Friday, November 9, 2018

யார் கடவுள்? (God in Tamil)


இவ் நவீன விஞ்ஞான யுகத்தில் விஞ்ஞான முறைப்படி நிருபிக்கப்படுபவைகளே   மக்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆகவே மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டது . ‌
பொதுவாக சொல்லப்போனால் ஒவ்வொரு மனித இனத்துக்கும் ஒவ்வொரு கடவுள் ,மதம். ஆகவே

கடவுள் யார்?

கடவுள் இறைவன்


மனிதரைத் தவிர மற்ற விலங்குகளும் இவ்வுலகில் வாழ்கின்றன அவற்றுக்கு கடவுள் யார்?

பொதுவான ஒரு கேள்வி?
கடவுளுக்கு உயிர் உள்ளதா? 
அவர் எங்‌கே வசிக்கிறார்? 
தனி ஓருவரா? குடும்பக்காரரா?
அவர் எப்படி எம்மை ஆளுகிரார்?
என்னென்ன அறிவுகளுடையார்?
கடவுள் யாரிடம் இருந்து சக்தியை பெறுகிறார்?
கடவுள் யார்? தெய்வம் யார்? இறைவன் யார்?
ஏன் கடவுளை சிலைகள் ,படங்கள் மூலமாகவும் வெளிப்படுத்துகிறார்கள் (இறந்தவர்களை ஞாபகப்படுத்தும் செயல் முறையை ஒத்தாகவுள்ளது )
கடவுள் எத்தனை வடிவங்களை எடுப்பார்?
விவேகானந்தரின் சரித்திரத்தில் அவர் கடவுளை பார்த்தார் என்கிறார்கள் ? ஏன் சாதாரணமான எம்மால் பார்க்க முடிவதில்லை ஆனால் கடவுள் எம்மை எப்பொழுதும் பார்கிறார் என்கிறார்கள் ?
குளிர்? சூடு ? தெரியுமா?
 இப்படியாக கேள்விக்கனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் விடை நிச்சயமாக புத்தகங்களின் உள்ளவை,கேள்விப்பட்டவையாகவோ இருக்கும் அனுபவரீதியான விடை இருக்காது.

தமிழ் மொழியைப்பொறுத்த வரை கடவுள் என்பது கட+உள் ஆகும்.

தமிழ் இலக்கண வல்லுனர்களின் கூற்றுப்படி மனதை கடப்பதை  குறிப்பிடுகிறார்கள்.

மதங்களைப் பொருத்தவரை மதத்தலைவர்கள் கடவுளுக்கு அருகில் உள்ளவர்கள் என்ற பிரமை பெரும்பாலான மக்கள் மத்தியில் உள்ள நிலைப்பாடாகும் (அவர்களும் சாதாரண மனிதர்களே) இதனால் பலர் ஏமாற்றப்படுகிறார்கள்
மதம் உருவாக்கப்பட்டது மனித மனத்தை கட்டப்படத்தவும், செம்மைப்படுத்தவுதான் ஆனால் தற்காலத்தில் தலைகீழாக உள்ளது.
கடவுள் என்ற பெயரில் பல ஏமாற்று வித்தைகளை காண்பித்து பிழைக்கிறார்கள் ஆனால் யார் கடவுள் என்பது அவர்களுக்கும் தெரியாது என்பது உண்மை.

அறிஞர் அண்ணாத்துரை அவர்களின் கருத்துப்படி

"பக்திக்கு பலி கேட்பதா கடவுள்?
 பசிக்கு உணவு அளிப்பதா கடவுள்? "

யார் கடவுள் ?
என்ற கேள்விக்கு எனது விடை

மனம். 

No comments:

Post a Comment