Friday, August 12, 2016

தொழிலில் வெற்றி

சமீபத்தில் திருச்சியைச் சார்ந்த எமது வாசகர் ஒருவர் மின்னஞ்சலில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் இரண்டு முறை தொழில் தொடங்கியதாகவும் அந்த இரண்டிலும் தோற்று போனதாகவும் தெரிவித்திருந்தார். நண்பருக்காகவும் மற்றும் அவரைப் போன்ற வளரும் இளம் தொழில் அதிபர்களுக்காகவும் இந்த தகவலை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வெறுமே யோசித்துக்கொண்டே இருக்காதீர்கள்; வெறுமே ஆசைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள்; உண்மையிலேயே நீங்கள் தீவிரமாக இருந்தால், களத்தில் குதித்து அதைச் செய்யுங்கள்.
ஒரு முறை உள்ளே இறங்கிவிட்டால், அதன் அடி ஆழம் வரை புகுந்து புறப்படுங்கள்; அதை விட்டு வெளியேறுவதை ஒரு வாய்ப்பாக ஒருபோதும் பார்க்காதீர்கள்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… உங்கள் முயற்சி தோற்றால், தோற்றது உங்கள் ஐடியாதானே தவிர, நீங்கள் அல்ல!!! (தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தை தேக்கி வைக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் கண்டுபிடிக்கப் பத்துவருடம் உழைத்தார்! அவரும் அவரது உதவியாளர்களும் 17,000 வகைத் தாவரங்களைப் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின்னர் ஒரே ஒரு மரத்திலிருந்து லேடக்ஸ் என்னும் பொருளை வடிக்கும் முறையைக் கண்டுபிடித்து வெற்றி அடைந்தார்கள்! ஒரு முறை வெற்றியடையும் பொருட்டு 17,000 முறை தோல்வியடைய தயாராக இருந்தார்).
பெரிய நிறுவனங்கள் பெரிய மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. தனி மனிதன் தனியொரு ஆளாகச் சாதிக்க முடிவது மிகக் குறைவே!
சரியான குழுவை ஒன்றிணையுங்கள் (அளவுக்கதிகமான திறமைகள், மதிப்புகளைவிட, கோட்பாடுகளும் அணுகுமுறையும்தான் முக்கியம்).
திட்டங்களை தீட்டுங்கள்; ஆனால், சந்தையில் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகளுக்கு ஏற்ப, எல்லா வாய்ப்புகளுக்குமே தயாராக இருங்கள்.
பெரிதாக நினையுங்கள்; உங்களுடைய உயர்வை ஏற்கனவே அடைந்திருந்தால் எப்படி நடந்துகொள்வீர்களோ, அப்படி நடந்துகொள்ளுங்கள்.
வேலையையும் வாழ்க்கையையும் சமமாக வைத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment