Tuesday, March 4, 2014

சிவராத்திரி நான்கு யாம வழிபாட்டு முறை

சிவராத்திரி நான்கு யாம வழிபாட்டு முறை

முதல் யாமம் 

சிவராத்திரி முதல் ஜாம நேரம்: இரவு 7.30 முதல் 9.30 மணி வரை

வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்

அபிஷேகம் - பஞ்சகவ்யம்
அலங்காரம் - வில்வம்
அர்ச்சனை - தாமரை, அலரி
நிவேதனம் - பருப்பன்னம்
பழம் - வில்வம்
பட்டு - செம்பட்டு
தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை

இரண்டாம் யாமம்

சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம்: இரவு 11.00 முதல் 12.30 மணி

வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்

அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் - பலா
பட்டு - மஞ்சள் பட்டு
தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் - அகில், சந்தணம்
புகை - சாம்பிராணி, குங்குமம்

மூன்றாம் யாமம் 

சிவராத்திரி 3ஆம் ஜாம நேரம்: அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை

வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்

அபிஷேகம் - தேன்,பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம் ,சாதி மலர்
நிவேதனம் - எள்அன்னம்
பழம் - மாதுளம்
பட்டு - வெண் பட்டு
தோத்திரம் - சாம வேதம் , திருவண்டப்பகுதி
மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை - மேகம், கருங் குங்கிலியம்

நான்காம் யாமம்

4ஆம் ஜாம நேரம்: அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)

அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை - நந்தியாவட்டை
நிவேதனம் - வெண்சாதம்
பழம் - நானாவித பழங்கள்
பட்டு - நீலப் பட்டு
தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
புகை - கர்ப்பூரம், இலவங்கம்

No comments:

Post a Comment