ராசி
அதி தேவதை : அக்கினி
நிறம் : சிவப்பு
தானியம் : கோதுமை
வாகனம் : ஏழு குதிரை பூட்டிய தேர்
உலோகம் : தம்பாக்கு
மலர் : தாமரை
ரத்தினம் : மாணிக்கம்
ஸ்தல விருட்சம் : வெள்ளருக்கு

காயத்ரி மந்திரம் :  
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய: ப்ரசோதயாத்.

வழிபடும் முறை: 
கண் நோய்கள்இருதய நோய்கள் மஞ்சள் காமாலை ஆகியநோய்களால் பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனிஜென்ம சனி,அஷ்டம சனி ஆகியன உள்ளோரும்நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும்.

மேலும் இங்கு 12 ஞாயிற்றுக்கிழமைகள் தங்கி வழிபடுவது சிறப்பு. ஆதித்ய ஹ்ரதயப் பாடலை பாடி வழிபடுதலும் நன்று.
எப்படி செல்வது?
  • இக்கோவில் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் தஞ்சாவூரில் இருந்து 58 கி.மீ தொலைவிலும்,ஆடுதுறையில் இருந்து கி.மீ தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உண்டு.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - ஆடுதுறை கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 123 கி.மீ தொலைவில்.

No comments:

Post a Comment