Monday, March 24, 2014

சில அரிய சுவையான தகவல்கள்...

சில அரிய சுவையான தகவல்கள்...

நீங்கள் இதுவரை அறிந்திராத சில சுவையான உண்மைத் தகவல்கள்

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 3. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்” முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

11)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

12)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

13) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள். 

14) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

15) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

16)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

17) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார் 

No comments:

Post a Comment