Wednesday, January 20, 2016

பஞ்சாங்களின் மூலம் மழையின் அளவை தெரிந்து கொள்ளகூறப்பட்டுள்ள கணித முறை.....

நமது பஞ்சாங்களின் மூலம் மழையின் அளவை தெரிந்து கொள்ள கூறப்பட்டுள்ள கணித முறை.....

அந்த,அந்த வருடத்திற்க்கான சாலிவாகன சகாப்தத்தை 8 ஆல் பெருக்கி 9 ஓன்பதால் வகுக்க ,ஈவு போக,மீதி

‪#‎ஒன்றானால்‬ வர்த்தமேகம் என்று பெயர் அதாவது புன்மழையாம் அதாவது மழைக் குறைவு எனவும்.

‪#‎இரண்டானால்‬ கங்கு வர்த்த மேகம் என்று பெயர் அதாவது புயல் வீசும் என்றும்...ஆக வெறும் புயல் என்று மட்டும் என்று அறியலாம்.

‪#‎மூன்றானால்‬ புஷ்கரை மேகம் என்றும், பிரளயமாய்ப் பொழியும் என்றும்.

‪#‎நான்கானால்‬ துரோண மேகம் என்றும் அதாவது வெள்ளப்பெருக்கேற்படும் என்றும்.

‪#‎ஐந்தானால்‬ காள மேகம் என்றும் அதாவது காற்றும் மழையும் கலந்து வீசும் என்றும்.

‪#‎ஆறானால்‬ நீல மேகம் என்றும் அதாவது பெய்த இடத்தே பெய்து மற்ற இடத்து பொய்க்கும் என்றும்.

‪#‎ஏழானால்‬ வருண மேகம் என்றும் அதாவது வெகு மழை பொழியும் என்றும்.

‪#‎எட்டானால்‬ வாயு மேகம் என்றும், மழை பொய்த்து வறட்சி மிகும் என்றும்.

‪#‎ஒன்பதானால்‬ தமோ மேகம் என்றும்,நல்ல மழை பொழிந்து சுபிட்சம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது....

அவ்வாறானால் இந்த மன்மத வருடம் ‪#‎சாலிவாகன‬ சகாப்பத வருடம் 1937 ஐ 8 ஆல் பெருக்க 15496 வரும்,இதை ஒன்பதால் வகுக்க மீதி ஏழு வரும் என்றும் அதன் மூலம் பார்க்க‪#‎வெகு_மழை‬ என்பது கணித கணக்கு...

அடுத்ததாக....

வருட மேகாதிபதி சூரியனால் கிழக்கு திசையிலும்,சந்திரனாயின் தென்மேற்கிலும்,செவ்வாயின் தெற்கிலும்,புதன்,குருவாகில் வடக்கிலும்,சுக்கிரனாயின் தென்கிழக்கிலும்,சனியாயின் மேற்கிலும் மேகம் உற்பத்தியாகி மழை பெய்யும் என்கிறது சாஸ்திரமே.
அப்படியாயின் இந்த ‪#‎மன்மத‬ வருடம் மேகதாதி பதியாக சந்திரன் வந்துள்ளார் எனவே தென் மேற்க்கு என்றாகிறது....

மேலும் இந்த வருட மேகாதிபதியின் பலனாக‪#‎ஆறு_குளம்_நிரம்பும்_என்றும்_பலவித_நிறம்_உள்ளவர்கள்‬விருத்தி என்றும் கூறப்பட்டுள்ளது....

ஆக இதன்படி காணும் போது இது பருவகால மழை என்றும்,இந்த ‪#‎பேரழிவுக்கு‬ காரணம்,ஏறி,குளம்,கூவம் என்றும் மண்ணின் தன்மை அறியாமல் கட்டங்களை கட்டி,மழை நீர் வடிய,செல்ல வழியில்லாததால் தான் இந்த கஷ்டம் என அறிய முடிகிறது.
‪#‎இயற்க்கை_குறை_சொல்லக்கூடாது‬ என்பது...வினை விதைத்தோம்,வினை அறுக்கிறோம்...காலத்தின் கோலம் 

No comments:

Post a Comment