Saturday, January 23, 2016

தைப்பூசம்


ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடி வரும் நன்னாளில் அனைத்து சிவாலயங்களிலும், அறுபடை வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும் புனித நாளாகும்.

புராணத் தகவல்கள் :

1. தைப்பூச தினத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

2. சிவபெருமான் தனது சக்தியான உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திராதி தேவர்களுக்கு ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.

3. சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இப்புண்ணிய தினத்தன்று தான்.

4. ஒரு தைப்பூச நன்னாளில்தான் மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை அஸ்தி கலசத்திலிருந்து உயிர்மீட்டார்.

5. இந்தப் புண்ணியத் திருநாளிலேயே அன்னை சக்தி பழனி மலையில் குமரன் கார்த்திகேயனுக்கு அசுரர்களை அழிக்க சக்திவேலை வழங்கி அருள் புரிந்தாள்.

6. முருகப் பெருமான் வள்ளியை திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராக தைப்பூசத்தன்றுதான் காட்சியளித்தாராம்.

7. தைப்பூசத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு போய் கொடுப்பார்.

தை பூசம் கொண்டாடும் ஒரே வைணவத்தலம்:

தைப்பூசம் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் மிகவும் விசேஷமாக கொண்டாடப் பட்டாலும், ஒரு வைணவத் தலத்திலும் தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்தத் தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலாகும். இங்கு காவேரி அன்னை மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருக்கிறாள்.

No comments:

Post a Comment