Tuesday, June 16, 2015

மன்னிப்போம்! மறப்போம்!

மன்னிப்போம்! மறப்போம்!

* பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிறருக்கு தண்டனை தரும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது.

* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் இருந்தால், உங்களை நல்லவர் என நீங்களே முடிவு கட்டிக்கொள்ளலாம். மன்னிப்பது மனிதகுணம். மறப்பது தெய்வீக குணம்.

* சொல் வலிமை மட்டுமின்றி, ஆள்பலம், பொருள்பலம் போன்ற வலிமைகளைக் கொண்டிருப்பவனே வல்லவன்.

* சுயநலம் கருதி தனக்கு சாதகமான விஷயத்தை அங்கீகரிப்பது கூடாது. இயற்கையின் வழியில் நியாய தர்மத்தைப் பின்பற்றுவதே நல்லது.

* பெரும்பாலான மனிதர்கள் தன் குற்றத்தை சுண்டைக்காயாகவும், பிறர் குற்றத்தை பூசணி காயாகவும் எண்ணுகிறார்கள்.

* செயல் வீரனையே உலகம் போற்றுகிறது. காரியம் செய்யாதவனை யாரும் விரும்புவதில்லை. வேலையின்றி சோம்பித் திரிபவனைக் காண்பது கூட தீமை தான்.

* வேலை செய்யாமல் ஒருவனிடம் பணம் பெற முயற்சிப்பது பிச்சை எடுப்பதற்குச் சமமானது.

No comments:

Post a Comment